Trending

Monday 29 December 2014

மாதொருபாகன் சர்ச்சை

திருச்செங்கோட்டில் எல்லா ஜாதிகளையும் சேர்ந்த அனைத்துத் தரப்பு மக்களின் பிரதிநிதிகளும் பெருமாள் முருகனின் புத்தகத்தின் கருத்துக்கள் பொய் என்பதை வெளிப்படுத்தி, உண்மை நிலையை எடுத்துரைத்துள்ளார்கள். இதுதான் எதார்த்தத்தில் நடந்தது. மக்களின் இந்த எதிர்ப்பை பதிவு செய்யாமல் செய்தியூடகங்கள் திரித்தும், திசை திருப்பியும் எழுதுகின்றன; அரசியல்வாதிகள் அந்த பொய் செய்தியை அடிப்படையாக வைத்து கருத்து சுதந்திர பறிப்பு, அடக்குமுறை, வெங்காய முறை என்றுகருத்துரிமை காவலர்கள்  கூவுகிறார்கள். (என்னவோ இவர்களுக்கு உண்மையை விசாரித்து சொல்ல திருச்செங்கோட்டில் ஆட்களே இல்லாததுபோல). முற்போக்கு-கம்யூனிச-கிறிஸ்தவ லாபி கூட்டு சேர்ந்து அரங்கேற்றும் இந்த கூச்சலில் உண்மை கரைந்துவிடக் கூடாதென்று சில தகவல்களை கூறுகிறோம்.

பெருமாள் முருகனைப் பற்றி முதலில் இந்த கட்டுரையை வாசித்துவிட்டு பின்னர் தொடரவும்.. http://www.karikkuruvi.com/2014/06/blog-post.html

http://www.karikkuruvi.com/2015/04/blog-post.html









ஏன் இவ்வளவு நாள் அமைதி?
திருச்செங்கோடு உட்பட கொங்கதேச மக்கள் பெரும்பான்மையானோருக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் இல்லை. அதிலும் குறிப்பாக நவீன இலக்கியம் என்ற பேரில் வரும் ஆபாச புத்தகங்கள் அறிமுகமே கிடையாது. கொங்கதேச மக்கள் விவசாயம் தொழில் என்று காலம் காலமாக உழைத்தே பழக்கப்பட்டவர்கள். இவ்வளவு நாள் கழித்து சரியான நபர்களின் கவனத்துக்கு வந்தப்போது பிரச்னை துவங்கியிருக்கிறது. ஏன் இவ்வளவுநாள் கழித்து என்று கேட்பது அபத்தம். உங்களை பற்றி புத்தகம் எழுதறேன் னு சொல்லிட்டா புக் போட்டானுங்க?, இல்லை இவனுங்க எழுதற புக்கெல்லாம் படிச்சிட்டு உடனே கருத்து சொல்லியாகனும் னு சட்டமா??

போராட்டத்தின் பின்னணி உண்மை
போராட்டத்தை என்னமோ ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க போன்றவர்கள் தான் ஆரம்பித்து ஒருங்கிணைத்து நடத்தியதாக 'தி ஹிந்து' பத்திரிகை போட்டுள்ளது. என்ன நோக்கமோ காரணமோ தெரியவில்லை. ஆனால், உண்மையில் இந்த எதிர்ப்பு போராட்டத்தை துவக்கியது கோயிலை சேர்ந்த கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் (மோரூர் நாட்டார்&காணியாளர்), முதலியார்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களுமே.எல்லா ஜாதி மக்களுமே போராட்டத்தில் கலந்து கொண்டு வழக்குப் பதிவு செய்ததில் கையெழுத்திட்டுள்ளனர். இதில் கட்சி-ஜாதி பேதமின்றி மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.  எந்த ஒரு கட்சியின்-இயக்கத்தின் கொடியோ அங்கு கட்டப்படவில்லை. காரணம் திருசெங்கோட்டு கோயிலுக்கு கிட்டத்தட்ட எல்லா ஜாதி மக்களுக்குமே உரிமைகள், மண்டப கட்டளைகள் உண்டு. விழாவிற்கு எல்லா ஜாதி பெண்களுமே வருவார்கள். 






போராட்டக் குழு செய்த தவறு, பத்திரிகை செய்திகளை கண்டித்து உண்மையை பத்திரிக்கையாளர் சந்திப்பு மூலம் வெளியிட்டிருக்க வேண்டும் என்பதே.. திருசெங்கோட்டு மக்கள், அதிலும் குறிப்பாக பெண்கள் வெகுவாக மனதளவில் காயப்பட்டுள்ளார்கள். பெண்களை அவதூறு செய்தாலும் பிழையில்லை. ஏனெனில் இவர்களுக்கு எதையும் கரிக்கும் முற்போக்கு கருத்துரிமை கொடுக்கப்பட்டுள்ளது.

எதிர்ப்பு:
இந்த விஷயம் தெரிந்தபின்பு போராட்டம் கம்ளைன்ட் என்று போனது மிகப்பெரிய ஆச்சரியம். இப்படி மென்மையாக நடந்துகொண்டதன் பலன் என்ன கிடைத்தது? கருத்துரிமை பறிப்பு, அடக்குமுறை என்ற அலறலே. (பேச்சுரிமை, எழுத்துரிமை இல்லாத சீனாவையும் கம்யூனிச காட்டுமிராண்டி சித்தாந்தத்தையும் கொண்டுவர வக்காலத்து வாங்கும் முற்போக்கு ரத்தக் காட்டேரிகளுக்கு கருத்து சுதந்திரம் பற்றி பேச என்ன யோக்கிதை உள்ளது, என்பது முதல் கேள்வி). ஓரிருவர் உணர்ச்சிவசப்பட்டு புத்தகத்தை எரித்ததையும் பெருமாள் முருகன் படத்தை செருப்பால் அடித்ததையும் பிழை என கூற வேண்டாம். தங்கள் கடவுள், பெண்கள் மரபுகள், முன்னோர் என அனைவர் மீதும் சேறு வாரி தூற்றியவனிடம் அன்பாக அமர்ந்து பேசும் நிதானமும் பக்குவமும் 100% மக்களிடம் எதிர்பார்க்க முடியாது; சிலராவது உணர்ச்சிவசப் படத்தான் செய்வார்கள்; ஏன் அவர்கள் வன்முறையை கையில் எடுத்தாலும் எடுக்கலாம்.

சினிமாக்காரி பின்னால் சுற்றிய அண்ணாத்துரை, தீ பரவட்டும் என்று புத்தகம் எழுதி பக்தி இலக்கிய புத்தகங்களை எரிப்பதை தூண்டிவிட்டா'ர்'; ஈவேரா மனுதர்மத்தை, ராமாயணத்தை போன்ற நூல்களை எரித்தா'ர்'; தெய்வங்களை செருப்பால் அடித்தா'ர்'. இவர்களை கொண்டாடும் முற்போக்கு கிருமிகளுக்கு கருத்துரிமை பற்றியும் புத்தகம் எரிப்பதைப் பற்றியும் வாயைத் திறக்க என்ன யோக்கிதை உண்டு?



முற்போக்கு, திராவிட, கம்யூனிச, கிறிஸ்தவ லாபி பொறுக்கிகளே.. திருசெங்கோட்டு மக்கள் என்ன பெருமாள் முருகன் வீட்டில் குண்டு வீசினார்களா? அவர் மகன், மகள், மனைவியோடு சேர்ந்து கொளுத்தினார்களா? வெட்டி சாய்த்தார்களா? லாரியை விட்டு நசுக்கினார்களா? என்ன செய்தார்கள்..? ஊர்வலமாக சென்று வழக்கு தொடுத்தார்கள். தங்கள் மரபுகள் மீது, தெய்வத்தின் மீது, தங்கள் முன்னோர்கள மீது அவ்வளவு அவதூறாக எழுதியவனை சட்டப்பூர்வமாக எதிர்கொள்ளக் கூட ஜனநாயக நாட்டில் கிராமத்து எளிய மனிதர்களுக்கு உரிமையில்லையா??. இன்னொரு பக்கம், முற்போக்கு கம்யூனிச மீடியாக்கள் இந்த விஷயத்தை ஊதிப் பெரிதாக்குகின்றன. திருசெங்கோட்டு மண்ணின் மீதும் ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் மீதும் மாறா பக்தி கொண்டவர்கள் உணர்வு மேலிட்டு பெருமாள் முருகனையொ அவர் குடும்பத்தையோ ஏதேனும் செய்தால் இவர்கள் வந்து துணை நிற்பார்களா??

இன்னும் சொல்லப்போனால் தமிழகத்தின் பிற மாவட்டங்களிலோ, சில மதத்தவர்கள் பற்றியோ இப்படி எழுதியிருந்தால் இந்நேரம் என்ன நடந்திருக்கும்?? குடும்பத்தோடு கருவருக்காம நாயம் பேசிக்கிட்டு இருக்கீங்களே என்றுதான் முதல் வார்த்தையே வரும். அப்படி எதுவும் செய்யாது, கிராமத்தவர்கள் பாஷையில் சொல்வதானால், "மொன்னத்தனமாக" நடந்து கொண்டதற்கு கிடைக்கும் பரிசு இந்த வசவுகள். 

வெளிநாட்டு சக்திகள் பின்னணி:
போர்டு பவுண்டேசன் போன்ற வெளிநாட்டு அமைப்புக்கள் தங்கள் அல்லக்கைகளின் மூலம் இந்த புத்தகத்தை எழுதத் தூண்டியுள்ளன. அதற்கு தாராளமான பண உதவியும் அளிக்கப் பட்டிருக்கிறது. இதை பெருமாள் முருகனே புத்தகத்தின் முன்னுரையில் ஒப்புக் கொண்டுள்ளார். ரோஜா முத்தையா நூலகத்துக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.



இந்த ரோஜா முத்தையா நூலகமும் போர்டு பவுண்டேசன் உட்பட பலரின் நிதியுதவி பெற்று செயல்படுவதை அவர்கள் தளத்தின் மூலமே அறியலாம். இந்த வள்ளல்கள் மற்றும் அமைப்புக்களிடம் ஒரு ஒற்றுமை உண்டு, அது என்ன என்று நீங்களே ஆராய்ந்து அறிந்து கொள்ளுங்கள்.


போர்டு பவுண்டேசன் போன்ற வெளிநாட்டு அமைப்புகள் இந்தியாவின் பாரம்பரியம் கலாசாரத்தை குலைக்கவும், கிறிஸ்தவ மிஷனரிகள் மதம் பரப்பவும், உலகமயமாக்கலை துரிதப்படுத்தவும் கிராமத்து மக்களின் வாழ்க்கை முறையை தூற்றி அவர்களை நகரமாய-உலகமய சாக்கடை வெள்ளத்தோடு கலந்து ஓட பிடித்து தள்ளும் சூதுதான் இது. இதைப் பற்றி ஜெயமோகன் தனது கட்டுரையில் தெளிவாக கூறியுள்ளார். ஜெயமோகன் மட்டுமல்ல வினவு போன்ற இடதுசாரி பத்திரிக்கைகளே போர்டு பவுன்டேசன் போன்ற அமைப்புகளின் முகத்திரையை கிழித்து எழுதியுள்ளார்கள்!

ஏன் எதிர்க்க வேண்டும்?
இந்த புத்தகம் கோயில் விழா மட்டுமின்றி இல்லாத பல பொய்களை உண்மையென சித்தரித்து கூறுகிறது. வாழ்க்கைமுறை, வரலாறு, மரபுகள் என்று பொய்கள் பலவாறு கலந்து - பெருமாள் முருகனின் எழுத்து திறமை என்னும் மாயையால் உண்மை போல சித்தரித்து சோடித்து அனுப்பப்பட்டுள்ளது.

உண்மை-பொய் பற்றிய விவாதத்துக்குள் செல்லும் முன் எளிமையாக ஒரு விஷயம், இந்த புத்தகத்தில் சொல்லியபடி ஆண்-பெண் இஷ்டத்துக்கு போவது மனதளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தால், அதுவும் வெறும் 75 ஆண்டுகளுக்கு முன் ( ஈவேரா உயிரோடு இருந்த காலம்). அந்த காலகட்டத்தில் திருசெங்கோட்டு கோயில் நிர்வாகத்தில் இருந்தவர்கள்தான் தென்னிந்திய மக்கள் சபை, திராவிட இயக்கம் மற்றும் கட்சிகளின் வேராகவும் இருந்தார்கள். சம்பவம் நிஜமெனில் இதை திராவிட இயக்கத்தினர் விட்டு வைத்திருப்பார்களா? ஊதி பெருக்கியிருக்க மாட்டார்கள்?? அதே புத்தகத்தில் இளைஞர்கள் பெண் மோகிகளாக திரிந்ததையும் சொல்லியுள்ளார். அப்படி இருந்திருந்தால் இன்று வாய்மொழியாக எவ்வளவு பரவியிருக்கும்? ஏன் யாருக்கும் தெரியவில்லை??

சரி, இதை பற்றி மேலும் ஆய்வோம். திருச்செங்கோடு பற்றியும், திருசெங்கோட்டு மன்னர்கள் பற்றியும், திருசெங்கோட்டை சுற்றியுள்ள முக்கிய கோயில்கள் பட்டக்காரர்கள் பற்றியும் நூற்றுக்கணக்கான இலக்கியங்கள், புராணங்கள், கல்வெட்டுக்கள் செப்பேடுகள், கதைப்பாடல்கள், கும்மிப் பாடல்கள் என்று ஏராளமான ஆவணங்கள் உண்டு. ஒன்றில் கூட இதை பற்றி சொல்லப்படவில்லை.

கோயிலோடு தொடர்புடைய பல ஜாதிக்காரர்கள், பூஜை உரிமையாளர்கள், என்று ஏராளமான ஜாதிகளின் பிரதிநிதிகள், வயதானோர், முன்னாள் இந்நாள் கோயில் நிர்வாகிகள் யாருமே இப்படி சம்பவம் நடந்ததில்லை என்று கூறியுள்ளனர். திருசெங்கோட்டை சேர்த்த சேலம் ஜில்லா கெஜட், ஹ்டிருசெங்கோட்டு கோயில் பற்றிய வெள்ளையர் ஆவணங்கள், கடிதங்கள், ரிப்போர்ட்கள் எதிலுமே இதுகுறித்த பதிவுகள் கிடையாது. வாய்மொழியாகவும் இல்லை, ஆவணங்களிலும் இல்லை. அப்படியிருக்க திருவாளர் பெருமாள் முருகனுக்கு மட்டும் கனவு கண்டதையெல்லாம் வரலாற்று ஆவணமாக எடுத்துக் கொள்ளும் ஆற்றல உள்ளது.

ஆக, பல பொய்களால் கட்டமைக்கப்பட்ட நாவல் என்பது முதல் காரணம்; 14 நாள் கோயில் தேர் நோம்பிக்கு வரும் எல்லா பெண்களின் மீதும் களங்கம் கற்பிக்க முயற்சிப்பதை எதிர்க்க வேண்டியது இரண்டாம் காரணம். திருசெங்கோட்டின் சுற்று வட்டாரத்தில் ஏராளமான குடும்பங்களில் குழந்தையின்றி தெய்வ வேண்டுதல் காரணமாகவும், காலம் கடந்தும் பிறந்த குழந்தைகள் ஏராளமுண்டு. அனைவர் மனதும் வெந்நீர் கொட்டியது போல பதறிக்கொண்டிருக்கிறது.

திருச்செங்கோடு உட்பட கொங்கதேசத்தின் மரபுகள் ஆண்-பெண் இருவருக்குமே கற்புநெறியை வலியுறுத்துவதாகும். அந்த அடிப்படை மரபை இல்லாத பொய்களை கொண்டு களங்கப்படுத்தும் முயற்சியை தடுக்க வேண்டும் என்பது ஒரு காரணம். முற்போக்கு திருடர்கள் ஒரு பொய்யை கண்டுகொள்ளாமல் எதிர்ப்பை பதிவுசெய்யாமல் விட்டால் அதையே ஆதாரமெனக் கொண்டு அதன்மேல் இன்னும் ஆயிரம் பொய்களை அடுக்குவார்கள், அதை அனுமதிக்கக் கூடாது.

எத்தனையோ பெண்கள் கற்பை, உயிரை விட பெரிதாக எண்ணி வாழ்ந்துள்ளார்கள். கல்யானமாகியிருக்க வேண்டும் என்றில்லை; தனக்கு நிச்சயிக்கப்பட்ட மணமகன் இறந்தால் கூட வேறொருவனை மனத்தால் நினைக்கமாட்டேன் என்று கூறி உடன்கட்டை ஏறிய உத்தமப் பெண்கள் வாழ்ந்த பூமி திருசெங்கோடு. இங்கே கவுண்டர்கள், முதலியார், கருநீகர், செட்டியார், ஆண்டிகள், நாவிதர்கள், மாதாரியாகுள், நாய்க்கர்கள், பறையர்கள் என்று அணைத்து தரப்பு மக்களின் முன்னோர்களில் இதுபோன்ற கற்பரசி பெண் தெய்வங்கள் உள்ளன. இதை பெருமாள் முருகன் தொகுத்த கொங்குநாடு புத்தகத்தில் உள்ளது. அவர்களுக்கு இன்றளவும் பூஜைகள் நடக்கின்றன. இப்படியான மண்ணில் இதுப்போன்ற அவதூறு வேல் பாய்ச்சியதாகவே இருக்கும். கற்பரசிகளின் சாபத்தை பெறுபவன்/அவனுக்கு வக்காலத்து வாங்கும் அயோக்கியர்கள், எப்படி வாழ்வார்கள் என்று வருங்காலம் பதில் சொல்லும்.

அயோக்கியர்கள் அதர்ம பாதையில் செல்ல நினைத்த போதே அவனுக்கான ஆயுதத்தை ஆண்டவன் தயார் செய்திருப்பார். நிச்சயம் அந்த ஆயுதம் அவனையும் அவனது அல்லக்கைகளையும் அழிக்கும். பொதுமக்கள் உண்மையை உணர்ந்தால் போதுமானது.

பெருமாள் முருகன் திருச்செங்கோடு கூட்டப்பள்ளியில் பிறந்து தற்போது நாமக்கல் அரசு கலை கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிகிறார். தாய் தந்தையர் மறைந்துவிட்டனர். மனைவி எழிலரசி, மகன் இளம்பரிதி, மகள் இளம்பிறை. அவரது படம், விலாசம் மற்றும் போன் நம்பர் உள்ள பக்கம் கீழே,






மாதொருபாகன் முக்கியஸ்தர்கள் கருத்து-மீடியாக்கள் மறைத்தவை
யார் இந்த பெருமாள் முருகன்?


Tuesday 23 December 2014

சாராயக்கடை ஏலம்

ஈரோடு தாலூக்கா வாய்ப்பாடி சாராயக்கடை 1-3-26 தேதி ஏலம் போடப்பட்டது. அவ்வூர் பிரபல மிராசுதாரரும் கொங்கு வேளாள குலத்தினருமான ஸ்ரீமான் ரத்தினசாமிக் கவுண்டர் குமாரர் முத்துசாமிக் கவுண்டர் ஏலமாகுமிடத்துக்கு விஜயம் செய்து வேளாளகுலத்தினர் யாரும் வாயப்பாடி சாராயக்கடையை எடுக்கக்கூடாதென்று கேட்டுக்கொண்டார். அவர் கேட்டுக்கொண்டதற்கிணங்கி, ஏலம் கூற வந்திருந்த வேளாள குலத்தினர் ஏலம் கூறாமல் நின்றுவிட்டனர். வேளாள குலத்தினர் நின்றுவிடவே மற்றெவரும் ஏலம் கூறவில்லை. அதிகாரிகள் என்ன முயற்சித்தும் ஒருவரும் கடை எடுக்க வில்லை.



கொங்க வெள்ளாள கவுண்டர்கள் சாராயம் குடிக்கவும் கூடாது, அந்த வியாபாரத்தில் ஈடுபடவும் கூடாது. அது அவமானம். சர்க்கார் பணத்தாசை காட்டி சாராயத்தை திணித்த போதும், அதை தடுக்க நம் முன்னோர்கள் எவ்வளவு முயற்சிகள் எடுத்துள்ளார்கள் என்பதை மேற்கண்ட செய்தியின் மூலம் அறியலாம்.. "காட்ட வித்து கள்ளுக் குடுச்சாலும் கவுண்டன் கவுண்டந்தான்" என்பன போன்ற போதையில் உளறப்பட்ட நவீன பழமொழிகளை (திராவிட கட்சியினர் புகுத்தியது) புறக்கணிப்போம். ரைமிங்காக பஞ்ச் வசனங்கள் சொன்னால் நம் மக்கள் அதை திரும்ப திரும்ப சொல்வார்கள்-அதெல்லாம் நம் மரபாகிடாது.

Saturday 20 December 2014

ராமாயணமும் - கொங்க வெள்ளாள கவுண்டர்களும்


வெள்ளாளர்கள் அடிப்படையில் கங்கா குலத்தவர்கள். சூரிய குலத்தில் இருந்து கிளைத்தவர்கள். இந்த சூரிய குலத்தில் உதித்தவர் தான் ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தி

ஸ்ரீ ராமருக்கு முடி சூட்டும்போது கிரீடம் எடுத்துத் தரும் உரிமையை வெள்ளாளர்கள் பெற்றிருந்தனர் என்பதை கம்பர் தன் ராமாயணத்தில் உணர்த்துகிறார்.

“அரியணை அனுமன் தாங்க அங்கதான் உடைவாள் ஏந்த
பரதன் வெண்குடை கவிக்க, இருவர் கவரி வீச
குறிசெரி குழலி வெண்ணெய்நல்லூர் சடையன் தன் மரபுலோர் கொடுக்க வாங்கி வசிட்டனே புனைந்தான் மௌலி “



கொங்கர்களை கோசர் (கோசல தேச பின்னணி) என்றும் கங்கர் (கங்கா குலத்தவர்)  என்றும் இலக்கியங்களில் குறிப்பிட்டுள்ளனர்.

கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் செப்பேடு பட்டயங்கள் கல்வெட்டுகள் பல ""ஸ்ரீராமஜெயம்" என்ற வரியுடன் துவங்குகிறது.

ராமாயண காலத்தில் கொங்கதேசத்தில் பல கோயில்களும் சுனைகளும் தோன்றின. ராசிபுரம் ஸ்ரீஅழியாஇலங்கையம்மன் கோயில் (ஆயா கோயில்), பொள்ளாச்சி ஸ்ரீ மாசாணியம்மன் கோயில் போன்றவை இவ்வாறானதே. ஜடாயு முக்தி கொங்கம்-ஆந்திர எல்லையில் நிகழ்ந்தது.

ராமாயணத்தை தமிழுக்கு முதன்முதலில் மொழிபெயர்த்தவர் கம்பர். பாடுவித்தவர்  வெண்ணெய்நல்லூர் சடையப்ப கவுண்டர். ராமாயணம் தமிழுக்கு வந்த பின்னரே வெள்ளாள ராசாக்களாகிய சோழர்கள் அதை தென்கிழக்கு ஆசிய நாடுகள் முழுக்க பரப்பினர். இன்றும் ராமாயணம் கம்போடியா, தாய்லாந்து, பர்மா, மலேசியா, பிலிப்பின்ஸ், இந்தோனேசியா போன்ற நாடுகளில் இன்றும் ராமாயணம்  உள்ளது.

மோரூர் கன்ன கூட்ட நல்லதம்பிக் காங்கேயன் பத்தர்பாடி எம்பெருமான் கவிராயரைக் கொண்டு “தக்கை ராமாயணம்” என்னும் இசைக் காவியத்தை படைத்தார். மிகவும் புகழ் பெற்ற ராமாயண காவியம் இது. கம்ப ராமாயணத்தை பல மடங்கு சுருக்கியும் அதன் சுவையை பல மடங்கு பெருக்கியும் கொடுத்தது. தக்கை என்னும் இசைக் கருவியை கொண்டு பாடப்படுவதாகும். சங்ககிரி வரதராஜா பெருமாள் கோயிலில் அரங்கேற்றப் பட்டது.

ராமாயணம் நம் முன்னோர்களால் போற்றிப் பரப்பப்பட்ட காவியமாகும். ஒவ்வொரு ஊரிலும் அக்காலத்தில் இருந்த திண்ணைப் பள்ளியில் குழந்தைகளுக்கு வாழ்க்கை ஒழுக்கங்கள் ராமாயணம் மூலம் பால பாடமாக போதிக்கப்பட்டது.

• பொள்ளாச்சி ஆனைமலை கோபாலசாமி மலை மேல் தாடகநாச்சியம்மன் கோயில் என்ற சிறு கோயில் உண்டு. மலைஜாதி மக்கள் வம்ச பரம்பரையாக வழிபாட்டு வருகிறார்கள். அது ராமரால் கொல்லப்பட்ட தாடகை சாபவிமோச்சனமடைந்து தெய்வமாக அருளும் கோயில் என்று கூறுகிறார்கள்!

• கூனவேலாம்பட்டி ஆயா கோயில் (அழியாஇலங்கையம்மன்) செம்பூத்த கூட்ட கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் குலதெய்வமாக வழிபடுகிறார்கள். ராசிபுரம் விழியன் கூட்டத்தார் உட்பட பிற கூட்டங்களும் குடிகளும் இஷ்ட தெய்வமாக வழிபடுகிறார்கள். அந்த அம்மனின் கதை, ராவணனின் வேண்டுகோளுக்கிணங்க அன்னை பார்வதி இலங்கையை காவல் காத்து வந்த போது அனுமன் தூது வந்து உள்ளே நுழைகையில் அங்கிருந்து படிவ ரூபத்தில் இருந்த அம்மனை பிடுங்கி பாரதத்தை நோக்கி வீச, அம்மன் கூனவேலம்பட்டியில் விழுந்து இங்கே நிலைகொண்டதாக சொல்வர்.


கொங்கதேச மன்னர்கள் ராமரைப் போலவே ராமராஜ்ய ஆட்சி செய்யவே முற்பட்டதை வரலாறுகள் மூலம் அறிய முடிகிறது. ஒழுக்கம் தவறி அதர்மம் அக்கிரமம் செய்த பட்டக்காரர்கள் இருப்பினும் அவர்கள் சேர மன்னர்களால் மட்டுமின்றி குடிகளாலேயே தண்டிக்கப்பட்டும், பதவி நீக்கம் செய்யப்பட்டு முறையான நல்ல தலைவர்கள்  ஒவ்வொரு காலகட்டத்திலும் உருவாகி நல்லாட்சியைக் கொடுத்துள்ளார்கள. அதாவது, சொன்னசொல் தவறாமை, மூத்தோரை மதித்தல், பெற்றோர் சொல் தட்டாமை, குலகுருவை மதித்துப் போற்றல், குடிமக்களின் நலனுக்காக எதையும் தியாகம் செய்ய துணிதல், மனுதர்மம் தவறாமை, சகோதரர்கள் ஒற்றுமை, சொத்து நாடு என எதையும் விட தர்மமே தலை என்று எண்ணுகிற மாண்பு, கணவன் மனைவி உறவின் புனிதம், அன்பே மையமான மனித உறவுகள், அதிகாரத்தின் மூலம் மக்களை கட்டுப் படுத்தாமல் அன்பு தர்மம் மூலம் மக்களே நல்வழியில் நடக்க வைக்கும் ஆட்சி முறை போன்றவை ராமராஜ்யத்துக்கும் கொங்கதேசத்து மன்னர்களின் ராஜ்யத்துக்கும் இருந்த ஒற்றுமைகளாகும்.

ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி அவதாரம் முடித்து வைகுண்டம் திரும்பும்போது ஸ்ரீராமரை பிரிய முடியாத அவரது குடிமக்களும் அன்பர்களும் ஸ்ரீராமரோடு சேர்ந்து நதியில் இறங்கி வைகுண்டமடைவார்கள். அதே போல பல சம்பவங்கள் கொங்கதேச வரலாற்றில் நடந்துள்ளன. உதாரணமாக தலைய நாடு கன்னிவாடி கன்ன கூட்ட முத்துசாமி கவுண்டர் மறைந்தபோது அவரது குடிபடைகளாக வாழ்ந்த ஆண்டி, நாவிதர், பறையர் போன்றோர் எங்கள் கவுண்டரே மறைந்துவிட்டார் நாங்கள் மட்டும் ஏன் உயிரோடு இருக்கோணும் என்று அவர் சவத்தோடு சேர்ந்து தீயில் இறங்கி உயிர் விட்டனர். அந்த கோயில் இன்றளவும் ஏழுபடைக்கலக்காரி கோயில் என்று விளங்கி வருகிறது. இன்றும் நம் காணியாச்சி கோயில்கள் செல்லும்போது ஏதோ புராதன ராமராஜ்யத்துக்குள் நம் முன்னோர்களின் அரசாட்சிக்குள் செல்லும் உணர்வு ஏற்படுவது இயல்பு.

கொங்கதேசத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு காணியிலும் பெருமாள் கோயில் உண்டு. இரண்டாம் நூற்றாண்டு பெருமாள் கோயில் கூட உண்டு. ரங்கநாதர் மற்றும் நரசிம்மர் தான் அதிகம் வழிபடப்பட்டிருந்தனர். ராமர் பல கோயில்களில் தனி சன்னதியில் உள்ளார். அக்காலத்திலேயே ராமருக்கு தனியே கோயில்களும் பட்டணங்களில் உண்டு. உதாரணம்:கோதண்ட ராமசாமி கோயில் ஈரோடு.

மிகத் தொன்மையான ஆஞ்சநேயர் சிலைகள் கொங்கதேச பெருமாள் கோயில் பலவற்றில் உண்டு. சிருங்கேரி சாமியார்கள் துலுக்கர் படையெடுப்பில் இருந்து கோயில்களைக் காக்க புடைப்பு சிற்பங்களாக ஆஞ்சநேயர் சிலைகளை அதர்வண வேதப் பிரயோகம் செய்து பிரதிஷ்டை செய்திருந்தனர். சிறந்த உதாரணங்கள்: ஈரோடு ஆஞ்சநேயர், தாராபுரம் காடு அனுமந்தராயர், திருச்செங்கோடு ஆஞ்சநேயர் (கேட்பாரற்று கிடக்கிறது) போன்றவை.



கம்பர் காலம் பனிரெண்டாம் நூற்றாண்டு என்று எடுத்துக் கொண்டாலும் கம்ப ராமயணம் எழுதப்பட்டதற்கு முன் ராமர் இங்கு இல்லையா என்ற குதர்க்க கேள்விகள் அடிக்கடி வரும். 

கம்பர் ராமாயணம் எழுதும் முன்னரே, ராமர் பற்றிய செய்திகள் தமிழகம் முழுதுமே விரவி இருந்தது. 1800 ஆண்டு பழமையான ராமர் சிலை தமிழகத்திலே பனப்பாக்கத்தில் கண்டெடுக்கப்பட்டது. கம்பர் காலத்துக்கு சுமார் ஆயிரம் வருஷம் முன். கம்பர் காலத்துக்கு ஆயிரம் ஆண்டுகள் முன்னரே ராமாயணம் அறிமுகமாகியே இருந்தது. கம்பர் இயற்றிய ராமாயணத்தின் பின்தான் ராமர் வழிபாடு அதிகமாக பரவியது.

சில இலக்கிய ஆதாரங்கள்,

கம்பராமாயணத்திற்கு 6-7 நூற்றாண்டுகள் முற்பட்ட பௌத்த காவியமான மணிமேகலையில் ராமாயணச் செய்திகள் சான்றுகளாகவே அளிக்கப் பட்டிருக்கின்றன.

நெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றி
அடல் அரு முந்நீர் அடைத்த ஞான்று
குரங்கு கொணர்ந்து எறிந்த நெடு மலை எல்லாம்
அணங்கு உடை அளக்கர் வயிறு புக்காங்கு
இட்டது ஆற்றாக் கட்டு அழல் கடும் பசிப்
பட்டேன் என் தன் பழ வினைப் பயத்தால்
(உலக அறவி புக்க காதை, 10-20)

காயசண்டிகை கூறினாள் - “நெடியோனாகிய திருமால் இராமனாக மண்ணில் அவதாரம் புரிந்து, அவன் அடங்காத பெரிய கடலை அடைத்த போது, குரங்குகள் பெயர்த்துக் கொண்டு வந்து எறிந்த பெரிய பெரிய மலைகள் எல்லாம் கடலின் வயிற்றில் சென்று மறைந்தது போல, இந்த அடங்காப் பசியை நிரப்ப இடும் மலை மலையான உணவு எல்லாம் என் வயிற்றின் ஆழத்தில் சென்று மறைந்து விடுகிறது”.

இந்த வரிகளில் பல செய்திகள் அடங்கியுள்ளன - ராமன் திருமாலின் அவதாரம். அவனது ஆணையில் வானரர்கள் கடலை அடைத்து அணை கட்டியது. மேலும், இந்த வரலாறு உவமையாகக் கூறப் படும் அளவுக்கு பிரசித்தி பெற்றிருந்தது.

இதே காப்பியத்தில் பிறிதோரிடத்தில், வாத விவாதத்தில், “ராமன் வென்றால் என்றால் மாண்பில்லாத ராவணன் தோற்றான் என்று தானே அர்த்தம்?” என்று அடிப்படையான தர்க்கமாகவே இராமகாதைச் சான்று வைக்கப்படுகிறது, அதுவும் ஒரு புத்தமதம் சார்ந்த புலவரால் என்றால் அது பண்டைத் தமிழகத்தில் எவ்வளவு அறியப் பட்ட விஷயமாக இருக்க வேண்டும்!

"மீட்சி என்பது "இராமன் வென்றான்" என
மாட்சி இல் இராவணன் தோற்றமை மதித்தல்
உள்ள நெறி என்பது "நாராசத் திரிவில்
கொள்ளத் தகுவது காந்தம்" எனக் கூறல்"
(சமயக் கணக்கர் தம் திறம் கேட்ட காதை, 50-60)

மேலும்,
சிலப்பதிகாரத்தில் மதுரைக்காண்டத்தில், ஆய்ச்சியர் குரவைப் பாடலில் திருமால் அவதாரங்களில் இராமரும் துதிக்கப்படுகின்றார்.

மூவுலகும் ஈரடியால் முறைநிரம்பா வகைமுடியத்
தாவிய சேவடி சேப்பத் தம்பியொடும் தான் போந்து
சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன் சீர் கேளாத செவியென்ன செவியே
திருமால்சீர் கேளாத செவியென்ன செவியே!

ராமன் வெளியேறியபோது அயோத்தியா நகரம் எப்படி தள்ளாடியதோ, அதே மாதிரி புகாரும் (கோவலனின் நகரம்) கோவலன் வெளியேறியபோது வாடியது.

பெருமகன் ஏவ லல்ல தியாங்கணும்
அரசே தஞ்சமென் றருங்கான் அடைந்த
அருந்திறல் பிரிந்த அயோத்தி போலப் 
(மதுரைக் காண்டம் - புறஞ்சேரியிறுத்த காதை - வரிகள் 63- 65)

அகநானூறு:

வென்வேல் கவுரியர் தொன்முது கோடி,
முழங்கிரும் பௌவம் இரங்கும் முன்றுறை
வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த,
பல்வீழ் ஆலம் போல,
ஒலி அவிந்தின்றால் இவ் அழுங்கல் ஊரே. (அகநானூறு -70)

பொருள்: மதுரைத் தமிழ் கூத்தனார் கடுவன் மள்ளனார் இயற்றிய அகநானூறு தொகுப்பில் இருக்கும் 70 வது பாடல் கருத்து: பாண்டியன் ஆட்சிக்கு உட்பட்டிருந்த தொன்முதுகோடி என்னும் தனுஷ்கோடியில் கடலோரத்தில் இருந்த ஆலமரத்தடியில் அமர்ந்துகொண்டு இராமன் மறை ஓதிக்கொண்டிருந்தான். இந்த நிகழ்ச்சி இலங்கை வெற்றிக்குப் பின்னர் நிகழ்ந்தது. அவனது மறையொலியைக் கேட்டு அம்மரத்தில் இருந்த பறவைகளும், அவனது படைகளும் சிறிதும் ஒலி எழுப்பாமல் கேட்டுக்கொண்டிருந்தன.

புறநானூறு:

”விரைந்து செல்லும் தேர் உள்ள இராமனுடன் சேர்ந்து காட்டுக்கு வந்த சீதையை வலிமை வாய்ந்த கைகளையுடைய அரக்கனாகிய இராவணன் கவர்ந்து சென்றான். அந்நாளில் சீதையால் கழற்றி எறியப்பட்ட ஆபரணங்கள் நிலத்தில் வீழ்ந்து ஒளி வீசுகின்றன. இவற்றைச் சிவந்த முகங்களை உடைய குரங்குகள் கண்டன,” என்னும் பொருள் படும்படி பின்வருமாறு கூறுகிறது :

“கடுந்தேர் இராமன் உடன்புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை
நிலம்சேர் மதர் அணி கண்ட குரங்கின்
செம்முகப் பெரும்கிளை”

கலித்தொகை:
சிவ பெருமான் வாழும் இமய மலையைப் பெயர்த்தெடுக்க முயன்ற ராவணன் கதை நாம் அறிவோம். அது சங்ககால நூலான கலித்தொகையில், “இமயத்தை வில்லாக வளைத்த பரமசிவன் உமையவளுடன் வீற்றிருந்தான்.அப்போது, பத்துத் தலைகளை உடைய அரக்கர் தலைவன் இராவணன் காப்புப் பொலியும் தன் வலிமையான கைகளை மலையின் கீழே புகுத்தி அதை எடுக்க முயன்றான்; எடுக்க முடியவில்லை. அதனால் மலையின் கீழ் சிக்கி வருந்தினான்”, என்னும் விதமாகப் பின்வருமாறு கூறுகிறது:

“இமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணன்
உமை அமர்ந்து உயர்மலை இருந்தனன் ஆக
ஐயிருதலையின் அரக்கர் கோமான்
தொடிப்பொலி தடக்கையின் கீழ்புகுத்து அம்மலை
எடுக்கல் செல்லாது உழப்பவன்போல”

இன்னும் கம்பருக்கு முன் வந்த பக்தி இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள் பலவற்றிலும் ராமாயண செய்திகள் பரவலாக காணப்படுகின்றன.

கம்பனுக்கு முன் ராமாயணம் என்ற ஆராய்ச்சியை அரங்கேற்றிய திரு சங்கர நாராயணன் அவர்கள் உரை..



https://www.youtube.com/watch?v=De_yLGoiKLY

சரி ராமாயணத்தின் அவசியம் என்ன?

நம் கண்களுக்கு கொண்டுவரப்படாத சில செய்திகள். ஆந்திராவில் என்.டி.ராமாராவ் வந்தபின் பிரபலமான ராமபக்தியின் காரணமாக குற்ற விகிதம் அதிகம் இருந்த பல கிராமங்களில் குற்ற எண்ணிக்கை குறைந்தது. இது ஆந்திர ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகளின் கருத்து. இன்றளவும், சிறைச்சாலைகளில் ராமாயணம் கைதிகளுக்கு படிக்க வாய்ப்பளிக்கப்படுகிறது.

ஆன்மிகம் என்பதைத் தாண்டி மனித குணங்கள் என்பதில் ஸ்ரீராமர் உதாரண புருஷனாக விளங்குகிறார். நமது முன்னோர்கள தனித்தன்மையான குணங்கள் பல ஸ்ரீராமரின் குணத்தோடு பொருந்தியிருந்தது; இக்குணங்கள் தமிழகத்தின் பிற சாதிகளிடையே ஒப்பீட்டளவில் குறைவாகத்தான் இருந்தது. இதனால்தான் கவுண்டர்கள் இன்றளவும் பண்பு குணங்களில் பிற சமூகங்களுக்கு முன்னுதாரணமாக உள்ளனர்..



௧.பணத்தை, பதவியை, வசதியை விட அன்பையும், உறவுகளையும், தர்மத்தையும், வாக்கு தவராமையையும் பெரிதென நினைத்தல்

௨.பெரியோரை மதித்தல். பெற்றோர் சொல் மீறாமை. ஆயுதமின்றி அன்பாலும், அடக்கத்தாலுமே பலரின் மனதை வென்றுவிடுதல்

௩.அன்பால் அனைவரையும் அரவணைத்து செல்லுதல் (நம் குடிசாதிகளை)

௪. ஆணும சரி, பெண்ணும் சரி கற்புநெறி தவறாமை

௫.சகோதர ஒற்றுமை (சொத்து, பதவியை விட சகோதரன் முக்கியன் என எண்ணல்)

௭.தலைவன்-சேவகன் உறவு.. ராமர்-அனுமார் உறவு..

௮.என்றும் எளியவனாக அனைவரிடத்தில் அன்பும் பண்பும் முன்னிறுத்தி வாழ்பவனாக, அதே சமயம் நேரம் வருகையில் வீரத்தின் அடையாளமாக இருத்தல்

இன்னும் எவ்வளவு வேண்டுமாயினும் அடுக்கிக் கொண்டே போகலாம். ஆன்மீகத்துக்கு மட்டுமின்றி சமூக வாழ்க்கைக்கு ஸ்ரீராமாயணம் எவ்வளவோ நன்மைகளை சேர்க்கிறது. நன்னெறிக் கதைகள் என்று பல கதைகளைக் கேட்கிறோம், அதனில் உள்ள நல்ல வாழ்வாம்சங்களை எடுத்துக் கொள்வது போலாவது ராமாயணத்தை நோக்கினால் நல்லெண்ணம் உள்ள எவருக்கும் ராமாயணத்தை பழிக்கும் எண்ணம் தோன்றவே தோன்றாது. நாட்டில் நற்குணங்களை ஒழிக்க வேண்டும் என்ற கங்கணம் கட்டி அலையும் தி.க. வுக்கு முதல் எதிரியாக ராமாயணம் இருப்பது ஒன்றே அதன் மகத்துவத்தை உணர வைக்க அளவுகோல் எனவும் கொள்ளலாம்.

ராமாயணம் போன்ற தர்ம நூல்கள் ஒவ்வொரு கோயில் விழாவிலும் உபன்யாசங்கள் மூலம் மக்களிடம் கொண்டு சேர்க்கப் பட வேண்டும். அப்படி சேர்வதால் இப்படித்தான் வாழ வேண்டும் என்ற பிடிப்பும் குற்றமற்ற மனதும் இயல்பாகவே சமூகத்துக்குள் உண்டாகிறது. அப்படி இருந்த காரணத்தாலேயே கொங்கதேசம் தர்மத்திலும் மக்கள் ஒழுக்கத்திலும் பிற தேசங்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருந்தது.



நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும பாவமும் சிதைந்து தேயுமே
ஜன்மமும் மரணமும் இன்றித் தீருமே இம்மையே
'ராம' என்றிரண்டெழுத்தினால் 



ஸ்ரீ ராம ஜெயம்!


மேலும் படிக்க,



Wednesday 3 December 2014

கொங்கதேசத்தில் வீரமாத்தி

வீரமாத்தி-புடவைக்காரியம்மன்-படைக்கலக்காரி கோயில் போன்ற கோயில்களை கொங்கதேசம் முழுக்கவே நாம் பார்க்கிறோம். இந்த கோயில்களின் வரலாறு என்ன, இவை சொல்கின்ற செய்திகள் என்ன??

வீரமாத்தி வழிபாடு பற்றிய பூர்வாங்கத்திற்கு போகும்முன் அக்காலத்தின் கணவன் மனைவி உறவு, கல்யாணம் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். நம் கொங்கு கவுண்டர் சமூகத்தில் ஒரு பெண்ணின் கல்யானத்தின்போதே அவள் உடன்பிறந்தோரிடம் சம்மந்தம் கொள்வதாக சகோதரன்-சகோதரி ஒப்பந்தம் செய்துகொள்வார்கள் (அதனால் தான் வேறு இடத்துக்கு பெண் கொடுப்பதாக இருந்தால் மாமன் வீடு பொட்டு போட்டு ஆசீர்வதிப்பது அவசியமாகிறது; இது சீர் முறைகள் செய்து செய்த முறையான கல்யானதுக்குத்தான்-சீரழிந்த கல்யாணங்களுக்கு பொருந்தாது). அப்படி சகோதரன்-சகோதரி வீட்டில் பெண் கொடுத்து எடுக்காவிட்டாலும், பெண் பருவமடைந்தவுடன் கல்யாணம் செய்துவிடுவார்கள். ஆணுக்கும் பெண்ணுக்கும் பருவத்தில் கல்யாணம் செய்துவிடுவார்கள். தான் என்றும் தனக்கான விருப்பு வெறுப்பு, அடையாளம், சுயம் (individuality) என்ற ஒன்று உருவாகும் முன்னரே கல்யாணம் செய்வதால் ஆணும-பெண்ணும், தனது குணத்தை-ஆளுமையை, தனது துணைக்கு தக்கவாறு வளர்த்துக் கொண்டார்கள். அப்பா, அம்மா போன்ற உறவுகள் எப்படியோ அதே போல வாழ்க்கைத்துணையும் ஆழ்மன பந்தமாக உறுதியாக இருந்தது. எனவே விவாகரத்து என்பது மிக மிக அதிசயமாக இருந்தது. அதோடு பருவ கல்யானத்தால் தேவையற்ற காம கொந்தளிப்புகள், அவற்றை அடக்கும் அவசியம், அடக்க இயலாமையால் குற்ற உணர்ச்சி, கண்ட சாதிகளோடு காதல் (விபசாரம்), ஓடிப்போதல் போன்ற அசிங்கங்கள் ஏற்படவில்லை.

(இதுவே இக்காலத்தில் முப்பது வயதில் கல்யாணம் செய்வதால் கணவன்-மனைவி என்ற உறவு மூன்றாவது மனிதர் போல ஆகிறது. இதனால் ஏற்படும் சமூக, குடும்ப, உடல்-மன பாதிப்புகள் ஏராளம். விவாகரத்துகளுக்கும் இதுவே காரணம். இன்றைக்கும் நம் சமூகத்தில் காதல் கல்யாணம் தவிர்த்து நிச்சயிக்கப்பட்ட முறையான கல்யாணங்களில் விவாகரத்து அரிதே)

ஆக, இப்படியாக அக்காலத்தில் கணவனும் மனைவியும் பிரிக்க முடியாத அன்பும், பாசமுமாக இணைந்திருப்பார்கள். அப்படியான உறவில் கணவன் மரணமடைந்தால் கற்பு நெறியில் உயர்ந்த அந்த மனைவியடையும் வேதனை சொல்லி மாளாது. அதை பிறந்துவிட்ட இக்காலத்தில் திராவிட சாக்கடை ஆட்சியில் பிறந்த நம்மால் உணரக்கூட முடியாது. கற்பின் வலிமையால்-அன்பின் மிகுதியால் தன் துணையோடு உயிர் விடுதல் ராமாயணம் மகாபாரதம் முதல் தற்காலம் வரைகூட தொடர்ந்து நடக்கும் செயல். இது இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகள் மற்றும் மிருக-பறவை இனங்களில் கூட காண இயலும் காட்சியே. இது உயிரினத்தின் அடிப்படை உணர்வு வெளிப்பாடு என்பதை புரிந்துகொள்ளல் வேண்டும். இயற்கையாகவே உணர்வுப்பூர்வமான பெண்கள் அப்படி கணவனை இழக்கும்போது அந்த செய்தி கேட்ட அதிர்ச்சியிலேயே உயிரை விட்டுவிடுவார்கள். அப்படி உயிர் போகாவிட்டாலும் கணவனோடு சேர்ந்து தீப்பாய்ந்து உயிரை விட்டுவிடுவார்கள். அப்படி தீப்பாய்ந்து உயிரை விட்ட உத்தம மாதரசிகளை நாம் வீரமாத்தி-தீப்பாஞ்சம்மன்-புடவைக்காரியம்மன்-படைக்கலக்காரி போன்ற பெயர்களால் வணங்குவோம். தீப்பாய்ந்து உயிரை விடாதவர்கள் விதவை நோன்பு ஏற்று, வெள்ளையாடை உடுத்தி, உணவுக் கட்டுப்பாடு, வாழ்க்கை முறைகள் மூலம் உணர்வுகளை கட்டுப்படுத்தி வாழ்வார்கள். கணவனை இழக்கும் பெண்கள் இந்த மூன்று வழிகளில் ஒன்றையே தேர்ந்தெடுப்பார்கள். இன்னும் சொல்லப்போனால் கணவன் என்றில்லை, தன் மனதில் (கல்யாணம் நிச்சயிக்கப்பட்ட) ஒருவனை நினைத்துவிட்டால் போதும் அவன் கல்யாணத்துக்கு முன்னர் இறந்தாலே வேறொருவனை நினைக்க-மணக்க விருப்பின்றி நம் குல பெண்கள் தீப்பாய்ந்து உயிர் விட்டுள்ளனர்!



சங்க இலக்கியங்கள் தலைகற்பு இடைக்கற்பு கடைக்கற்பு என்று மூன்று நிலைகளை உரைக்கிறது.


  1. தலைக்கற்பு என்பது-கணவன் உயிர்விட்ட செய்தி கேட்டதும் மனைவி துக்கம் தாழாது தானாக உயிரை விட்டுவிடுவதாகும். இந்த மரணங்கள் இன்றளவும் நாள்வாங்கு வாழ்ந்த பெரியவர்கள் மரணங்களில் காண்கிறோம் (கீழே உள்ள செய்தித்தாள் கட்டிங்களை பார்க்கவும்). ராவணன் மனைவி மண்டோதரி, சிலப்பதிகாரத்தில் வரும் பாண்டியன் மனைவி பாண்டிமாதேவி, சேரன் குடக்கோ நெடுஞ்சேரலாதன் மனைவி, பெருவிறற்கிள்ளியின் மனைவி ஆகியோர் கணவன் இறந்த செய்தி கேட்டதும் உயிர்விட்டவர்கள்.
  2. இடைக்கற்பு என்பது - கணவன் இறந்த செய்தி கேட்டு துக்கம் தாழாது, தானும் கணவனின் சடலத்தொடு சேர்ந்து தீப்புகுதல், உண்ணாநிலையில் வடக்கிருந்து உயிர்நீத்தல், உள்ளிட்ட உயிர்மாய்த்துக் கொள்ளல் ஆகும். மகாபாரதத்தில் பாண்டு மறைந்ததும் மாத்ரி உடன்கட்டை ஏறினார். நம் கொங்கதேசத்தில் பல நூறு சம்பவங்கள் அதுபோல நடந்துள்ளன (விரிவான தகவல்கள் கீழே). குறுந்தொகையில் ஒரு பெண் குரங்கு ஆண்குரங்கின் பிரிவு தாழாது இறந்தது குறிப்பிடப்பட்டுள்ளது. 
  3. கடைக்கற்பு - என்பது உயிர்நீக்காது, கணவனை நினைத்து தன் வாழ்நாளை விரதகோலம பூண்டு வாழ்தலாகும். மங்கள அணிகள் நீக்கி, உணர்வுகளைத் தூண்டாத உணவுகளை உண்டு, உடல் சூட்டை இறக்க வெற்றுத் தரையில் உறங்கி, வாழ்நாளை நகர்த்துவர். கொங்கதேசத்தில் கணவனை இழந்தாலும் பெண்கள் தங்கள் வேலைகளிலும் ஆளுமையிலும் பல அரும்பெரும் பணிகளை செய்துள்ளனர். கணவன இறந்தபின்னர் பெண்ணின் தாய்வீட்டார் பருத்தி கொடுத்து நூற்றுப் பிழைக்க வழிவகை செய்வது மரபு, இன்றளவும் தொடர்கிறது. 



  • ஒரு பெண்தான் வீரமாத்தியாக முடிவு செய்யவேண்டும் (ஆம், பெண்தான் முடிவு செய்ய வேண்டும்; அது பெண்களின் சுய விருப்பமே தவிர கட்டாயமன்று). 



  • குடும்பத்தாரும் ஊராரும் வேண்டாம் என்று கூடுமானவரை எதிர்த்து சமாதானம் செய்ய முயற்சிப்பார்கள். பெரும்பாலான சூழலில் குடும்பத்தாரை எதிர்த்து பகைத்து போராடி வீரமாத்தியான பெண்கள் ஏராளம்.
  • பெண் வீரமாத்தி இறங்க கட்டுப்பாடுகள் உண்டு-பருவமடையா பெண்ணாக இருத்தல் கூடாது, கர்ப்பமாக இருத்தல் கூடாது, குழந்தைக்கு பாலூட்டி பாதுகாத்துவரும் நிலையில் இருக்கக்கூடாது, வீட்டுக்கு தூரமாக இருத்தல் கூடாது போன்றவையாகும். தீப்பாயும் முன் அந்த பெண்ணுக்கு உடல் பக்குவமாக நெய் மஞ்சள் வேப்பிலை போன்றவற்றால் பற்றுகள் போட்டு பக்குவப்படுத்துவார்கள்.

  • விதவையாக வாழ முடிவெடுத்தாலும் அதையும் ஏற்றுக் கொண்டு அந்த பெண்ணுக்கு பெண்ணின் குடும்பத்தார் கடைசி வரை ஆதரவாக இருந்து துணை புரிவார்கள்.

தெற்கு மாவட்டங்களில் நடக்கும் நோம்பியில்


மேற்சொன்ன செய்திகளுக்கு உதாரணமாக சில கொங்கதேச சம்பவங்களைப் பார்க்கலாம். 
  • காளமங்கலம் நல்லாத்தாள், தன் கணவரை புலி தாக்கியதால் இழந்த போது தீப்பாய முடிவெடுத்தார். அதை தடுத்த தன் உடன் பிறந்த சகோதரர்களுக்கு தனது படைக்கல பூசை உரிமைகளில் முன்னுரிமை கொடுக்காது; அவருக்கு உதவிய பங்காளி வீட்டு சகோதரர்களுக்கு முன்னுரிமை கொடுத்தார்.

  • தோக்கவாடி வேலாத்தாள், தனது கணவர் இறந்தபின்னர் தீப்பாயும் தனது முடிவை நிராகரித்த தந்தையிடம் சண்டையிட்டு அரசனை சந்தித்து ஆதரவு பெற்று வந்து தீப்பாய்ந்தார்.


  • ஈரோடு ஆண்டகொத்தாம்பாளையம் சோளியம்மா, தனக்கு நிச்சயிக்கப்பட்ட வேலப்ப கவுண்டர் மரணிக்கவே அவர் இருந்த திசை பார்த்து தீ வளர்த்து இறங்கி உயிரை விட்டார் (கணவர் இல்லாது தனியே வேறு இடத்தில் தீப்பாய்வது அனுமரணம்; கணவர் சவத்தொடு தீப்பாய்வது சக மரணம்) 
  • தலைய நாடு கன்னிவாடியில் பட்டக்காரர் மனைவியர் மட்டுமின்றி பட்டக்காரர் மேல் அன்பும் பாசமும் மிகுந்திருந்த அவரது குடிபடைகளான ஆண்டி, நாவிதர் மற்றும் பறையர் ஆகியோர் தீப்பாய்ந்தனர். 
  • மல்லசமுத்திரம் தொண்டமாக்கவுண்டர் மனைவியார் சின்னாத்தா தொண்டமா கவுண்டருடன் சேர்ந்து தீப்பாய்ந்தார்.

மல்லை தொண்டைமாகவுண்டர் தீப்பாய்ந்தம்மன் கோயில் 

·  காடையூர் வெள்ளையம்மா கணவர் இறந்த பின்னர் தீப்பாயாது இருந்து தனது குழந்தைகளை வளர்த்து பட்டக்காரராக்கினார்.
காடையூர் வெள்ளையம்மா 
வீரமாத்தி சதிக்கல்லை ஒத்திருக்கும் சிற்பங்கள்
குமாரமங்கலம் பொன்காளியம்மன் கோயில் 

கணவன் இறந்ததும் வீரமாத்தி இறங்க முடிவெடுக்கும் பெண்ணை குதிரையில் அழைத்து வருவார்கள். அந்த தெய்வப்பெண் செல்லும் வழியில் சுமங்கலிப் பெண்கள் அவரிடம் காலில் விழுந்து ஆசி பெறுவார்கள். அந்த பெண் தனது சொத்துக்களை நல்லாருக்கும், உறவினருக்கும் பிரித்தளிப்பர். உடன்கட்டை ஏறும் இடத்தில் குழி வெட்டி குழிக்குள் கணவனின் சடலம் கிடத்தப்பட்டு நெய், எண்ணெயில் நனைந்த விறகுகள் நிறைக்கப்படும், குழியைச் சுற்றி நான்கு மூலையிலும் ஜ்வாலை தீண்டா தூரத்தில் தடிகள் நடப்பட்டு, வடக்கு திதியில் சிறிது சந்து விட்டு துணியால் சுற்றி மறைப்பு உண்டாக்குவார். வீரமாத்தி இறங்கும் பெண் வடக்கு சந்து வழியாக கணவன் சிதையை வளம் வந்து கணவனோடு குதித்து தீப்புகுவார். பெண்கள் குழவையிடுவர். அன்றிலிருந்து அந்த பெண் குலதெய்வத்திற்கு சமமாக வணங்கப்படுவார். அந்த பெண்ணின் முன் பின் 21 தலைமுறைப் பாவங்கள் நிவர்த்தியாகும்.

வருஷந்தோறும் அந்த வீரமாத்தி அம்மனுக்கு படைக்கலப் பூசை நடைபெறும். வீரமாத்திக்கு படைக்கலப் பூசை நடத்துவது பல சாபங்களை நீக்கி குடும்பத்துக்கு தலைமுறை செழிக்க வகை செய்யும்.


படைக்கல பூசை (சாமி செய்தல்) பற்றி தூரன் நல் நடராசன் மாமா விரிவாக எழுதியுள்ளார். படத்தை திருப்ப முடியலை. டவுன்லோடு பண்ணி படுச்சுக்குங்க சொந்தங்களே.





இந்த வீரமாத்தி முறை சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக நம் கொங்கு பெண்கள், பின்பற்றிய ஒழுக்க நெறியையே சங்க காலம்தொட்டு கற்புநெறிக்கு இலக்கணமாக வகுத்துள்ளனர் என்பது தெளிவாகும். ஏனெனில் பல பெரும்பான்மை ஜாதிகளில் இந்த வழக்கங்கள் இருக்கவில்லை.

இந்த வழக்கம் பல காலமாக பாசத்தின் காரணமாக தொடர்ந்து வந்தது ஒரு காலகட்டத்தில் முஸ்லிம் மதத்தவர்கள் பாரதத்துக்குள் நுழைந்தபின்னர் பயத்தால் தீப்பாய துவங்கினர். பாரத போர் தர்மப்படி பெண்கள், குழந்தைகள், முதியோர் போன்றோரை பாதிக்காதவாறு போர் செய்வார்கள். தோற்ற நாட்டில் பெண்களை கைதீண்ட மாட்டார்கள். அப்படி மீறி பெண்கள் மீது கைவைக்க நினைப்பது அதர்மமாக கருதப்பட்டது. உதாரணமாக தென்கரை போரில் கொங்கராயனை பறையர் படை கொண்டு வேட்டுவ-வேளாள கூட்டுப் படை வென்றது. அப்படி வென்றபோது கொங்கராயனின் மனைவியர் மற்றும் அவன் போர் வீரர்கள் அவரவர் கணவன்மார் சடலத்தொடு தீப்பாய முடிவெடுத்தபோது கண்ணியத்தோடு அனுமதித்தனர். ஆனால் முஸ்லிம்கள் படையெடுக்கும்போது தோற்ற நாட்டில் பெண்களை அடிமைகளாகப் பிடித்துப் போய் விற்றனர். நம் தங்கம், கலைப்பொக்கிஷங்கள், யானை, குதிரை போன்றவற்றை கொள்ளையிட்டு செல்லும்போது பெண்களையும் பிடித்து சென்று அடிமை சந்தையில் விற்றனர். அதற்கு பயந்து பாரதப் பெண்கள் தங்கள் நாட்டுப் படை தோற்றால் எதிரிகள் கையில் சிக்காதிருக்க தீப்பாய்ந்தனர். அதற்கு சிறந்த உதாரணம் சித்தூர் ராணி பத்மினி அவர்கள். பல ஆயிரம் பெண்கள் ஒன்றாக அலாவுதீன் கில்ஜியின் பிடியில் சிக்காதிருக்க தீயில் விழுந்து உயிர் விட்டனர்.
 
சித்தூர் ராணி பத்மினி உயிர் விட்ட இடம் (கோயில்)


தற்கால கிறிஸ்தவ-முற்போக்கு-கம்யூனிச லாபி உடன்கட்டை என்றதும் சமூக கொடுமை, பெண்ணை கட்டி நெருப்பில் வீசும் காட்டு மிராண்டித்தனம் என்று சொல்கிறார்கள். அவர்களே, கணவனை கொன்றுவிட்டு அவன் மனைவியை ரண்டாம் கல்யாணம் செய்து பிள்ளையாக பெற்று தள்ள வைத்து கொலை செய்தவன் கட்டிய சமாதியை காதலின் சின்னம் என்கிறார்கள்.

இந்த உடன்கட்டை மரபை எதிர்த்த ராஜாராம் மோகன் ராய் பற்றிய உண்மை முகத்தை நமக்கு நம் மெக்காலே கல்விமுறை போதிக்கவில்லை. அஜித் வடக்கில் ராஜாராம் மோகன் ராய் ஒரு பிரிட்டிஷ் ஏஜென்ட்என்றும் ஓபியம் போதை வணிகத்தில் பிரிட்டிஷ்சுடன் வேலைசெயதவர் என்று நிறுவுகிறார்.

1. அனைவருக்கும் கட்டாயம்: உடன்கட்டை ஏறுதல் பற்றி பேசத் துவங்கியவுடன் சொல்லும் முதல் வார்த்தை கணவனை இழந்த பெண்கள் எல்லாரையும் பிடித்து கட்டி தீயில் போட்டுவிடுவார்கள் என்பதுதான். தீப்பாய்வது அந்த பெண்ணின் முழு முடிவு; அதோடு உறவினர்கள் எதிர்த்துள்ளார்களே தவிர யாரும் கொல்ல முயன்றதில்லை. அதோடு இது கணவன் வீட்டார் சதி என்று சொன்னாலும், அக்காலத்தில் பெண் வீட்டாரும் அதே ஊரில் தான் இருப்பார்கள்; தங்கள் பெண்ணை கணவன் வீட்டார் கட்டி தீயில் போடுவதை எந்த தகப்பன் அனுமதிப்பார் சொல்லுங்கள்? பாரதத்தின் வட பகுதிகளில் சில இடங்களில் கட்டாயமாக நடத்தப்பட்ட சில சம்பவங்களை பொதுமைப்படுத்தி இவ்வழக்கதையே காட்டுமிராண்டித்தனம் என்று பட்டம் கட்டிவிட்டார்கள் வெள்ளையர்கள்; வட நாட்டில் நடந்த கொடுமைகள் என்று அவர்கள் ஏற்படுத்திய பிம்பம் கூட பொய்தான் என்பதை பல்வேறு அறிஞர்கள் ஏற்கனவே நிரூபித்துவிட்டார்கள்.
2. சொத்துக்காக: சிலர் சொத்துக்காக பெண்களை தீயில் வீசினார்கள் என்று உளறுகிறார்கள். அக்காலத்தில் பெண்களுக்கு கல்யாணத்தின் போதே சொத்தில் ஒரு பகுதியை பிரித்து கொடுத்துவிடுவார்கள். அதுதான் ஸ்திரீ-தனம் எனப்படும் சீதனம். நம் மங்கள வாழ்த்து பாடலில் விரிவாக சொல்லப்பட்டிருக்கும். நகைகள், வண்டி, கருவிகள், பசுக்கள், காளைகள் என்று ஒரு பெரிய லிஸ்ட் அசையும் சொத்துக்கள் பெண்ணுக்கு வழங்கப்படும். கல்யாணத்தின் பிறகுதான் வீரமாத்தி என்பதே நடக்கிறது. அதோடு பெண்களுக்கு அசையா சொத்து கொடுக்கும் வழக்கம் அக்காலத்தில் இருந்ததில்லை, எனவே சொத்துக்கு உடன்கட்டை என்ற குற்றச்சாட்டு முரண்பாடானது.

போன ஓராண்டில் மட்டும், அதுவும் பத்திரிகையில் வந்தவை மட்டுமே
இன்றும் உள்ள வீரமாத்தி சம்பவங்கள்  




மேலே உள்ள படங்களில் உள்ளவை தற்காலத்தில் நடந்த மரணசெய்திகள். கணவன்-மனைவி பிரிவு தாங்காது உடனே உயிர்விட்ட சம்பவங்கள். பிற சமூகத்தவர்களையும் உள்ளடக்கியது. தன் துணையின் பிரிவை தாங்காது உயிர் துரத்தல் மனித இயல்பு, காலம்-மொழி, தேசம், மனித-விலங்கு என்ற பாகுபாடு கடந்து அனைவருக்கும் இருக்கும் இயல்பு என்பதை குறிக்க.

வெள்ளைக்காரன் வெறியோடு இந்த வழக்கத்தை எதிர்க்கக் காரணம், நம் பெண்களின் ஒழுக்கநெறியான வாழ்வு தான் குடும்ப அமைப்பின் ஆணிவேராக இருந்தது. குடும்ப அமைப்புதான் நம் நாட்டின், ஆன்மீக-சமூக கட்டமைப்பின் அடித்தளமாக இருந்தது. ஆக, பெண்களின் கற்பு நெறியை சிதைக்க அவர்கள் எடுத்த முயற்சிகளில் இதுவும் ஒன்று. இந்த கற்பொழுக்கத்தை கெடுக்காது மதம் பரப்புதல், நம் சமூக கட்டமைப்பை நொறுக்குதல், நம் நாட்டை சுரண்டுதல், உலகமயமாக்கல் போன்றவை சாத்தியப்படாது. எனவேதான் அவர்களுக்கு இந்த வெறி. ஒரு பெண் வீரமாத்தியானால் அந்த பெண்ணின் பிறந்த-புகுந்த வீடுகளின் 21 தலைமுறை பாவங்கள் தீருமாம். ஆனால் அந்த வீரமாத்தியாகும் முடிவு தானாக எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும். ஒருமுறை வீரமாத்தியம்மனுக்கு படைக்கல பூஜை நடத்தினாலே ஜென்ம சாபல்யங்கள் கூட தீரும். கற்பு நெறி நின்ற பெண்களின் ஆத்மா உயிர்விட்ட இடத்திற்கு அப்படியொரு சக்தியுண்டு. ஏனெனில் கற்புநெறி பிறழாத பெண்கள் தெய்வத்தை விடவும் சக்திவாய்ந்தவர்கள் என்பது வேதவாக்கு. இன்று கொங்கதேச குடிகளின் காணியாச்சி கோயில்கள் பெரும்பாலானவற்றில் அவர்கள் கூட்டத்தில் பிறந்து வீரமாத்தியான தெய்வங்களின் கோயில்கள் உள்ளன. கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் மட்டுமின்றி அவர்களோடு வாழ்ந்த அனைத்து குடியினருமே உயர்ந்த கற்பு நெறியான வீரமாத்தி மரபை பின்பற்றினர்.

வீரமாத்தி என்ற மரபை தவறாக சித்தரித்து பாரதத்தை கீழ்மைப்படுத்தும் செயலுக்கு எதிராக இதன் பின்னணியில் இருந்த அன்றைய சமூக - மக்கள் மரபுகளை எடுத்துரைத்து விளக்கியது அனைவருக்கும் புரிந்திருக்கும்.

-- அன்னத்தியாகராயன் வேலப்ப கவுண்டர்

மேலும் படிக்க:

தமிழ் & வேதாஸ் சங்கத் தமிழ் நூல்களில் “சதி”

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates