Trending

Sunday 30 June 2013

ஒற்றை குழந்தை வரமா? சாபமா?

ஒற்றை குழந்தை வரமா? சாபமா?
----------------------------------------------



இன்றைய சூழலில் நரகத்தில் வாழும் நம் இன இளம் தம்பதியர், ஒரு குழந்தையோடு நிறுத்திக்கொள்ளும் போக்கு நிலவி வருகிறது.

சமூக – பொருளாதார சூழல் என பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும் அதன் உள்ளார்ந்த சாதக பாதகங்கள் இருக்கவே செய்கின்றன. ஒற்றை குழந்தை என்பதால் நிறைய சொத்து சேர்த்து வைக்க முடியும் என்ற ஒரே ஒரு சாதகம் மட்டும் இருக்கும்வேளையில் அதன் பாதகங்களை பட்டியலிடுவோம்.

- ஒரு வேளை சந்தர்ப்ப வசத்தால் குழந்தை இறக்க நேரிட்டால், அதுவும் 15-20 வயது வாக்கில் நிகழ்ந்தால் பெற்றோரின் வாழ்க்கையே கேள்விக்குறியாகும். திரும்ப குழந்தையும் பெற்றுக்கொள்ள இயலாது, வாழ்வதிலும் பிடிப்பு இருக்காது. நரகம்!

- ஒரே குழந்தையாக இருப்பதால் ஒன்றாக பிறந்த உறவு இன்றி நாளை பெற்றோர் இறந்த பின்னர் தவிக்க நேரிடும். வாழ்க்கை துணையும் சரியாக அமையாது போனால் குழந்தையுடைய வாழ்வு கேள்விக்குறி

- ஒரே பிள்ளையாக வீட்டுக்குள் வாழ்வதால் சமூகத்தோடு இணைந்து வாழும் மனோநிலை போகும்

- ஆணோ-பெண்ணோ, ஒற்றை குழந்தையானால் திருமணத்தின் பின் பெற்றோர் அநாதை என்பது பெரும்பாலும் நடக்கும் யதார்த்தம்

- ஒரு வேளை திருமணம் முடித்து வெளிநாடு சென்றுவிட்டால் துணைக்கு இறுதி காலத்தில் யாருமின்றி அனாதையாக வேண்டி வரும்.

- பெற்றோரின் பின் அந்த குழந்தைக்கு மிக நெருங்கிய உறவு என்று யாரும் இருக்க மாட்டார்கள். இளம் பிராயத்தில் பெற்றோரை இழந்தால் அந்த குழந்தைக்கு நெருங்கிய உறவு தாத்தா பாட்டி மட்டுமே!

- ஒற்றை குழந்தையாக வளர்ந்தவர்கள் மண வாழ்க்கையில்/பொது வாழ்க்கையில் விட்டுகொடுக்கும் பாங்கு இல்லாதவர்களாக இருக்கிறார்கள். அதனால் மண வாழ்க்கை தோல்வியில் முடிகிறது. சமூக உறவுகளும் சரிவர இருப்பதில்லை.

- தொழில் முடங்கி-சந்தர்ப்ப வசத்தால் சொத்துக்கள் இழந்தால் குழந்தைக்கு சொத்தும் இல்லாது சொந்தமும் இல்லாது செய்துவிட்டோம் என்று பழியுணர்வு கொல்லும்.

- ஒற்றை குழந்தைகளுக்கு நல்ல சுற்றம்-சொந்த பந்தம் இல்லாமல் போய் விடுகிறது.

அரசாங்கம் தனது நிர்வாக வசதிக்காக திருமண வயதை மிக அதிகமாக உயர்த்தியது போல ஒற்றை குழந்தை கலாசாரத்தையும் ஊக்குவிக்கிறது. ஆனால் நல்ல குடும்பம் நிலைக்க குறைந்தபட்சம் இரு குழந்தைகலேனும் இருக்க வேண்டும். ஒரு ஆணும ஒரு பெண்ணும் உள்ள குடும்பமே முழுமையான பாக்கியமுள்ள குடும்பமாகும்.


ஒற்றை குழந்தை சாபம்: 

நம் மொத்த சமூகமும் ஒற்றை குழந்தை குடும்பங்களாக மாறினால் என்னவாகும் என்று பார்ப்போம். ஒரு குழந்தை குடும்பங்கள் ஒரு சாபம்.

௧. முதல் கட்டமாக அண்ணன்-தங்கை-அக்காள-தம்பி என்ற உறவுகள் மறையும்.

௨. இரண்டாம் கட்டமாக மச்சினன், மாமா, கொழுந்தனார், நங்கையார், மச்சாண்டார் போன்ற உறவுகள் இருக்காது.

௩. நம் குழந்தைகளுக்கு தாய் மாமன், அத்தை, பெரியப்பா, சித்தப்பா, பெரியம்மா, சித்தி, தந்தைவழி அத்தை-மாமா போன்ற உறவுகளே இருக்காது!

௪. இரண்டு ஜோடிகள் ஆளுக்கொன்றாக இரண்டு குழந்தைகளை உருவாக்கி அவர்களுக்கு திருமணம் செய்து அவர்கள் ஒரு குழந்தை மட்டும் பெற்கும் போது அந்த குழந்தைக்கு உறவுகளே இருக்காது. தன்னந்தனியாக இருக்கும். நல்ல/கெட்ட காரியங்களில் சீர் செய்யக்கூட உறவுகள் இருக்காது. ஒவ்வொருவரையும் போய் தொங்க வேண்டும்.

எனவே சொத்து வருகிறது என்று கிறுக்குத்தனமாக ஒற்றை குழந்தை உள்ள வீட்டில் பெண் எடுத்து விடாதீர்கள். ஒற்றை குழந்தையாக வளர்ந்தவர்கள் யாருடனும் ஒன்றி வாழ இயலாதவர்கள் (பெரும்பாலும்). இப்படிப்பட்டவர்கள் தான் விரைவில் விவாகரத்தும் பெருகிறார்கள். எனவே ஒற்றை குழந்தை குடும்பங்கள் என்பவை சாபமாகும். அவற்றை நிராகரியுங்கள்; நீங்களும் குறைந்தபட்சம் இரண்டு குழந்தைகளாவது பெற்று நிறைவான குடும்பமாக வாழுங்கள்.




ஒற்றை குழந்தை சாபம் பற்றி சொன்னால் சிலர் குறைந்த மக்கள் தொகையில் அறிவு செல்வம் அதிகாரம் என்று என்னென்னமோ சொல்கிறார்கள்.. போன முப்பது ஆண்டுகளாகவே மக்கள் தொகையை மிக பெரிய அளவில் சுருக்கி கொண்ட கொங்கு சாதியை பார்த்து, நான் கேட்கும் சில கேள்விகளுக்கு பதில் சொல்லவும்..

௧. கவுண்டர்கள் என்றால் என்ன, அதன் முழுமையான பொருள் என்ன..? என்று யாருக்காவது தெரியுமா..? போன தலைமுறையும் சேர்த்துதான் சொல்கிறேன்.. ராசிபுரத்தில் தமிழ் சங்கம் என்ற பேரில் நம்மை சீரழித்த திராவிடத்தை வளர்த்த முட்டாள்களை வைத்துக்கொண்டு அறிவை பற்றி பேச நமக்கு என்ன யோக்கிதை உண்டு..? 

௨.எம் எல் ஏ, எம்.பி என்ற அளவில் வெளியே வித்தியாசம் பெரிதாக தெரியாவிட்டாலும், உள்ளாட்சி அமைப்பு பதவிகள், உள்ளூர் அதிகாரம் மக்கள் தொகை குறைவால் நம்மை விட்டு போய் கொண்டிருக்கிறது என்பது தெரியுமா..? ஒரு காலத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், பழனி, திண்டுக்கல் எல்லாம் முழுக்க நம் கட்டுப்பாட்டில் இருந்தன. ஆனால் இன்று? இதே நிலை நீடித்தால் நாளை?

௩. கோயில் உரிமைகள் மக்கள சக்தி இல்லாமல் பறிபோய் கொண்டிருக்கிறது. உதாரணமாக, நம் பகுதியில், மொளசி அம்மன் கோயில் மொளசியாரிடம் இருந்து வேட்டுவருக்கு போய்விட்டது. பருத்திப்பள்ளிக்கு சாணார்களும், ராசிபுரம், ஏழூர் என எல்லா கோயிலிலும் உரிமை மறுக்கப்பட்டு வேறு கோயில் கட்டி உள்ளார்கள். மல்லை க்கு கைக்கோளர் தொந்தரவு. இதுபோல, உள்ளூர் கோயில்கள் காணியாச்சி கோயில்கள் என எத்தனையோ கோயில்கள் மக்கள் சக்தி இல்லாமையால் அறநிலையத்துறை சர்க்காருக்கும் பிற சாதிக்கும் போகிறதே தெரியுமா..? இப்படி அகதியாக அடுத்த தலைமுறையும் ஆகி சிறுபான்மையாக வேண்டுமா..??

௪. முப்பது வருடமாக மக்கள் தொகையை மற்றவர்களை விட சுருக்கியவர்கள் தான். ஆனால் நம் பெண்கள் ஒடுவதையோ, நம் பசுக்கள் வெட்டுக்கு போவதையோ, நம் பசங்களுக்கு பெண் கிடைக்காததற்கோ, கோயில் உரிமை போவதற்கோ நம்மால் என்ன செய்ய முடிந்தது. நமது நில உரிமைகள் என்ன ஆயின? முன்னிருந்ததை விட மிக அதிக அளவில் நம் நிலங்கள் நம் கைவிட்டு போயின. பள்ளி-படையாச்சி மக்கள் தொகை பெருமளவில் வளர்ந்துள்ளது. ஆனால் அவர்கள் நில உரிமையும் வளர்ந்து கொண்டுதான் போகிறது, காரணம் என்ன? அதிகாரம் செல்வம் அறிவு எங்கு போனது..???

௬.ஒற்றை குழந்தையாக பெற்று, 15-20 வயதில் அந்த குழந்தை இறந்து விட்டால், அந்த பெற்றோரின் கதி?. மீண்டும் குழந்தை பெற்று கொள்வது மிக கடினம். அப்படி எத்தனை பெற்றோர் மன நோயாளியாகவும், தற்கொலை செய்து கொண்டும் போனார்கள் தெரியுமா..? 

மத்திய அரசின் புள்ளிவிவரம் சொல்லும் செய்தி,
ஒற்றை குழந்தையாக வளரும் குழந்தைகள் தான்,
1. 40% அதிகமாக விபத்தில் சாகிறார்கள். அதீத செல்லம. அதனால் சொல்பேச்சு கேளாமை.
2. 60% அதிகமாக விவாகரத்து செய்கிறார்கள். தனியாக வளர்ந்ததால் பிறரோடு விட்டு கொடுத்து வாழும் பக்குவம் இல்லாமை.
3. 54% அதிகமாக போதை பழக்கத்துக்கு அடிமையாகிறார்கள்.
4. 43% அதிகமாக தற்கொலை செய்துகொள்கிறார்கள். கேட்டதெல்லாம் கிடைத்து விடும். தனியே வாழ்ந்த போக்கு இதனால், பிறரோடு இணங்கி விட்டுக்கொடுத்து வாழ முடியாமை. அதோடு சின்ன தோல்விகளை கூட தாங்கி கொள்ள முடியாமை.

ஆனால் மத்திய சர்க்கார் இந்த தகவல்களை மறைத்து தங்கள் மக்கள் தொகை குறைப்பு திட்டத்துக்கு பாதகம் வராமல் பார்த்து கொள்கிறார்கள். ஆனால் முஸ்லிம்களின் மக்கள் தொகை வளர்ச்சிக்கு எந்த வித கட்டுப்பாடும் செய்யாமல் சிறுபான்மை சலுகைகள் என வாரி வழங்கி அவர்கள் மக்கள்தொகை பெருக வழி செய்கிறார்கள்.

எனவே, ஒற்றை குழந்தை தான் நல்லது என்ற மாயையில் இருந்து வெளியே வந்து குறைந்தபட்சம் இரண்டு குழந்தை, இரண்டு குழந்தைக்கு மேல் பெற்று கொள்வோருக்கு கொங்கு இயக்கங்கள் மூலமாக நம்மவர் பள்ளிகளில் இலவச கல்வி அல்லது கல்வி உதவி தொகை, இலவச திருமண மண்டப வசதி என்று சலுகைகள் தர வேண்டும். இதை பெரிய இயக்கமாக நம் மக்களிடம் கொண்டு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. இவற்றை செய்யாவிடில் நாமும் நம் வாரிசுகளும் சிறுபான்மையாகி நாடோடியாகி திரிய வேண்டியதை கண்ணார காண்போம். எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.

ஒற்றை குழந்தை மட்டும் பெற்று கொள்வதை சமீபத்தில் பல இளம் தலைமுறையினர் பின்பற்றி வருகிறார்கள். இதில் சாதகம் என்று பார்த்தால் இரண்டு குழந்தைகளுக்கு செய்யும் செலவை விட ஒரு குழந்தைக்கு செய்தால் போதும் என்பது மட்டுமே. அதுவும் கூட ஒரே குழந்தை என்பதால் ஆடம்பர செலவுகள் மூலம் அனைத்தும் கொட்டி தீர்க்கபடுகிறது. கடைசியில் பார்த்தால் சாதகம் என்று சோழ எதுவுமே கிடையாது என்பதுதான் உண்மை.

சமீபத்தில் கொங்கு நாட்டில் நடந்த ஒரு சம்பவம் ஒற்றை குழந்தை குடும்ப அவலத்தை நன்கு பிரதிபலிக்கும். மிகவும் வசதியான குடும்பத்தை சேர்ந்த அந்த பெற்றோர் இருவரும், நாகரீகம் என் அஒரே குழந்தையோடு நிறுத்தி விட்டார்கள். ஒரே மகன் என்பதால் மிக செல்லம். கேட்டதெல்லாம் வாங்கி கொடுத்தார்கள். அந்த பையனுக்கும் தலை கால் புரியாத ஆட்டம், நண்பர்கள், கேளிக்கை எல்லாம்..!

உடம்பு சரியில்லை என காய்ச்சல் என்று ஆஸ்பத்திரியில் சேர்த்தவர்கள், நாளாக நாளாக சீரியஸ் ஆகி கார்டியாக் அர்ரஸ்ட் என ஒரு நாள் இறந்து விட்டான். இப்போது அந்த பெற்றோருக்கு உலகமே இருண்டு விட்டது. என்ன செய்யபோகிறோம் என தெரியவில்லை. அந்த அம்மாவுக்கு சித்த பிரம்மை போல ஆகிவிட்டது. தாய் வழி தந்தை வழி இரண்டிலும் கோடிக்கணக்கான சொத்து இருந்தும் பயனில்லை. அவர்கள் வீடு, வாழ்க்கை, இத்துணை வருட உழைப்பு, அத்தனையும் அர்த்தமற்றதாகி விட்டது.

உடல்நிலை மட்டும் அல்ல சொந்தங்களே.. ஆக்ஸிடன்ட், தற்கொலை என்று பல காரணங்களால் இறக்கும் இதுபோன்ற குடும்ப வாரிசுகள் ஒரு தலைமுறை-வம்சத்தையே பூண்டோடு அழித்துவிடுகிறார்கள். சொத்து இருந்து என்ன பயன்..?

ஒற்றை குழந்தை என்பது சாபம். அது நமக்கு வேண்டாம்..!

Monday 24 June 2013

நாட்டு பசு ~ வீரம் ~ கற்பொழுக்கம்



நாட்டு பசுக்கள் 1.5-4 லிட் கறக்கயில் சீமை மாடுகள் (பன்றிகள்) ஆறு - பத்து லிட் பால் கறக்கிறது. ஏன்..? அதற்க்கு இயற்கையிலேயே பெண்மை தன்மை மிகுதி. பெண்மை ஹார்மோன் அதிகம்.  மூன்று நான்கு ஈத்துக்களில் சினை பிடிக்கும் தன்மை நின்று விடும். போதாக்குறைக்கு சீமை மாடுகளில் மரபணு மாற்றம் ஹார்மோன் ஊசி என்று ஏற்றி அதன் உடல் செயல்பாட்டையே கெடுத்துவிடுகிறார்கள். சீமை காளைகளை பார்த்தால் உணர்ச்சியற்ற ஜடமாக நிற்கும். அதன் பாலியல் உணர்வு மிக குறைவு. இதனால் சீமை பன்றி பாலை குடித்தால் கொஞ்சம் கொஞ்சமாக நமது உடலின் ஹார்மோன் சமநிலை தடுமாற துவங்கும். உணர்ச்சி பெருக்கடைந்த பெண்கள், உணர்ச்சி குறைபாடுடைய ஆண்கள் என்று சமூகம் சமநிலையை இழக்கும். இதனால் சமூகத்தில் கற்பொழுக்கம் சாத்தியமற்றதாகிறது.

இந்த ஹார்மோன் சமநிலை தடுமாற்றம் உடலின் அனைத்து செயல்பாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. கர்ப்பப்பை கோளாறுகள், பால் சுரப்பு, முறையற்ற மாதவிடாய் கோளாறு, சீக்கிரம்  மாதவிடாய் நின்று விடுதல் என மறைமுக பிரச்சனைகளை ஏற்படுத்தும். 

சீமை மாடுகளை யார் வேண்டுமானாலும் தொடலாம் பால் கறக்கலாம். எதுவும் செய்யாமல் ஜடமாக நிற்கும். இதன் பாளை குடிக்கும் ஆண்களும் பெண்களும் அதுபோலத்தான் இருப்பார்கள். ரோஷம்-சொரணை குறையும். மூளையின் செயல்பாட்டில் வேகம் குறையும். முன்னாளில் சின்ன வார்த்தை தவறி சொன்னாலும் அதன் உள்ளர்த்தத்தை புரிந்து கொள்வதும், கிட்டே நெருங்கி வரும்போதே எட்ட தள்ளி நின்று பேசும் பெண்களையும், சிறிய அவமதிப்பென்றாலும் உடனடியாக ரியாக்ட் செய்யும் பெரியவர்களையும் கண்டுள்ளோம். இன்று எவ்வளவு மட்டமாக பேசினாலும் சொரணை கேட்டு போனதுபோல் நிற்கும்படி குணம் எப்படி மாறியது..?

நாட்டு பசுக்களின் உடலில் ஆண்-பெண் ஹார்மோன் சரி விகிதமாக சீராக உள்ளது. அதன் பால் மூலம் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தும்போது சீரற்ற ஹார்மோன் உள்ள உடலையும் சீராக்கும். இதனால் சீரான முறையான ஒழுக்கமான வாழ்க்கையை வாழ நம் உடலும் ஒத்துழைக்கும்.

நாட்டு பசுக்களை அதன் எஜமானரை தவிர கண்டவர்கள் எல்லாம் தொட முடியாது. ஓரிடத்தில் தொட்டால் அந்த இடத்தை மட்டும் சிலிர்த்து காட்டும். அவ்வளவு உணர்வு உள்ளது. அதன் பாலை தொடர்ந்து பயன்படுத்தும் போது புத்தி கூர்மை, ரோஷம், வீரம், தன்னிலை உணர்தல் எல்லாம் சரிவர நடக்கும்.

சீமை மாடுகளை பயன்படுத்துவோர், அதன் தாக்கம் முதல் தலைமுறையில் தெரியாவிட்டாலும், மரபணு மூலமாக இரண்டாம் அல்லது மூன்றாம் தலைமுறையில் நிச்சயம் தெரிந்துவிடும்.

Sunday 23 June 2013

கொங்கு கூட்டங்கள்


கொங்கு வெள்ளாளர் கடமைகள்



1.குலதெய்வம் 
2.குல மாடு (நாட்டு மாடுகள்)
3.குல குருக்கள் 
4.குலதர்மம் (மாடுகளும்/விவசாய பூமியும்) 
5.குலப்பெண்கள் 

6.குல மரபுகள் - நியமங்கள் - சாதி ஒழுக்கம்
7.குல குடிகள் (18 குடிகள்)


இவற்றை காப்பது ஒவ்வொரு கவுண்டனின் தலையாய கடமை. உயிரே போனாலும் கடமை தவற கூடாது!!


குல தெய்வம்: 
--காணியாச்சி - நம் காணியை காக்கும் தெய்வம்... காளி வடிவம்... எட்டு கை, கோர பல், ஜ்வால முடி, சம்ஹார ரூபம் தாங்கி இருக்கும்... செல்லாண்டியம்மன் மற்றும் கொல்லிப்பாவையின் பல்வேறு வடிவங்கள்.. ['அழகு'நாச்சியம்மன்-'மதுர'காளியம்மன் -'சொக்க'நாச்சியம்மன்-எட்டுக்கையம்மன்-பொன்காளியம்மன்]-கொல்லிப்பாவை; [செல்லாண்டியம்மன்-செல்லியம்மன்-செல்வநாயகியம்மன்] - செல்லாண்டியம்மன் // ஒவ்வொரு காநியிலும் இருக்கும் சிவா ஆலயமும் காணியாச்சி வழிபாட்டின் ஒரு பகுதியே. காணியாச்சி கோவில் உள்ள ஊரின் அருகில் இருக்கும் சிவாலய தரிசனம் சேர்ந்தால் தான் முழுமை பெரும்..!

--'கரிய' என்னும் அடைமொழி சோழர் ஆண்ட காலத்தில் உருவாகிய காணிகளில் ஏற்ப்படுத்திய காணியாச்சிகள் - கரியகாளியம்மன்

--குலதெய்வம் - குலகுரு மடத்தில் இருக்கும் ஆத்மார்த்த லிங்கம்..

--முன்னோர் வழிபாடு - அண்ணன்மார், வெள்ளையம்மா, வீரமாத்தி, தீப்பாய்ந்தம்மன், சோளியம்மன்-சோளியப்பன், நல்லமாள், ராசா சுவாமி, தீரன் சின்னமலை.

புனரமைப்பு என்ற பெயரில் பாரம்பரியம் சிதைக்கப்படும் கொங்கு கோவில்கள் பற்றிய தொகுப்பு: http://kongutemplejihad.blogspot.in/

குல மாடுகள்:
http://tamilnaducattle.blogspot.in/

http://cowprotectionforce.blogspot.in/

குல குருக்கள்:

18 கொங்க குடிகள்:
௧.கொங்க பிராமணர் (ஸ்மார்த்தர், ஆதி சைவர், குருக்கள்)
௨.கொங்க வெள்ளாளர்(தென்திசை/செந்தலை வெள்ளாளர்)
௩.கொங்க செட்டியார் (வெள்ளாஞ்செட்டி, எண்ணெய் செட்டி, வணிக செட்டி)
௪.கொங்க பண்டாரம் (கோமானாண்டி/உவச்சாண்டி/பூவாண்டி)
௫.கொங்க புலவர் (புலவன்/பண்பாடி/தக்கைகொட்டி,கூத்தாடி)
௬.கொங்க கம்மாளர் (ஆசாரி) - (கொல்லன்/தச்சன்/தட்டான்/கருமான்/கல்தச்சன்)
௭.கொங்க குசவர் (குலாலர்)- (குயவர்/மண்ணுடையார்)
௮.கொங்க கைக்கோளர் (முதலியார்)
௯.கொங்க சாணார்
௰.கொங்க உப்பிலியர் (கற்பூர செட்டியார்)
௧௧.கொங்க கருணீகர் (கணக்குப்பிள்ளை)
௧௨.கொங்க நாவிதர்
௧௩.கொங்க வண்ணார்
௧௪.கொங்க ஊழியர் (தொண்டன்/குறவன்)
௧௫.கொங்க பள்ளர்
௧௬.கொங்க போயர்
௧௭.கொங்க பறையர்
௧௮.கொங்க மாதாரி

சாராயம்-ஆண்மை குறைவு




சாராய போதை நோயை, நாகரீக அடையாளமாக மாற்ற துடிக்கும் மானங்கெட்ட மீடியா-சினிமா இருக்கும் இந்நாளில் கொங்கு சமூகத்தில் சத்தமில்லாமல் ஒரு மாற்றம் நடந்து வருகிறது.

தற்காலத்தில் விவாகரத்து நகர்ப்புறங்களில் கொஞ்சம் அதிகரித்துள்ளது. அதில் காரன காரியங்களை ஆராய்ந்து பார்த்தால் அதிகபட்சமாக சென்னை-பெங்களுரு போன்ற ஊர்களில் வேலை செய்வோரிடமும், அதிலும் குறிப்பாகவும் பொதுவாகவும் போதை நோய் உள்ளவர்கள் அதிக விவாகரத்து செய்வது தெரிய வருகிறது.

ஆறு மாதங்கள் விளையாட்டாக-சாதாரணமாக-விழாக்களுக்கென்று குடிக்க துவங்கினாலே சிறிய அளவிலேனும் ஆண்மையை பாதிக்க துவங்கிவிடுகிறது. போதை நோய் உடைய பெரும்பாலானோர் ஆரம்ப கட்டத்திலோ முற்றிய நிலையிலோ ஆண்மை குறைவுடையவர்களாக கண்டறியபட்டுள்ளனர். ஆண்மை பாதிக்காவிட்டாலும் குழந்தையின்மையை உருவாக்கி விடுகிறது.

இது ஆணி வேராக செயல்பட்டு குடும்பத்தில் சந்தேகம், வன்முறை, குழந்தையில்லா ஏக்கம் பிரச்சனை என முடிவில் விவாகரத்தில் கொண்டு விடுகிறது. இதை நுணுக்கமாக கவனித்த கொங்கு சமூகம், கடந்த சில காலமாக சாராய போதை பழக்கத்தை பெரிது படுத்தாது இருந்த நிலையை மாற்றி கொண்டுள்ளது. இப்போது சாராய பழக்கம் உடையவன் என்னும் எண்ணம் இருந்தால் பெண் கொடுக்கும் எண்ணத்தை விட்டுவிடுகிறார்கள். 

ஏன், பெண்களே வேண்டாம் என்று சொல்லிவிடுகிறார்கள். இதன்மூலம், போதை நோயை பெருமையாக வெளியில் சொல்லும் போக்கு-பொது இடத்தில் வெக்கமின்றி சாராயம் குடிக்கும் போக்கு, குறைய துவங்கியுள்ளது. இது நம் சமூகத்துக்கு நல்ல மாற்றம்..!

நன்றி கொங்கு சமூக பெண்களே!!

சாதி ஒழுக்கம்-உணவு பழக்கம்

சாதி பற்று என்பதை விட, சாதி ஒழுக்கத்தை கடைபிடிப்பதே, இன்றைய தேவை..

கவுண்டர் என்பது குணம் சார்ந்தது.. இந்திய சித்தாந்தத்தில் மனிதர்களுடைய குணங்களை மூன்று அடிப்படை கூறுகளாக பிரித்திருக்கின்றனர்.. அவை:

சத்வ, - அமைதியான கோபதாபமற்ற நிலை
ரஜோ, - வீரியமிக்க செயல்படுகின்ற நிலை..
தாமஸ்ம் - சோம்பலான, செயலற்ற தன்மை..

இந்த முக்குணங்களின் கலவையே பல்வேறு ஜாதியும் அதன் குணங்களும்..

கவுண்டர்களை பொறுத்தவரையில், சதவ குணங்களும், ரஜோ குணங்களும் க்லந்த குணங்கள்.. அதாவது துடிப்பான செயல்பாடும், கோபத்திற்கு ஆட்படாமல், யோசித்து செயல்படும் தன்மை, நிதானமாக எதையும் அலசும் மன நிலை.. இதுதான் நமது அடையாளம்..

இந்த குணாதிசயம் நம்மில் இன்று எத்தனை பேருக்கு இருக்கிறது? நமது தாத்தா பாட்டி தலைமுறையில் இதை நாம் கண்கூடாக காணலாம்.. ஆனால் நமது அப்பா அம்மா தலைமுறையில் இந்த குணாதிசயம் குறைந்து , இன்று முற்றிலும் இழந்து நிற்கிறோம்..

எதனால் இந்த நிலைமை? இந்த கவுண்டத்துவ குணம் இல்லாமல் வெறும் சாதிப் பற்று மட்டும் இருந்த என்ன பயன்?

குணம் என்பது பிறவியில் வருவது.. ஆனால் அது நம் வாழ்க்கை முறையால மாறுபடுகிறது.. நாம் உண்ணும் உணவு, எண்ணம், செய்யும் தொழில், இருக்கும் இடம், வாழும் சமுதாயம் என பல காரணிகள் ஒருவரின் குணங்களை பாதிக்கிறது..

இதில் உண்ணும் உணவே பெரிய மாறுதல்களை ஏற்படுத்துகிறது.. அதனால்தான் அந்த காலத்தில் அடுத்த வீட்டில் தண்ணீர் கூட அருந்த மாட்டார்கள்.. காரணம் அவர்களின் குணமும் சேர்ந்து வரும் என்பது..

தாத்தா காலத்தில் கவுண்டர்கள் என்ன மாதிரி உணவு சாப்பிட்டார்கள்.. இப்பொழுது நாம் எதை சாப்பிடுகிறோம், என்று பார்த்தால் புரியும்..

சோளம், கம்பு, ராகி, தினை, சாமை இவைகளெல்லாம் உடலுக்கு வீரியத்தையும் பலத்தையும் கொடுக்கக் கூடியது..

உள்ளூர் சாணார் செய்த கருப்பட்டி, மரச்செக்கில் உள்ளூர் செட்டியார் ஆட்டிய நல்லெண்ணை, (கடலெண்ணை என்பது நமது பாரம்பரிய பொருள் அல்ல.. அது வெளியிலிருந்து வந்தது)..

மாமிசம் சாப்பிடும் பழக்கம் கவுண்டர்களிடையே கிடையாது.. கடந்த 100 - 150 வருஷத்துக்குள் வந்தது இந்த பழக்கம்.. ஆரம்பத்தில் யாருக்கும் தெரியாமல் தொண்டுப்பட்டியில் (மாட்டுத் தொழுவம்) கறி சமச்சு சாப்பிட்டார்கள். பின் கொஞ்சம் கொஞ்சமாக வீட்டுக்க் வெளியே சமச்சு சாப்பிட்டு, வீட்டை சாணி போட்ட வழித்தார்கள்.. அப்புறம் வீட்டுக்குள்ளேயே வந்து இன்று தினமும் கறி என்றாகிவிட்டது..

முக்கியமாக கொங்க நாட்டு மாட்டுப் பாலும் தயிரும் நெய்யும், நம்முடைய குணங்களை வடிமைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது..

விவசாய குடும்பத்தில் இருந்த வந்தவர்கள், சீமை மாடட்டுக்கும் நாட்டு மாட்டுக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்திருப்பார்கள்..

சீம மாடு தேமே என்று இருக்கும்.. (தாமச குணம்).. சாணி போட்ட இடத்திலேயே படுக்கும்.. மந்த புத்தியுடையது.. யார் வேணும்னாலும் பால் கறக்கலாம்..

ஆனால், நாட்டு மாடு பயங்கர சென்சிடிவானது.. யாரும் அவ்வளவு சீக்கிரம் நெருங்க முடியாது.. மனிதர்களை போல உணர்ச்சியுள்ளது.. ( பல இடங்களில் எசமானர் இறக்கும்பொழுது மாடுகளும் சோகத்தில் இறந்த சம்பவம் உண்டு)..வீரியம் மிக்கது.. காங்கேயம் காளைகளின் வேகத்தை எல்லாரும் அறிந்திருப்பர்..

அந்த பாலை குடித்த வரையில் கவுண்டர்களும் அந்த மாடுகளை போல மான ரோஷத்துடன் ஆரோக்கியமாக வீரியத்துடன் இருந்தார்கள்..

ஆனால் கடந்த 30-40 வருடங்களாக சீம மாட்டுப் பாலை சாப்பிட ஆரம்பித்ததன் விளைவு, கண்கூடாக பார்க்கிறோம்.. கவுண்ட பசங்கள் பேடிகளாக மாறியுள்ளனர்.. கவுண்ட பெண்களை எவன் வேணும்னாலும் கூட்டிகிட்டு போகலாம் என்ற நிலைமை..மான ரோஷம் இல்லாமை.. பொறாமை.. ஏமாற்றும் குணம்.. ஒழுக்கக் கேடு.. போன்றவை அரிதாகவேனும் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கிறது. இதை முளையிலேயே கில்லி எரிய வேண்டும்.

இது அத்தனைக்கும் காரணம் நாம் உண்ணும் உணவே..

இங்கு நிறைய பேர் பயாலஜி படித்திருப்பார்கள்.. நம் உடலின் மெட்டபாலிசம், நாம் சாப்பிடும் சாப்பாட்டை பொறுத்து மாற்றமடைகிறது.. மெட்டபாலிசம் மாற்றம், நம் உடல் கூறுகளை பாதிக்கிறது.. உணர்வுகளை பாதிக்கிறது.. எண்ணங்களை பாதிக்கிறது.. எண்ணங்கள் குணங்களை பாதிக்கிறது..

இன்று பிச்சா, KFC, கோக்க கோலா, ஐஸ்க்றீம், என்று கண்ட பொருளையும் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம்.. இருந்தும், நம் கவுண்ட குணம் ஓரளவு இருக்கிறது என்றால் அது பரம்பரையினால்தான்..

ஆனா நம் சந்ததியினருக்கு இதே குணம் போய் சேருமா என்று யோசித்துப் பார்க்க வேண்டும்..

நம்முடைய உணவு வாழ்க்கை முறை உயிரணுக்களை பாதிக்கிறது.. அதில் இருந்து வரும் நமது அடுத்த சந்ததியினரும் கண்டிப்பாக பாதிக்கப்படுவார்கள்..

ஆக, நமது ஒழுக்கத்தையும், சந்ததியினரின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க வேண்டுமானால், உணவு வாழ்க்கை முறையை மாற்றியாக வேண்டும்...

தாலியின் வரலாறு



தாலி என்னும் வார்த்தை தாள-தாழ என்னும் சொல்லிலிருந்து வந்தது. தாளம் என்றால் பனை. (தாளவாடி - பனைமரங்கள் அதிகம் உள்ள பகுதி; திருப்'பனங்காடு' -தாளவனம்,தெய்வம் தாளபுரீஸ்வரர்; தாள விலாசம் என்னும் பழமையான நூல் பனையை பற்றிய செய்திகளை சொல்லும் நூல்.Toddy ~ தாடி - கள்ளு. தாடிக்கொம்பு திண்டுக்கல் அருகே உள்ள ஊர். Talipot Palm என்று ஒரு வகை பனையை வெள்ளையர்களும் குறிக்கிறார்கள். சங்க கால கன்னட மொழியிலும் தாழம் என்றால் பனைமரமே.)

பனைக்கும் தாலிக்கும் என்ன தொடர்பு?

கொங்கு திருமணம் என்பது சொந்தங்களுக்காக-ஊருக்காக செய்யபடுவது மட்டுமே அல்ல. கொங்கதேச அன்றைய அரசனான சேரனிடம் அங்கீகாரம் பெறவே திருமணம். கொங்க தேசத்தில் 24 நாடுகள் உண்டு. இருபத்திநாலு நாட்டுக்கும் சித்ரமேழி சபையில் அங்கம் வகிக்கும் பதவி பெற்ற நாட்டார் (நாட்டின் பிரதிநிதி) உண்டு. (குடியானவர்களில் நல்லோர் நாட்டின் பிரதிநிதியாக ஜாதி நிர்வாக சபையான சித்ரமேழி சபையில் அங்கம் வகிப்பர். ஒழுக்கம்-தர்மம் தவறினால் பதவி பறிக்கப்படும். அரசு நிர்வாகப் பதவி வகிக்கும் பட்டக்காரர்களும் நாட்டாராக இருப்பதுண்டு). சேரனின் பிரதிநிதிகளாக 24 நாட்டாரும் வந்திருந்து திருமணத்தை நடத்தி வைப்பார்கள். இன்றும் அதன் அடையாளமாகத்தான் நாட்டு கற்களை திருமண சடங்கில் வைப்பார்கள். ஆனால், பின்னாளில் பல பட்டக்காரர்கள் செய்த அக்கிரமங்கள் இந்த மரியாதைக்கு அவர்கள் தகுதியுடையவர்களா என்ற கேள்வியை எழுப்பிவிட்டது.

சரி, விஷயத்துக்கு வருவோம். ஒரு பனையோலையில் இன்னாருக்கு இன்னார் முன்னிலையில் திருமணம் நடந்தது என்பதை எழுதி அதில் சேரனின் பிரதிநிதிகள் கையெழுத்திடுவர். அதை மடித்து இப்போது உள்ள தாலி வடிவில் ஒரு மஞ்சள் கயிற்றில் மாப்பிள்ளை கட்டிவிடுவார். பனை ஓலை நீரில் நனைய இற்று விடுவதால் அதை பின்னர் அரக்கிலும், குயவன் செய்து தந்த தட்டானிலும் (சுட்ட மண்) செய்து பின்னர் தங்கத்திற்கு மாறினர். எனவே தாலி என்பது வெறும் திருமண அடையாளம் என்பதை தாண்டி பாரம்பரியத்தின் அடையாளம்-வரலாற்று சின்னம்-புராதனத்தின் நினைவு. நம் நாட்டின் கற்பு நெறிக்கும் ஒழுக்க வாழ்வுக்கும் ஒரு முத்திரை. திருமாங்கல்யம் என்பது காலத்தில் மாறியதுண்டு, ஆனால் மஞ்சள் நிற பருத்தி நூலே காலம் காலமாக திருமண அடையாளமாக இருந்து வருகிறது. பாரத நாடு முழுக்க சாமானிய குடிமகனின் மனைவி முதல் அரசனின் மனைவி வரை அனைவருக்கும் பொதுவான பெருமைமிகு மங்கள அடையாளம் தாலி. ஏன், தெய்வங்களுக்கும் இது பொருந்தும். தாலி அணியாத மணமான பெண் தெய்வம் எதுவும் கிடையாது.

பிராமணர்களும் இன்னும் சில சாதிகளும் பூநூலுக்கு பருத்தியையே பயன்படுத்துவதை போல தாலியும் பருத்தி நூலிலேயே கட்டப்படும். இது பணக்காரன் ஏழை என்ற வித்தியாசம் தாண்டி அனைவராலும் அணிய கூடியது.

மண அடையாளம் என்பது எல்லா மதத்திலும் எல்லா நாட்டிலும் உண்டு. தாலியை மண அடையாளம் என்பதை தாண்டி பாரம்பரியத்தின்/கலாசாரத்தின் அடையாளம். தாலியை அழிக்க வேண்டுமெனில் அனைத்து புராதன சின்னங்களையும் கட்டிடங்களையும் அழிக்க வேண்டும். இதெல்லாம் பாரத பாரம்பரியத்தை அழித்து தங்கள் மதம் பரப்ப - ஆட்சியை நிறுவ வெளிநாட்டு மதமாற்ற சக்திகள் செய்யும் கட்டமைக்கப்பட்ட சதியில் ஒன்று. இதற்க்கு பெண் விடுதலை-இந்து மத எதிர்ப்பு என்ற முகமூடி மாட்டி பெண்களை ஏமாளிகள் என்று நினைத்துவிட்டனர். மெக்ஸிகோ போல நாட்டின் கலாசாரத்தை பூர்வகுடிகளை அடையாளமற்றவர்களாக்கி ஆள்வது வேரில் இருந்து விஷத்தை வைப்பது போல.

மற்றவர்களை விட, கொங்கதேச மக்களுக்கு தாலி மேல் அதிக உரிமை உண்டு.

ஏனெனில் பனை கொங்க(சேர) தேசத்தின் தேசிய மரம்! நீர்வளம் குறைவான நம் கொங்க தேசத்தின் பெரும்பகுதிகளில் பனை மரமே தகுந்தது! எனவே பெண்ணியம் என்ற மாய வலையில் சிக்கி நம் பெருமையை நாமே அழித்துகொள்ளாமல் குலம் காக்கும் கொங்கு பெண்கள் அனைவரும் தாலியை அணிந்து வெளிநாட்டு மத மாற்றிகளின் கைக்கூலிகளான திராவிட-முற்போக்கு கிறுக்கர்கள் முகத்தில் கரி பூச வேண்டும்!

இதன் பின்னணி சுவையானது. மேற்கு கலாச்சார மோகமும, கால் சென்டரிலும், மென்பொருள் நிறுவன பணிகளிலும் திருமணம் முடிந்துவிட்டதை மறைக்கும் போக்கு தான் இதன் அடித்தளம். அந்த புற்று நோய் இப்போது மெதுவாக அனைத்து தரப்பையும் சீண்டி பார்க்க துவங்கியுள்ளது. திருமணம் முடிந்துவிட்டது அறிந்தால் சமூகத்தில தங்களுக்கான ஈர்ப்பு/கவர்ச்சி குறைவதாக நவீன யுவதிகள் எண்ணுகிறார்கள் என்று சமீப ஆய்வும் கூறுகிறது. அது மாநகரங்களில் வசிக்கும் நம் கொங்கு பெண்கள் மூலமாக பரவ துவங்கியுள்ளது. அப்படி முதிர்கன்னிகளாக காட்டிகொள்வதில் என்ன கவர்ச்சி என்று தெரியவில்லை. அதையே நம் வீட்டு மூத்த பெண்களும் பின்பற்ற துவங்குவது ஒரு அவலம்.

இதற்கு சிலர் ஆணாதிக்கம் என்னும் சாயம் பூசுகிறார்கள். ஈ.வெ.ரா பல காலமாக தாலி அகற்ற வேண்டும் என்றபோது கேட்காது, இப்போது மட்டும் எப்படி இந்த 'புற்ச்சி' வந்தது..? சிலர் கழுத்து அரிப்பு, ஒவ்வாமை என்கிறார்கள். பல ஆயிரம் வருடமாக அணியபட்டது, வெயிலில் விவசாய வேலை பார்த்தவர்களுக்கு வராத சிரமம் இப்பொது வந்துவிட்டது என்பது நொண்டி சாக்கு.

என் வகுப்புதோழி (கொங்கு-பங்காளி) சொன்னாள், “தாலி கயிரையே மதிக்காதவள் கணவனை எப்படி மதிப்பாள்; இவளுக்கெல்லாம் இனிசியளுக்கு புருசனா மிச்சர் திங்கறதுக்கு, தூக்குல தொங்கலாம்”. நியாயமான வார்த்தை!



பல பாரம்பரியம் மிக்க குடும்பங்களில் தாலிக்கயிறு அணியவில்லைஎனில் சீர் செய்ய அனுமதிக்க மாட்டார்கள். ஏன், சொந்த மகளானாலும் வீட்டுக்குள்ளேயே விட மாட்டார்கள். ஆடம்பரத்தை காட்டும் செயினை விட தெய்வ முறையும், அடையாளத்தையும், மரபையும் காட்டும் மங்கள சரடுக்கு முக்கியத்துவம் தருவோம்.

தாலியை முன்னிறுத்தி காராள வம்ச குடியானவர் சீர்களில் இரண்டு முக்கியமானவை உள்ளன.

உள்கழுத்து நூலணிதல்:

கல்யானத்தன்றே உள்கழுத்து சரடணிதல் என்னும் சடங்கு நடைபெறும். கல்யாணம் முடித்து சீர்கள் எல்லாம் நிறைவுற்ற பின், மணவறையிலேயே விநாயகப் பெருமானுக்கு குழைய வடித்த சாதம் மற்றும் மஞ்சள் நூலை வைத்து பூஜித்து அந்த நூலை அருமைக்காரியோ அல்லது (வட்டாரத்துக்கு தகுந்தது போல) எழுதிங்கள் சீர் செய்துகொண்ட சீர்காரியோ பூஜை செய்து மணமகனிடம் கொடுக்க மாப்பிள்ளை அதை பெண்ணின் கழுத்தில் கட்டுவார். இந்த சடங்கு சத்தியவானை மீட்க சாவித்திரி மேற்கொண்ட விரதத்தை நினைவூட்டுவது என்று கூற்றுண்டு. இங்கே நூலணிதல் என்பதிலேயே, தாலி என்பது மஞ்சள் கயிர்தானேயன்றி தங்கச் செயின் அல்ல என்பது திண்ணம். சுமங்கலியான கொங்கு குடியான பெண்கள் எந்த காலத்திலும் மாங்கல்ய நூலின்றி மட்டும் இருக்கவே மாட்டார்கள். இது கொங்கு காராள வம்ச பெண்களுக்கே உரிய சிறப்பாகும்.

மாங்கல்ய நோம்பி (மார்கழி திருவாதிரை)


பாவை நோன்பு என்றும் ஆருத்ர தரிசனம் என்றும் பிற வட்டாரங்களில் கொண்டாடப்படும் மார்கழி திருவாதிரை கொங்கதேசத்தில் கூடுதலாக மாங்கல்ய நோம்பி என்றும் வணங்கப்படும். புதிதாகக் கல்யாணமான பெண்கள் அவர்களின் முதல் மாங்கல்ய நோம்பியை மிக விசேஷமாக கொண்டாடுவர். வீடு வாசல் சுத்தம் செய்து, நாள் முழுதும் நோன்பிருந்து மாலை சந்ரோதயத்தின் பின் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து மஞ்சள் கயிறு வைத்து அதற்கு பூஜைகள் செய்து வழிபடுவர். பின்னர் நன்கு வாழ்ந்த சுமங்கலிப் பெண்கள் (எழுதிங்கள் சீர் செய்துகொண்டிருக்க வேண்டும்) மூலமாக மஞ்சள் நூல் கட்டிக் கொள்வர். ஆண்களும் கைகளில் கட்டுவதுண்டு. சில ஊர்களில் இந்த பூஜையில் பெண்கள் மட்டுமே பங்கேற்கிறார்கள். ஆண்களுக்கு அனுமதியில்லை. மாங்கல்ய பூஜைக்கு சிவனுக்கு ஆருத்ர தரிசனத்தின் போது படைக்கும் திருவாதிரைக்களி படைக்கபடுவதும் உண்டு. கணவனின் ஆயுள் ஆரோக்கியம் நல்வாழ்வு, குடும்ப சுபிட்சம், தம்பதிகள் அன்யோன்யம் போன்ற கற்புநிறை பெண்களின் வேண்டுதல்கள் நிறைவேறும் தினமாகும். நோன்பில் பங்கேற்பவர்களுக்கும் மஞ்சள் நூலும் மஞ்சள் குங்குமமும் வழங்கப்படும்.








மேலும் படிக்க,
௧. கொங்கு மக்களின் பெண்ணியம்
௨. தேசத்தை மூளை சலவை செய்வது
௩. பெரியார் என்பது ஈவேராவுக்கு பொருந்துமா?
௪. அழகுக்கலையா? அசிங்கப் பிழையா? - நவீன அழகுசாதன பொருட்களின் நிஜமுகம் மற்றும் அதற்கு மாற்று 
௫. பருவத்தில் கல்யாணம் அவசியமென்ன?
௬.கவர்ச்சியா கண்ணியமா?

இந்திய பெண்ணியம், சமூகம் உட்பட பல விஷயங்களைப் பற்றி ராஜஸ்ரீ பிர்லா, பிரேமா பாண்டுரங், பத்மா சுப்பிரமணியம், குருமூர்த்தி போன்றோரின் அற்புதமான உரைகள். தற்காலத்தில் அனைவரும் அறிய வேண்டிய பல செய்திகள். 

கொங்க வெள்ளாளர்-சர்க்காரின் சூழ்ச்சி

கொங்க வெள்ளாளர்-சில அடிப்படைகள்:

வெள்ளாளர் என்பதே சரியான சாதி பெயர். முன்னாளில் வேளாளர் என்று அழைக்கப்பட்ட போதிலும்வேளாளர் என்ற சாதிப்பெயரோடு இன்றைய சர்க்கார் கொங்க வெள்ளாளருடன் பிற சாதிகளையும் இணைத்துள்ளனர்.


கொங்க வெள்ளாளர் மரபில் பின்வரும் சாதி பெயர்கள் மட்டுமே சேரும். 
  • கொங்கு வெள்ளாள கவுண்டர்
  • கொங்கு நாட்டு வெள்ளாள கவுண்டர் (நாட்டு கவுண்டர்)
  • தென்திசை வெள்ளாளர்/செந்தலை கவுண்டர் 
மேலே சொல்லப்பட்டவர்கள்ஒரே கலாசார பாரம்பரிய பின்னனியுடையவர்கள். தங்கள் நிர்வாக பொறுப்பால் நாட்டார்கள் சிறிதளவு வேறுபடுகிறார்கள். நாட்டார்கள் கொங்க தேசம் 24 நாடுகளிலும் இருப்பினும் திருச்செங்கோடு பகுதியிலுள்ள ஐந்து கூட்டங்களுக்கு மட்டுமே நாட்டு கவுண்டர் என்று சான்றிதழ் கொடுக்க அப்டுகிறது. இதுவும் வரலாற்றை திரிக்கும் முயற்சியாகும்.

இன்று கொங்கு வெள்ளாளருடன் இணைக்கப்பட்ட பிற சாதிகளான 

  • மொடவாண்டிகள் 
  • சங்குகட்டி கவுண்டர்கள்
  • நரம்புகட்டி கவுண்டர்கள் 
  • தொண்டு வெள்ளாளர்
  • திருமுடி வெள்ளாளர்
  • படைத்தலை கவுண்டர்கள்
  • பால வெள்ளாளர் 
  • பூசாரி கவுண்டர் 
  • அனுப்ப வெள்ளாளர் 
  • ரத்தினகிரி கவுண்டர் 
அவரவர் கலாசாரத்தில் சிறந்தவர்களே. ஒரே சாதி சான்றிதழில் இணைத்து அவர்களின் கலாசார மரபுகளையும்வரலாறு மற்றும் சமூக கோட்பாடுகளையும் அழிக்க நினைப்பது பிரிட்டிஷ் சர்க்காரால் துவங்கி இன்றுள்ள சர்க்காரால் கடைபிடிக்கப்பட்டு வரும் தவறான வழக்கமாகும்.

கூட்டம் என்பதும் கோத்திரம் என்பதும் ஒன்றே. பலர் கூட்டத்தை குலம் என்று சொல்வது தவறு.

சாதி-கொங்க வெள்ளாளர்
குலம் - கங்கா குலம் 
கோத்திரம் - கூட்டங்கள் (கன்னன், ஆந்தை, அந்துவன் போன்றன)

ஒரே குலத்துக்குள்தான் திருமணம் செய்ய வேண்டும். ஒரே கோத்திரத்துக்குள் (கூட்டம்) திருமணம் செய்ய கூடாது. இதை உறுதி செய்யத்தான் கொங்க வெள்ளாளர் திருமண சீர்களில் குலங்கோதுதல் என்னும் சீர் நடைபெறும்.

Thursday 20 June 2013

பெண்ணியவாதிகள் என்னும் சமூக விரோதிகள்




ஆண்கள் செய்யும் தவறுகளை அடித்தேனும் திருத்தும் வன்மையையும் திண்மையையும் பெண்களுக்கு வளர்த்துவதே சரியான பெண்ணிய பாதையாக இருக்கும்.


ஆனால் இன்றைய பெண்ணியம் பேசும் சமூக விரோதிகள் போட்டிக்கு நீயும் குடி, புகைப்பிடி, அர்த்த ராத்திரியில் அரைகுறையாக திரி, கற்பு தவறு-விபசாரம் தவறில்லை என்றெல்லாம் பிரச்சாரம் செய்து ஆண்கள் மீதுள்ள பெண்களின் வன்மைதிற்கு தவறான வடிகாலை காட்டுகிறார்கள். ஒழுக்கம்-தர்மம் சார்ந்த வாழ்வு என்னும் இந்திய நாட்டின் சமூக சொத்தை அழிக்க நினைப்பதன் நோக்கமன்றி வேறென்ன?. இது புரியாது, உலகம் அறியா நம் ஊர் சிறுமிகள் மிக சிலர், அந்த சமூக விரோதிகளின் பேச்சுக்கு ஜால்ரா தட்டி 'அறிவாளி'பட்டம் வாங்க நினைக்கிறார்கள். இது ஒரு மீள முடியா சதி வலை என்பதை தெரியாமல் போய் சிக்கிகொள்கிறார்கள். உண்மை முகம் புரியும்போது இந்த வலையில் இருந்து மீள முடியாது போனவர்கள் பலர். இன்றைய பெண்ணியவியாதிகள் பலர் நல்ல குடும்ப பின்னணி இல்லாதவர்கள் என்பதும்-பெண்ணிய மாயா வலையில் சிக்கிகொண்டோர் நல்ல வாழ்க்கையை வாழ்வதில்லை என்பதும் மனோதத்துவ நிபுணர்கள் சொல்லும் கூடுதல் தகவல்.



-- இங்கு சமூக சொத்து என்று சொல்ல காரணம், வெளிநாட்டில் குற்ற தடுப்பு மற்றும் குடிமக்களை காப்பது அரசின் செலவு-வருடம் பல லட்சம் கோடிகள்.. நம் நாட்டிலோ குற்ற குறைவு தர்மம்-ஒழுக்கம் சார்ந்த வாழ்க்கையாலும், குடிமக்கள் தத்தம் குடும்ப உறுப்பினர்களாலும் பார்த்துக்கொள்ளபடுகிறார்கள்.. இன்றும் அமெரிக்கா பிரிட்டனை விட இந்தியாவில் கற்பழிப்புக்கள் குறைவே!!

நம் முன்னோர் படிக்காதவர்களா..?





வெள்ளையர்களும், வெளிநாட்டு மதவாத சக்திகளும், அதன் ஏஜென்ட்களான நம்மூர் முற்போக்கு-திராவிட கிறுக்குகளும் நம் முன்னோர்கள் படிக்காதவர்கள்-பாமரர்கள்-பிற்போக்குவாதிகள் என்று பல காலமாக கொஞ்சம் கொஞ்சமாக நம்மை நம்ப வைத்துள்ளனர். இதனாலேயே, நம் சமூக வழக்கங்களையும் மரபுகளையும் தாழ்வாக பார்க்கும் பார்வையை ஏற்படுத்திவிட்டனர்.

ஆனால் உண்மை அதுவல்ல. நம் முன்னோர்கள் பெரும்பான்மையானோர் படித்தவர்கள்.அதற்கு பல வரலாற்று ஆதாரங்களை காட்ட முடியும்.

௧. பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கன்னிவாடி கன்னகுல பட்டயம் என்னும் வரலாற்று ஆவணத்தில் முத்துசாமி கவுண்டர் என்னும் ஐந்து வயது பாலகன் பள்ளி சென்று வந்ததை குறிப்பிட்டுள்ளனர்.

௨. பழையகோட்டை வரலாற்றில் வண்ணார் சாதியில் பிறந்த ஒருவர் புலமை மிக்கவராக இருந்ததும் அவரை அன்றைய மன்றாடியார் உபசரித்தது பற்றியும் வரலாற்று குறிப்புகள் உண்டு.

௩. பட்டகாரர்களில் பலர் கல்வியோடு அஷ்டாவதானம் - தசாவதானம் என்னும் கலைகளும் பயின்றிருந்தார்கள்.

௪.எழுமாத்தூர் சமஸ்தானத்தில் பறையர் சாதியில் பிறந்த புலவர் ஒருவர் கோபம்கொண்டு சாபமிட்ட குறிப்பும் உள்ளது.

௫.கொங்கு பெண்கள் பலர் கல்வி, புலமையோடு பல இலக்கிய நூல்களையும் படைத்தது பற்றி கல்வெட்டுகளும், ஆவணங்களும் இருக்கின்றது.

௬. கொங்க கருணீகர் என்னும் சாதி கணக்குப்பிள்ளைகளாக இருந்தனர். பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள், ஊரார் விசேசம், போன்ற அனைத்து கணக்கு வழக்குகளும் அவர்கள் பார்க்கும் அளவு கணக்கீட்டு அறிவை வைத்திருந்தது எப்படி..?

௭. நம் பட்டயங்களை வெட்டியது ஆசாரியார்; கல்வெட்டுகளை வெட்டியது கல்தச்சர்கள்-அவர்கள் எப்படி வெட்டினார்கள்..?

௮. மோரூர் கன்ன கோத்திர காங்கேயர் உரிச்சொற்களுக்கு நிகண்டு தொகுத்து எழுதியிருந்தார்.

கொங்கு 18 குடிகளுள் புலவனார் என்ற சாதியையும் உண்டு. அவர்கள் தொழிலே புலமை பாடுவது தான். அவர்கள்தான் அன்றைய திண்ணை பள்ளி ஆசிரியர்கள் (உபாத்தியாயர்கள்). மங்கள வாழ்த்தில் கூட புலவனார் பற்றிய குறிப்பு உண்டு.

("கற்றோர் புலவர் கணக்கரை அழைத்து..";
"வாழிப் புலவர்க்கு வரிசைதனைக் கொடுத்து..")

கொங்கதேச பள்ளிகளில் அனைத்து சாதிக்கும் இடம் உண்டு. அதனால் தான் அனைத்து சாதியிலும் புலவர்கள் இருந்தார்கள். ஞானிகள்/முனிவர்கள்/சித்தர்களும் அனைத்து சாதியிலும் இருந்தார்கள். அன்றைய பள்ளி கல்வியில் உள்ளூர் வரலாறு பூகோளம், விவசாயம், நீராதாரம், இயற்கை வளங்கள், சமூகவியல், தர்ம-ஒழுக்க நெறி சார்ந்த புராண-இலக்கிய கல்வி, செயல்முறை தொழிற்கல்வி, சித்த மருத்துவம், பொறியியல் உட்பட பாரம்பரிய கலைகள் அனைத்தும் போதிக்கப்பட்டன.

இதை தரம்பால் என்னும் புகழ்பெற்ற இந்திய வரலாற்று-சமூகவியல் ஆய்வாளரும் தனது "Beautiful Tree" நூலில் உறுதி செய்கிறார்.

ஆரம்பகட்ட கல்வி புலவனாரிடத்தும், மேற்படி கல்விமுறைகள் துறை சார்ந்த பெரியோரிடத்தும் (குலகுரு விடத்திலும்) நடந்தது.

வெள்ளையர்கள் மெக்காலே கல்வி முறையை கொண்டு வந்ததும், நம் பாரம்பரிய அறிவு மூலமான புலவனார்களை கொஞ்சம் கொஞ்சமாக அழித்தனர். அவர்கள் சாதியை முதலியார்களோடு சேர்த்து அவர்கள் அடையாளத்தையே மறைத்தனர். மெக்காலே கல்வி முறையில் படிக்காதவர்களுக்கு கல்வியறிவற்றோர் என்று கணக்கில் சேர்க்கப்பட்டனர். இன்றும் பல புலவர்கள் நம் கொங்கு நாட்டில் இருக்கிறார்கள். அவர்களுக்கு திருமண நிகழ்ச்சியில் நாம் செய்ய வேண்டிய கடன்கள் உள்ளன.

புலவனார் பற்றிய மேலதிக தகவல்களுக்கு:http://kongupulavanars.blogspot.in/

எனவே பிற சதிகளுக்கு கல்வி மறுத்தோம் என்பதும் பொய்; நம்மவர்கள் படிக்கவில்லை என்பதும் பொய்; இடையில் சிலகாலம் நம் கொங்க தேசம் உட்பட பாரதம் முழுக்க ஏற்பட்ட கடுமையான பஞ்சத்தாலும் வெள்ளையர் சூழ்ச்சியாலும் நம் கல்வி முறையும் வரலாறும் மறந்தது என்பதே உண்மை.

கோடை வகுப்புகளுக்கு வெளியே அனுப்புவதை விட வெறும் ஒரு வாரமேனும் நம் கொங்கதேச வரலாறு, சமூக வரலாறு, பாரம்பரிய கலைகள் தொழில்நுட்பங்கள், புராணங்கள் போன்றவற்றை சொல்லித்தர வைக்கலாம். இன்றும் அதை மீட்க நம்மால் முடியும்!

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates