Trending

Thursday 20 June 2013

பெண்ணியவாதிகள் என்னும் சமூக விரோதிகள்




ஆண்கள் செய்யும் தவறுகளை அடித்தேனும் திருத்தும் வன்மையையும் திண்மையையும் பெண்களுக்கு வளர்த்துவதே சரியான பெண்ணிய பாதையாக இருக்கும்.


ஆனால் இன்றைய பெண்ணியம் பேசும் சமூக விரோதிகள் போட்டிக்கு நீயும் குடி, புகைப்பிடி, அர்த்த ராத்திரியில் அரைகுறையாக திரி, கற்பு தவறு-விபசாரம் தவறில்லை என்றெல்லாம் பிரச்சாரம் செய்து ஆண்கள் மீதுள்ள பெண்களின் வன்மைதிற்கு தவறான வடிகாலை காட்டுகிறார்கள். ஒழுக்கம்-தர்மம் சார்ந்த வாழ்வு என்னும் இந்திய நாட்டின் சமூக சொத்தை அழிக்க நினைப்பதன் நோக்கமன்றி வேறென்ன?. இது புரியாது, உலகம் அறியா நம் ஊர் சிறுமிகள் மிக சிலர், அந்த சமூக விரோதிகளின் பேச்சுக்கு ஜால்ரா தட்டி 'அறிவாளி'பட்டம் வாங்க நினைக்கிறார்கள். இது ஒரு மீள முடியா சதி வலை என்பதை தெரியாமல் போய் சிக்கிகொள்கிறார்கள். உண்மை முகம் புரியும்போது இந்த வலையில் இருந்து மீள முடியாது போனவர்கள் பலர். இன்றைய பெண்ணியவியாதிகள் பலர் நல்ல குடும்ப பின்னணி இல்லாதவர்கள் என்பதும்-பெண்ணிய மாயா வலையில் சிக்கிகொண்டோர் நல்ல வாழ்க்கையை வாழ்வதில்லை என்பதும் மனோதத்துவ நிபுணர்கள் சொல்லும் கூடுதல் தகவல்.



-- இங்கு சமூக சொத்து என்று சொல்ல காரணம், வெளிநாட்டில் குற்ற தடுப்பு மற்றும் குடிமக்களை காப்பது அரசின் செலவு-வருடம் பல லட்சம் கோடிகள்.. நம் நாட்டிலோ குற்ற குறைவு தர்மம்-ஒழுக்கம் சார்ந்த வாழ்க்கையாலும், குடிமக்கள் தத்தம் குடும்ப உறுப்பினர்களாலும் பார்த்துக்கொள்ளபடுகிறார்கள்.. இன்றும் அமெரிக்கா பிரிட்டனை விட இந்தியாவில் கற்பழிப்புக்கள் குறைவே!!

No comments:

Post a Comment

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates