Trending

Monday 31 March 2014

லேடீஸ் நைட்


''உலகம் முழுதும் ‘லேடீஸ் நைட்’ பிரபலம் என்றாலும், அமெரிக்காவில் உள்ள சில மாகாணங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. பெண்களுக்கு மட்டும் இலவச மது என்பது இன வேற்றுமையை ஊக்கப்படுத்துவதாக உள்ளதால் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, ஹைதராபாதிலும் ‘லேடீஸ் நைட்’ பப்களில் திடீரெனத் தடை செய்யப்பட்டது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருக இதுவும் வழிவகுப்பதாகக் கூறி சுங்கத்துறை இந்தத் தடையை விதித்தது. இந்திய சுங்கச் சட்டத்தின் கீழ் மதுபான விற்பனையை அதிகரிக்கும் நோக்கோடு செயல்படும் எந்தவித நடவடிக்கையும் தடை செய்யப்பட்டதாகும். ஹைதராபாதில் இந்தத் தடையை அமல்படுத்தியபோது, பெண்களும் பெண்கள் அமைப்புகளும் பெரும் எதிர்ப்புத் தெரிவித்தனர்'''

-- இன்றைய பத்திரிக்கை செய்தியின் ஒரு பகுதி.. இப்பத்த பெண்ணியத்தின் லட்சணம் இதுதான்.. ஒழுக்கமா இருக்கற பொம்பளைவுல குடிகாரியாக்கி நாச பண்றது.. இதுக்கு சர்காரோ-தன்னார்வ 'தொண்டு' அமைப்புகளோ பெருசா எதுக்காது; திராவிடம், கம்முநிஸ்டு, பெண்ணியமுனு, ஆரும் வாய தொறக்க மாட்டானுக.. எல்லாரும் ஒரு மொதலாளிக்கு மாரடிக்கற பசவ.. பொறவு வெளிநாட்டு மொதலாளிவ பிச்சுபோடுவாங்க ல.. போன தலகட்டுல ஊட்டு பொம்பளைக எல்லாரும் பொறுப்ப எடுத்துகிட்டாங்க.. அவீளுக்கு ஊட்ல முடிவெடுக்கற அதிகாரமு இருந்துச்சு.. டிவி சினிமா கொட்டாய் ல தான் இப்பிடி பொம்பளைக அடிம னு காமிச்சான், நெசத்துல அப்புடி இல்ல.. நம்மூர்ல பொறுப்ப ஆரு எடுத்து நடத்தறாங்கறதுல தான் அதிகாரம் இருக்குதே ஒழிய ஆம்பள/பொம்பள வித்தியாசம் இல்ல. இப்பத்த மெக்காலேவோட அரை வேக்காடுக, பொறுப்ப எடுத்துக்க மாட்டன்; ஆனா சுதந்தரமா திரியோனும்; எல்லாரும் எம்பேச்ச தான் கேக்கோணும்; ஊட்டு சேவகமுஞ் செய்யோணும்; கேள்வியும் கேக்கபடாது.. பெண்ணியம் ங்கறது ஊட்ட/ஊர கெடுக்க வெளிநாட்டுகாரனுக செஞ்ச சூது..



இதுக்குத்தான் ஆணோ-பொண்ணோ பருவ வயசுல கல்யாணம் மூச்சரோனும்.. அப்பறம் அவிய ரெண்டு பெரும் போய், ஊரை ஆண்டா என்ன, ஒலகத்த ஆண்டா என்ன?? ஆரு கேக்கறா?? ஆனா பொண்ண பெத்த மவராசணுவ செல பேரு, தம் பொண்ணு சம்பாரிக்கற பணத்துல அவள படிக்க வச்ச செலவையு, கல்யாண செலவையும் எடுத்தரோனுமின்னு கணக்கு போட்டு பொண்ணு கல்யாணத்த தள்ளி போட்டுகிட்டே போராணுக.. பருவ வயசுல ஒரு பிள்ளையோட தேவைய புரியாதவக எப்பிடி நல்ல அப்பனாத்தா வா இருக்க முடியு..? அந்த பிள்ளைவ தப்பு-தண்டா னு போச்சு னா ஆரு பொறுப்பு?? மெட்ராசுல பொழைக்க போன நம்ம சனம் சொல்ற விசியமு இதுதான்.. கல்யாணம் பண்ணாத பிள்ளைவுல மெட்ராஸ் பெங்களூர் அனுப்பாதீங்க னு காட்டு கத்து கத்தறாங்க..

இவீலுக்கு நாம்ப நல்ல விதமா சொன்னா புரியாது.. ஊட்டுக்கு கண்டவன் மருமவனா வந்து, மாட்டுக்கறி வறுத்து குடுறா மாமா னு செருப்புல போட்டாத்தான் புத்தி வரும்.. நாஞ்சொல்றது சேரி பட்டா ஷேர் பண்ணுங்க.. ஊர்ல ஆறேல்லாம் பொண்ண கல்யானமூய்க்காம வச்சிருக்கானுன்களோ அவில மானங்கெட பெசொனும்.. இல்லாம இந்த பிரச்சன ஓயாதுங்க..

கொங்கதேசத்தில் கிறிஸ்தவமும் ஈரோடு பிரப் சர்ச்சும்

கிறிஸ்தவ வெள்ளையர்களால் தங்கள் பணம் சுரண்டும் காலனியாதிக்க வெறியால் உருவாக்கப்பட்ட தாது வருஷ பஞ்சங்கள் போன்ற அரை நூற்றாண்டு பஞ்ச காலம் பற்றி பல்வேறு அறிஞர்களால் விரிவாக பேசப்பட்டுள்ளது. இந்த காலங்களை கிறிஸ்தவ மிஷநரிகள் தங்கள் மதம் பரப்பும் வாய்ப்புக்களாக பயன்படுத்திக்கொண்டன. இழவு வீட்டில் வியாபாரம் செய்தது போல.

1923ல் கத்தோலிக்க சர்ச் வெளியிட்ட India and its Missions என்ற நூலில் உள்ள ஒரு கட்டுரையின் தலைப்பு Spiritual Advantages of Famine and Cholera (“பஞ்சம் மற்றும் காலராவின் ஆன்மிக சாதகங்கள்”). இக்கட்டுரையில்,  ஆர்ச் பிஷப் ஐரோப்பாவில் இருக்கும் தன் உயர் அதிகாரிக்கு எழுதிய கடிதத்தின் ஒரு பகுதி கொடுக்கப் பட்டுள்ளது. ஆர்ச் பிஷப் எழுதுகிறார் –

“பஞ்சம் பெரும் அற்புதத்தையும், மகிமையையும் கொண்டு வந்திருக்கிறது. போதனைக்காக வரும் மாணவர்கள் நிரம்பி வழிகின்றனர்; ஞானஸ்னான நீர் ஓடையாக வழிந்தோடுகிறது. அதில் தவிக்கும் பரதேசி ஈசல்கள் கூட்டம் கூட்டமாக பரமண்டலத்தை நோக்கிப் பறந்து வருகின்றன (“starving little tots fly in masses to heaven”). மருத்துவமனையே விசுவாசிகள் கூட்டமாகி விடுகிறது. நெடுஞ்சாலைகளிலும், முனைகளிலும் நின்று அவர்களை வற்புறுத்தி அழைத்து வர வேண்டிய அவசியமே இல்லை. அவர்கள் தாமாகவே வருகிறார்கள்!”

(நன்றி: திரு ஜடாயு அவர்கள், தமிழ்ஹிந்து தளம்)

கிறித்துவ மறைப் பணியாளர்கள் பஞ்ச காலத்தை எளிதான மதமாற்றக் காலமாகக் கருதியுள்ளனர். அவ்விதம் அதைப் பயன்படுத்தவும் செய்துள்ளனர். டிரிங்கால் என்னும் பாதிரியார் எழுதியுள்ள கடித வாசகம் '...ஆயிரக்கணக்கில் பிராங்க்ஸ் என்னிடமிருந்தால் பாதி நாடு திருமுழுக்குக் கேட்டு என்னிடம் வந்துவிடும்' என்று கூறுகிறது.





பஞ்சம் மற்றும் காலரா தாக்கிய போது ஈரோடு உட்பட்ட அன்றைய கோவை மாவட்டத்தில் தினமும் பல்லாயிரக்கணக்கானோர் இறந்தனர். ஒரு கட்டத்தில் ஒரே நாளில் இருபதாயிரம் பேர் இறந்த சோகமும் நடந்தது (வெள்ளையர்களே ஒப்புக்கொண்ட எண்ணிக்கை! யதார்த்தத்தில் எவ்வளவோ தெரியவில்லை). மக்கள் பசி பஞ்சத்தால் எறும்பு புற்றுக்குள் இருந்த தானியங்களை கூட பொறுக்கி தின்றனர். (ஆதாரம்: எனது இந்தியா, எஸ். ராமகிருஷ்ணன்). பெற்ற குழந்தைகளை விட்ரு, பிணம திண்று ஏழை மக்கள் கொடுமைகளை சொல்லி மாளாது. விவசாய நில உரிமையாளர்கள் தங்களிடம் வேலை செய்தவர்களுக்கு தங்கள் விதை தானியம் முதற்கொண்டு கஞ்சி காய்ச்சி கொடுத்து உயிர் காத்தனர். குழந்தைகளுக்கு பாலும், பெரியவர்களுக்கு உணவும், கிராமம் கிராமமாக கிணறு போன்ற நீராதாரங்களும் உள்ளூர் கவுண்டர்கள் ஏற்படுத்தி தந்தனர். இன்றளவும் பஞ்ச கும்மி பாடல்களில் தங்களை காத்த எஜமானர்களை போற்றி நினைவு கூறுகிறார்கள் எளிய மக்கள். ஆனால் இன்றைய இளைய தலைமுறையினர் அவர்களின் முன்னோர்களின் பெருஞ்சாவுக்கு காரணாம கிறிஸ்தவ வெள்ளையர்களோடு சேர்ந்து தங்கள் உயிர் காத்தவர்களை எதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அன்றைய சமூக ஒற்றுமை அப்படி; இன்றைய நிலை இப்படி. 

பஞ்ச காலத்தில் கோவை மக்கள்

பஞ்ச காலம் 1870 களில் துவங்கி ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் வெள்ளையர்களின் நிர்வாக சீர்கேடு மற்றும் பல்முனை சூழ்ச்சிகளால் தொடர்ந்தது. மேற்கண்ட பஞ்ச காலத்தில் தான் ஆஸ்திரேலியாவில் இருந்து கோவை வந்து ஈரோடு வந்த 'அருள்தந்தை' திரு.பிரப் அவர்கள் இருபது சர்ச்களை பெரும் பொருட்செலவில் கட்டினார். அதே காலகட்டத்தில் தான் லண்டன் மிஷனுக்கு பெரியமாரியம்மன் கோயில் நிலம் கைமாற்றப்பட்டது.


ஈரோடு பெரியமாரியம்மன் கோயில் நில மீட்பு போராட்டம் குறித்த கட்டுரை 

காலனி ஆட்சியை பற்றி பேசும்போது ஆங்கிலேய சர்க்கார் என்று மொழி அடையாளத்தையும், வெள்ளையர் ஆட்சி என்று நிற அடையாளத்தையும், பிரிட்டிஷ் ஆட்சி என்று தேச அடையாளத்தையுமே பிரதானமாக முன் வைத்தனர். காலனியாதிக்க சுரண்டல், பிரிட்டிஷ் மட்டும் செய்ததல்ல. போர்ச்சுக்கல், பிரான்ஸ், நெதர்லாந்து போன்ற நாடுகளும் அடங்கும். அனைத்து காலனிகளும் அவரவர் தேசம் மொழி நிறம் கொண்டே அடையாளப்படுத்தப்பட்டனவேயன்றி எங்கும் தவறிக்கூட கிறிஸ்தவஎன்ற பொது மத அடையாளம் நாசூக்காக தவிர்க்கப்பட்டது.  காலனி சுரண்டலும் கிறிஸ்தவமும் கைகோர்த்து அண்ணன் தம்பியை போல இந்தியாவில் வளர்ந்தன. பிரிட்டிஷ் சர்க்காரை எதிர்ப்பது பைபிளுக்கு மீறிய செயல் என்றெல்லாம் பாதிரியார்களால் மதம் மாறிய இந்திய கிறிஸ்தவர்கள் அச்சுறுத்தப்பட்டார்கள். மனத்தால் பிரிட்டிஷ்காரனாக  அரை நூற்றாண்டு பஞ்ச காலத்தை தங்கள் மதம் பரப்ப நன்கு பயன்படுத்தினர் மிஷனரிகள். இவ்வளவு நேரடி மற்றும் மறைமுக காரணங்கள் இருந்தும், காலனி ஆதிக்கம் அதன் மத அடையாளத்தால் குறிக்கப்படாத காரணம் ஏன் என புரியவில்லை. இதே இஸ்லாமிய படையெடுப்புக்கள்-ஆட்சியாளர்கள் அனைவரும் மத மையமாகவே குறிக்கப்படுகின்றனர். இந்த வித்தியாசம் ஏன் என்று தெரியவில்லை..


எது எப்படியோ, ஸ்ரீராமரின் காலணிஆட்சியின் ஸ்பரிசம்  அனுபவித்த பாரதம் இன்னும் எத்தனை கிறிஸ்தவ காலனிகொடுமைகளையும் சகிக்க பலத்தை தரும்!

Tuesday 25 March 2014

ஈரோடு பொய்யேரிக்கரை கருப்பண்ணசாமி

ஈரோடு என்பது சேர (கொங்க) தேசத்தின் பிரிவுகளான 24 நாடுகளில் பூந்துறை நாட்டை சேர்ந்த காணியாகும். காடாய் கிடந்த சேர தேசத்தை, வேளாண்மை தொழில் செய்பவர்களும், வெள்ளத்தை (நீரினை) வழிப்படுத்தி பயன்படுத்துபவர்க்களுமான வெள்ளாளர் குடி மக்கள், சிறிது சிறிதாக திருத்தி வளப்படுத்தி நீர்நிலைகள் உருவாக்கி மக்கள் வாழ்வதற்கு உரிய ஊர் பகுதிகளாக மாற்றினர். அவ்வாறு இந்த ஈரோடு பகுதியில் வெட்டப்பட்ட பழமையான ஏரி பொய்யேரி யாகும். கோயில்கள், குளங்கள், விவசாய நிலங்கள், அணைகள் போன்ற இடங்களில் காவல் தெய்வங்களை பிரதிஷ்டை செய்து வருடந்தோறும் பலிகள் கொடுத்து பூஜைகள் செய்வது பழமையான மரபாகும். அவ்வாறு நிறுவப்பட்ட கோயில் தான் இந்த கருப்பண்ணசாமி கோயில்.


இந்த பகுதியே முதலில் ஏரியாக இருந்திருக்கிறது. ஆனால் பின்னாளில் சர்க்கார் இதை வாழ்விடமாக மாற்றி அதற்கு இந்த பகுதியின் பழமையான பேரை மறைத்து 'பெரியார் நகர' என்ற போலிபெயரை வைத்தனர். ஈரோட்டு மக்கள் பலரும், மாநகரின் இந்த பகுதி மற்றும் மாவட்டத்தின் பெயராக ஈவெரா வின் பெயரை வைத்ததை விரும்பாத போதும், திராவிட ஆட்சியாளர்கள இந்த பேரை திணித்தனர். 



இந்த கோயில் ஈரோடு மாநகரப்பகுதியில் மிகவும் பசுமையான பழமையான பகுதியாகும். இந்த கோயிலின் ஸ்தல விருட்சம் வெள்ளை வேலா மரம். ஐநூறு ஆண்டுகள் பழமையான கோயில். துரதிர்ஷ்ட வசமாக அறநிலையத்துறையின் பிடியில் இந்த கோயில் சிக்கிக்கொண்டுள்ளது.

தினமலர் கோயில்கள் பக்கம் தந்துள்ள செய்தி:

ஈரோடு நகரின் காவல் தெய்வமாக விளங்குவது பொய்யேரிக்கரை கருப்பண்ணசாமி. ஈரோடு பெரியார் நகரில் இவருக்கு கோயில் எழுப்பப்பட்டுள்ளது. கிழக்கு நோக்கி 1.5 ஏக்கர் நிலப்பரப்பில் உயரமான திட்டில் அமைந்துள்ளது. மூவாயிரம் ஆண்டு தொன்மை கொண்ட ஈரோடு நகரம் மாபெரும் மன்னர்கள் கோட்டை கட்டி கொற்றம் செலுத்திய ஊர்.ஈரோடை ஆண்ட கலியுக மன்னர் காலத்தில் பெரிய ஏரி அமைத்து நீரை தேக்கி வைத்தனர். விவசாயிகள் மதகு வழியாக நீரை பயன்படுத்தி வந்தனர்.

பின்னர் வேளாளர்கள் ஏரியை பாதுகாக்க வேண்டி ஏரிக்கரையில் கருப்பண்ணசாமி, கன்னிமார், மகாமுனி மற்றும் பல மூர்த்திகளை ஏற்படுத்தி தங்கள் குலதெய்வங்களாக வழிபட்டு வந்தனர். நாளடைவில் இந்த ஏரியானது பொய்யேரிக்கரை என்று எல்லோராலும் அழைக்கப்பட்டது. இத்திருக்கோயிலில் தல விருட்சமான வெள்ளை வேலாமரம் கருப்பண்ணசாமி மற்றும் கன்னிமார் தெய்வங்களுக்கு பின்னால் உயரமான திட்டில் இருக்கிறது.


Wednesday 19 March 2014

புலவனார் வாழ்த்து

கொங்க வெள்ளாள கவுண்டர்கள் கலியாணத்தில் கொங்கப்புலவனார்களால் பாடப்படும் புலவனார் வாழ்த்து எனப்படும் கம்பர் வாழி. (இது புலவர் ராசு அவர்களின் புத்தகத்தில் இருந்து எடுத்த பக்கங்கள். புலவர் ராசு அவரது கருத்துப்படி பல 'மாற்றங்களை' செய்யும் வழக்கமுடையவர் ஆதலால் இந்த பாடல்தான் உண்மையான புலவர் வாழ்த்து என்று கூற இயலாது. கொங்கப்புலவனார்களிடம் பாடக்கேட்டு உறுதிசெய்யப்பட வேண்டியது அவசியம்.




Tuesday 18 March 2014

கொங்கு இளைஞர் பேரவை போஸ்டரில் ஈவெரா??

கொங்கு இளைஞர் பேரவை போஸ்டரில் ஈவெரா??



அரசியல் சார்பற்றது இந்த பக்கம். இருப்பினும், ஈவெரா கொங்கு சமூகத்துக்கு ஒரு போது எதிரி. கொங்கு மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்திற்கு போராடும் இயக்கங்கள், ஈவெரா வை தூக்கி பிடிப்பது சகிக்க முடியாதது. திரு தனியரசு அவர்களின் தற்கால போஸ்டர், பிளக்ஸ் களில் ராமசாமி நாய்க்கன் படம் இருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது. இனமானப்போராளியான திரு தனியரசு அவர்கள் இப்படி கொங்கு இனத்தையும், கொங்கு கவுண்டர்கள் மானத்தையும் வாங்க துடித்த ஈவெரா படத்தை போட்டுகொண்டு இருப்பது நம் சமூகத்தையே அசிங்கப்படுத்தும் செயலாகும். அருவருப்பான அசிங்கத்தை கொங்கு மக்களின் முகத்தில் அடிப்பதற்கும் ஈவெரா படத்தை போடுவதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

*சாதி ஒழியனும், காதல் என்னும் காம கள்ள கலப்பு திருமணம் நடக்கணும் னு சொன்ன கருத்தை ஏற்கிறாரா..?? இன்று மேட்டுப்பாளையத்தில் கவுண்டச்சியை கட்டு கவுண்டனை வெட்டு என்று சொல்பவன் எல்லாம் இந்த திராவிட விஷத்தின் குட்டிகள் தான். அவர்களுக்கு நீங்கள் உடன்படுகிரீர்களா..??

*கடவுள் இல்லை என்று சொன்னான் ஈவெரா; கூட்டத்துக்கு பல கோயில் கட்டி சாமி கும்பிடும் கவுண்டனின் தலைவன் அதை ஏற்கலாமா? ஏற்கிறாரா??

*கற்பு பொய்; திருப்திதான் முக்கியம் எனவே யாரும் எத்தனை பேரையும் மணக்கலாம் மணக்காமலும் போகலாம் என்று சொன்னான் ஈவெரா. அதை ஏற்றுக்கொள்கிறாரா??  

*தேசத்துரோக, இனத்துரோக, மொழிதுரோக ஈவெரா எப்படி கவுண்டன் கட்சியில் போற்றப்படலாம்..? கொங்கதேசத்தின் நீர் பிரச்சனைகளான காவிரி முல்லை பெரியாறு என அணைத்து நீர் பிரச்சனைக்கும் மூல காரணமான ஈவெரா வை கவுண்டர்கள் வணங்க வேண்டுமா..??

ஈவெரா பற்றி மேலும் அறிய: http://konguwritings.blogspot.in/2014/03/blog-post_18.html

தனியரசு அவர்களும் ஒரு கொங்கு சொந்தம் என்ற முறையில் ஈவெரா படத்தை இனி பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று உரிமையோடு அனைத்து கவுண்டர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். 

பெரியார் என்பது ஈவெராவுக்கு பொருந்துமா??




திராவிடம் என்னும் தீய சக்தியால் மைனர் ஈவேரா தமிழகத்துக்கும் இந்தியாவுக்கும் பல துரோகங்களை செய்துள்ளார். அவரை பற்றிய சில செய்திகள் கீழே. இவற்றை அறிந்த பின்பும் அவருக்கு பெரியார் என்னும் சொல் பொருந்துமா என்று பாருங்கள்..!


1. சிறு வயதிலேயே தவறான சகவாசங்கள் உடையவர். அடிக்கடி காவிரி கரையில் ஈவேரா தலைமையில், கூட்டமாக கும்மாளம் நடக்குமாம். நாகம்மை, ஈவேரா பெற்றோருக்கு தெரியாமல் வீட்டிலிருந்து உணவுகளை அனுப்பி வைப்பாராம். ஈவேரா வீட்டை விட்டு வெளியேறியபோது அவரது தந்தை முதலில் வெளியூர்களில் இருக்கும் பெரிய விபசார விடுதிகளில்தான் தன் மகனை தேட சொல்லி ஆள் விட்டாராம். ஈவேராவின் இந்த வாழ்க்கை அவரது கருத்து, எழுத்து, வாழ்க்கை அனைத்திலும் பிரதிபலித்தது. (பெரியார் வாழ்க்கை புத்தகம்)



2. ‘காதல்-கற்பு, எல்லாம் பொய். வாழ்க்கையில் இன்பமும் திருப்தியும்தான் முக்கியம். அதனால் ஆணோ/பெண்ணோ எத்தனை போரையும் மணக்கலாம், போதவில்லையேனில் அதற்க்கு மேலும் போகலாம்’ என்பன போன்ற கருத்துக்களை சொன்னவர். (குடியரசு இதழில் தலையங்கம்)

3. பாரத விடுதலையின் போது நீங்கள் இந்தியாவின் பிற பகுதிகளை விட்டு போங்கள். தமிழ்நாட்டை நீங்கள் தான் ஆள வேண்டும் என வெள்ளையனிடம் மனு கொடுத்தவர், இந்த தியாகி.

4. பாகிஸ்தான் விடுதலையின் போது ஜின்னாவுக்கு கடிதம் எழுதி நீங்கள் பாகிஸ்தான் வாங்கியது போல எங்களுக்கு தனிநாடு வேண்டும். நாட்டை உடைக்க உதவி செய்யுங்கள் என கேட்டவர். இவரின் உண்மை முகம் அறிந்த ஜின்னா மறுப்பு தெரிவித்து ஒதுக்கி விட்டார்.

5. மொழி வாரி மாநில பகிர்வின் போது தமிழகத்தின் உரிமை குரல் ஒலிக்க விடாது திராவிட குரலால் துரோகம் செய்தார். போராட்டங்களை வலுவிழக்க செய்தார். இதனால் நமக்கு வந்திருக்க வேண்டிய பெரும்பாலான பகுதிகள் கேரளா ஆந்திரா மற்றும் கர்நாடகம் பங்கு போட்டது. அப்போது முறையாக குரல் எழுப்பி இருந்தால் இன்று காவிரியும், முல்லை பெரியாரும், சிருவானியும், கிருஷ்ணாவும், பாலாரும் நமது முழு சொத்தாக இருந்திருக்கும். இன்று அனைவரிடமும் பிச்சைகாரர்களாக இருக்கிறோம்.

6. தமிழை காட்டு மிராண்டி மொழி என்றார். ஆங்கிலத்தை ஆட்சிமொழியாக்க போராட்டம் நடத்தினார்..! (மொழி வாரி மாநில பகிர்வின் போது)

7. வெள்ளைக்காரன் நாட்டை விட்டு வெளியேறும் முன், மறைமுகமாக நாட்டை நிரந்தரமாக அடிமைபடுத்த இந்தியாவின் நல்ல விஷயங்கள் சீர்குலைக்க எண்ணினான். அவை, குடும்ப கலாசாரம் கொண்ட இந்திய சமூக கட்டமைப்பை உடைப்பது(குடும்பங்களாக உள்ள சமூகத்தை தனிமனிதர்களாக மாற்றுவது), கல்வி முறை சிதைப்பு, நாட்டு மாடுகள் கொள்ள பசுவதை கூடம் போன்றவை. வன்கொடுமை மற்றும் பெண்ணடிமை மட்டும் முன் வைத்து வெள்ளையனின் அனைத்து கனவுகளையும் ஈவேராவின் கொள்கைகள் நிறைவேற்றும்படி இருந்தது.

8. இந்தியா/தமிழகம் என்றாலே தாழ்வான பார்வை/மனப்பான்மை வரும்படி செய்தார். இதை திராவிட விஞ்ஞானிகள் தீவிரமாக பரப்பினர். இதனால் உலகத்துக்கே முன்னோடிகளாக விஞ்ஞானம் பயிற்றுவித்த தமிழன் தன் பாரம்பரிய அறிவு வளத்தை இழந்தான். இதனால் வெள்ளையனின் நிரந்தர அடிமையானான். இன்று அதை அடிப்படையாக கொண்டு வெளிநாட்டுக்காரன் பல முன்னேற்றங்களை கொண்டுள்ளான். தற்போது மிகவும் சிரமப்பட்டு ஆய்வாளர்கள் நமது பாரம்பரிய அறிவியலை தொகுத்து கொண்டிருக்கின்றனர்.

9. கடவுளை எதிர்க்கிறேன் என்று ஒரு மதத்தை மட்டும் எதிர்த்தார். இவர் முன் வைத்த மக்கள் பிரிவினை/பெண்ணடிமை போன்றவை மற்ற மதத்திலும் இருந்த போதும் எல்லா மதங்களை எதிர்க்காமல் சில மதங்களை ஆதரித்தார். திராவிட தனிநாட்டுக்காக ஜின்னாவிடம் கையேந்தியபோது இவரின் மதச்சார்பு கொள்கையின் காரணம் பல் இளித்தது. இந்திய அறிவும்-கலாச்சாரமும்-பொருளாதாரமும் அழிய வேண்டுமென எண்ணியதால் மட்டுமே இந்த துரோகத்தை செய்தார்.

10. பாம்பையும் பார்ப்பானையும் பார்த்தால் முதலில் பார்ப்பானை கொல் என ஒரு சாதியின் மேல் வன்முறையை தூண்டிவிட்டார். ஒரு சாதியில் பிறந்ததால் ஒருவன் தீயவனாக முடியும் என்று நம்பும் இவருக்கு சாதி ஒழிப்பு பற்றி பேச என்ன யோக்கியதை உண்டு..??

11. தாலியை அகற்றுவது, கர்ப்பப்பையை அகற்றுவது என இவரது கொள்கைகள் இந்திய/மனித இனத்திற்கே கேலிகூத்தானவை. 70 வயதில் திருமணம் செய்தபோது இவரது அத்தனை பெண்ணிய கொள்கைகளும் மண்ணை கவ்வின.

கல்யாணக்கோலத்தில் மணமகனாக ஈவெரா 

12. திராவிட இயக்கங்களுக்கு ஆங்கில நிதியுதவி வந்துகொண்டு இருந்தது என்பது பல வரலாற்று-சமூக-அரசியல் ஆய்வாளர்களின் கருத்தாகும்.

13. இன்றும் ஈவெரா குடும்ப சொத்துக்கள் ஈரோட்டில் ஏராளம். அவரது குடும்ப உறுப்பினர்கள, மத்திய மாநில காட்சிகளில் பெரிய பொறுப்புகளில் உள்ளனர். (ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும் அதில் ஒருவர்). நாட்டுக்காக சொத்தை கொடுத்தார்-தியாகி என்பதும் பொய்.

மைனர் ஈவேராவின் துரோங்களில் இவை கொஞ்சம் தான். இதன் பின்னரும் நீங்கள் ஈவேரா வை பெரியார் என்று சொல்ல நினைக்கிறீர்களா..??

மேலும் விரிவாக ஈவெரா பற்றி அறிய பின்வரும் சுட்டியை கிளிக் செய்யவும். இந்த கட்டுரை தொடர் புத்தகமாக வந்தது. எழுதியவர் ஒன்னும் பிராமணர் அல்ல. பட்டியல் சாதியை சேர்ந்த ஒரு தேர்ந்த அறிஞர்.

பெரியாரின் மறுபக்கம்:

ஜெர்மனி நிர்வாண சங்க உறுப்பினரான மைனர் ஈவெரா.. "ஜெர்மன சுற்றுப்பயணம்" சென்ற ஈவெரா அங்குள்ள கம்யுனிஸ்ட்கள் உட்பட பலரையும் சந்தித்து பின்னர் ஞானோதயம் பெற்று நிர்வாண சங்கத்தில் உறுப்பினரானார்!

"கற்பு வேண்டாம்; வாழ்க்கையில் இன்பம் திருப்தி தான் முக்கியம்; அதனால் ஒரு ஆணோ-பெண்ணோ எத்தனை பேரையும் மணக்கலாம். போதவில்லை என்றால் அதையும் மீறி எத்தனை பேரோடும் போகலாம்" ஈவெராவின் என்ற தத்துவ முத்துக்களின் பின்னணி புரிகிறதா..?? (ஆதாரம்: குடியரசு இதழ்-தலையங்கம்)

எத்தனை பேர், இனி ஈவெரா வை பெரியார் என்று சொல்வீர்கள்..? இனி கறுப்பு சட்டை போட்டவன், திராவிட என்ற வார்த்தையை வெளியில் சொல்பவனையும் அவன் வீட்டு பெண்கள் மேலேயும் உங்களுக்கு என்ன அபிப்பிராயம் ஏற்படும்..??



கள்ளுக்கடை மறியல் போராட்டத்தை கைவிட சொல்லி மத்தியில் இருந்து கோரிக்கை வந்த போது, "அதை நிறுத்துவது என் கையில் இல்லை; ஈரோட்டில் நாகம்மை (ஈவேரா மனைவி) பாலாம்பாள் (ஈவேரா சகோதரி) என்ற இரண்டு பெண்களின் கையில் தான் இருக்கிறது" என்றார். நாம் பாடப் புத்தகத்தில் படித்திருப்போம்.. கள்ளுக்கடை மறியல் போராட்டத்தில் "பெரியார் ஐநூறு தென்னை மரங்களை வெட்டினார்" என்று. இதன்மூலம், பெரியார் என்ற ஹீரோவால் எதிர்க்கப்பட்டதால் கள் தீமையானது என்று பிஞ்சுகள் மனதில் பதிந்தது.

பிற்காலத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார் ஈவேரா. "இந்த காங்கிரஸ்காரன் பேச்சைக் கேட்டு நான் தப்பு பண்ணிட்டேன். கள் போதை பொருள் இல்லை. அது நல்ல மருந்து. என் சகோதரி பாலாம்பாள் கணவருக்கு தீராத வயிற்று வலி இருந்தது. ஒரு மரத்து கள்ளை குடித்து வா சொல்லியதால் குடித்து வந்தார். நலமாக இருந்தார். சமீபத்தில் கள் குடிப்பதை நிறுத்தியவுடன் வயிற்று வலி அதிகமாகி இறந்து போனார். கள்ளை கடையில் வைத்து விற்றால் தான் கலப்படம் நடக்குது. மரத்தடியிலேயே விற்றால் நாட்டுக்கும், மனிதர்களுக்கும் நல்லதே!" என்றார். 1962 ல் குடியரசு இதழிலும் இந்த செய்தி வந்துள்ளது.

இதுமட்டுமல்ல, பஞ்சகவ்யத்தையும் இதே ஈவேரா தான் பழித்தார். ஆனால், இன்று பஞ்சகவ்யம் மூலம் தீராத வியாதிகள் தீருகிறது; பல லட்சம் ஏக்கர் நிலம் இயற்கை விவசாயதிற்கு திரும்பியுள்ளது. பல கோடி விவசாயிகள் பலனடைந்துள்ளனர். இதன்மூலம் நாம் தெரிந்துகொள்வது,

1. தி.க. காரர்கள் எதையும் முழுமையாக ஆராயாமல் மூடநம்பிக்கை என்று எதிர்ப்பார்கள்.

2. வெளியுலகிற்கு ஒரு பாடம் சொல்லிவிட்டு தங்கள் வீட்டினருக்கு தேவை என்றால் அதை உடைக்கவும் தயங்கமாட்டார்கள் (பாலாம்பாள் கணவருக்கு பல வருஷம் கள் குடிக்க வைத்தது போல)

3. நம் கல்விமுறையும், மாநில சர்க்காரும் இந்த உண்மைகளை மறைத்து கள்ளைப் பற்றி இன்னும் தவறான பிம்பத்தையே ஏற்படுத்தி வருகிறது. பாட புஸ்தகங்களை/கல்விமுறையை நம்பாதீர்கள். சர்க்காரும் கல்விமுறையும் நம்மை முட்டாளாகவே வைத்திருக்கும்.

Monday 17 March 2014

கொங்கதேச பஞ்சாயத்து நிர்வாக மீட்பு


உள்ளூர் பஞ்சாயத்து முறை மிகவும் போற்றி பாதுகாத்து வரவேற்க பட வேண்டியதாகும். அதில்தான் இன்னும் தர்மம் ஒட்டிக்கொண்டிருக்கிறது. கொங்கதேச கிராமங்களில் எவ்வளவோ சாதி சண்டைகளும், மத மோதல்களும் இந்த உள்ளூர் பஞ்சாயத்தால் சுமூகமாக தீர்க்க/தவிர்க்க பட்டிருக்கிறது. விவாகரத்துக்கள் பேச்சுவார்த்தையால் தவிர்க்கப்பட்டு இன்று மெச்சும் அளவு வாழ்கிறார்கள். கோர்ட்டுக்கு சட்டமும் சாட்சியும் தான் தெரியும்; வக்கீலுக்கு கட்சிக்காரன் சொல்லே வேதவாக்கு (மிகச்சிலரை தவிர). உள்ளாட்சி பிரதிநிதிகளோ, ஓட்டுக்காக எப்படியும் தாழ்ந்து போகும்-எதையும் செய்யும் 'உத்தமராசாக்கள்'. இந்த லட்சணத்தில் சர்க்காரின் நிர்வாக அமைப்புக்கள் இருக்கும்போது, ஒரு கெட்ட சொல் வந்தால் தாங்காத தன்மானமுடைய கிராமத்தார்களை மக்கள் நம்புவதில் எந்த வியப்பும் இல்லை. வட மாநிலங்களில் பாராட்டும் வண்ணம் காப் பஞ்சாயத்து போன்ற உள்ளூர் அமைப்புக்கள் மாநில அளவில் அதிகாரத்தோடு சிறப்பாக செயல்படுகின்றன. சிற்சில அசம்பாவிதங்கள் ஏற்பட்டாலும் கோர்ட் போலிஸ் ஸ்டேசன் போன்ற இடங்களில் நடக்கும் அசம்பாவிதங்களின் எண்ணிக்கையைவிட விரல் விட்டு எண்ணும் அளவுதான் எனலாம். கொங்கதேச பகுதிகளில் கோயில்களில் முதல் மரியாதை இதுபோன்ற ஊர்கவுண்டர்/கொத்துக்காரர்/நாட்டாமை போன்றவர்களுக்கு இருக்கும். அவர்கள் முறை தவறி நடந்துவிட்டால் அதற்கு மேல் அவர்கள் அந்த மரியாதைக்கு தகுதி இழந்துவிடுவார்கள். காலகாலமாக வரும் இந்த பதவிக்கு வருபவர்களுக்கு ஒரு பொறுப்புணர்ச்சி மற்றும் பயம் இருக்கும். இங்கு ஒழுக்கம் மற்றும் நியாயதிற்கே முதலிடம். மக்களை ஓட்டுக்களாக மட்டும் பார்த்து, ஐந்து வருடங்களில் ஓடிப்போவோரிடம் எதிர்பார்க்க முடியாது.



கிறித்தவ மதவிபசார, முற்போக்கு திருட்டு பசங்க சொல்வது போல பெண்களை புறக்கணிக்கவோ ஒரு மண்ணாங்கட்டியோ கிடையாது. கொங்கதேசத்தில் பல பெரிய வழக்குகளை பெண்கள் தீர்த்து வைத்த வரலாறு உண்டு. இன்றளவும் கிராமங்களில் நடைமுறையில் உள்ளது. கட்டிபாளயத்து ஆத்தா, பஞ்சாயத்து இன்றளவும் பேமஸ். பூந்துறை தெய்வானையம்மா இரு நாடுகளுக்கு உண்டான வழக்கையே தீர்த்தவர். இதுபோல இன்னும் எவ்வளவோ உதாரணம் சொல்லலாம். நம் பண்பாட்டு மரபில் இருந்து பெண்களை மட்டும் பிரித்தெடுக்கும் சூழ்ச்சியை தான் பெண்ணியம் என்ற லேபிளில் இந்த திருட்டு மாபியா செய்கிறது.

அரசு/அரசியல் சாரா உள்ளூர் நிர்வாக அமைப்புக்களை கண்டறிந்து வலுப்படுத்தி அதற்கு அதிகாரமளிக்க வேண்டியது அடுத்த தலைமுறையின் இன்றியமையா செயலாகும். பாரம்பரியம்/பண்பாடு போன்றவற்றை சிதைக்க கம்யுனிஸ்ட், திராவிடம், வெளிநாட்டு கிறிஸ்தவ மதவிபசார சக்திகள் முற்போக்கு என்னும் முகமூடியோடு தீவிரமாக அலையும் வேளையில் இவ்வாறான அமைப்புக்களை வலுபடுத்தி வைப்பது பின்வரும் சந்ததிகளுக்கு சொத்தாக அமையும்.

குறிப்பு: நாட்டாமை படம், வெறும் கற்பனை கதை அல்ல. நம் முன்னோர்களின் உண்மையான வாழ்க்கையை படம் பிடித்து காட்டிய படம். இதுபோன்ற நாட்டாமைகள் நம்மூர்களில் ஏராளமானோர் வாழ்ந்தனர். நம்மவர்கள் இன்றளவும் வளமோடு வாழ காரணம் நாம் கடைபிடித்த சத்திய நெறியே. அதனால் தான் நம் குடிபடைகள் நம்மை நம்பி கட்டுப்பட்டார்கள். நம் அதிகாரத்துக்கு பயந்து அல்ல.

Friday 14 March 2014

கொங்கதேச தொகுதி வேட்பாளர்களுக்கு..

மேட்டுப்பாளையத்தில் கவுண்டர்களை தாக்கி கேவலமாக சில சமூக விரோதிகள் மேடை போட்டு பேசிய போது, ஆசிட் மேலே பட்டது போல மானமுள்ள கவுண்டர்கள் அனைவரும் துடித்தோம். அதற்கு கேள்வி கேட்க, கருவறுக்க வேண்டிய காலம் வந்துவிட்டது.

சட்ட விரோதமாக, அந்த சமூக விரோதிகள் அப்படி பேசிய போதும் வாய் மூடி ஆதரவு தந்த நாதாரி திமுக, அதிமுக, காங்கிரஸ், கம்யுனிஸ்ட் போன்ற வெங்காயங்கள் வீடு தேடி வந்தால் செருப்பால் அடிக்கவும். சட்ட விரோதமாக அவர்கள் பேசிய போதும் கைகட்டி வேடிக்கை பார்த்த ஆண்மையற்ற மொண்ணை நாய்களே, எதையோ திங்கறவன் போல எங்க வீட்டு வாசலை மிதிக்க உனக்கு கால்கள் கூசலியா?? னு கேள்வி கேளுங்க...!! உங்கள் கோவத்தை அந்த நாய்களிடம் காட்டுங்கள்...

கேட்க வேண்டிய கேள்விகள்..

1. சாதி ஒழிப்பு, கலப்பு திருமணம் போன்ற சீர்கேட்டுக்கு நான் எதிரி என்று ஒப்பன் ஸ்டேட்மென்ட் கொடுப்பியா..?? மேட்டுப்பாளையத்தில் எங்க சாதிய/எங்க பெண்கள அசிங்கமா பேசினவனுங்கள பெட்ரோல் ஊற்றி எரிக்க சொல்லவில்லை, குறைந்தபட்சம் அரசாங்க சார்பில் என்கவுன்டருக்கு ஏற்ப்பாடு செய்வியா?? இந்த படத்தில் அதியமான் இல்லை. அதியமானும் இதே போல தரக்குறைவாக வன்முறையை தூண்டும் வண்ணம் பேசிய காட்சிகளும் பதிவாகியுள்ளது.



2. பிசிஆர் சட்டத்தை திருத்த நிச்சயம் பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பேன் னு ஒப்பன் ஸ்டேட்மென்ட் பத்திரிகையில் கொடுப்பியா..??

3. அவினாசி அத்திக்கடவு திட்டம் நிறைவேற்றம், கெயில் திட்டம் கேன்சல் செய்தல், திருச்செங்கோடு பிளாட்டினம் பிளான்ட் கேன்சல் செய்தல், ஆனைமலை நல்லாறு திட்டம் நிறைவேற்றம், முல்லை பெரியாறு, சிறுவாணி அணை, காவிரி- வாய்க்கால் திட்டம் போன்றவற்றிற்கு கட்சியை பகைத்துக்கொண்டாவது குரல் கொடுப்பேன் என்று ஒப்பன் ஸ்டேட்மென்ட் கொடுப்பியா..??

4.நூறு நாள் வேலை திட்டத்தை கேன்சல் செய்தல் அல்லது அந்த கூலிகளை விவசாய வேலைக்கு பயன்படுத்தல் திட்டத்தை கட்சியை பகைத்தேனும் ஆதரிப்பேன் னு ஒப்பன் ஸ்டேட்மென்ட் கொடுப்பியா??

5.டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ஈவெரா வுக்கு பொறந்தவன் போல சமத்துவம் வெங்காயம் னு ஒளர மாட்டேன் னு சத்தியம் செய்வியா..??

6.நாட்டு பசுக்கள் கேரளாவுக்கு கடத்தப்படுவதை இரும்பு கரம கொண்டு ஒடுக்குவேன். பசுவதை தடுப்பு சட்டத்துக்கும், பசுவை தேசிய விலங்காக அறிவிக்கவும் குரல் கொடுப்பேன், னு ஒப்பன் ஸ்டேட்மென்ட் தருவியா??

7.கோயில்களை தமிழ் முறை/அறநிலையத்துறை போன்றவர்களிடம் இருந்து மீட்டு நியாயமான நிர்வாகம் நடக்க ஏற்ப்பாடு செய்வேன் னு ஒப்பன் ஸ்டேட்மென்ட் தருவியா??

8. மாநில மறுசீரமைப்பு வருமானால் கட்சியை பகைத்துக்கொண்டாவது, கொங்கதேச தனிமாநில கோரிக்கைக்கு வாய்ஸ் கொடுப்பேன் னு ஒப்பன் ஸ்டேட்மென்ட் தருவியா..??

9. சாய கழிவுகள் ஆற்றில் கலக்காமல் இருக்கவும், காவிரி, நொய்யல், பவானி போன்ற நதிகள் மாசுபடாமல் இருக்கவும் தேவையான நடவடிக்கைகளை உயிர் கொடுத்தேனும் செயல்படுத்துவேன் னு ஒப்பன் ஸ்டேட்மென்ட் தருவியா??

சொல்லுடா பரதேசி.. இல்லைனா என் வீட்டு வாசலை விட்டு இறங்கி கீழ நில்லுடா.. னு சொல்லுங்க... இதற்கு ஒப்புக்கொள்ளாத எவனுக்கும் ஓட்டு போட்டுவிடாதீர்கள்..

(கவுண்டர்கள் சட்டத்தை மீற மாட்டோம் ஆனால் சட்டம் அதன் கடமையை செய்தாக வேண்டும்)

https://www.youtube.com/watch?v=XjzZXHCWww8

Wednesday 5 March 2014

திருக்கை வழக்கம்

திருக்கை வழக்கம் (வேளாளர் ஈகைச் சிறப்பு)
கம்பர்


கலிவெண்பா

1
திருவாகிய மங்கை கூடியே வாழுங்கை

கங்கை குலந்தழைக்கக் காட்டும் பெருங்கீர்த்தி
மங்கை பிரியாமல் வாழுங் கை - திங்கள் அணி - 2

சந்தனம் அரைக்கும் கை
மூர்த்தி நாயனார் போன்று விரிஞ்சிபுரசிறுவன்

எம்பிரான் எம்பெருமான் இந்திராதி பர்க் கரிய
தம்பிரா னுக்குரைத்த சந்தனக் கை - அம்பொன் - 3

முளைத்த நெல்லை சோறக்கி ஈந்தகை
இளையான்குடி மாற நாயனார்

வளைவாரி வையகமும் வானகமும் போற்ற
முளைவாரி வந்த முழுக் கை - கிளை வாழக் - 4

எச்சிற்கையால் கல்லெறிந்தகை
சங்கமங்கை சாக்கியநாயனார்

கச்சித் தலத் தரனைக் கல்லால் எறியமறந்து
எச்சில் தயிர்ச்சோ றெறிந்திடுங் கை - பச்சை மிகு - 5

ஈசற்கான மாவடுசிந்தி தன்தலையை அரிந்தகை
கணமங்கலம் அரவாட்தாய நாயனார்

தேமா வடுக் கமரில் சிந்திற் றன்றே கழுத்தை
ஆமா மெனவே அரிந்திடுங் கை - வாம மறை - 6

தொண்டர்பின் ஈசன் எனமுடிபு கொண்டகை
மலைநாட்டுச்செங்குன்றூர் விறல்மிண்டநாயனார்

ஓது புகழ் நாயனுடன் ஊரன் புற கென்றே
மோது தடிகொண்டு முடுகுங் கை - தீ தகல - 7

திருந்தி ஈசனுக்கே பூசைசெய் பெருந்தகை
திருநாவுக்கரசு நாயனார்

அஞ் செழுத்தே ஒன்றாகி அப்பர்எனத் தோன்றிஅரன்
செஞ்சரணத்தே பூசை செய்யும் கை - வஞ்சியர் பால் - 8

ஈசனை ஏவல்கொண்டோர் அளியுதவி மறுத்தகை
ஏயர்கொன் கலிக்காம நாயனார்

தூ தரனைத் தான்விடுத்த சுந்தரனைக் காணாமல்
பேதமறக் தன்வயிறு பீறும் கை - பூதத்தின் - 9

சுந்தரர்பொருட்டு நெற்சிவிகை தாங்கியகை
குண்டயூர் கிழார்

மிக்க புலவனுக்கா ஏகி மனை மட்டாகத்
தக்க சிவிகை கணை தாங்கும் கை - மைக் கடு வாய் - 10

வறுமையிலும் கிடைத்தநாகமணி ஈந்தபொற்கை
சடையப்ப வள்ளல்

மூக்கில் புகைபுரிந்த மூதரவின் வாயிடத்து
நீக்கிய கை நாக் கதனில் நீட்டுங் கை - ஆக்கமுடன் - 11

உழவுக்கே உளோம் என சாசனமிட்ட கை

ஏத மற்ற கீர்த்தியைக் கொண் டேட்டகத்திலே அடிமைச்
சாதனம் இட்டே கொடுத்த தங்கக் கை - மேதினியில் - 12

மகவு தாங்கிய பெண்டிரும் விருந்தினுக் குதவுங்கை

சூலி முதுகில் சுடச்சுட அப்போது சமை
பாலடிசில் தன்னைப் படைக்குங் கை - சாலவே - 13

தனிமையிலிறந்த பாணனுடலை ஈடேற்றியகை
தொண்டைநாட்டு மறவை வாழ் அரங்கேசன்

நாணம் தராமல் நடுங்காமல் கூசாமல்
பாணன் பிணத்தைப் பரிக்குங் கை - காணவே - 14

தானுண்டதும் கூழே என காட்டிய கை
செம்பியனுக்காக பேறையூரான் செய்கை

தண் தமிழோன் தன்மனத்தில் சந்தேகம் தீரக்கூழ்
உண்ட வயிற்றை பீறி ஊற்றுங் கை - கண் டளவில் - 15

நீலிக்கஞ்சிய வணிகனுக்கு உறுதியளித்த கை
தொண்டை நாட்டு திருவாலங்காட்டு குடிகள்

நீலி தனக் கஞ்சிநின்ற வணிகே சனுக்காக்
கோலி யபயம் கொடுக்குங் கை - ஆல மெனும் - 16

நீலியினால் வணிகனிறக்க நெருப்பினிலிறங்கிய கை
மேற்படி

வன்னியிடை முழ்கி வானோர் பழிகழுவிக்
கன்னி தனையே மணந்த காட்சிக் கை - துன்னு மொரு - 17

உற்றோர் செய்ததை தானும்செய்திறந்தகை
மேற்படி

பேருலகை எல்லாம் பிழைப்பிக்கும் ஓர்கொழுவின்
கூரில் ஒருவன் கழுத்தைக் குத்தும் கை - பா ரறிய - 18

தானுண்கலத்தில் கையமைத்துக் காத்திட்டகை
பறைமுழைநந்தன்சாம்பான்-போராவூர்வேளாளன்

வீறு பெறும் பறையன் வீயாமல் ஓர் கலத்தில்
சோறு பிசைந் துண்ட சுடர் மணிக் கை - ஆறாத் - 19

புண்ணைக்காட்ட சீனபட்டாடை கிழித்தகை
சோழனெதிரில் சடையப்பவள்ளல்

தொடையில் எழுசிலந்தி தோற்றுவிக்கப் பட்டின்
புடவை கிழித்த பெருங் கை - கடல் சூழ்ந்த - 20

நாற்படைசெல்ல வெந்தணலில் ஏற்பூட்டும்கை

பார்பூட்டு மன்னர் பரிகரி பூட்டக் கதிரோன்
தேர் பூட்ட ஏர் பூட்டும் செம்பொற் கை - வீரமதன் - 21

காமன் வெற்றிக்கு தாற்றுக்கோல் தாங்குங்கை

ஐங்கோல் தொடுக்க அணைகோ லெடுக்கஉழும்
பைங்கோல் பிடிக்கும் பதுமக் கை - இங்கிதமாம் - 22

மன்னன் கோல்தாங்க தாம்மேழி தாங்குங்கை

சீர் படைத்த பூபாலர் செங்கோல் பிடிப்பதற்கு
பேர்படைத்த மேழி பிடிக்குங் கை - கார்படைத்த - 23

உலகில் நல்லறிவு படர நாற்று விசிறுங் கை

மிஞ்சுமதி கீர்த்த்ியைப் போல் மேதினி எல்லாம் தழைக்கச்
செஞ்சாலி நாற்றை தௌிக்குங் கை - எஞ்சாமல் - 24

கள்ளம் புல்பூண்டொழித்துலகம் காக்குங்கை

வெள்ளைக் களை களைந்து வீறும் பயிர் தழைக்கக்
கள்ளக் களை களைந்த கற்பகக் கை - வள் ளுறையும் - 25

க்ஷஷபல்வகைப் போர் வெற்றிக்கும் மூலமாங்கை

விற்போர் மதகரிப்போர் வெம்பரிப்போர் வெற்றிப்போர்
நெற்போர் முதல் போர் நெறித்திடுங் கை - கற்பகம் போல் - 26

மேழி சிங்கம் குயில் முக்கொடிகள் தாங்குங்கை

மேழிக் கொடி சிங்க வெற்றிக் கொடி குயிலின்
வாழிக் கொடியே மருவுங் கை - நீ ளுலகில் - 27

வறியவர் வேதாகமபுராணம் தழைக்குங்கை
திருநின்றையூர் காளத்திவாண முதலியார்

ஆதுலர்குச் செம்பொ னளிக்குங் கை ஆகமங்கள்
வேத புராணங்கள் விரிக்குங் கை - நீதிநெறி - 28

பதினாறுபேறும் யாவரும்பெற உழைக்குங்கை

மானம் குலம் கல்வி வண்ணம் அறிவுடைமை
தானம் தருமம் தழைக்குங் கை - ஆன தமிழ் - 29

நலிந்தோர் நலமழிந்தோர் தாங்குங்கை

கல்லார்கள் என்னாமல் கற்றோர்கள் என்னாமல்
எல்லாரையுங் காத் தீடேற்றுங் கை - வல்லமை சேர் - 30

ஈடில்லாத ஈடுகொள்ளாது பயனளிக்குங்கை

மைம் மா முகில் உலகை வாழ்விக்கும் மேன்மைபோல்
கைம்மா றிலா தளித்த கற்பகக் கை - சும்மை ஆர் - 31

பலருண்ண பயன்பலபெற வாழும் சீராளர்கை

ஊருணி நீர் போல் உலகத்தவர்க் கெல்லாம்
பேரறிவால் ஈயும் ப்ரதாபக் கை - பாரில் - 32

உற்றபோது வுடனுதவும் தண்கை

உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே
கோடுக்க இசைந்த குளிர் கை - இடுக்கணினால் - 33

மூவருக்கும் முதலான மூலமாங்கை

மாமறையோர் மன்னர் வணிகர் முதலாகத்
தாம் அலையாமல் கொடுத்துத் தாங்குங் கை - தே மருவு - 34

இயன்ற மாவையும் ஈந்த ஏழையின்கை
கம்பநாடரிடம் ஓர் வேளாளன்

நாவில் புகழ் கம்பநாடற் கடிமை யென்றே
மாவைக் கரைத்து முன்னே வைக்குங் கை - பாவலர் தாம் - 35

விடநாக கடியினில்மிளிர் நனிநாகரீக நற்கை
சடையப்ப வள்ளல் கை

ஏர் எழுபது ஓதி அரங்கேற்றுங் களரியிலே
காரி விடநாகங் கடிக்குங் கை - பா ரறியச் - 36

பஞ்சகாலத்தில் நீளும் பாசமுள்ளகை
குமிழம்பட்டு, இடையாலம் வாழ்ந்த வேளாளர்

சங்கை யிட்டுத் தள்ளாமல் தன் சோற்றை வந்தவர்க்குப்
பங்கை யிட் டிரட்சித்த பங்கயக் கை - பொங்கமொடு - 37

என்னளவாயினும் ஈந்து சொற் பிறம்பாதகை
பொன்விளைந்த களத்தூர் குடிதாங்கி முதலியார்

செம்பென் விளை களத்தூர் செந்நெல் விளைந்ததனை
நம்பி மறையோர்கு அளித்த நாணயக் கை - அம்பொன் - 38

வந்த பின்னும் வருமுன்னும் காக்குங்கை

விளை பயிரைப் பார்த்து விரைகால் புலத்தை
வளைய மதி லிட்டு வருங் கை - கள மதனில் - 39

எக்காலத்தும் ஈவோமென சாசனமிட்ட கை

ஏற்கவந்த ஆதுலர்க் கில்லை யென்னாமல் செம்பொன்
கார்க் கையினால் முக் கை யிட்ட கற்பகக் கை - தீர்க்கமதாத் - 40

ஈசனுக்கு திருப்பணிகள் பற்பலசெய் கொண்டற்கை

திருப் பருத்திக் குன்றில் சிவன் ஆலயங்கள்
விருப்புடனே கட்டுவித்த மெய்க் கை- திருப்புகழை - 41

கலைஞான பயிர்விளைக்குங் பெற்றிணைகை

எண்ணை எழுத்தை இசையை இலக்கணத்தை
வண்மை பெற உண்டாக்கும் வா குள கை - பண்ணமைந்த - 42

நன்னெறியும் தன்மொழியும் காக்குங்கை
இருமொழி ஞானம் படைத்த நம்மாழ்வார்

வேத மொரு நான்கினையும் மிக்க தமிழ் நாலடியால்
ஓதி உரைத்தே கருணை ஓங்கும் கை - பூதலத்தில் - 43

புலவனெதிர் படைத்தகனி உவக்குங்கை

பாவல னெச்சில் படு மாங்கனியை எடுத்
தாவலுடன் நன்றா கருந்துங் கை - காவலன் - 44

மன்னவன்கண் பெரியதெவை காட்டிய கை
அநபாயனுக்கு சிறார் பருவ சேக்கிழார்

மண்ணில் கடலில் மலையின் பெரிய தென
எண்ணி எழுதிக் கொடுத்த ஏற்றக் கை - திண்ணமதாய் - 45

தமிழின் புகழினுக்கு முடியையே ஈந்தகை
குன்றையூர் எல்லன்

வையக மெங்குந் தேடி வந்த தமிழோன் புகழச்
செய்ய முடியைக் கொடுத்த செம்பொற் கை - துய்ய புகழ் - 46

வேளான் வீரனின் வெற்றிக்கை
கருணாகரத் தொண்டைமான்

அட்ட திக்கும் எண்கீர்த்தி ஆயிரத் தெட் டாணைதனை
வெட்டி பரணிகொண்ட வீரக் கை - திட்டமுடன் - 47

வென்றிபெறு பொருளீட்டம் ஈந்த ஈகைக்கை
முனையடுவார் நாயனார்

பொன்னால் அமுதும் பொரிக் கறியும் தான் கொணர்ந்து
நன் நாவலர்க் களித்த நாணயக்கை - முன்னாள் - 48

வணிகன்தன் கவலை போக்கியகை
ஆறைநகர் பரமேசுவரன் மகன் எல்லன்

மனக் கவலை யுற்ற வணிகன் முன்னே நின்று
தனைக் கா எனக் கேட்ட தண் கை - கனக்கவே - 49

ஆனிரைகளை பலஅளிக்கும் பாங்கானகை

அன் றீன்ற நா கெழுபதான எருமைத் திறத்தைக்
கன்றோடு நல்கும் கடகக் கை - வென்றி தரும் - 50

பாடலுக்கு கலம் நெல்லளிக்குங்கை

ஓர் ஆனை நூராயிரக் கலம்நெல் ஓர் கவிக்குச்
சீராக நல்கும் தியாகக் கை - பே ரியலைச் - 51

பாலாற்றின் கால்பல செய்தாற்றிய ஆண்மைக்கை

சாற்றும் ஒட்டக் கூத்தன் சரச கவி சொல்லப் பால்
ஆற்றுநீர் கால் கொணர்ந்த ஆண்மைக் கை - நேர்த்திபெற - 52

சிவிகை உதைத்த புலவன் காலிற்கு பூணளித்தகை
தொண்டைநாட்டு வல்லம் கச்சியப்ப வள்ளல்

வண் தமிழோன் தான் உதைத்த வாகுள காலுக்குப் பொன்
வெண்டய மிட்டே வணங்கும் வெற்றிக் கை - புண்டரிகக் - 53

முடிமேல் குட்டிய புலவனுக்கு ஆழியிட்டகை

கையால் புலவன் கனகமுடி மேல் குட்டச்
செய்யாழி பண்ணி யிட்ட கை - நொய்ய - 54

அரிசிகேட்டயிடத்து யானையே அளிக்குங்கை
ஏகம்பவாணன்

எறும்புக்கும் ஆகாரந் தானில்லை என்ற மட்டில்
திறம் புக்க யானை தரும் செங்கை - பறம்பு தனில் - 55

முனிகளுக்கு அளித்துவந்த பண்பட்டகை

எண்ணாயிரம் முனிவர்க்கு ஏற்றபடி அப்படியே
பண்ணாக் கொடுக்கும் பராக்ரமக் கை - விண்ணாடர் - 56

விண்ணடைந்தோர் புகழினை ஏற்றுங்கை

கூர்த்த புகழ் அண்ட கோளம் அளவும் படர
நால் திக்கும் மேருவின் நாட்டும் கை - சீர்குகனை - 57

சிவன் முருகன் பிள்ளை மூவரையும் போற்றுங்கை

ஆதார மானவனை ஐங்கரனைச் சங்கரனைப்
பாதாரவிந்தம் பணியும் கை - நீதி - 58

படைத்து காத்து ஈந்து இடர்களையயும் ஈரக்கை

நடக்கை இருக்கை நகைக்கை மிடி தீர்க்கை
கொடுக்கை செழுங்கை குளிர்க் கை- தொடுத்த தெல்லாம் - 59

எக்காலத்துமிடத்தும் ஈடேற்றும் இணையிற்கை
வேளாளர் குலத்துதித்த வல்லாளன்

சீராக உண்டாக்கும் செங்கைப் பெருங்கருணைக்
காராளர் கற்பகப் பூங் கை

திருக்கை வழக்கம் முற்றிற்று

Tuesday 4 March 2014

பெண் கிடைக்காத பிரச்சனை

இன்று திருமணத்திற்கு பெண் கிடைக்காத பிரச்சனை நம் இளைஞர்கள் பெரும்பாலானோர் மனதை பாதித்துள்ளது. இதற்கு காரணங்கள் என்ன..? இது வருங்காலத்தில் வாராமல் இருக்க நம்மவர்கள் செய்ய வேண்டியது என்ன?



1. ஒற்றை குழந்தை சாபம்: ஓரே குழந்தையோடு நிறுத்திய வழக்கத்தால் இன்று நம்மவர்கள் கடும் துன்பத்தை அனுபவிக்கிறோம். பையன் பிறந்தால் ஒன்று  மட்டும்; பெண் என்றால் தான் இரண்டாவது என்று போன தலைமுறையில் பலரும் செய்தது. இப்போதும் தொடர்கிறது. ஒற்றை குழந்தை சாபத்தால் அனுபவிக்கும் துன்பங்கள் ஏராளம். இன்று பெண் கிடைக்காமல் கஸ்டப்படுவோர் எத்தனை பேர் நெறைய குழந்தைகள் பெற்றுக்கொள்ள போகிறீர்கள்..?? மூன்று குழந்தைகளோ அதற்கு மேலோ பெற்றுக்கொள்வதானால் கொங்கு சங்கங்கள் அந்த குழந்தைகளுக்கு கல்வி நிதிச்சலுகை வழங்க வேண்டும். அக்குழந்தைகளின் கல்யாணத்திற்கு மண்டபங்கள் இலவசமாக தர வேண்டும். பொண்டாட்டி காலில் விழுந்தாவது மூன்று குழந்தைகள் பெற்று கொள்வேன் என்போருக்கு  பெண் பார்க்க நாங்கள் தயார்!


ஒற்றை குழந்தை சாபம் குறித்து விரிவாக இங்கு படிக்கவும்

2. ஆடம்பர திருமணங்களை அனைவரும் போட்டி போட்டு செய்ததால் செயற்கையாக தேவையற்ற செலவுகள் கூடியது.  அதற்காக பெண்களை வேலைக்கு அனுப்பி 'பல' அப்பாக்கள் பெண்களை படிக்க வைத்த செலவையும் கல்யாண செலவையும் பெண்ணின் சம்பளத்தில் எடுக்க வேண்டும் என்று வியாபார கணக்கு போடுகிறார்கள். பெண்கல் வேளைக்கு செல்வது பற்றி விவாதம் வேறு, ஆனால் பருவத்தில் திருமணம் செய்ய வேண்டும் என்பதே கருத்து. இதுபோன்ற தகப்பங்களை சமூக நிகழ்ச்சியில் குத்திக்காட்டி சீக்கிரம் பெண்ணுக்கு கல்யாணம் செய்ய வைப்பதே, அந்த பெண்களுக்கும், நம் சமூகத்துக்கும் நாம் செய்யும் சேவையாகும். எத்தனை பேர் எளிமையாக சீர்கள் செய்து கல்யாணம் செய்யப்போகிறீர்கள்..? நெருங்கிய உறவினர்களை மட்டும் அழைத்து பெண் வீட்டில் திருமணம் நடத்த வேண்டும். பின்னர் உங்கள் தேவைக்கு ஏற்ப மண்டபங்களில் நண்பர்களுக்கும் பிற உறவினர்களுக்கும் (கடனை கழிக்க) ரிசப்சன் ஏற்ப்பாடு செய்து கொள்ளவும்.  (சீர்கள் செய்யாமல் செய்வது கல்யாணம் இல்லை; காளை சேர்ப்பது. கிறிஸ்தவ பறையர்கள் போல கோயிலில் கல்யாணம் ரிசப்சன் என்பது சீரழிவு. முறையாக அருமைகாரரை கொண்டு சீர்கள் செய்து செய்வதே கல்யாணம்). 


கொங்கு கல்யாணம் பற்றிய கட்டுரைகள் படிக்க இங்கு சொடுக்கவும்.

3. பருவத்தில் இயற்கையாக வரும் உணர்வு தேவைகளுக்கு சரியான வடிகால் வேண்டும். முன்பு ஆண்களே இருபதை தொடும் முன் கல்யாணம் செய்வார்கள். இன்று பெண்கள் முப்பது நெருங்கும் பொது செய்கிறார்கள். உண்மையில் பெண் கிடைக்காத பிரச்சனைக்கு பெண்ணின் திருமண வயது செயற்கையாக உயர்ந்ததே காரணமாகும். திருமணம் செய்யாமல் இருப்பதால் தவறான சூழ்நிலைகளால் ஒழுக்கக்கேடுகள் உருவாகும். நம் பெண்கள் பெரும்பாலும் இதுபோன்ற தவறுகளுக்கு இரையாவதில்லை என்றாலும் பல சம்பவங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இப்போது கல்யாணமாகாமல் கஸ்டபடுவோர் எத்தனை பேர் உங்கள் பிள்ளைகளுக்கு பருவத்தில் கல்யாணம் செய்து வைப்பீர்கள்..?

பருவத்தில் பெண்களுக்கு கல்யாணம் செய்ய வேண்டும்.. இல்லையேல், ஒவ்வொருமுறையும் அந்த பெண் மாதவிலக்காகும்போது அந்த பெண்ணை பெற்ற தந்தைக்கு ஒரு சிசுவை கொன்ற சிசுஹத்திதோஷமுண்டாகும். ஒரு பருவமடைந்த பெண், ஆண் துணை இல்லாமல் பாலியல் தேவையின் போது விடும் பெருமூச்சு உலக சமநிலையை ஆட்டம் காணச் செய்யும்.. அந்த பெருமூச்சின் வெப்பம் வம்சத்தை பொசுக்கும்.. பெண்ணுக்கு செய்யும் பெருந்தீங்காகும்.
-தர்ம சாஸ்திரங்கள் சொல்லும் செய்தி 

4. ஜாதகம் என்பது ஓரளவே பார்க்க வேண்டும். பெண் வீட்டாரும் பையன் வீட்டாரும் ஒன்றாக சென்று ஒரு ஜோதிடரிடம் ஒரே முறை மட்டும் ஜாதகம் பார்த்தால் போதுமானது. நம் மங்கள வாழ்த்தில் செவ்வாய் & ராகு கேது எல்லாம் சொல்லவில்லை. பத்து பொருத்தம், கெவுளி வாக்கு, தடவழி, பேர் பொருத்தம்-இவைதான் சொல்லப்பட்டுள்ளது. அதே சமயம் ஜாதகத்தை ஒதுக்குவதும் தவறாகும். அது நம் முன்னோர் பின்பற்றிய மரபு. மங்கள வாழ்த்து மட்டுமல்ல. ஏர் எழுபதில் கூட ஜாதகம் பார்ப்பதை குறிப்பிட்டுள்ளார்கள்.


இவை அனைத்துக்கும் மூல காரணம், பாரம்பரிய வழிகளை விட்டு விலகி சென்றதால் ஏற்ப்பட்ட ஆன்ம பல குறைவு. நம் இனத்தின் ஆன்ம பலம பெருக வேண்டுமானால் சரியான குலதெய்வ வழிபாடு, குலகுரு வழிபாடு, நாட்டு பசுக்கள் வளர்த்தல், பழமையான கோயில்களை புதுப்பிக்கிறேன் என்ற பேரால் இடிக்க விடாமல் காத்தல், மரபு சீர்கள் பின்பற்றல், பெரியவர்களை சொந்த பந்தங்களை மதித்தல் போன்றவற்றால் மட்டுமே முடியும். கோயில்களில் பாரம்பரிய வழிமுறைகள் பின்பற்ற வேண்டும். தமிழ் முறையில் செய்கிறேன் என்ற பேரில் புதிய திருட்டு சாமியார்களும் சிலை கடத்தல்காரர்களும் கோயிலுக்குள் வருவதை தடுக்க வேண்டும். இவை  அனைத்தும் சரியானால் அடுத்த தலைமுறையில் இதே பிரச்னை மீண்டும் வராமல் வேரோடும் வேரடி மண்ணோடும் சரி செய்துவிட முடியும்.

ஏரெழுபது


கங்கை குல காராள குடியானவர் புகழ் பாடும் ஏரெழுபது - ஏர் எழுபது 

பாயிரம் 

        1 விநாயகர் வணக்கம்
         கங்கைபெறும் காராளர் கருவியெழு பதுமுரைக்க
         அங்கைபெறும் வளைத்தழும்பு முலைத்தழும்பு மணியமலை
         மங்கைபெறும் திருவுருவாய் வந்துறைந்தார் தமைவலஞ்செய்
         கங்கைபெறுந் தடவிகடக் களிற்றானைக் கழல்பணிவாம்

          2 மும்மூர்த்திகள் வணக்கம்
          நிறைக்குரிய வந்தணர்கள் நெறிபரவ மனுவிளங்கத்
          தறைக்குரிய காராளர் தமதுவரம் பினிதோங்க
          மறைக்குரிய பூமனையும் வண்டுளபத் தாமனையும்
          பிறைக்குரிய நெடிஞ்சடிலப் பெம்மானை யும்பணிவாம்

         3 சரஸ்வதி வணக்கம்
         திங்களின்மும் மாரிபெயச் செகத்திலுயிர் செழித்தோங்கக்
         கங்கைகுலா திபர்வயலிற் கருவீறத் தொழுகுலத்தோர்
         துங்கமக மனுநீதி துலங்கிடவை யம்படைத்த
         பங்கயன்ற னாவிலுறை பாமடந்தை பதந்தொழுவாம்

          4 சோழ நாட்டுச் சிறப்பு
          ஈழ மண்டல முதலென உலகத்
தெண்ணு மண்டலத் தெறிபடை வேந்தர்
தாழு மண்டலஞ் செம்பியன் மரபினோர் 
தாமெ லாம்பிறந் தினியபல் வளத்தின்
வாழு மண்டலங் கனகமு மணிகளும்
வரம்பில் காவிரி குரம்பினிற் கொழிக்குஞ்
சோழ மண்டல மிதற்கிணை யாமெனச்
சொல்லு மண்டலஞ் சொல்வதற் கில்லையே

5 சோழ மன்னன் சிறப்பு
முடியுடைய மன்னவரின் மூவுலகும் படைத்துடைய
கொடியுடைய மன்னவரிற் குலவுமுதற் பெயருடையான்
இடியுடைய வொலிகெழுநீ ரெழுபத்தொன் பதுநாட்டுக்
குடியுடையான் சென்னிபிற ரென்னுடையார் கூறீரே

6 சோழன்தன் பெருநாட்டுச் சிறப்பு
மநுநகர மனைய திண்டோள் மணிமுடி வளவன் சேரன்
சுந்தர பாண்டி யன்றஞ் சுடர்மணி மகுடஞ் சூட
அந்தணர் குலமு மெல்லா வரங்களும் விளங்க வந்த
இந்திர னோலக் கம்போ லிருந்தது பெரிய நாடே

7 வேளாண் குடிகள்தம் சிறப்பு
ஆழித்தேவர் கடலானார் அல்லாத்தேவர் அம்பலத்தார்
ஊழித்தேவர் தாங்கூடி உலகங் காக்க வல்லாரோ
வாழித்தேவர் திருமக்கள் வையம் புரக்கும் பெருக்காளர்
மேழித்தொவர் பெருமைக்கு வேறே தேவர் கூறேனே

8 வேளாளர் சிறப்பு
தொழுங்குலத்திற் பிறந்தாலென் சுடர்முடிமன் னவராகி
எழுங்குலத்திற் பிறந்தாலென் இவர்க்குப்பின் வணிகரெனுஞங
செழுங்குலத்திற் பிறந்தாலென் சிறப்புடைய ரானாலென்
உழுங்குலத்திற் பிறந்தாரே உலகுய்யப் பிறந்தாரே

9 வேளாளர் புகழ் புலமையின் பெரிது
அழுங்குழவிக் கன்புடைய தாயேபோ லனைத்துயிர்க்கும்
எழுங்கருணைப் பெருக்காளர் எளியரோ யாம்புகழ
உழுங்கெழுவிற் கருவீறி யுலகமுதற் கருவாகச்
செழுங்கமலத் தயனிவரைச் செய்துலகஞ் செய்வானேல்

10 வேளாண் குலத்திற்கு நிகரில்லை
வேதியர்தம் உயர்குலமும் விறல்வேந்தர் பெருங்குலமும்
நீதிவளம் படைத்துடைய நிதிவண்கர் தம்குலமுஞ்
சாதிவளம் படைத்துடைய தாயனைய காராளர்
கோதில்குலந் தனக்குநிக ருண்டாகிற் கூறீரே



நூல்

1 உழவிற்கு இனிய நாள் கோடலிஞ் சிறப்பு
சீர்மங்க லம்பொழியுந் தெண்டிரைநீர்க் கடல்புடைசூழ்
பார்மங்க லம்பொழியும் பல்லுயிருஞ் செழித்தோங்கும்
கார்மங்க லம்பொழியும் பருவத்தே காராளர்
ஏர்மங்க லம்பொழிய வினிதுழநாட் கொண்டிடினே

2 ஏர்விழாச் சிறப்பு
நீர்விழாக் கொளவளர்ந்த நிலமெல்லாந் தம்முடைய
சீர்விழாக் கொளவிளக்குந் திருவிழாப் பெருக்காளர்
ஏர்விழாக் கொளினன்றி யெறுழ்கரிதேர் மாப்படையாற்
போர்விழாக் கௌமாட்டார் போர்வேந்த ரானோரே

3 அலப்படைவாள் சிறப்பு
குடையாளு முடிவேந்தர் கொலையானை தேர்புரவி
படையாளு மிவைநான்கும் படைத்துடைய ரானாலென்
மடைவாளை வரும்பொன்னி வளநாடர் தங்கள்அலப்
படைவாளைக் கொண்டன்றிப் பகையறுக்க மாட்டாரே

4 மேழிச் சிறப்பு
வாழிநான் மறையோர்கள் வளர்க்கின்ற வேள்விகளும்
ஆழியால் உலகளிக்கும் அடல்வேந்தர் பெருந்திருவும்
ஊழிபே ரினும்பெயரா உரையுடைய பெருக்காளர்
மேழியால் விளைவதல்லால் வேறொன்றால் விளையாவே

5 ஊற்றாணிச் சிறப்பு
நீற்றோனும் மலரோனும் நெடியோனும் என்கின்ற
தோற்றாள ரிவராலே தொல்லுகம் நிலைபெறுமோ
மாற்றாக காவேரி வளநாடர் உழுங்கலப்பை
ஊற்றாணி யுளதாயின் உலகுநிலை குலையாதே

6 நுகத்தின் சிறப்பு
உரையேற்ற செங்கதிரோன் ஒளிநெடுந்தேர் பூண்டநுகம்
திரையேற்ற கடலுலகில் செறியிருளை மாற்றுவது
விரையேற்ற விருநிலத்தோர் நெறுமையோடு வீழாமே
கரையேற்றும் நுகமன்றோ காராளர் உழுநுகமே

7 நுகத்துளைச் சிறப்பு
வளைத்ததிரைக் கடல்சூழ்ந்த வையகத்தோ ரெல்லார்க்குந்
துளைத்ததுளை பசும்பொன்னின் அணிகிடங்குந் துளைத்தல்லால்
திளைத்துவரும் செழும்பொன்னி திருநாடர் உழுநுகத்தில்
துளைத்ததுளை போலுதவுந் துளையுளதோ சொல்லீரே

8 நுகத்தாணியின் சிறப்பு
ஓராணித் தேரினுக்கும் உலகங்க ளனைத்தினுக்கும்
பேராணிப் பெருக்காளர் பெருமைக்கு நிகருண்டோ
காராணிக் காவேரி வளநாடர் உழுநுகத்தின்
சீராணிக் கொப்பதொரு சிறந்தாணி செப்பீரே

9 பூட்டு கயிற்றின் சிறப்பு
நாட்டுகின்ற சோதிடத்தில் நாண்பொருத்தம் நாட்பொருத்தங்
காட்டுகின்ற கயிறிரண்டும் கயிரல்ல கடற்புவியில்
தீட்டுப்புகழ் பெருக்காளர் செழுநுகத்தோ டுழும்பகடு
பூட்டுகின்ற கயிறிரண்டும் புவிமகண்மங் கலக்கயிரே

10 கயிற்றின் தொடைச் சிறப்பு
தடுத்தநெடு வரையாலும் தடவரைக ளெட்டாலும்
உடுத்ததிரைக் கடலாலும் உலகினிலை வலியாமோ
எடுத்தபுகழ் பெருக்காளர் எழுநுகத்தோ டிணைப்பகடு
தொடுத்ததொடை நெகிழாதேல் உலகுதொடை நெகிழாதே

11 கொழுவின் சிறப்பு
வேதநூல் முதலாகி விளங்குகின்ற கலையனைத்தும்
ஓதுவா ரெல்லாரும் உழுவார்தந் தலைக்கடைக்கே
கோதைவேல் மன்னவர்தம் குடைவளமுங் கொழுவளமே
ஆதலால் இவர்பெருமை யாருரைக்க வல்லாரே

12 கொழு ஆணியின் சிறப்பு
செழுவான மழைவாரி திங்கடொறும் பொழிந்தாலும்
கெழுவார நிலமடந்தை கீழ்நீர்க்கொண் டெழுந்தாலும்
வழுவாத காவேரி வளநாடர் உழுகலப்பைக்
கொழுவாணி கொண்டன்றிக் குவலயஞ்சீர் நிரம்பாதே

13 நாற்றுமுடி, தாற்றுக்கோல் சிறப்பு
வெங்கோபக் கலிகடந்த வேளாளர் விளைவயலுள்
பைங்கோல முடிதிருந்த பார்வேந்தர் முடிதிருந்தும்
பொங்கோதை கடற்றானைப் போர்வேந்தர் நடத்துபெருஞ்
செங்கோலை நடத்துங்கோல் ஏரடிக்குஞ் சிறுகோலே

14 உழும் எருதின் சிறப்பு
வானமழை பொழிந்தாலும் வளம்படுவ தெவராலே
ஞானமறை யவர்வேள்வி நலம்பெறுவ தெவராலே
சேனைகொடு பொருமன்னர் செருக்களத்திற் செகுக்குமத
யானைவலி யெவராலே இவரெருத்தின் வலியாலே

15 எருதின் கழுத்துக்கறை சிறப்பு
கண்ணுதலோன் தனதுதிருத் கண்டத்திற் படிந்தகறை
விண்ணவரை யமுதூட்டி விளங்குகின்ற கறையென்பார்
மண்ணவரை யமுதூட்டி வானுலகங் காப்பதுவும்
எண்ணருஞ்சீர்ப் பெருக்காளர் எருதுசுவ லிடுகறையே

16 எருது பூட்டுதற் சிறப்பு
ஊட்டுவார் பிறருளரோ வுலகுதனில் உழுபகடு
பூட்டுவார் புகழன்றிப் பிறர்புகழும் புகழாமோ
நாட்டுவார் சயத்துவசம் நயப்பாரை இவர்க்குநிகர்
காட்டுவார் யார்கொலிந்தக் கடல்சுழ்ந்த வையகத்தே

17 ஏர் பூட்டலின் சிறப்பு
பார்பூட்டுந் திசையனைத்தும் பகடுகளும் பரம்பூணா
போர்பூட்டுங் காமனுந்தன் பொருசிலைமேற் சரம்பூட்டான்
கார்பூட்டுந் கொடைத்தடக்கை காவேரி வளநாடர்
ஏர்பூட்டி னல்லதுமற் றிரவியுந்தேர் பூட்டானே

18 ஏர் ஓட்டுதலின் சிறப்பு
கார்நடக்கும் படிநடக்கும் காராளர் தம்முடைய
ஏர்நடக்கு மெனிற்புகழ்சால் இயலிசைநா டகம்நடக்கும்
சீர்நடக்குந் திறநடக்குந் திருவறத்தின் செயநடக்கும்
பார்நடக்கும் படைநடக்கும் பசிநடக்க மாட்டாதே

19 உழுவோனின் சிறப்பு
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாருந்
தொழுதுண்டு பின்செல்வா ரென்றேயித் தொல்லுகில்
எழுதுண்ட மறையன்றோ இவருடனே இயலுமிது
பழுதுண்டோ கடல்சூழ்ந்த பாரிடத்திற் பிறந்தோர்க்கே

20 உழவின் சிறப்பு
அலகிலா மறைவிளங்கும் அந்தணரா குதிவிளங்கும்
பலகலையாந் தொகைவிளங்கும் பாவலர்தம் பாவிளங்கும்
மலர்குலாந் திருவிளங்கும் மழைவிளங்கும் மனுவிளங்கும்
உலகெலாம் ஒளிவிளங்கும் உழவருழும் உழவாலே

21 உழுத சாலின் சிறப்பு
பழுதுசால் வகையறியாப் பழமறையோர் பெருவேள்விக்
குழுதுசால் வதுகலப்பை யுயர்வான தென்றக்கால்
எழுதுசால் பெருங்கீர்த்தி யேராளும் பெருக்காளர்
உழுதசால் வழியன்றி யுலகுவழி யறியாதே

22 மண்வெட்டியின் சிறப்பு
மட்டிருக்குந் திருமாது மகிழ்திருக்கும் பூமாது
முட்டிருக்குஞ் செயமாது முன்னிருப்பார் முதுநிலத்து
விட்டிருக்குங் கலிதொலைத்து வோளாளர் தடக்கையினிற்
கொட்டிருக்க ஒருநாளும் குறையிருக்க மாட்டாதே

23 வரப்பின் சிறப்பு
மெய்வரம்பா நிற்கின்ற வேதநூல் நெறிவரம்பாம்
இவ்வரம்பும் அவ்வரம்பும் இப்புவிக்கு வரம்பாமோ
பொய்வரம்பு தவிர்த்தருளும் புவிமடந்தை திருமைந்தர்
செய்வரம்பு திருத்தாரேல் திசைவரம்பு திருந்தாதே

24 எருவிடுதலின் சிறப்பு
அடுத்திறக்கிப் பெருங்கூடை யளவுபட வேயெருவை
எடுத்திறக்கித் தலைமேலே கொண்டவர்தா மிடையிடையே
கொடுத்திறக்கி நிலமகளைக் கும்பிட்டு வணங்காரேற்
படுத்திறக்கித் திரிவார்தம் பழிமறுக்க மாட்டாரே

25 சேறாக்கலின் சிறப்பு
வெறுப்பதெலாம் பொய்யனையே வேளாளர் மெய்யாக
ஒறுப்பதெலாங் கலியினையே யுள்ளத்தால் வெள்ளத்தாற்
செறுப்தெல்லாம் புல்லினையே செய்யின்வளம் அறிந்தறிந்து
மறிப்பதெலாஞ் சேற்றினையே வளம்படுத்தற் பொருட்டாயே

26 பரம்படித்தலின் சிறப்பு
வரம்படிக்க மலர்பரப்பி வயலடிக்க வரம்புதொறும்
குரம்படிக்க மணிகொழிக்குங் குலப்பொன்னித் திருநாடர்
பரம்படிக்க வுடைந்தளைந்த பழனச்சேற் றுரமன்றி
உரம்படிப்பப் பிறிதுண்டோ வுண்டாயி னுரையீரே

27 வித்திடுதலின் சிறப்பு
பத்திவிளைத் திடுந்தெய்வம் பணிவார்க்குந் தற்பரமா
முத்திவளைத் திடுஞான முதல்வருக்கு மின்னமுதம்
வைத்துவிளைத் திடுவார்க்கும் வல்லவர்க்கும் பெருக்காளர்
வித்துவிளைத் திடிலன்றி வேண்டுவன விளையாவே

28 முளைத்திறனின் சிறப்பு
திறைமயங்கா தருள்விளக்குஞ் செயன்மயங்கா திறல்வேந்தர்
நிறைமயங்கா வணிகேசர் நிலைமயங்கா அந்தணர்கள்
மறைமயங்கா தொருநாளும் மனுமயங்கா துலகத்தின்
முறைமயங்கா தவர்வயலின் முளைமயங்காத் திறத்தாலே

29 நாற்றங்காலின் சிறப்பு
ஏறுவளர்த் திடுமுகிலும் இசைவளர்க்கு மெனவுரைப்பின்
ஆறுவளர்த் திடுவதுசென் றலைகடலைத் தானன்றோ
வேறுவளர்ப் பனகிடப்ப வோளாளர் விளைவயலின்
நாறுவளர்த் திடிலின்றி ஞாலமுயிர் வளராதே

30 நாற்று பறித்தலின் சிறப்பு
வெறுத்துமீன் சனிபுகிலென் வெள்ளிதெற்கே யாயிடிலென்
குறித்தநாள் வரம்பழியாக் குலப்பொன்னித் திருநாடர்
மறித்துநாட் டிடநின்ற வளவயலி னிடைநாற்றைப்
பறித்துநாட் கொண்டதற்பின் பார்பசிக்க மாட்டாதே

31 முடி இடுதலின் சிறப்பு
மாணிக்க முதலாய மணியழுத்தித் தொழில்சமைத்த
ஆணிப்பொன் முடிவேந்தர் அணிமுடியு முடியாமோ
பேணிப்பைங் கோலமுடி பெருக்காளர் சுமவாரேல்
சேணுக்குந் திசைப்புறத்துஞ் செங்கோன்மை செல்லாதே

32 உரிய இடத்தினில் முடிசேர்த்தலின் சிறப்பு
தென்னன்முடி சேரன்முடி தெங்குபொன்னி நாடன்முடி
கன்னன்முடி கடல்சூழ்ந்த காசினியோர் தங்கண்முடி
இன்னமுடி யன்றியுமற் றெடுத்துரைத்த முடிகளெல்லாம்
மன்னுமுடி வேளாளர் வயலின்முடி கொண்டன்றோ

33 நடவு மங்கலப்பாட்டின் சிறப்பு
வெய்யகலி வலிதொலைக்கும் வேளாளர் விளைவயலிற்
செய்யின்முடி விளிம்பாரேல் விளம்புவன சிலவுளவோ
மையறுமந் தணர்விளம்பார் மறைமனுமன் னவர்விளம்பார்
ஐயமறு புலவோரும் அருந்தமிழ்நூல் விளம்பாரே

34 பாங்கான நடவின் சிறப்பு
மெய்ப்பாங்கு படக்கிடந்த வேதநூல் கற்றாலென்
பொய்ப்பாங்கு படப்பிறரைப் புகழுநூல் கற்றாலென்
செய்ப்பாங்கு படக்கிடந்த செழுஞ்சாலி நன்னாற்றைக்
கைப்பாங்கு பகுந்துநடக் கற்றாரே கற்றாரே

35 உழுதலுடனே நடவு செய்தலின் சிறப்பு
உலகத்திற் பகடுழக்கும் ஓங்குமுடித் திறல்வேந்தர்
அலறத்தின் பகடுழுக்கும் அதுவுமொரு முனையாமோ
உலகத்திற் பகடுழக்கும் உயர்முடிகொள் வேளாளர்
சிலவருழச் சிலவர்நடும் அவையன்றோ திருமுனையே

36 சேறாக்கி எருவிடுதலின் சிறப்பு
ஏராலே சேறாக்கி யெருவாலே கருவாக்கி
நீராலே பைங்கூழை நிலைப்பார் தமையன்றிக்
காராலே காவேரி நதியாலே காசினியில்
ஆராலே பசிதீர்வார் அகலிடத்திற் பிறந்தோரே

37 வேளாண்மை முதலாதலின் சிறப்பு
அந்தணர்க்கு வேதமுதல் அரசருக்கு வெற்றிமுதல்
முந்தியசீர் வணிகருக்கு முதலாய முதலுலகில்
வந்தவுயிர் தமக்கெல்லா மருந்தாக வைத்தமுதல்
செந்தமிழ்க்கு முதலாய திருவாளர் செய்முதலே

38 பயிர் வளர்திறத்தின் சிறப்பு
சீர்வளரும் மறைவளரும் திறல்வேந்தர் முடிவளரும்
பேர்வளரும் வணிகருக்குப் பெருநிதிய மிகவளரும்
ஏர்வளரும் திருவளரும் இசைவளரும் கடல்சூழ்ந்த
பார்வளரும் காராளர் பயிர்வளருந் திறத்தாலே

39 நாளும் நீரிறைத்தலின் சிறப்பு
காற்றுமேல் வருகின்ற கார்விடினுங் கடல்சுவறி
யாற்றுநீ ரறவெள்ளி யரசனுந்தெற் காயிடினும்
ஏற்றமே கொடுநாளும் இறைத்துலகம் விளைவித்துக்
காத்துமே யுயிர்வளர்த்தல் காராளர் தங்கடனே

40 பாய்ச்சும் நீரின் சிறப்பு
கலையிட்ட மறைவேந்தர் கனல்வேள்வி வளர்ப்பதுவும்
மலையிட்ட புயத்தரசர் மணிமகுடஞ் சூட்டுவதும்
தலையிட்ட வணிகருயத் தனமீட்டப் படுவதும்
நிலையிட்ட வேளாளர் துலையிட்ட நீராலே

41 நிலம் திருத்தலின் சிறப்பு
மேடுவெட்டி வளப்படுத்தி மிகவரம்பு நிலைநிறுத்திக்
காடுவெட்டி யுலகநெறிக் காராளர் காத்திலரேல்
மேடுவெட்டி குறும்பறுக்கும் வேல்வேந்த ரெற்றாலும்
காடுவெட்டி யுழுதுவரும் கலிகளைய மாட்டாரே

42 சால்பலபோக்கி புழுதியாக்கலின் சிறப்பு
எழுதொணா மறைவிளங்கும் இயலிசைநா டகம்விளங்கும்
பழுதிலா அறம்விளங்கும் பார்வேந்தர் முடிவிளங்கும்
உழுதுசால் பலபோக்கி உழவருழக் கியவெங்காற்
புழுதியால் விளையாத பொருளுளவோ புகலீரே

43 பயிர் நட்டாரின் சிறப்பு
கெட்டாரைத் தாங்குதலாற் கேடுபடா தொழிற்குலத்தோர்
ஒட்டாரென் றொருவரையும் வரையாத வுயர்நலத்தோர்
பட்டாங்கு பகர்ந்தோர்க்கும் பசியகலப் பைங்கூழை
நட்டாரே வையமெலாம் நலந்திகழ நட்டாரே

44 நீர் பாய்ச்சுதலின் சிறப்பு
கார்தாங்குங் காவேரி நதிதாங்குங் காராளர்
ஏர்தாங்கு வாரன்றி யாவரே தாங்கவல்லார்
பார்தாங்கு மன்னுயிரின் பசிதாங்கும் பைங்கூழின்
நீர்தாங்கு வாரலரோ நிலந்தாங்கு கின்றாரே

45 களைநீக்கலின் சிறப்பு
வளைகளையும் மணிகளையும் மலர்களையும் வரும்பலவின்
சுளைகளையும் கொடுதரைக்கே சொரிபொன்னித திருநாடர்
விளைகளையுஞ் செஞ்சாலி வேரூன்றி கோடுகொள்ளக்
களைகளையா விடில்வேந்தர் கலிகளைய மாட்டாரே

46 கருபிடித்தலின் சிறப்பு
திருவடையும் திறலடையும் சீரடையும் செற்ிவடையும்
உருவடையும் உயர்வடையும் உலகெலா முயர்ந்தோங்கும்
தருஅடையும் கொடையாளர் தண்வயலிற் செஞ்சாலி
கருவடையும் பூதலத்திற் கலியடைய மாட்டாதே

47 கதிர் முதிர்தலின் சிறப்பு
ஏற்றேரு மரன்சிறப்புக் கெழிலேறு மகத்தழல்கள்
மாற்றேறு மரசர்முடி வளர்ந்தேறும் வளமைமிகும்
ஊற்றேருங் குலப்பொன்னி யுறைநாட ரிடுஞ்சாலி
ஈற்றேறும் போதுகலி யீடேற மாட்டாதே

48 கதிரின் பசிய நிறசிறப்பு
முதிராத பருவத்தும் முற்றியநற் பருவத்தும்
கதிராகி யுயிர்வளர்ப்ப திவர்வளர்க்குங் கதிரன்றோ
எதிராக வருகின்ற எரிகதிருங் குளிர்கதிருங்
கதிராகி உயிர்வளர்ப்ப துண்டாயிற் காட்டீரே

49 கதிரின் தலைவளைவின் சிறப்பு
அலைவளையும் புவிவேந்தர் அங்கையிற்றங் கியவீரச்
சிலைவளையு மதன்கருப்புச் சிலைவளையுங் கொடுங்கலியின்
தலைவளையுங் காராளர் தண்வயலிற் செஞ்சாலிக்
குலைவையும் பொழுதினிற்செங் கோல்வளைய மாட்டாதே

50 விளைவு காத்தலின் சிறப்பு
அறங்காணும் புகழ்காணும் அருமறையின் ஆகமத்தின்
திறங்காணும் செயங்காணும் திருவளர்க்கு நிதிகாணும்
மறங்காணும் கருங்கலியின் வலிதொலைத்த காராளர்
புறங்காணுஞ் சோறிட்டுப் புறங்காணப் புகந்திடினே

51 அறுவடை கொைடையின் சிறப்பு
அறிவுண்ட பொற்கதிரை நெற்கதிநே ராதுலர்க்குப்
பரிவுண்ட பெருவார்த்தை புதிதன்று பழைமைத்தே
விரிவுண்ட கடற்படியு மேகங்கள் மறுத்தாலுந்
திரிவுண்டோ காராளர் செயலினுக்குச் செப்பீரே

52 அறு சூட்டின் சிறப்பு
கோடுவரம் பிடையுலவுஞ் குலப்பொன்னித் திருநாடர்
நீடுபெரு புகழ்வளரு நிலமடந்தை திருமக்கள்
பீடுவரம் பிடைவயலிற் பிறைவாளிற் றடிகின்ற
சூடுவரம் பேறாதேற் சுருதிவரம் பேராதே

53 களம்செய்தலின் சிறப்பு
சீரான விறல்வேந்தர் செருவிளைத்துச் செல்லுவதும்
பேரான மனுநீதி பிறழாது விளங்குவதும்
நீராலே செஞ்சாலி விளைவித்து நெறிநடத்துங்
காராளர் விளைவயலிற் களம்பண்ணும் பொருட்டாலே

54 போர் அடிவலியின் சிறப்பு
கடிசூட்டு மலர்வாளி காமனடல் சூட்டுவதும்
கொடிசூட்டு மணிமாடக் கோபுரம்பொன் சூடுவதும்
முடிசூட்டி வயவேந்தர் மூவுலகும் இறைஞ்சுபுகழ்
படிசூட்டி யிருப்பதெல்லாம் படுசூட்டின் வலியாலே

55 அடிகோலின் சிறப்பு
முருட்டின்மிகு வெம்பகைவர் முரண்கெடுத்திவ் வுலகமெல்லாம்
தெருட்டிநெறி செல்கின்ற செங்கோன்மை செலுத்துங்கோல்
வெருட்டிமிகுங் கருங்கலியை வேரோடும் அகற்றுங்கோல்
சுருட்டிமிகத் தடிந்துசெந்நெற் சூடுமித்ித் திடுங்கோலே

56 போர் சிறப்பு
காராளும் கதியினமும் பயிரினமும் கைவகுத்துப்
போராளு முடிவேந்தர் போர்க்கோல மென்னாளுஞ்
சீராளுஞ் செழும்பொன்னித் திருநாடர் புகழ்விளக்கும்
ஏராளும் காராளர் இவர்செய்யும் போராலே

57 போர்க்களப் பாடலின் சிறப்பு
வளம்பாடுங் குடைமன்னர் மதயானை படைப்பொருத
களம்பாடும் பெருஞ்செல்வங் காசியினிற் சிறந்தன்று
தளம்பாடுந் தாரகலத் தாடாளர் தம்முடைய
களம்பாடும் பெருஞ்செல்வங் காசினியிற் சிறப்பன்றே

58 இரப்பவரும் தோற்காச் சிறப்பு
பார்வெந்தர் பெருஞ்செல்வம் பழுதுபடா தொருநாளும்
ஏர்வெந்தர் பெருஞ்செல்வம் அழிவுபடா திருத்தலினால்
தேர்வேந்தர் போர்களத்துச் சிலர்வெல்வர் சிலர்தோற்பர்
ஏர்வேந்தர் போர்களத்துள் இரப்பவருந் தோலாரே

59 நாவலோ நாவல் என்பதன் சிறப்பு
நாவலோ நாவலென நாடறிய முறையிட்ட
ஏவலோர் போர்களத்தில் எதிர்நிற்பர் முத்தமிழ்தேர்
பாவலோ ரிசைவல்லோர் பற்றுடைய பதிணெண்மர்
காவலோ ரெல்லாருங் கையேற்கும் பொருட்டாலே

60 எருது மிதித்தலின் சிறப்பு
எடுத்தபோர்க் களத்தரசர் இணைப்பகடு சிலநடத்திப்
படுத்தபோர் பயந்ததனாற் பார்தாங்கி வாழ்வதெல்லாம்
எடுத்தபோ ருழவருழு மிணைப்பகடு சிலநடத்திப்
படுத்தபோர் வையகத்தில் விளங்குகின்ற பயனாலே

61 நெற்பொலியின் சிறப்பு
விற்பொலியுங் பெருங்கீர்த்தி வேளாளர் விளைவயலில்
நெற்பொலியுண் டாமாகில் நிலமகளும் பொலிவுண்டாம்
பொற்பொலியுண் டாமுலகம் புகப்பொலிவுண் டாம்புலவோர்
சொற்பொலிவுண் டாங்கலியின் துயர்பொலிய மாட்டாதே

62 நெற்குவியலின் சிறப்பு
தன்னிகரொன் றொவ்வாத தலம்வளர்க்கும் பெருக்காளர்
மன்னுபெருங் களத்தினிடை மாருதத்திற் றூற்றியிடுஞ்
செந்நெல்லைப் பொலிவாலே செம்பொன்மலை யெனக்குவித்தே
அந்நெல்லின் பொலியாலே அவனியுயிர் வளர்ப்பாரே

63 நெற்கூடையின் சிறப்பு
ஆடையா பரணங்கள் அணிந்துமுடி சுமந்திடலும்
ஓடையா னையினெருத்தத் துயர்ந்துலகந் தாங்குதலும்
பேடையோ டனநீங்காப் பெருங்கழனிப் பெருக்காளர்
கூடையா னதுகையிற் கொண்டுகளம் புகுந்திடினே

64 தூற்றுமுறத்தின் சிறப்பு
வலியாற்று மன்னவர்க்கும் தேவர்க்கும் மறையவர்க்கும்
ஒலியாற்றும் பேருலகில் உய்யவமு திடுங்கூடை
கலிமாற்றி நயந்தபுகழ்க் காராளர் தம்முடைய
பொலிதூற்றுங் கூடைக்குப் போதுவதோ புகலீரே

65 பொலி கோலின் சிறப்பு
சீற்றங்கொள் கருங்கலியைச் செறுக்குங்கோல் செகதலத்துக்
கூற்றங்கொள் மனுநெறியை யுண்டாக்கி வளர்குங்கோல்
ஏற்றங்கொள் வயவேந்தர்க் கேப்பொருளுங் கொடுத்துலகம்
போற்றுஞ்சொற் பெருக்காளர் பூங்கையினிற் பொலிகோலே

66 நெற்கோட்டையின் சிறப்பு
திருத்தோட்டுப் பிரமாவாற் செனிக்கின்ற உயிர்களுக்கும்
உருத்தோட்டும் புகழுக்கும் உரிமைமுறை வளர்க்கின்ற
வரைக்கோட்டுத் திணிபுயத்து வளர்பொன்னித் திருநாடர்
விரைக்கோட்டை கொண்டன்றோ வேந்தரிடுங் கோட்டைகளே

67 கல்மணிகளின் சிறப்பு
தளர்ந்தவுயி ரித்தனைக்குந் தாளாள ரெண்டிசையும்
வளர்ந்தபுகழ் பெருக்காளர் வளமையா ருரைப்பாரே
அளந்துலக மனைத்தாளும் அரசர்வே தியர்புலவர்
களந்துவைக்க வையுகுத்த கல்லறைக ளுண்பாரேல்

68 வேளாளர் பெறும் பேற்றின் சிறப்பு
அரியா தனத்தின் மேலிருந்தே யம்பொற் குடைக்கீ ழரசியற்றும்
பெரியார் பக்கல் பெறும்பேறும் பேறேயல்ல பெருக்காளர்
சொரியா நிற்பச் சிலர் முகந்து தூற்றா நிற்பச் சிலரளந்து
புரியா நிற்பப் பெரும்பேறுக் கதுநே ரொக்கப் போதாதே

69 நன்மங்கல வாழ்த்து
பார்வாழி நான்மறைநூற் பருணிதரா குதிவாழி
கார்வாழி வளவர்பிரான் காவேரி நதிவாழி
பேர்வாழி பெருக்காளர் பெருஞ்செல்வக் கிளைவாழி
ஏர்வாழி யிசைவாழி யெழுபத்தொன் பதுநாடே

ஏரெழுபது முற்றிற்று

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates