மாதொருபாகன் நாவல் மற்றும் சர்ச்சை குறித்து யார் யாரோ கருத்து சொல்கிறார்கள், முடிவெடுக்கிறார்கள். ஆனால் இங்கே கருத்து சொல்ல தகுதி, அனுபவம், ஆராய்ச்சிகள் போன்றவற்றை செய்தவர்களிடம் எந்த ஊடகமும், யோக்கியர்களும் கேட்கவே இல்லை. அப்படி கேட்கவேண்டிய நபர்களிடம் பேட்டி கண்டு அவர்களின் கருத்துகள் இங்கே காணொளியாக பதிவேற்றப்பட்டுள்ளது. எங்கள் அம்மையப்பனுக்கு அர்ப்பணம்.
திருச்செங்கோட்டு கோயிலின் நிர்வாகப் பொறுப்பில் இருந்தவர்.. திருசெங்கோட்டின் முதல் எம்.பி... முதல் பார்லிமென்டில் அங்கம வகித்தவர்களில் இன்னும் வாழ்பவர்.. மாதொருபாகன் நாவல் குறிப்பிடும் 1940 காலகட்டங்களில் சமூக நிர்வாகப் பொறுப்புகளில் இருந்த திரு.காளியண்ண கவுண்டர், நாவலைப் பற்றி கூறிய கருத்துக்கள்,
கொங்கதேசத்தின் வரலாற்று ஆய்வுகளில் தனிமுத்திரை பதித்தவர். ஆயிரக்கணக்கான ஆவணங்கள், கல்வெட்டுக்கள், செப்பேடு பட்டயங்கள் ஆராய்ந்து வெளியிட்டவர். நூற்றுக்கணக்கான புஸ்தகங்கள் எழுதியவர். கொங்கு வரலாற்றின் முதுபெரும் நிபுணர் கல்வெட்டறிஞர் புலவர் திரு.ராசு அவர்கள் மாதொருபாகன் நாவல் பற்றி கூறிய கருத்துக்கள்,
திருச்செங்கோடு வரலாற்றை 1960களில் எழுதி வெளியிட்டவரும், முதுபெரும் தமிழ் புலவரும், திருச்செங்கோட்டில் பிறந்து வாழ்ந்து வருபவருமான திரு நாராயணசாமி நாய்க்கர் மாதொருபாகன் நாவல் விவகாரம் பற்றி தனது கருத்தினை எழுதியே கொடுத்துவிட்டார்.
Very old and well experienced tamil pandit Sri Narayanasamy Naicker (Scholor who authored History of Tiruchengode), refuses and condemns Perumal Murugan's Madhorubagan novel and stories he claimed to be true.
"முற்றிலும் கிடையாது. சொன்ன வாய் அழுகிவிடும்!"
பெருமாள் முருகனின் ஆசிரியரும், பெருமாள் முருகன் பிறந்த பனங்காடை கூட்டத்தை சேர்ந்தவரும், கொங்கு வட்டார ஆய்வாளரும், சிக்கய்ய நாயக்கர் கல்லூரி தமிழ்துறை பேராசிரியருமான டாக்டர் திரு பொன்னுசாமி அவர்கள் கருத்து,
பெருமாள் முருகன் மற்றும் மாதொருபாகன் நாவல் பற்றிய சர்ச்சையில் திருசெங்கோட்டு எளிய மக்கள் கருத்து, இதற்கு மேல் யாரும் எதுவும் சொல்லத் தேவையில்லை..
முந்தைய பகுதிகள் லிங்க்: