மகாபாரதம் – வனபர்வம் - காம்யகவனம்
ஜயத்ரதனை வென்று,அவன் பிடியிலிருந்து த்ரௌபதியை விடுவித்து அழைத்துக் கொண்டு வந்த பின்னர் தர்மராஜனாகிய யுதிஷ்டிரர், ரிஷிகளுடன் காம்மிய வனத்தில் அமர்ந்திருந்தார்.மாமுனிவர்களும் பாண்டவர்களுக்கு நேர்ந்த துன்பங்களுக்குத் தமது அனுதாபங்களை தெரிவித்து வந்தனர். அவர்களில், மார்கண்டேயரை பார்த்து யுதிஷ்டிரர் வினவினார்- "பெரியீர் நடந்தது-நடந்து கொண்டிருப்பது-நடக்க போவது, ஆகிய முக்காலமும் தாங்கள் அறிவீர்கள். தேவரிஷிகளிடையேயும் தங்கள் புகழ் பரவியுள்ளது.என் உள்ளத்தில் உள்ள ஒரு ஐயத்தைத் தங்களிடம் கேட்கிறேன்; அதைத் தாங்கள் நீக்க வேண்டும்".