Trending

Wednesday 29 October 2014

பிராமணர்கள் பூர்வகுடிகளே

பிராமணர்கள் பூர்வகுடிகளே கிடையாது, தமிழுக்கும் அவர்களுக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல பலர் பேசுகிறார்கள் ஆனால் தமிழ் வளர்த்த பிராமணர்கள் பற்றி கொஞ்சமேனும் நினைவு கொள்வது நம் வரலாற்றறிவுக்கு நல்லதல்லவா!

சங்ககாலம்
1. அகஸ்தியர்
2. தொல்காப்பியர் (காப்பியக்குடி என்னும் கபிகோத்திரத்தார்)
3. ஜயன் ஆரிதனார் (ஹரித கோத்திரத்தார்)
4. கபிலர்
5. கள்ளில் ஆத்திரையனார் (ஆத்ரேய கோத்திரத்தார்)
6. கோதமனார்
7. பாலைக் கெளதமனார்
8. ஆமூர்க் கெளதமன் சாதேவனார் (கெளதம கோத்திரம்)
9. பிரமனார்
10. மதுரை இளங்கண்ணிக் கெளசிகனார் (கெளசிக கோத்திரம்)
11. மதுரைக் கெளணியன் பூதத்தனார் (கெளண்டின்ய கோத்திரம்)
12. மாமூலனார்
13. மதுரைக் கணக்காயனார்
14. நக்கீரனார் (இவர் கருணீகர் என்பாரும் உண்டு)
15. மார்க்கண்டேயனார்
16. வான்மீகனார்
17. கடியலூர் உருத்திரங் கண்ணனார் (பட்டினப்பாலை)
18. வேம்பற்றூர்க் குமரனார்
19. தாமப் பல்கண்ணனார்
20. குமட்டுர்க் கண்ணனார்


இடைக்காலம்
21. மாணிக்கவாசகர்
22. திருஞானசம்பந்தர்
23. சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள்
24. பெரியாழ்வார்
25. ஆண்டாள்
26. தொண்டரடிப்பொடியாழ்வார்
27. மதுரகவி
28. நச்சினார்க்கினியர் (பாரத்துவாசி)
29. பரிமேலழகர்
30. வில்லிபுத்தூரார்
31. அருணகிரிநாதர்
32. பிள்ளைப் பெருமாளையங்கார்
33. சிவாக்ரயோகி
34. காளமேகப் புலவர்

பிற்காலம்
35. பெருமாளையர்
36. வீரை ஆசுகவி (செளந்தர்யலகரி மொழி பெயர்த்தவர்)
37. வேம்பற்றூரார் (பழைய திரவிளையாடலாசிரியர்)
38. நாராயண தீக்ஷிதர் (மகரநெடுங்குழைக்காதர் பாமாலை)
39. கோபாலகிருஷ்ண பாரதியார்
40. கனம் கிருஷ்ணையர்
41. அரியலூர்ச் சடகோப ஐயங்கார்
42. கஸ்தூரி ஐங்கார் (கார்குடி)
43. சண்பகமன்னார்
44. திருவேங்கட பாரதி (பாரதி தீபம் நி கண்டு)
45. வையை இராமசாமி சிவன் (பெரியபுராணக் கீர்த்தனைகள்)
46. மகாமகோபாத்தியாய டாக்டர் சாமிநாதையர்
47. சுப்ரமண்ய பாரதியார்
48. பரிதிமாற் கலைஞர் (வி.கோ.சூ)
49. சுப்பராமையர் (பதம்)
50. முத்துசாமி ஐயங்கார் (சந்திரா லோகம்)
51. ரா.ராகவையங்கார்
52. பகழிக் கூத்தார்
53. வென்றிமாலைக் கவிராயர்
54. வேம்பத்தூர் பிச்சுவையர்
55. கல்போது பிச்சுவையர்
56. நவநீதகிருஷ்ண பாரதியார்
57. அனந்தகிருஷ்ணஐயங்கார்
58. திரு, நாராயணசாமிஐயர்
59. மு.ராகவையங்கார்
60. திரு. நா.அப்பணையங்கார்
61. வசிஷ்டபாரதி (அந்தகர்)
62. கவிராஜ பண்டித கனகராஜையர்
63. பின்னத்தூர் அ.நாராயணசாமிஐயர்
64. ம.கோபலகிருஷ்ணையர்
65. இவை.அனந்தராமையர்
66. நா.சேதுராமையர் (குசேல வெண்பா)
67. கோவிந்தையர் (மாணிக்கவாசகர் வெண்பா)
68. வ.வே.சு.ஐயர்
69. கி.வா.ஜகந்நாதையர்
70. அ.ஸ்ரீநிவாசராகவன்
71. ஸ்வாமி சாதுராம்
72. திராவிடகவிமணி வே.முத்துசாமி ஐயர்.

Monday 27 October 2014

கோயில் அர்ச்சனை முறை

--- பாலசுப்ரமணிய கவுண்டர் 

நாம் கோயிலில் அர்ச்சனை செய்யும் முறையை பார்ப்போம். நாம் கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்யும் பொழுது நம் பெயரை முதலில் சொல்லி பின்பு நாம் பிறந்த நஷத்திரத்தின் பெயரை சொல்லி அர்ச்சனை செய்வது தானே வழக்கம். 

நஷத்திரமே முதலில் தோன்றியது. நாம் பின்பு தோன்றியவர்கள். பிறப்பின் வரிசையிலேதான் நாம் இங்கு சொல்ல வேண்டும். நாம் பிறந்த நஷத்திரத்தின் பெயரை சொல்லி பின்பு நம் பெயரை சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும். 

ஒரு சம்பவ நிகழ்ச்சி. 

Monday 20 October 2014

மல்லசமுத்திரம் தொண்டமா கவுண்டர்

மல்லசமுத்திரம் சமஸ்தானம் கொங்கதேசம் கீழ்க்கரை பூந்துறை நாட்டின் (இன்றைய திருசெங்கோட்டு பகுதி) உபநாடாகும். இப்பகுதியை ஆண்டு வந்தவர் சிற்றரசர்களான பட்டக்காரர்களில் புகழ் பெற்றவர் தொண்டைமா கவுண்டர். துணிச்சல், போராற்றல் மதிநுட்பம், தண்மையான குணம் நிறைந்தவர். பல புலவர்களை ஆதரித்து தர்மம் வளர்த்தவர். தொண்டைமான் என்பது இவர் பெற்ற விருதுப் பெயர்.

Friday 17 October 2014

வித்யாரம்பம்

விஜயதசமியன்று தங்கள் காணி கொங்கப்புலவனாரிடம் குழந்தைகளை அழைத்துச் சென்று வித்யாரம்பம் செய்வது கொங்க வெள்ளாள கவுண்டர்களின் பாரம்பரிய மரபு. கல்விகற்றலின் துவக்கம் வித்யாரம்பம்.

Tuesday 14 October 2014

அகல்விளக்கு - சிறுகதை

குச்சிகிழங்கு காட்டில் வேலை. சோறு குடித்துவிட்டு மத்தியான வேளையில் வேப்பமரத்தடியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார் மொட்டையகவுண்டர். பொழுது கிளம்ப ஆரம்பித்து வெயில் காந்தலில் வேலை செய்த களைப்பு. குளிர்ச்சியாக நீத்தண்ணி இறங்கிய கிறக்கத்தில் வேலைக்கு வந்திருந்தவர்கள் ஆங்காங்கே உருமாலைத் துண்டை சிம்மாடு கூட்டியும், கையை தலைக்குக் கொடுத்தும் சித்தங்கூரம் கண்ணயர்ந்திருந்தார்கள். 

Wednesday 8 October 2014

உழைப்புப் போதை

கொங்கதேசத்தில் கொங்க வெள்ளாள கவுண்டர்கள் மற்றும் நம்மைச் சேர்ந்த குடிசாதிகள் அனைவருமே உழைப்புக்கு அஞ்சாதவர்கள் தான். உழைப்பு என்பது போதையாக மாறிப்போக வயதானாலும் சும்மா இருக்க முடியாமல் உழைத்துக் கொண்டே இருப்பது நமது பெரியவர்களின் வழக்கம்.

Tuesday 7 October 2014

பெரியோர் ஆசி

நாலு கிலோமீட்டர் சைக்கிள் மிதித்துவந்து, சரஸ்வதி பூஜை-விஜயதசமிக்காக எண்பத்தைந்து வயதான தாய் மாமனிடம் ஆசி வாங்கும் எழுபது வயது மருமகன். பெரியவர்களை மதிப்பதும் வணங்குவதும் ஒரு பாக்கியம். பெரியவர்களை மதிப்பதை, நான் யார் காலிலும் விழ மாட்டேன் என்ற மனநோயாக என்னவோ சுயமரியாதையின் அடையாளம் என்று வளர்துள்ளார்கள்.. தன் சொந்த பாட்டன், மாமன், வாழ்வாங்கு வாழ்ந்த குடும்ப-ஊர் பெரியவர்கள் ஆசி பெறத் தயங்கியவன், குடியை கெடுக்கும் தெள்ளவாரித்தனம் செய்யும் அரசியல்வாதி காலில் விழுவான்.

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates