Trending

Friday 30 January 2015

திருக்குறள்-ஜாதி-வேதம்

வள்ளுவர் ஜாதிகளுக்கு எதிரானவர் போன்று பலவாறு திராவிட சித்தாந்திகள் அவரை உரிமை கொண்டாடி திரிக்கிறார்கள். உண்மையில், திருக்குறளில் வள்ளுவர் குடிச்சிறப்பு பற்றியும், நற்குடிப்பிறப்போர் தம் இயல்பிலேயே நல்லொழுக்கம் வாய்க்கப்பெற்றிருப்பர் என்பதையும் பல குறள்கள் மூலம் வலியுறுத்துகிறார். அதோடு நற்குடியிலும் அரிதாக குடி ஒழுக்கத்துக்கு கேடாக நடப்பவரும் பிறப்பது இயல்பேன்பதையும் சுட்டுகிறார். 



குணமும் குடிமையும் குற்றமும் குன்றா 
இனனும் அறிந்தியாக்க நட்பு.
ஒருவனது குணம், குடும்பப் பிறப்பு, குற்றம், குறையாத சுற்றம் ஆகியவற்றை அறிந்து நட்புக் கொள்க.சாலமன் பாப்பையா
குணமென்ன? குடிப்பிறப்பு எத்தகையது? குற்றங்கள் யாவை? குறையாத இயல்புகள் எவை? என்று அனைத்தையும் அறிந்தே ஒருவருடன் நட்புக் கொள்ள வேண்டும்.கலைஞர்
ஒருவனுடைய குணத்தையும், குடிப்பிறப்பையும் குற்றத்தையும் குறையாத இனத்தாரின் இயல்பையும் அறிந்து அவனேடு நட்புக் கொள்ள வேண்டும்.மு.வரதராசன்

குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக் 
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.
நல்ல குடியில் பிறந்து தன்மீது சொல்லப்படும் பழிக்கு அஞ்சு பவனின் நட்பை விலை கொடுத்தாவது கொள்ள வேண்டும்.சாலமன் பாப்பையா
பழிவந்து சேரக் கூடாது என்ற அச்ச உணர்வுடன் நடக்கும் பண்பார்ந்த குடியில் பிறந்தவருடைய நட்பை எந்த வகையிலாவது பெற்றிருப்பது பெரும் சிறப்புக்குரியதாகும்.கலைஞர்
உயர்ந்த குடியில் பிறந்து, தன்னிடத்தில் வருகின்றப் பழிக்கு நாணுகின்றவனைப் பொருள் கொடுத்தாவது நட்பு கொள்ளவேண்டும்.மு.வரதராசன்

நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு 
இனத்தியல்ப தாகும் அறிவு
தான் சேர்ந்த நிலத்தின் தன்மையால் நீர் தன் இயல்பை இழந்து, நிலத்தின் இயல்பாகவே மாறிவிடம்; மனிதரின் அறிவும் அவர் சேர்ந்த இனத்தின் இயல்பாகவே ஆகிவிடும்.சாலமன் பாப்பையா
சேர்ந்த நிலத்தின் தன்மையால் நீரானது வேறுபட்டு அந்த நிலத்தின் தன்மையை அடைந்துவிடும் அதுபோல மக்களின் அறிவும், தாங்கள் சேர்ந்த இனத்தின் தன்மையைப் பெற்றதாகிவிடும்.கலைஞர்
சேர்ந்த நிலத்தின் இயல்பால் அந்த நீர் வேறுபட்டு அந் நிலத்தின் தன்மையுடையதாகும், அதுபோல் மக்களுடைய அறிவு இனத்தின் இயல்பினை உடையதாகும்.மு.வரதராசன்
 சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற
குலம்பற்றி வாழ்தும்என் பார்.
குற்றம் இல்லாமல் வரும் தம் குடும்ப மரபோடு வாழ்வோம் என்பவர், வறுமை வந்தபோதும், வஞ்சகம் கொண்டு, பொருந்தாத செயல்களைச் செய்யமாட்டார்.சாலமன் பாப்பையா
மாசற்ற பண்புடன் வாழ்வதாகக் கருதிக்கொண்டிருப்பவர்கள், வஞ்சக நினைவுடன் தகாத காரியங்களில் ஈடுபடமாட்டார்கள்.கலைஞர்
மாசற்ற குடிப் பண்புடன் வாழ்வோம் என்று கருதி வாழ்வோர், வஞ்சனைக் கொண்டு தகுதியில்லாதவற்றைக் செய்யமாட்டார்.மு.வரதராசன்
மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம் 
இன்னான் எனப்படுஞ் சொல்
மக்களுக்கு இயல்பான அறிவு அவர்தம் மனததால் உண்டாகும்; ஆனால், ஒருவன் இப்படிப்பட்டவன் என்று பெரியோர் சொல்லும் சொல் அவன் சார்ந்த இனம் காரணமாகவே உண்டாகும்.சாலமன் பாப்பையா
ஒருவரின் உணர்ச்சி, மனத்தைப் பொருத்து அமையும். அவர் இப்படிப்பட்டவர் என்று அளந்து சொல்வது அவர் சேர்ந்திடும் கூட்டத்தைப் பொருத்து அமையும்.கலைஞர்
மக்களுக்கு இயற்கையறிவு மனத்தால் ஏற்படும், இப்படிப் பட்டவன் என்று உலகத்தாரால் மதிக்கப்படும் சொல், சேர்ந்த இனத்தால் ஏற்படும்.மு.வரதராசன்
மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு 
இனத்துள தாகும் அறிவு.
அறிவு ஒருவன் மனத்துள் இருப்பது போலத் தோன்றும்; உண்மையில் அது அவன் சேர்ந்துள்ள இனத்தின்பால் இருந்து பெறப்படுவதே ஆகும்.சாலமன் பாப்பையா
ஒருவரின் அறிவு அவரது மனத்தின் இயல்பு என்பது போல் தோன்றினாலும், அது அவர் சேர்ந்த கூட்டத்தாரின் தொடர்பால் வெளிப்படுவதேயாகும்.கலைஞர்
ஒருவனுக்கு சிறப்பறிவு மனத்தில் உள்ளது போலக் காட்டி (உண்மையாக நேக்கும் போது) அவன் சேர்ந்த இனத்தில் உள்ளதாகும்.மு.வரதராசன் 
நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்.
நிலத்தின் இயல்பை அதில் விளைந்த பயிர்காட்டும்; அதுபோலக் குடும்பத்தின் இயல்பை அதில் பிறந்தவர் பேசம் சொல் காட்டும்.சாலமன் பாப்பையா
விளைந்த பயிரைப் பார்த்தாலே இது எந்த நிலத்தில் விளைந்தது என்று அறிந்து கொள்ளலாம். அதேபோல் ஒருவரின் வாய்ச் சொல்லைக் கேட்டே அவர் எத்தகைய குடியில் பிறந்தவர் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.கலைஞர்
இன்ன நிலத்தில் இருந்து முளைத்தது என்பதை முளை காட்டும், அதுபோல் குடியிற் பிறந்தவரின் வாய்ச் சொல் அவருடைய குடிப்பிறப்பைக் காட்டும்.மு.வரதராசன்

மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் 
இனந்தூய்மை தூவா வரும்
மனத்தூய்மை, செய்யும் செயல் சிறப்பு ஆகிய இரண்டும், ஒருவன் சேர்ந்துள்ள இனத்தின் தூய்மையை ஆதாரமாகக் கொண்டே பிறக்கும்.சாலமன் பாப்பையா
ஒருவன் கொண்டுள்ள தொடர்பு தூய்மையானதாக இருந்தால்தான் அவனுடைய மனமும் செயலும் தூய்மையானவையாக இருக்கும்.கலைஞர்
மனத்தின் தூய்மை செய்யும் செயலின் தூய்மை ஆகிய இவ்விரண்டும் சேர்ந்த இனத்தின் தூய்மையைப் பொறுத்தே ஏற்ப்படும்.மு.வரதராசன்
மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும்.
நிலைபெற்று வரும் உயிர்களுக்கு மனநலம் சிறந்த செல்வம் தரும்; இன நலமோ எல்லாப் புகழையும் தரும்.சாலமன் பாப்பையா
மனத்தின் நலம் உயிருக்கு ஆக்கமாக விளங்கும் இனத்தின் நலமோ எல்லாப் புகழையும் வழங்கும்.கலைஞர்
மனதின் நன்மை உயிர்க்கு ஆக்கமாகும், இனத்தின் தன்மை (அவ்வளவோடு நிற்க்காமல்) எல்லாப் புகழையும் கொடுக்கும்.மு.வரதராசன்

நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும்.

நல்ல குடும்பத்திலிருந்து வருகின்றவனிடம் அன்பு இல்லாது இருந்தால் அக்குடும்பத்தைச் சேர்ந்தவன் தானா என்று அவனை இந்த உலகம் சந்தேகப்படும்.சாலமன் பாப்பையா
என்னதான் அழகும் புகழும் உடையவனாக இருந்தாலும் அன்பு எனும் ஒரு பண்பு இல்லாதவனாக இருந்தால் அவன் பிறந்த குலத்தையே சந்தேகிக்க வேண்டிய நிலை ஏற்படும்.கலைஞர்
ஒருவனுடைய நல்லப் பண்புகளுக்கிடையில் அன்பற்றத் தன்மைக் காணப்பட்டால், அவனை அவனுடைய குடிப் பிறப்பு பற்றி ஐயப்பட நேரும்.மு.வரதராசன் 
நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல்.
ஒருவனுக்கு நல்ல இனத்தைக் காட்டிலும் பெரிய துணையும் இல்லை; தீய இனத்ததைக் காட்டிலும் துன்பம் தருவதும் இல்லை.சாலமன் பாப்பையா
நல்ல இனத்தைக் காட்டிலும் துணையாக இருப்பதும், தீய இனத்தைக் காட்டிலும் துன்பம் தரக்கூடியதும் எதுவுமே இல்லை.கலைஞர்
நல்ல இனத்தைவிடச் சிறந்ததாகிய துணையும் உலகத்தில் இல்லை, தீய இனத்தைவிடத் துன்பப்படுத்தும் பகையும் இல்லை.மு.வரதராசன்

அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர்.
கோடி கோடியாகச் செல்வத்தைப் பெற்றாலும் நல்ல குடும்பத்தில் பிறந்தவர் தம் குடும்பப் பெருமை குறைவதற்கான செயல்களைச் செய்யமாட்டார்.சாலமன் பாப்பையா
பலகோடிப் பொருள்களை அடுக்கிக் கொடுத்தாலும் சிறந்த குடியில் பிறந்தவர்கள் அந்தச் சிறப்புக் கெடுவதற்கான செயல்களுக்கு இடம் தரமாட்டார்கள்.கலைஞர்
பல கோடிப் பொருளைப் பெறுவதாக இருந்தாலும் உயர்குடியில் பிறந்தவர் தம் குடியின் சிறப்புக் குன்றுவதற்கு காரணமான குற்றங்களைச் செய்வதில்லை.மு.வரதராசன்


இதைப்போன்ற ஏராளமான குறள்களைக் காட்டலாம். மேலே சொன்னவை உதாரணங்களுக்கு மட்டும். இதன்மூலம் சொல்லவருவது, பண்டைய பாரதம் ஜாதிகளை சமூக அமைப்பாக அங்கீகரித்தது என்பதையும், அந்த ஜாதிகள் அனைவருக்கும் ஒழுக்கத்தையும், நன்மையையும் ஏற்படுத்தியது என்பதையுமே. மனித வாழ்க்கைக்கு தேவையான அனைத்து நல்லொழுக்கங்களையும் எல்லா காலத்துக்கும் பொருந்துமாறு உரைத்து தமிழ் வேதம் என்ற பெயர் பெற்ற வள்ளுவர் ஜாதிகள், குடி, குலம் போன்றவற்றை அங்கீகரித்துள்ளார் என்றால் அதில் நன்மை இல்லாமலா, என்பது சிந்திக்க வேண்டியதாகும். ஜாதி அமைப்பால் பாரதம் சமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக, கலாசார ரீதியாக, இயற்கை பாதுகாப்பு ரீதியாக ஏராளமான நன்மைகளை அடைந்துள்ளது. அன்நன்மைகளை ஒழித்து பாரதத்தை சுரண்டிக் கொழுக்க நினைக்கும் அந்நிய மதமாற்ற மற்றும் சூழ்ச்சிக்கார சக்திகள் கடந்த நூற்றாண்டு முழுக்கவே பல்வேறு துரோகிகளை வளர்த்து விட்டு அவர்கள் மூலம் அப்பாவி இளைஞர்களை மூளைச்சலவை செய்து சிந்தனா ரீதியாக தேசத்தை தவறான பாதைக்கு திருப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இன்னொரு விசிமுங்க, வள்ளுவரு வேதத்த எதுத்தவரு... அவரு சமண மதத்துக்காரரு னு நெறையா பேரு புளுகுரானுங்க.. திருக்குறளு ல இருக்கற வேத-வேதாந்த செய்திகள இந்த லிங்க் ல இருக்கற கட்டுரைகள் ல படிச்சிக்கோங்க மாப்ளைகளா...


இறுதியாக, ஜாதி எவ்வளவு முக்கியம் என்பதை சொல்லும் திருவள்ளுரின் குறள்.
தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல்




Wednesday 28 January 2015

கோனாட்டு சோழர் எனும் கொங்கு சோழர்

அறிமுகம் :-

           கி.பி.930  யில் தொடங்கி கி.பி.1305 வரை கிட்டத்தட்ட 375 ஆண்டுகள் தொடர்ந்து கொங்குநாட்டை சுயாட்சியாக தஞ்சை சோழர்களுக்கு கீழ்படியாமல் ஆட்சி செய்தவர்களே இந்த கொங்கு சோழர்கள். அவர்களை பற்றிய ஆய்வே இந்த கட்டுரை.

கொங்கு சோழர்கள் யார் :-

           நாம் அனைவரும் சோழர்கள் என்று கேள்விப்பட்டிருப்போம், பாடபுத்தகத்தில் படித்திருப்போம். அதுமட்டுமில்லாமல் சோழர்கள் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது தஞ்சை சோழர்கள் மட்டுமே. ஆனால் இந்த கொங்கு சோழர்களைப் பற்றி இதுவரை கேள்விப்பட்டிருக்க மாட்டோம். இவ்வாறு இருக்கும் போது கொங்கு சோழர்களை பற்றி ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்ற Dr.புவனேஸ்வரி  எழுதிய  ”கொங்குசோழர்” என்னும் புத்தகத்தை எதர்ச்சையாக படிக்க நேர்ந்தது. அந்த புத்தகத்தை படித்தவுடன் இவர்களைப்பற்றி இன்னும் ஆழமான ஆய்வு தேவை என்றும் அத்துடன் அவ்வளவு சிறப்புடன் 700 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆட்சி செய்த அரச பரம்பரை யார்? அவர்கள் எப்படி இருப்பார்கள்? என்ற ஆசை என்னுள் மேலோங்கியது. அந்த எண்ணத்தில் விளைந்ததே இந்த கட்டுரை.



கொடும்பாளூர் இருக்கு வேளிர்:-  

           Dr.புவனேஸ்வரி அவர்கள் எழுதிய கொங்கு சோழர் புத்தகத்திலும் சரி அவர்கள் செய்த PHD ஆய்விலும் சரி கொடும்பாளூர் இருக்குவேளிர்தான் இந்த கொங்கு சோழர்கள் என்று சந்தேகத்திற்கு இடமின்றி நிருபித்துள்ளார். ஆகையால் நாம் அதை ஆராய வேண்டியதில்லை.

ஆனால் முனைவர் புவனேஸ்வரி இந்த வேளிர்கள் தற்போது என்ன பெயரில், எவ்வாறு, எங்கு இருக்கிறார்கள் என்று ஒரு இடத்தில்கூட அவர்கள் எந்த சிறு குறிப்புகூட தரவில்லை. இந்த எண்ணம் எனக்கு தோன்ற காரணம் அவர்கள் இதை வேண்டுமென்றே மறைத்துள்ளார்கள் என்று அவர் புத்தகத்தை உன்னிப்பாக படிக்கும்போது நமக்கு தெரியும். அதன் காரணத்தை ஆராய்வதை விடுத்து கொங்கு சோழர்கள் யார் என்று அறியவேண்டும் என்ற எண்ணம் மட்டுமே எனக்குள் இருந்தது. ஆகையால் இதையே என் முதல் ஆய்வாக எடுத்துக்கொண்டேன்.

அப்பொழுது வேளிர் என்றால் என்னவென்று பல வரலாற்று ஆய்வாளர்கள் எழுதிய கருத்துக்களை தேடிப்படிக்க படிக்க எனக்கு ஒரு விசயம் தெளிவானது. அதாவது இன்றைய காலகட்டங்களில் வெள்ளாளர்கள் என்று அழைக்கபட்டவர்களே அன்று வேளிர்கள் என்று அழைக்கப்பட்டார்கள் என்பது திண்ணம். இதை எந்த வரலாற்று ஆசிரியர்களும் மறுக்கமுடியாத அளவுக்கு பல ஆதாரங்கள் நம் வரலாற்றில் கொட்டிக்கிடக்கிறது. எனது சந்தேகம் முழுவதும் முதலில் சோழிய வெள்ளாளர்கள் மேல் இருந்தது. ஆனால் சோழிய வெள்ளாளருக்கு கொங்குநாட்டில் எந்த செல்வாக்கும் இல்லை இங்கு மிகுந்த செல்வாக்கு பெற்றவர்கள் கொங்குவெள்ளாளர்களே ஆனால் எதுவாக இருந்தாலும் எனக்கு வெள்ளாளர்கள் பற்றி அதிகம் தெரியவில்லை.

கொங்கு வெள்ளாளர்:-

           வெள்ளாளர்களை பற்றி எதுவும் தெரியாத காரணத்தினால் முதலில் கொங்கு வெள்ளாளர்களை பற்றி படிக்க தொடங்கினேன். அப்பொழுதுதான் எனக்கு குலம், கோத்திரம் பற்றி ஒரு தெளிவு கிடைத்தது. அதன் பிறகே எனது தேடலில் ஒரு திருப்பம் ஏற்பட்டது. அதாவது பொதுவாக கோத்திரம் என்று சொல்லுவதைத்தான் வெள்ளாளர்கள் கூட்டம் என்று சொல்லுகிறார்கள். அதாவது கோத்திரம் என்றால் தமிழில் கூட்டம் என்று பொருள். அதன் பிறகு அவர்களின் கூட்டங்களை பற்றி படிக்க தொடங்கினேன். அதற்கு புலவர்.இராசு ஐயாவின் புத்தகங்கள் எனக்கு உதவியாக இருந்தது. அவரின் புத்தகத்தில் இருந்த ஒவ்வொரு கூட்ட பெயர்களையும் மிக உன்னிப்பாக படித்துக்கொண்டு இருந்தேன். அப்பொழுது அந்த பட்டியலில் “சோழர்” என்ற கூட்டபெயர் இருந்தது. அதை படித்தவுடன் அந்த கூட்டத்தின் வரலாற்றை தேடினேன் ஆனால், அந்த கூட்டத்தை பற்றி எந்த வரலாறும் இல்லை. என்ன செய்வது என்று புரியாமல் இருந்த போதுதான் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் புலவர்.இராசு ஐயாவை சந்திக்க நேர்ந்தது.

அப்பொழுது அவர் புத்தகத்தில் குறிப்பிட்டு இருந்த “சோழர்” என்னும் கூட்டத்தை சுட்டிக்காட்டி அதுபற்றி வினவினேன். அவர் அதை வாங்கி பார்த்துவிட்டு இந்த கூட்டபெயர் ஒரே ஒரு கல்வெட்டில் மட்டுமே கிடைக்கிறது நடைமுறையில் அந்த பெயர் இல்லை என்று கூறிவிட்டார். அத்துடன் அந்த கல்வெட்டு நம்பியூரில் கிடைக்கிறது என்று கூறினார். அதன் பிறகு அந்த கல்வெட்டை மத்திய தொல்லியல் துறையின் புத்தகத்தில் தேடி கண்டுபிடித்தேன்.
அந்த கல்வெட்டு வீரபாண்டியன் ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்டது. அந்த கல்வெட்டு பொறிக்கப்பட்ட ஆண்டில் கொங்கு சோழன் ஒருவன் ஆட்சியில் இருந்தான் என்றும் அவன் பெயர் தெரியவில்லை என்றும் தொல்லியல் துறையின் அறிக்கையில் இருந்தது.

அந்த கல்வெட்டில் பொறிக்கப்பட்ட “சோழரில்” என்பது கூட்டப்பெயர் இல்லை அது அந்த பெயர் அறியப்படாத சோழ அரசனின் பெயர்தான் என்று என்னால் ஒரு தெளிவுக்கு வரமுடிந்தது. அதற்கு காரணம் அவன் பெயர் “ராஜராஜன்” என்று அந்த கல்வெட்டில் இருந்தது. இவனுக்கு முன்னமே கொங்கு சோழரில் இரண்டு பேர் “ ராஜராஜன்” என்ற பெயரில் பட்டத்தில் இருந்துள்ளார்கள் என்பதை இங்கு கவனத்தில் கொள்ளவேண்டும்.

நம்பியூர் கல்வெட்டு
சரி அந்த பெயர் தெரியாத அரசனை கண்டுபிடிப்பது நமது இலக்கு இல்லை அதனால் அவர்கள் யார் என்று மீண்டும் ஆராயத் தொடங்கினேன். அப்பொழுது அதே ஊரில் அதே ஆண்டில் இன்னும் இரண்டு கல்வெட்டுக்கள் என் கண்ணில் தென்பட்டது. ஒன்று “வெள்ளாளரில் மேன்மணியரில்” என்றும், மற்றொன்றில் “வெள்ளாளரில் கழஞ்சியரில்” என்றும் இருந்தது. அதைப்பார்த்தவுடன் எனக்குள் இன்னும் அதிக ஆவல் தொற்றிக்கொண்டது. காரணம் பழனி அருகே இருக்கும் கீரனூரில் “வெள்ளாள கழஞ்சியரில் கொங்கிளகோவன்” என்ற பெயர் குறிக்கப்படுகிறது.

ஆக இந்த கழஞ்சியர் மற்றும் மேன்மணியர்களுக்கு கொங்கு சோழர்களுடன் மிக நெருங்கிய தொடர்பு இருந்தது புலப்பட்டது. ஆகையால் இவர்களின் கூட்டபெயர்களை பற்றி ஆராய்வோம் என்று தேடும்போது இந்த கூட்டங்கள் ”இரட்டை சங்கு பால வெள்ளாளர்” என்று குறிக்கப்பட்டு இருந்தது. அதுதென்ன இரட்டை சங்கு என்று தேடும்போது அது இராஜ குலத்துக்குரிய மரியாதைகளில் ஒன்று என்பதையும் பல வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டிருந்தார்கள்.

கிட்டத்தட்ட நெருங்கிவிட்டோம் என்று நினைத்துக்கொண்டு “பால வெள்ளாளர்கள்” யார் என்று தேடினேன். இவர்கள் கொங்கு வெள்ளாளர்களின் உட்பிரிவு என்பதால் இவர்களை பற்றி யாருக்கும் தெரியவில்லை. எந்த வரலாற்று ஆசிரியர்களும் இவர்களைப்பற்றி எழுதவில்லை. ஆகையால் இவர்களைப்பற்றி தெரிந்து கொள்ளவதற்கு மிகவும் கடினமாக இருந்தது.

பால வெள்ளாளார்:-
   
                பால வெள்ளாளர் என்பது கொங்கு வெள்ளாளரின் உட்பிரிவு ஆகும். அதில் கவனிக்கவேண்டியது என்னவென்றால் அந்த பாலவெள்ளாளரில் இரண்டு உட்பிரிவுகள் உள்ளது.

1). ஒற்றை சங்கு பாலவெள்ளாளர்
2). இரட்டை சங்கு பாலவெள்ளாளர்

என்ற இரண்டு பிரிவினர்களும் மற்ற பிரிவினருடன் மண வினை தொடர்பு வைத்துக்கொள்வதில்லை என்பது இங்கு முக்கியமாக கவனிக்கப்படவேண்டிய விசயம். அவர்களிடம் கேட்டால் ஜாதி ஒன்றானலும் ஜனம் வேறு என்று முடித்துக்கொள்கிறார்கள். அப்பொழுது பால வெள்ளாளர்களின் குலகுரு “இருகூர் மருதமலை” ஆதினத்தின் மூலம் வெளியிடப்பட்ட ஒரு புத்தகம் எனது கைக்கு கிடைத்தது.

நாம் எதை தேடுகிறோமோ அது நமது கைக்கு தானாக கிடைக்கும் என்பது போல அந்த புத்தகத்தில் எனக்கு மிகபெரிய குறிப்பு கிடைத்தது. அது என்னவென்றால் “ ஆறு நாடு பெரியபட்டம் “சேவூர் பட்டக்காரரான பாலவெள்ளாள பயிசலிய(பைதலை) கோத்திரத்து ஆறுநாட்டார் இம்முடிப்பட்டம் வணங்காமுடி வீர விக்கிரம கரிகால சோழியாண்டாக்கவுண்டர்” வம்சத்தார் சேவூர் சிந்தாமணிப்பாளையம் என்று இருந்தது.

எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது அந்த ஊர் எனக்கு பக்கத்தில் இருக்கும் ஊர். அதே ஆச்சர்யத்துடன் அந்த ஊருக்கு சென்று அங்கு விசாரித்ததில் இந்த ஊரின் பெரிய தலைக்கட்டு “சக்கரை கவுண்டர்” வீடுதான் என்று கூறி எனக்கு வீட்டை காண்பித்தார்கள். சக்கரவர்த்தியின் சுருக்கமே “சக்கரை” என்பது. நம் இலக்கை அடைந்துவிட்டோம் என்று நினைத்துக்கொண்டு அந்த வீட்டிற்கு சென்றேன். மிக சாதரணமாக ஓட்டுவீட்டில் இன்றுவரை விவசாயம் செய்துவரும் குடும்பமாகவே இருந்தது. அங்குதான் எனக்கு சக்கரை கவுண்டர் பேரன் சிவப்பிரகாஷ் அறிமுகம் ஆனார். அவரின் அறிமுகத்திற்கு பிறகு எனது தேடல் நிறைவடைந்தது. காரணம் அவர்கள்தான் கொங்கு சோழர் என்பதற்கு அவரிடம் பல ஆதாரங்கள் இருந்தது. அந்த ஆதாரங்களை ஒவ்வொன்றாக கிழே பார்ப்போம்.

அந்த ஆதாரங்களை பார்க்கும் முன்பு ஒன்றை தெளிவு படுத்த விரும்புகிறேன். அதாவது வீர சோழன் என்றும் விக்கிரம சோழன் என்றும் மாறி மாறி பட்டமேற்று கொங்கு நாட்டை ஆண்ட கொங்குசோழர்கள் தங்கள் ஆட்சியை இழந்தபிறகு விஜயநகர பேரரசின் கீழ் சிற்றரசராகளாக இவர்கள் வீர விக்கிரம சோழியாண்டார் என்று பட்டமேற்றுக்கொண்டார்கள். 
============= XXXXXXXXXXX ============

1). சோழன் + ஆண்டார் = சோழனாக ஆண்டாவர் என்பதன் சுருக்கமே சோழியாண்டார் என்று அழைக்கப்படுகிறது. இதனை பழங்கரை மடாதிபதியிடம் இருக்கும் பட்டையத்தின் மூலம் அறியலாம். கீழே உள்ள படத்தில் முதல் பட்டையத்தில் இவர்கள் பெயரை குறிக்கும்போது “ஆறு நாடு பட்டம் சேவையம்பதி கோட்டை பாலமண்டலம் இம்முடிபட்டம் வணங்காமுடி வீர விக்கிரம கரிகால சோழியாண்டார்” என்று தொடங்கும். இதில் சேவையம்பதி கோட்டை என்றால் சேவூருக்கு அதிபதியின் கோட்டை என்று அர்த்தம். சேவூரில் நாணயங்கள் அச்சடிக்கும் தொழிற்சாலை இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆறு நாடு என்பது கோயமுத்துர் பீடபூமி என்று இன்று அழைக்கப்படும் பகுதியே ஆகும்.

கிழே இருக்கும் இரண்டாவது பட்டையத்தில் விஜயநகர அரசர் சோழியாண்டரை பார்த்து “கரிகால சோழ இந்த மடத்தை நீயே தொடர்ந்து தர்மபரிபாலனம் செய்வாய்” என்று கேட்டுக்கொள்கிறார் பின்பு சோழன் சிவபூஜைக்கு தேவையான சங்கு சேவூண்டி போன்ற ஏற்பாடுகளை செய்தார் என்று கூறுகிறது. இதனை தெரிந்து கொள்ள கிழே உள்ள படத்தில் மார்க் செய்த வரிகளை பார்க்கவும்
பழங்கரை மடதிபதியிடம் இருக்கும் பட்டையம்

============= XXXXXXXXXXX ============

2). கிழே இருக்கும் படத்தில் இருப்பது அவினாசி தேவஸ்தானம் மூலம் வெளியிட்ட திருக்கோவில் வரலாறு. அதில் சோழியாண்டரை சிற்றரசன் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
அவினாசி கோவில் வரலாறு

============= XXXXXXXXXXX ============
3). கிழே இருக்கும் படத்தில் இருப்பது சேவூர் செங்குந்தர் சமூகத்தினரிடம் இருக்கும் செப்பு பட்டையம். இந்த பட்டையம் மைசூர் உடையார்கள் ஆட்சிகாலத்தில் எழுதப்பட்டது. இதில் ஆறு நாடு சேவூரில் ஸ்ரீவெங்கராயனார் அரசில் சோழியாண்டார் நீதிசெலுத்துகின்ற நாளில் என்று பட்டையம் தொடங்குகிறது.
முத்துக்குமாரர் செப்பு பட்டையம்

============= XXXXXXXXXXX ============

4). கிழே இருக்கும் பட்டையம் திருமுருகன் பூண்டி கிரைய சாசனம் ஆகும். இந்த பட்டையத்தில் பயிசலிய(பைதலை) கோத்திரத்து சித்திரமேழி துவசம் என்று வருகிறது. துவசம் என்றால் கொடி என்று பொருள் சித்திரமேழி என்றால் ஏர்க்கலப்பை என்று பொருள், ஆக இதன் மூலம் கொங்கு சோழர்களின் கொடி சித்திரமேழி கொடி என்று தெரிந்துகொள்ளமுடிகிறது. அதுமட்டுமில்லாமல் பல வரலாற்று ஆசிரியர்கள் தாராபுரத்தை ஸ்கந்தபுரி என்று எழுதுகிறார்கள் இது முற்றிலும் தவறு இந்த பட்டையத்தில் திருமுருகன்பூண்டியை ஸ்கந்தபுரிபட்டணம் என்று கூறுகிறது.
திருமுருகன்பூண்டி கிரையசாசனம் தொடக்க பகுதி
============= XXXXXXXXXXX ============ 

5). கீழே இருப்பதும் அதே திருமுருகன்பூண்டி கிரைய சாசன செப்பேடுதான். இதில் சேவம்பதிக்கதிபன் சித்திரமேழிதலைவன் பயிசாலிய கோத்திரம் என்று வருகிறது. அதாவது இவர்களை சேவூரின் அதிபதி என்றும் சித்திரமேழி சபையின் தலைவன் என்றும் கூறுகிறது. அதேபோல் சித்திரமேழி சபையின் மெய்கீர்த்தியும் இவர்கள் கொடும்பாளூரில் இருந்து வந்தவர்கள் என்றும் உறுதிப்படுத்துகிறது. இந்த மெய்கீர்த்தி திருப்பூர் அருகே இருக்கும் சர்க்கார் பெரியபாளையம் சுக்கீரீஸ்வரர் கோவில் கல்வெட்டுகளில் கிடைக்கிறது. அத்துடன் சேவூர் அழகர் பெருமாள் கோவில் கல்வெட்டு மற்றும் வாலீஸ்வரர் கோவில் கல்வெட்டிலும் வருடாவருடம் சித்திரை மாதம் இவர்களுக்கு பெரிய நாட்டார் திருவிழா என்ற பெயரில் விழா எடுக்கவேண்டும் என்று கூறுகிறது. 

திருமுருகன்பூண்டி கிரைய சாசனம் முடிவு பகுதி
 ============= XXXXXXXXXXX ============

6). கீழே இருக்கும் பட்டையம் திருமுருகன்பூண்டி கோவில் தலமை அர்ச்சகர் சிவசுப்பிரமணியம் குருக்களிடம் இருக்கும் கொங்கு காணிப்பட்டயம் ஆகும். இந்த பட்டையம் எழுதப்பட்ட முன்னூறு ஆண்டுகள் இருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். ஆனால் அந்த பட்டையத்தில் ஆயிரம் வருடத்திற்கு முன்பு நடந்த செய்தியை கூறுகிறார்கள். இதே போல் முன்னூறு வருடத்திற்கு முன் எழுதப்பட்ட சோழன் பூர்வ பட்டையமும் ஆயிரம் வருடத்திற்கு முந்தைய செய்தியைத்தான் கூறுகிறது. ஆக முன்னூறு வருடத்திற்குமுன்பு எதோ தேவை ஏற்பட்டதன் அடிப்படையில் இந்தபட்டையம் எழுதப்பட்டுள்ளது. அதில் வீர விக்கிரம சோழியாணடார் கையொப்பம் இட்டுள்ளார். இதில் குழப்பம் என்னவென்றால் திருமுருகன்பூண்டி கோவில் காசிப கோத்திரத்து சிவபிராமணர்களுக்கு பூர்வீக ஸ்தானிகம் இருந்ததை பல ஆதாரங்கள் மூலம் அறிய முடிகிறது. கல்வெட்டும் அதைதான் கூறுகிறது ஆனால் இந்த பட்டையத்தில் மார்கண்டேய கோத்திர சிவபிரமணர்களால் எழுதப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்த கோவிலின் முன்னாள் பூர்வீக ஸ்தானிகர் காசிப கோத்திரத்து சிவபிராமணர் இருகூர் மடாதிபதியிடம் கேட்டதற்கு இவர்களுக்கு இருந்த பூண்டி கோவில் ஸ்தானிகத்தை தனது மாப்பிள்ளைக்கு (மார்கண்டேய கோத்திரம்)  வரதட்சனையாக கொடுத்துவிட்டதாக கூறுகிறார் அதற்கான ஆதாரங்களையும் வைத்துள்ளார். ஆக இந்த பட்டையம் முன்னூறு வருடங்களுக்கும் முன்புதான் எழுதப்பட்டது என்பது உறுதியாகிறது. ஆனால் அதில் கூறப்படும் செய்தி பழைய செய்தி.      
கொங்கு காணிப்பட்டையம்

============= XXXXXXXXXXX ============

7). கிழே இருப்பது அதே கொங்கு காணிபட்டயம்தான். இதில் குலோத்துங்க சோழனை வீர விக்கிரம சோழன் மகன் என்று கூறுகிறது. இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் வீர சோழன் என்றும் விக்கிரம சோழன் என்று மாறி மாறி பட்டம் கட்டிக்கொண்டு ஆண்டுவந்த கொங்கு சோழர் மரபில் குலோத்துங்கன் இருந்துள்ளான் என்று அறியமுடிகிறது. ஆனால் கல்வெட்டு படி கொங்கு குலோத்துங்கன் இருவர் இருந்துள்ளார்கள் என்பதையும் அறிய முடிகிறது. ஆக கொங்கு நாட்டு கல்வெட்டியில் கூறப்படும் குலோதுங்கனும் கொங்கு சோழர் மரபுதான் என்பதை அறியமுடிகிறது. 
கொங்கு காணிப்பட்டையம்

============= XXXXXXXXXXX ============

8). கிழே இருக்கும் பட்டையம் பொள்ளாச்சி புரவிபாளையம் ஜமீன் கோப்பண்ண மன்றாடியிடம் இருக்கும் அஞ்சு ஜாதி பட்டையம் ஆகும். தற்பொழுது இந்த பட்டையம் சொன்னை கிழ்திசை சுவடிகள் காப்பகத்தில் உள்ளது. இந்த பட்டையத்தில் குலோதுங்க சோழனை கூறும் போது வண்டிசூழ்ந்த ஆறுநாட்டுக்கு ஆதிபத்தியம் பெற்ற குலோதுங்க சோழன் என்று பட்டைய தொடங்கும். இதில் கவனிக்க வேண்டியது இந்த ஆறு நாடு என்பது கோயம்புத்தூர் பீடபூமி என்று ஏற்கனவே கூறியிருந்தேன். இந்த ஆறு நாட்டுக்கு ஆதிபத்தியம் பெற்றவர்கள் வீர விக்கிரம சோழியாண்டார் பரம்பரைதான் என்பது உறுதிபடுத்தப்பட்ட ஒன்று. இந்த பட்டையத்தில் குலோத்துங்க சோழனை ஆறுநாட்டுக்கு அதிபதி என்று கூறுவதிலிருந்தும் வீர விக்கிரம சோழியாண்டாரின் மரபில்தான் குலோத்துங்க சோழன் தோன்றியுள்ளான் என்று உறுதிபடுத்த முடிகிறது. அத்துடன் மேலே இருக்கும் கொங்கு காணிப்பட்டையமும் இதை உறுதிபடுத்துகிறது.
அஞ்சு ஜாதி பட்டையம்

============= XXXXXXXXXXX ============

9). இந்த பட்டையம் இருகூர் மடம் உருவாக்கியதை பற்றி கூறும் பட்டையம். இதில் கரிகால சோழனை வண்டி சூழ்ந்த ஆறுநாட்டுக்கு அதிபதி என்று கூறுகிறது. நாம் ஏற்கனவே மேலே பார்த்தது போல் “ஆறு நாடு” என்பது வீர விக்கிரம சோழியாண்டாருக்கு ஆதிபத்தியம் பெற்றது. ஆகையால் இதில் இருக்கும் கரிகால சோழன் என்பனும் கொங்கு சோழர் மரபில் உதித்தவனே ஆவான். வண்டிசூழ்ந்த என்றால் கோட்டைகள் சூழ்ந்த என்று பொருள்.
இருகூர் பட்டையம்
   
============= XXXXXXXXXXX ============

10). கரிகாலன் யார், சில வரலாற்று ஆசிரியர்கள் தஞ்சை சோழன் என்றும் எழுதுகிறார்கள். ஆனால் உண்மையில் கரிகாலன் என்பது வீரச்சோழனின் விருது பெயரே ஆகும். இதை எளிதாக விளக்கிவிடலாம். அதாவது கோனாட்டில் இருந்து கொங்குநாட்டிற்கு வந்த பிறகு கொங்கு சோழர்கள் ஆட்சியமைத்த முதல் நூற்றாணடு வரை வீரச்சோழனும் சரி விக்கரமசோழனும் சரி தனது பட்டத்துடன் கோனாட்டான் என்ற பெயரை அவர்களின் முந்தைய ஆட்சிபகுதியின் நினைவாக இணைத்துக்கொண்டார்கள். அடுத்த நூற்றாண்டுகளில் வீர சோழன் கோராஜராஜன் என்றும் விக்கிரம சோழன் கோராஜன் என்று இணைத்துக்கொண்டார்கள். கிழே இருக்கும் படத்தில் உள்ள மூன்று கல்வெட்டுகளில் இரண்டு கல்வெட்டுகள் ”கோராஜராஜன் கரிகாலன்” எனறு அரசன் பெயர் குறிக்கப்படுகிறது. மற்றொரு கல்வெட்டில் ”கோராஜராஜன் வீரசோழன்” என்று அரசன் பெயர் குறிக்கப்படுகிறது. இதிலிருந்து வீரசோழனின் விருது பெயரே கரிகால சோழன் என்று அறியலாம். 

கரிகால சோழன் கல்வெட்டு

============= XXXXXXXXXXX ============

11). கிழே இருக்கும் படங்களை பார்க்கவும், திருவாதிரை திருநாள் அன்று ஆறு நாட்டின் தலைமையிடம் சேவூரில்(சேவையம்பதி) சோழர் பரம்பரையை சேர்ந்தவர்களுக்கு பட்டம் கட்டி சுவாமி அம்பாளுக்கு சமரசம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும். அப்பொழுது சுவாமி மற்றும் அம்பாளுக்கு சமரசம் ஏற்படாமல் அம்பாள் திருவீதி உலாவை நிறைவு செய்யாமலேயே திருக்கோவிலை வந்தடைந்துவிடுவாள். அதன்பிறகு சோழர் திருக்கோவில் நடையை அடைத்துவிடுவார். சுவாமி திருவீதி உலாவை முடித்துவரும் போது சுவாமி கோவிலுக்குள் நுழைய சோழர் மறுத்துவிடுவார். அதன் பிறகு ஊர் பொதுமக்கள் அனைவரும் சோழரை வாழைப்பட்டை கொண்டு அடிப்பார்கள் அதன் பிறகே சோழர் நடையை திறந்து மீண்டும் சமரசம் செய்து வைப்பார். இந்த நிகழ்வை இன்றும் நீங்கள் சேவூரில் நேரடியாக பார்க்கலாம்.   
சேவூரில் நடக்கும் சிறப்பு

============= XXXXXXXXXXX ============

12). மேற்கண்டவைகளை பற்றி நான் ஆய்வு செய்து சமர்பித்த ஆய்வு கட்டுரைக்கான சான்று. இந்த ஆய்வில் அரசியல் ரீதியான எதிர்ப்பின் காரணமாக எனது ஆய்வின் தலைப்பை இவ்வாறு மற்றி அமைத்து எனது ஆய்வை மேற்கொண்டேன்.

Monday 12 January 2015

ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரருக்கு வெற்றி!

ஸ்ரீ அர்த்தனாரீஸ்வரப்பெருமானின் கிருபையால் மாதொருபாகன் பிரச்சனையில் திருசெங்கோட்டு மக்களுக்கு நல்லதொரு தீர்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் ஜனநாயக நாடு என்ற கட்டத்துக்குள் நின்று பார்க்கும்போது சில விசயங்களை கவனிக்க வேண்டியுள்ளது.



சில நாட்கள் முன்பு..

12.01.2015 பேச்சு வார்த்தை உடன்படிக்கை,

பேச்சுவார்த்தை முடிவில் பெ.முருகன் 

இதைத் தொடர்ந்து,பொதுமக்கள் அனுதாபம் சம்பாதிக்க பெருமாள் முருகன் தனது பேஸ்புக்கில் எழுதியவை,

குறிப்பு: 
நண்பர்களே, கீழ்வரும் அறிக்கை இரண்டு நாட்களுக்கு இந்த முகநூலில் இருக்கும். அதன்பின் சமூக வலைத்தளச் செயல்பாடுகளில் இருந்து பெருமாள்முருகன் விலகிவிடுவான். சமூக வலைத்தளங்களில் அவனுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. 
---------------
எழுத்தாளர் பெருமாள்முருகன் என்பவனுக்காக பெ.முருகன் அறிக்கை
எழுத்தாளன் பெருமாள்முருகன் செத்துவிட்டான். அவன் கடவுள் அல்ல, ஆகவே உயிர்த்தெழப் போவதில்லை. மறுபிறவியில் அவனுக்கு நம்பிக்கையும் இல்லை. இனி அற்ப ஆசிரியனாகிய பெ.முருகன் என்பவன் மட்டுமே உயிர் வாழ்வான்.

பெருமாள்முருகனுக்கு ஆதரவு தெரிவித்தும் கருத்துரிமையை முன்னெடுத்தும் போராடிய பத்திரிகைகள், ஊடகங்கள், வாசகர்கள், நண்பர்கள், எழுத்தாளர்கள், அமைப்புகள், கட்சிகள், தலைவர்கள், மாணவர்கள் முதலிய அனைத்துத் தரப்பினருக்கும் நன்றிகள்.

‘மாதொருபாகன்’ நூலோடு பிரச்சினை முடிந்துவிடப் போவதில்லை. வெவ்வேறு அமைப்புக்கள், தனிநபர்கள் அவனுடைய ஏதாவது நூலை எடுத்துப் பிரச்சினை ஆக்கக் கூடும். ஆகவே பெருமாள்முருகன் இறுதியாக எடுத்த முடிவுகள் வருமாறு:

1. பெருமாள்முருகன் தொகுத்த, பதிப்பித்த நூல்கள் தவிர அவன் எழுதிய நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் ஆகிய அனைத்து நூல்களையும் அவன் திரும்பப் பெற்றுக்கொள்கிறான். இனி எந்த நூலும் விற்பனையில் இருக்காது என்பதை உறுதிபடத் தெரிவித்துக்கொள்கிறான்.

2. பெருமாள்முருகனின் நூல்களை வெளியிட்டுள்ள காலச்சுவடு, நற்றிணை, அடையாளம், மலைகள், கயல்கவின் ஆகிய பதிப்பகத்தார் அவன் நூல்களை விற்பனை செய்ய வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறான். உரிய நஷ்ட ஈட்டை அவர்களுக்கு பெ.முருகன் வழங்கிவிடுவான்.

3. பெருமாள்முருகன் முருகனின் நூல்களை இதுவரை வாங்கியோர் தாராளமாக அவற்றைத் தீயிட்டுக் கொளுத்திவிடலாம். யாருக்கேனும் நஷ்டம் எனக் கருதி அணுகினால் உரிய தொகையை அவருக்கு வழங்கிவிடத் தயாராக உள்ளான்.

4. இனி எந்த இலக்கிய நிகழ்வுக்குப் பெருமாள்முருகனை அழைக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறான்.

5. எல்லா நூல்களையும் திரும்பப் பெறுவதால் சாதி, மதம், கட்சி உள்ளிட்ட அமைப்புகள் போராட்டத்திலோ பிரச்சினையிலோ ஈடுபட வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கிறான்.

அவனை விட்டுவிடுங்கள். அனைவருக்கும் நன்றி. 
பெ.முருகன்
பெருமாள்முருகன் என்பவனுக்காக

--------

மாதொருபாகன் பிரச்சனையில் ஜனநாயகம் என்பது ஒரு மாயை என்பதை அறியலாம். மக்களுக்கு முடிவெடுக்கவும், பொதுக்கருத்தை உண்டாக்கவும் தேவை தகவல்கள். ஆனால் மீடியாக்கள் மற்றும் சிந்தனையாளர்கள் என்று 'வளர்க்கப்பட்டவர்கள்' தவறான செய்திகளையும்/உண்மையாகவே இருப்பினும் தவறான விகிதத்திலும்/தவறான நேரங்களிலும்/ தவறான கோணங்களிலும்/தங்கள் கற்பனைகள்-திசை திருப்பும் கருத்துக்களை கலந்தும் கொடுக்கிறார்கள். இதுபோன்ற தகவல்களை வைத்துக்கொண்டு எவ்வளவு புத்திசாலியாக இருந்தாலும் நல்ல முடிவை எடுக்க முடியாது. ஆகவே, மக்களுக்கு அவர்களே முடிவெடுத்த திருப்தியை கொடுக்க, நாம் என்ன முடிவெடுக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்களோ அதற்கான தகவலகளை மட்டும் தந்து காரியம் சாதிப்பதே நடந்து வருகிறது.. இதை ஜனநாயகம் என்றால் வேடிக்கைதான்.

ஜனநாயகத்தில் கருத்து சுதந்திரம் என்பது இரு சாராருக்கும் உள்ளது. ஒரு எழுத்தாளன் கூறும் கருத்தை, கற்பனை செய்தியை ஒரு வாசகன் எதிர்த்து ஜனநாயக முறையில் குரல் கொடுப்பது தவறு என்றால், நாம் ஒரு ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம் என்று சொல்லி கொள்வதில் அர்த்தமில்லை.

உயிரை விட மானத்தையும் உழைப்பையும் பெரிதென வாழும் மக்கள், கடவுள் பெண்கள் உட்பட ஒரு பெரும் ஊரையே கேவலமாக ஒருத்தர் புக் எழுதுவாராம்.. அதை வித்து பணமும் பேரும் சம்பாதிப்பாராம்.. அதை எதிர்ப்பதை வைத்தே அவர் விளம்பரமும் வியாபாரமும் பெருக்கிக்குவாராம். கடைசியா மன்னிப்பு கேட்டுட்டா விட்டுருனுமாம்.. என்னடா நியாயம்?? பாதிக்கப்பட்டவன் நேரம், உழைப்பு, பொருள் செலவு செய்து தன் பக்கத்து நியாயத்தை நிலை நாட்டனுமா..?? எழுதியவருக்கு என்ன தண்டனை? அவருக்கு என்ன நஷ்டம்?? பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன நஷ்டஈடு?? இதுதான் ஜனநாயகமா..??. இதுபோல ஆள் பலம, பணபலம், ஒற்றுமை இல்லாத ஊர்கள, சமூகங்கள், மக்கள் தங்கள் தரப்பு நியாயத்தை வெளிக்கொண்டுவருவது எப்படி??

-இதுவரை தனது சர்வீசில் இப்படியொரு பந்த் பார்த்ததில்லை என்கிறார்கள் போலீசார். அதுவும் கட்சி, அமைப்பு, சாதி, மதம் கடந்து பொதுமக்கள் அனைவரும் ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் மேல் கொண்ட பக்தியின் காரணமாக நடத்தப்பட்டது. கோபமடைந்த பெண்கள் ரண்டாயிரம் பேரைக் கொண்டு நாமக்கலில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதாக முடிவு செய்யப்பட்டு இருந்தது; அதற்குள் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னை முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.








-திருச்செங்கோடு சுற்று வட்டாரத்தின் அனைத்து சாதியினரும், அனைத்து தொழிலதிபர்கள், மற்றும் கட்சியினர் (தங்கள் கட்சியின் ஆதரவில்லாவிட்டாலும்)  இந்த போராட்டத்துக்க்கு முழு ஆதரவு தந்தனர்! இதுவும் வரலாறு காணாத ஒற்றுமையாகும். எந்தெந்த கட்சிகள் இதற்கு எதிராக வேலை செய்தனர் என்று கண்டறிந்து அவர்களை திருச்செங்கோட்டில் தலையெடுக்க விடாமல் செய்வது அவசியமாகும்.

-ஆனால் இதைப்பற்றி எந்த டிவியும், பேப்பரும் காட்டவில்லை. காரணம் இருவர். ஆளும்கட்சி அரசியல் காரணமாக போலிஸ் துணையோடு இந்த பிரச்சனையை வளரவோ தீர்க்கவோ முன்வரவில்லை. பெருமாள் முருகன் மீது இதுவரை வழக்குகூட பதிவாகவில்லை. இரண்டு கம்யூனிச-முற்போக்கு-திராவிட மாபியா

-திருசெங்கோட்டின் முன்னாள் எம்.பி யும் மாதொருபாகன் நாவல் நடந்த காலகட்டம் என்று பெருமாள் முருகன் சொன்ன காலகட்டத்தில் சிறந்த அரசியல்-கோயில்-சமூக தலைவராக இயங்கியவருமான திரு.டி.எம்.காளியண்ணன் அவர்கள், நாவலில் சொல்லப்பட்டவை முழுக்க பொய் என்று கூறியுள்ளார். அவருக்கு இப்பொது வயது 91. அவர் பெருமாள் முருகனின் புத்தகங்களை படித்தவர். இன்றும் தினமும் சமூகம்-அரசியல்-இலக்கியம் என்று ஆக்டிவாக இருப்பவர். அவர் பெருமாள் முருகனை கடுமையாக கண்டித்துள்ளார்.



-கம்யூனிச-முற்போக்கு இயக்கங்கள் மற்றும் இவர்கள் கைக்கூலிகள் வெளிநாட்டு கூலி வாங்கிக் கொண்டு இந்திய பெண்கள், கடவுள்கள், கலாச்சாரம் மரபுகள் அனைத்தையும் அசிங்கப்படுத்தும் வேலையை பல காலமாக செய்கின்றன. இதை பெ.முருகனுக்கு ஆதரவு கூறிய ஜெயமோகனே தனது வலைப்பக்கத்தில் கூறியுள்ளார்.

-கருத்துரிமை காவலர்கள் என்ற பேரில் பெருமாள் முருகனின் ஆபாச கருத்துகளுக்கு வக்காலத்து வாங்கும் முற்போக்கு கம்யூனிஸ்ட்கள் தான் அருண் ஷோரி எழுதிய "Worshipping False Gods" புத்தகத்தையும் எதிர்த்தார்கள். சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் ஜோ டீ குரூஸ் எழுதிய ஆழி சூழ் உலகு புத்தகம் ஆங்கிலத்தில் பதிவாவதை தடுத்தார்கள். அதேபோல ஹிந்துத்வ குரூப்பில் சிலரகளும் பெ.முருகனுக்கு வக்காலத்து வாங்குகின்றனர். இதே ஹிந்து அமைப்புகள் தான் வெண்டி தோனிங்கர் எழுதிய ஹிந்துயிசம் என்ற புஸ்தகத்தை தடை செய்ய போராடி வெற்றி பெற்றனர். அண்ணாதுரையின் ஆரிய மாயை, புலவர் குழந்தையின் ராவண காவியம், தெய்வநாயத்தின் விவிலியம் திருக்குறள் சைவ சித்தாந்தம் ஒரு ஒப்பாய்வு புஸ்தகம், ஆண்டாளை கேவலப்படுத்திய புஸ்தகம் போன்றவற்றை எதிர்த்தனர். இவர்களுக்கெல்லாம் ஒரு நியாயம் திருசெங்கோட்டு மக்களுக்கு ஒரு நியாயமா?? இன்னும் சிலர் குழந்தைத் தனமாக புத்தகத்தை எரிப்பது சரஸ்வதியை அவமதிப்பது என்கிறார்கள். அவர்களுக்கு சில செக்ஸ் புத்தககங்களை அனுப்பி வைக்க வேண்டும், பார்ப்போம் சரஸ்வதி பூஜையில் அவற்றை வைத்து பூஜிப்பார்களா என்று!

-நம் ஊரிலேயே இருந்துகொண்டு, நம் ஊர் மக்கள் தரும் சம்பளம் தொழில் வாய்ப்புகளைப் பயன்படுத்தி வாழும் சில துரோகிகள் பெருமாள் முருகனுக்கு வக்காலத்து வாங்கி துணை செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் யார் என்று அறிந்து அவர்களை சமூக பொருளாதார ரீதியாக தவிர்ப்பதும், பெருமாள் முருகனுக்கு கொடுக்கப்படும் தண்டனையைவிட அதிக தண்டனை பெற வேண்டும் என்று போராடவும் வேண்டும். காலம் கனிந்து வரும்போது ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரரால் தண்டிக்கப்படுவதையும் காண வேண்டும்.

-ஈரோடு மக்கள் சிந்தனை பேரவை ஸ்டாலின் குணசேகரன், திருச்செங்கோடு மக்கள் ஸ்ட்ரைக் நடத்திய அன்று மாலை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க சார்பில் பெருமாள் முருகனுக்கு ஆதரவு கூறி நிகழ்ச்சி நடத்துகிறார்! நாவல் எழுதியவனுக்கு குடை பிடிக்கும் கம்யூனிஸ்ட் என்று ஸ்டாலின் குணசேகரன் நிரூபித்துள்ளார். அவரை உங்கள் பள்ளி கல்லூரியில் அழைக்க வேண்டுமா என்று சிந்திக்கவும்.



-இந்த நாவல் எழுத எலும்புத் துண்டு வீசிய டாடா கம்பெனி, போர்டு போன்றவற்றை யார் தண்டிப்பது?

-கவுண்டர்களுக்குள் ஒற்றுமை இல்லை என்று யார் சொன்னது? இதோ திருச்செங்கோடு பிரச்சனையில் கவுண்டர்கள் மட்டுமின்றி பிற ஜாதியினரையும் ஒன்று சேர்த்துக் கொண்டு ஸ்ட்ரைக் போராட்டம் என்று நடத்தி மீடியாவை கையில் வைத்திருக்கும் முற்போக்கு கம்யூனிச மாபியாவை வீழ்த்தி வெற்றி கண்டுள்ளார்கள். இந்த ஒற்றுமையை உடையாமல் நம் மரபுகள் கலாசாரம் என்று சமூகத்தை எல்லா ஜாதியினரையும் அரவணைத்து வளர்த்துவதில் நமது வெற்றி உள்ளது. நம்பிக்கை இருந்தால் எல்லாம் சாத்தியமே. திருச்செங்கோடு ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் அருளை நம் மக்கள் அனைவரும் உணர்ந்த சம்பவம் இது. கொங்கதேசத்தில் இது ஒரு திருப்புனை என்றால் மிகையல்ல.

-கருத்துரிமை என்ற பெயரில் வணிக நோக்கில் பிறர் மனம் புண்படும் படியாக ஆதாரமில்லாத எதை வேண்டுமானாலும் புனைவாக எழுதிவிடலாம் என்ற எழுத்துப் பாஸிச வாதிகள் திருந்த வேண்டும். குட்டக் குட்டக் குனிந்து கொண்டே இருக்கும் சொரணையற்ற மக்கள் தொகுதியாக சமூகம் என்றென்றும் இருக்காது. உள்நோக்கத்தோடு சமூகத்தை அதன் பண்டைய பாரம்பரிய வேர்களிலிருந்து பிரித்தெடுத்து அதன் பாரம்பரியத்தை பொய் புனைவுகளின் மூலம் கொச்சைப் படுத்தி மேற்கத்திய சுரண்டல் கலாச்சாரத்திற்குள் தள்ள முனையும் முற்போக்கு என்ற பெயரில் கல்லா கட்டும் பிற்போக்கு எழுத்தாளர் கைக்கூலிகள் பாடம் கற்க வேண்டும்... விழிப்புணர்வு பெற்ற மக்கள் சமூகம் உங்கள் தீய நோக்கங்களை முறியடிக்கும்.

-கருத்து சுதந்திரம் என்ற பெயரில் ஹிந்து மதத்தின் மீது கட்டவிழ்த்துவிடப்படும் வக்கிரங்களின் சில சாம்பிள்கள் இதோ,

1) ஆண்டாள் நாச்சியார் பெரியாழ்வாருக்கும், வேசிக்கும் பிறந்தவர்
2) திருஞானசம்மந்தர் கோயிலுக்கு வரும் மங்கையரை 'சைட்' அடித்தார். மைத்துனம் செய்தார்
3) திருச்செங்கோடு தேர் திருவிழாவில் யார், யாருடன் வேண்டுமானாலும் உறவு கொள்ளலாம்

இந்த குறிப்புகளெல்லாம் ஒரு சாம்பிள் தான். இம்மாதிரி நிறைய புத்தகங்கள் திட்டமிட்டு எழுதப்படுகின்றன. இதை எழுதும் எழுத்தாளர்கள் அன்னிய சக்க்திகளால் ஊக்குவிக்கப்படுகிறார்கள். உள்ளூர் மக்கள் உண்மை புரியாமல் நடுநிலை, கருத்து சுதந்திரம் என்ற பெயரில் தங்கள் தலைகளில் மண்ணை வாரி இறைத்துக்கொள்வதுடன், மற்றவர்களின் தலைகளிலும் சேர்த்து இறைக்கிறார்கள். மத அவமதிப்பிற்கு பொங்கி எழாதவர்கள், கருத்து சுதந்திரம் பறிபோகிறதே என்று பொங்கி எழுகிறார்கள். எங்கள் மத உணர்வுகளை புண்படுத்தாமல் நன்றாக உங்கள் கருத்து சுதந்திர குதிரையை ஓட்டுங்கள். யார் வேண்டாம் என்றார்கள்.

பேஸ்புக் எதார்த்த சமூகத்தை பிரதிபலிக்கவில்லை, என்பது மகிழ்ச்சியளிக்கிறது. இங்கே இருக்கும் பெரும்பான்மை கூச்சலைக் கண்டால் சமூகம் மீள முடியா பாதாளத்தை நோக்கி பாய்கிறதே என்ற அயர்ச்சி ஏற்படும், ஆனால் உண்மையில் சமூகம் அவ்வளவெல்லாம் கெடவில்லை.

செய்ய வேண்டிய செயல்பாடுகள்

தெய்வமலை திருசெங்கோட்டுக்காக ஒன்று கூடிய அனைவரும் ஒற்றுமையை பாதுகாக்க வேண்டும். கோயில் திருவிழாவை இனி மிகச்சிறப்பாக செய்வதில் தான் அந்த எழுத்தாளனுக்கும் அவனுக்கு வக்காலத்து வாங்கிய முற்போக்கு கம்யூனிசவாதிகளுக்குமான பதிலடி இருக்கிறது. அறநிலையத்துறை நமது திருசெங்கோட்டு கோயிலுக்குள் புகுந்த பின்னர் பல பூஜைகளும், மரபுகளும் மறைக்கப்பட்டு நடத்தப்படாமல் உள்ளது. அவற்றை மீண்டும் நடத்திக் காட்ட வேண்டும்.

முன்னர் தி.கோடு சுற்று வட்டார கிராமங்களில் ஒவ்வொரு வீட்டுக்கும் ஒருவர் அவசியம் தேர் நோம்பியில் கலந்து கொள்வார்கள்; அதுபோல சூழலை மீண்டும் உருவாக்க வேண்டும். ஒவ்வொரு கிராமத்திலும் கிராம சபை உருவாக வேண்டும். வட நாட்டு காப் பஞ்சாயத்து போல அரசு-அரசியல் சாரா மக்கள் குழுவாக இருந்து நம் மக்களின் உரிமைக்காக முறையாகப் போராட வேண்டும். இனி அரசியல் கட்சிகள், மீடியா, அரசியல்வாதிகளை நம்பிப் பயனில்லை. உண்மையான ஜனநாயகம் காப் பஞ்சாயத்து அமைப்புகளில் தான் உள்ளது.

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates