எளிமை என்பது ஏழ்மை அல்ல. உன்னதமான தர்மம்; அற்புதமான வாழ்க்கைக்கு வேர். எளிமையாக வாழ்வதன் மூலம் மாசற்ற இயற்கை, ஆரோக்கியமான உடல், நிறைந்த செல்வம், போட்டி-பொறாமை அற்ற திருப்தியான-ஆரோக்கியமான சமூக உறவுகள், ஆணவமின்மை மற்றும் எல்லாருக்கும் அத்தியாவசிய தேவைகள் பூர்த்தியாகும் என்பதால் குற்றங்கள் செய்யாத மக்கள் மொத்தத்தில் அனைவருக்குமே பூரணமான வாழ்வு என்று உலகமே பாரம்பரிய சமூகம் போல அழகாக மாறிவிடும். இன்றைய சூழலில் குடியானவர்களுக்கு அவசியம் தேவை எளிமையான வாழ்க்கை முறையே.முன்னோர்கள் ஒழுக்கத்தோடும், செல்வச் செழிப்போடும் கொங்க தேசத்தை ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆண்டு வந்தனர் என்று பார்த்தோம். தற்காலத்திலும் நம்மவர்கள் செல்வச்செழிப்போடு வாழ்ந்து வருகிறார்கள். இதற்கு அடிப்படைக் காரணம் நம்மவர்கள் மற்றும் நம் முன்னோர்கள் இன்றளவும் பின்பற்றிய சத்திய நெறி, விவசாயப் பின்புலம், நாட்டுப்பசுக்கள், எளிய வாழ்க்கைமுறை போன்றவையே. நம்மவர்கள் எத்தகைய எளிய வாழ்க்கையை வாழ்ந்தார்கள், எந்தெந்த செலவுகளை தவிர்த்திருந்தார்கள்; நாம் என்னென்ன வகைகளில் தற்காலத்தில் திருத்திக்கொள்ள வேண்டும் என்பதை பார்க்கலாம்.
ஆடம்பர வீடுகள்
வீடுகள் கட்டுவதால் கொங்க வெள்ளாள கவுண்டர்கள் செல்வம் பெருமளவு கரைகிறது. முதலீட்டு நோக்கில் வீடு கட்டுவது; காம்லெக்க்ஸ் கட்டி வாடகைக்கு விடுவது போன்ற முட்டாள்தனம் வேறு இல்லை. உதாரணமாக ஒரு வீடு கட்ட முப்பது லட்சம் செலவாகிறது என்று வைத்துக் கொள்வோம்; ரண்டு ரூபா வட்டின்னாலும் மாதம் அறுபதனாயிரம் ரூபாய் வருமானம் வீணாகிறது.
ஒரு வீட்டின் ஆயுள் ஐம்பது வருஷம் என்றே எடுத்துக் கொண்டாலும், வட்டியும் முதலுமாக நமக்கு ஏற்படும் நஷ்டம் எவ்வளவு என்று பாருங்கள். இது வெறும் பேங்க் வட்டிதான். இவ்வளவு நஷ்டப்பட்டு வீடு தேவையா?
நம் முன்னோர்கள் பெரும் கோயில்களை கட்டினார்கள்; மடங்களை, சத்திரங்களை கட்டி வைத்தனர்; பெரும் கோட்டைகளைக் கட்டி வைத்தனர்; ஆனால் தங்களுக்கென்று வீடுகளை மிக எளிமையாக மட்டுமே கட்டினர். எந்த அகழ்வாராய்ச்சியிலும் நாம் ஆடம்பர மாளிகைகளைக் கட்டி கூத்தடிக்கவில்லை. பட்டக்காரர்களின் அரண்மனைகள் சாமானியர்கள் வீடுகளை விட கொஞ்சம் பெரிதாக இருந்தாலும்கூட எளிமையாகவே இருக்கும். கட்டிய வீடுகள் எல்லாம் இயற்கையான பொருள்களைக் கொண்டு கட்டுவர். பனையோலைகள், நாட்டு ஓடுகள், சுண்ணாம்பு சாந்து போன்ற இயற்கை கட்டுமான நுட்பங்கள் ஏராளம். இவற்றில் குடியிருந்தால் பல நோய்கள தீரும்.இடித்து தள்ளினால் ஒரு மாதத்தில் மண்ணோடு கலந்துவிடும். இன்று நாம் கட்டும் வீடுகளில் கட்டுமானப் பொருட்கள் மலைகளை நொறுக்கி, இயற்கையை சீரழித்து கடும் புகை வெப்பம் மின்சாரம் என்று சுற்றுச்சூழலை பெரிதும் கெடுத்து தயாரிக்கப்படுகிறது. நவீன வீடுகளில்
பெயின்ட், வார்னிஷ், பளபள கற்களால் பல்வேறு நோய்கள விபத்துக்கள் என்று வீட்டு புனியார்ச்சனை அன்றே உயிரை விட்ட கதை வரை உண்டு. இதற்காக வீடே வேண்டாம் என்று சொல்லவில்லை; எளிமையாக கட்டினால் போதும் என்று சொல்கிறோம்.
அதோட, ஒரு வீட்டின் ஆயுள் அதிகபட்சம் ஐம்பது வருஷம். ஐம்பது வருஷத்தில் முதல் முப்பது லட்சமும், வட்டி வருமானம் ரூ.3 கோடி 60 லட்சம், ஆகமொத்தம் எளிதாக பார்த்தாலும் நான்கு கோடி நஷ்டமாகிறது. எந்த ஊரில் எங்கே வாடகைக்கு விட்டாலும் வாடகை வருமானம், முதலீட்டுக்கு 25 பைசா வட்டியை கூட தராது.
கல்விச் செலவுகள்
இன்று உள்ள செலவுகளிலேயே மிக அதிகமானது கல்விச் செலவுதான். மாதாமாதம் ஒவ்வொரு குடும்பமும் பல ஆயிரம் செலவு. பள்ளியின்-கல்வியின்-கவுரவத்தின் தரத்தை பள்ளி கட்டணம் கொண்டு தீர்மானிப்பது முட்டாள்தனம். CBSE யில் படிக்கும் குழந்தைகளுக்கும் பிற பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கும் பெரிய வேறுபாடு இல்லை என்பதை அறிவீர்களா..?? இன்று இந்த கட்டண கொள்ளை பள்ளிகளில் படிப்பதால் ஒரே ஒரு நன்மையுண்டு. என்னவென்றால் இவ்வளவு பணம் கொடுக்க முடியாத கம்யூனிச, பிற சாதி மக்களின் குழந்தைகள் பெரிய பள்ளிகளுக்கு வருவதில்லை என்பதால் பள்ளிக் காதலில் பிற சாதிகள் தலையீடு கொஞ்சம் மட்டுப்படுகிறது.
குழந்தைகள் எதிர்காலம் அவர்கள் சிந்திக்கும் திறனில் இருக்கிறது பள்ளிகளில் அல்ல.. |
அதிக கட்டணம் கட்டி படித்தால்தான் நல்ல வாழ்க்கை என்பது வெறும் மாயை என்பதை பெரிய பள்ளிகளில் படித்த குழந்தைகளின் வாழ்க்கையை ஆய்ந்து பார்க்கவும். இன்றைய சூழலில் மதிப்பெண் பொறுத்து வேலை அமைவது இல்லை; (இந்த மதிப்பெண்-வேலை எல்லாமே நம்மை மீண்டும் நகர சாக்கடை வாழ்க்கைக்குள் தான் தள்ளிவிடும் என்பது வேறு கதை) பணக்கார குழந்தைகள் அந்த பள்ளிகளில் படிப்பதால் அவர்கள் குடும்ப சொத்தின் காரணமாக வாழ்க்கைத்தரத்தை சமன்செய்கிரார்களே ஒழிய அவர்கள் அறிவுவளத்தால் அல்ல. மேலும் பள்ளிகளில் மெக்காலே கல்வி என்ற உளுத்துப்போன கல்வி முறைதான் கற்பிக்கப்படுகிறது. இன்று நம் குழந்தைகள் கல்விக்கு செலவிடும் பணத்தை வட்டியோடு கணக்கு வைத்து பாருங்கள், அவர்கள் வேலைக்கு சேர்ந்தால் அவர்கள் பள்ளிக் கல்வி முதல் கல்விக்கு செலவிட்ட தொகைக்கு வட்டி கட்டக் கூட அவர்கள் சம்பளம் வாங்க மாட்டார்கள்! இந்த லட்சனத்துக்கு, கல்வி செலவுகளை பேங்கில் பாதுகாத்து வைத்திருந்தால் வீட்டில் படுத்துக் கொண்டே உங்கள் பிள்ளை சம்பாதிப்பானே? பேருக்கு எதோ ஒரயு சிறிய பள்ளியில் படித்திருந்தால் போதாது?
கிராமங்களில் நம் சமூக குழந்தைகளுக்கு உண்மையான கல்வியை கொடுக்க வேண்டும். நம் சமூக வரலாறுகள் நம் கொங்கதேச இலக்கியங்கள், நம் குலத்தொழிலான விவசாயம் போன்றவற்றை கற்பிக்க வேண்டும். பகுதிநேரமாக பள்ளி காலத்தில் இருந்தே தொழிற்பயிற்சி அவசியம் தர வேண்டும். அந்த குழந்தைகள் தான் உருப்படும். இயற்கையாகவே நாட்டுக் கோழி போல அறிவும் வீரமும் உள்ள நம் பிள்ளைகளை, பணத்தை கொடுத்து பண்ணைக் கோழிகளாக மாற்றிக் கொண்டிருக்கிறோம். பள்ளிகள் என்பவை இன்றைய சூழலில் சமூக அழுத்தம் காரணமாகவே அவசியம் என்றாகிறதே தவிர அதனால் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை என்பதுதான் நிஜம். நல்ல கல்வியை நம் ஊரில்-கோயிலில் கொடுக்க முடியும். ஏற்கனவே பலர் செய்து வருகிறார்கள். இதைப்பற்றி அறிந்து செயல்படுத்த விருப்பமுள்ளோர் தொடர்பு கொள்க.
ஆடம்பர கல்யாணம்
நம் சாதியின் தற்கால சாபக்கேடு இந்த ஆடம்பர கல்யாணங்கள் தான். நம் முன்னோர்கள (ஏன் தற்காலத்திலும் கூட கிராமங்களில் காணலாம்) எளிமையாக பாரம்பரிய முறையில் பெண் வீட்டில் கல்யாணம் செய்வார்கள். நெருங்கிய உறவினர்கள் உள்ளூர்காரர்கள் என்று நூறு இருநூறு பேருக்கு மேல் தாண்டாது. சொந்தங்களே சமைப்பார்கள் (கண்டவர்களை விட்டு சமைக்க கூடாது!), அருமைகாரர் முன்னின்று எல்லா சீர்களும் செய்து குலதெய்வ-முன்னோர் ஆசியுடன் ஒழுங்காக நடந்தது. அந்த கல்யாணமுறை இன்று செய்தாலும் இரண்டு லட்சத்தை தாண்டாது. அப்படி செய்த கல்யானன்களால் சொந்தளுக்குள் அன்பும், பிடிப்பும் வளர்ந்தது.
ஆனால் இன்றோ ஐயாயிரம் பேரை அழைத்து கிறிஸ்தவர்கள் போல கோயில்களில் கல்யாணம் (அவர்கள் சர்ச்), கோட்டு சூட்டு, பந்திபோட்டு பரிமாராமல் பப்பே என்று கையில் தட்டை கொடுத்து பிச்சை சோறு, லட்சங்களில் மண்டப வாடகை, அலங்காரங்கள் என்று கணக்கின்றி பணம் கரைகிறது. இந்த செலவுகளால் நம் செல்வம் கரைவது மட்டுமின்றி உறவுகளுக்குள் வெறுப்புணர்வு, போட்டி, பொறாமை, வருபவர்களை சரியாக கவனிக்க முடியாமை மட்டுமின்றி சீர்கள் செய்யாமல் கல்யாணம் செய்து கடும் பாவத்தையும் முன்னோர்களின் சாபத்தையும் வாங்கி கொடுக்கிறோம். இதில் தமிழ் முறை என்ற பேரில் சில கோமாளிகளை கொண்டு வந்து புதிய சீரழிவுகள் வேறு. காட்டை விற்று கல்யாணம் செய்யும் வெட்கக் கேடு அருவருப்பானது.
குறைந்தபட்சம் கல்யாணத்தை முறையாக வீட்டில் செய்து, ரிசப்சன் என்று வைத்து எங்கெல்லாம் நீங்கள் தின்று வந்தீர்களோ அவர்களுக்கு சோற்றை போட்டு கடனை கட்டுங்கள். இதன்மூலம் முறையான சீர் கல்யாணங்கள் செய்யும் வழக்கம் உருவாகட்டும் பணக்கார கவுண்டர்களே. உங்கள் குழந்தைகள் உருப்படியாக வாழ்வார்கள்.
(மேலும் விரிவான தகவல்களுக்கு தொடர்புடைய பதிவுகள்,
மரபுக் கல்யாணமா-ஆடம்பரக் கல்யாணமா?, ஏன் கோயிலில் கல்யாணம் கூடாது? , கொங்கு கவுண்டர்கள் மேல் குவியும் பாவங்கள், கிறிஸ்தவ மயமாகும் கொங்கு கல்யாணங்கள், பப்பே உணவு முறை, கல்யாணத்தில் கோட்-சூட்)
அளவற்ற வண்டிகள்
வாகனங்கள் என்பன நமது பயண தேவைக்குத்தான் அவை கவுரவ சின்னங்களாக பார்ப்பது தவறு. ஒரு வீட்டில் இரண்டு மூன்று கார்கள், நான்கைந்து பைக்கள் போன்றவை எதற்காக? வண்டிகளுக்காக கவுண்டர்கள் குடும்பம் சராசரியாக இரண்டு மூன்று லட்சங்கள் வரை செலவு செய்கிறார்கள். அதிகபட்சதிற்கு அளவே இல்லை!
தேவைக்கு வண்டி வாங்குங்கள், கவுரவதிற்கு ஆசைக்கு வாங்காதீர்கள். ஆசைக்கு அளவில்லை. நம்மவர்கள் கல்யாணம் செய்யும்போது அருகாமையில் சுற்று வட்டாரத்தில் உள்ள ஊர்களிலேயே பெண் எடுப்பார்கள். கலாசார வேறுபாடுகள் குறைவாகவும் பாசப்பினைப்புகள் மற்றும் உதவிகள் உடனே கிட்டின. உள்ளூர் தெய்வங்களையே வணங்குவார்கள். கோயில் உரிமைகள் பறிபோகாமல் வரலாறு-பாரம்பரியம் பாதுகாக்கப்பட்டது. உள்ளூரில் விளைந்தவற்றையே உண்பார்கள். இதனால் ஆரோக்கியம் சிறப்பாக இருந்தது. இன்று எதற்கெடுத்தாலும் வெளியே; இன்று தவறாக வெளி மாவட்டங்கள் தாண்டி பெண் எடுப்பது, வெளியூர்-வெளிநாட்டு உணவுகள், தூரதேச பொழுதுபோக்கு-ஆன்மீக பயணங்களால் தேவையற்ற போக்குவரத்து தேவைகள் ஏற்படுகின்றது.
தேவைக்கு மீறிய வாகனங்கள் ஏன், எதற்கு என்பதை அனைவரும் சிந்திக்க வேண்டும்.
மருத்துவ செலவுகள்
தவறான உணவு முறை, சீமை மாடுகள், அசைவ உணவுகள், பாரம்பரிய உணவுகள்-விதைகள் இழப்பு, செயற்கை விவசாயம், நீர் காற்று மாசு என நகரமாய-நவீன சாக்கடையில் விழுந்து பணப்பேய் பிடித்து அலைந்து நம் உடல்நிலையையும் மண நிலையையும் கடுமையாக கெடுத்து வைத்துள்ளோம். இந்த மாற்றங்களால் உண்டல் மூலமாக கலாசார சீர்கேடுகளையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். இந்த பாதிப்புகளை ஜீன் வழியாக அடுத்த தலைமுறைக்கும் கொடுக்கிறோம். அதனால் கணக்கற்ற நோய்கள், உபத்திரவங்கள் இவற்றால் பொருள் இழப்ப்பு ஏற்படுகிறது. முதலில் நாம் எப்படி அன்றாட நம் வாழ்க்கை முறைகளை-உண்ணுவது, உறங்குவது, குளிப்பது முதல் நோய்கள என்றால் என்ன நோய்கள வராமல் எப்படி காத்துக் கொள்ள வேண்டும், வந்தால் எப்படி மருந்தில்லாமல் இயற்கை வழியில் தீர்த்துக் கொள்ள வேண்டும் போன்ற விஷயங்களை நாம் மறந்துள்ளோம்-மறக்கடிக்கப்பட்டுள்ளோம். நினைத்தால் கடை சோறு, நினைத்தால் கறி என்று போனால் சொத்தை ஆஸ்பத்திரிக்கு எழுதிக் கொடுக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.
(நாம் மறந்த பெரும்பாலான விஷயங்களை அறியவும் சர்க்கரை உட்பட பல கொடிய நோய்களில் இருந்து விடுபடவும் பல வழிமுறைகளை இந்த லிங்கில் உள்ள வீடியோவில் பார்க்கவும். http://anatomictherapy.org/tvideos.php . உங்கள் வீட்டில் உங்கள் குடும்பத்தாருக்கும் உறவினர்களுக்கும் போட்டுக் காட்டவும்.)
தேவைக்கு மீறிய உடைகள்&அழகு சாதனங்கள்
ஒரு வீட்டு பீரோவில் பார்த்தால் ஒரு துணிக்கடை அளவு துணிகள். முன்பு நல்ல நாள் விசேஷம் என்றால் துணி எடுப்பார்கள்; இப்போது பொழுது போகாவிட்டால் துணி எடுக்க கிளம்பிவிடுகிறார்கள். "ஷாப்பிங்ங்ங்" போறாங்களாம். ஒருத்தருக்கு ஒரு விசேஷத்துக்கு மூணு நாலு துணி தேவையா?? அதேபோல பெண்கள் அழகு சாதனப்பொருட்கள் னு மாட்டு ரத்தம், பன்றிக் கொழுப்பு, மாட்டு எலும்பு கலந்த ஏராளமான ரசாயன கிரீம்பலை உடம்பெல்லாம் பூசிக்கொண்டு பேய் போல நிற்கிறார்கள். கொங்கு கவுண்டர்கள் சுத்த சைவம்; இப்போது மாறி கெட்டு கிடந்தாலும், குறைந்தபட்சம் கல்யாண நேரத்தில் நாம் அசைவத்தை தவிர்க்கிறோம். ஏனெனில் மங்களியத்துக்கு கொடுத்த பின் ரொம்ப சுத்தபத்தமா இருக்கோணும். ஆனா மேக் அப் ங்கற பேர்ல ரத்தம் கொழுப்பு எல்லாத்தையும் அப்பிக்கிட்டு நிக்கறது அசிங்கமா இல்லை?
இதுபோன்ற உடை மோகம், மேக் அப் மோகம் தேவையா? நம் முன்னோர்கள் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பருத்தி ஆடைகள், இயற்கை ரசாயனம் கொண்டு சாயமிடப்பட்டு பயன்படுத்தினார்கள். அதனால் இயற்கை பாதிக்கவில்லை. இப்போது திருப்பூர் சாய விஷம் நொய்யல், பவானி காவேரி என்று எல்லாத்தையும் கெடுத்தது மட்டுமின்றி தாய்பால் வரை விஷம் பரவியிருக்கு. ஒரு ஜீன்ஸ் தயாரிக்க நாலாயிரம் லிட்டர் தண்ணி விஷமாகுது. இந்த துணி மோகத்தோட தீவிரத்த புரிஞ்சிக்கனும்.
நவீன மேக்-அப்களின் விஷத்தன்மையும், பாரம்பரிய மேக் அப் வழிமுறைகளும்
http://www.karikkuruvi.com/2014/09/blog-post_9.html
வீண் பயணங்கள்
பாகவதத்தில் ஸ்ரீ விஷ்ணு சொல்வார், கலியுகத்தில் மக்களுக்கு உள்ளூர் தெய்வங்கள் மீது நம்பிக்கை இராது. அது வேண்டும் இது வேண்டும் என்று ஊர் ஊராக சுற்றுவார்கள் என்பார். இன்று ஊரை கடந்து நாடு நாடாக சுற்றுலா செல்கிறார்கள். இதுவும் சந்தோசம் என்பதை தாண்டி பெருமைக்கு பரதேசிகளாக ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு வெளிநாட்டு பயணத்துக்கு லட்ச ரூபாய் சர்வ சாதாரணமாக செலவாகிறது. அதுமட்டுமின்றி நினைத்தால் மாதம்தோறும் பழனி, திருப்பதி எல்லாம் தேவையற்றது. நம் முன்னோர்கள் ஆயுளில் ஓரிரு முறையே தீர்த்த யாத்திரை-வேண்டுதல் என்று வெளியூர் கோயில்களுக்கு சென்று வருவார்கள். ஒரு வேளை தீபம் ஏற்றக் கூட வசதியற்ற கோயில்கள் (ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்) கொங்கதேசத்தில் இருக்க திருப்பதியில் லட்சக்கணக்கில் கொட்டுவது சரியா? திருப்பதியில் அதிக பணம் போவது தமிழகத்தை பொறுத்தவரை கொங்கதேசத்தில் இருந்துதான்.
ஆடம்பர வீடுகளுக்கும், கார்களுக்கும் கிரானைட், ஆற்று மணல், சிமண்டிற்கு அலுமினியம், நிலக்கரி, இரும்புத்தாது, என்று கணக்கற்ற வகைகளில் இயற்கை வளங்கள் நாசமடைகின்றன. இவற்றை தயாரிக்கும்போதும், போக்குவரத்தின்போதும் காற்றும் நீரும் கடுமையாக கேட்டுப் போகிறது. இவை திரும்ப சரி செய்ய முடியாத இழப்பாகும். நோய்களும் வந்து பணத்தை கரைக்கும். மழைப் பொழிவை கெடுத்து விவசாயத்தை கேள்விக்குறியாக்கும்.
ஆடம்பர வீடுகளுக்கும், கார்களுக்கும் கிரானைட், ஆற்று மணல், சிமண்டிற்கு அலுமினியம், நிலக்கரி, இரும்புத்தாது, என்று கணக்கற்ற வகைகளில் இயற்கை வளங்கள் நாசமடைகின்றன. இவற்றை தயாரிக்கும்போதும், போக்குவரத்தின்போதும் காற்றும் நீரும் கடுமையாக கேட்டுப் போகிறது. இவை திரும்ப சரி செய்ய முடியாத இழப்பாகும். நோய்களும் வந்து பணத்தை கரைக்கும். மழைப் பொழிவை கெடுத்து விவசாயத்தை கேள்விக்குறியாக்கும்.
நாம் ஆடம்பர செலவுகள் செய்வதால் நமக்கு யாரும் சிலை வைக்க போவதில்லை; மாறாக பகையையும், பொறாமையும், பீடையையும் தான் சம்பாரிக்கிறோம்; அதுமட்டுமின்றி வருங்கால தலைமுறைக்கு தவறான பாடத்தையும் சொந்தங்களற்ற நிலையையும் உண்டு பண்ணுகிறோம். எளிமையாக கல்யாணம் செய்தாலோ வீடு கட்டினாலோ சில பொறம்போக்கு மடையர்கள் கேவலம் பேசுவார்கள் என்றென்ன வேண்டாம்-எவ்வளவு நாள் பேசுவார்கள்? பின்னர் மறந்துபோவார்கள்.
ஆக்கப்பூர்வமான வழிகளில் உங்கள் பணத்தை செலவிடுங்கள்; காடுகள் வாங்குங்கள்; தங்கம் வாங்குங்கள்; நம் மரபுகளை மீட்கவும், குடிபடைகள் பசுக்கள் போன்றவற்றிற்கு செலவிடுங்கள். நம் முன்னோர்கள எப்போதும் பெருகுகின்ற விஷயங்களில் தான் முதலீடு செய்வார்களே ஒழிய வீடுகள் கார்கள் போன்ற அழிவுறும் (Depreciating) பொருட்களில் முதலீடு செய்ய மாட்டார்கள்.
நம்மை ஆசிர்வதிக்கும்போது என்ன சொல்கிறார்கள், "தான்யம் தானம் பசு பஹுபுத்திர லாபம் சதசம்வத்சரம் தீர்க்கமாயுஹூ" என்கிறார்கள். இவைதான் உண்மையான செல்வங்கள். ஆடம்பர வீடு, கல்யாணம், கார், ஷேர் போன்றவை செல்வங்கள் அல்ல.
தானியம்-விதை தானியங்கள், ஒன்று ஆயிரமாக பெருகும்.
தனம்-நீர்வளம் உள்ள பூமி, இதில் போடும் முதலீடுகள் தலைமுறைகளுக்கும் பெருகிக் கொண்டே இருக்கும்.
பசு-தன் ஆயுளில் பதினெட்டு கன்றுகள் வரை பெருக்கி பால் நெய் விளைச்சல் ஆரோக்கியம் என்று வளத்தை பெருக்கிக் கொண்டே இருக்கும் தெய்வம்.
பஹுபுத்ர-ஒன்றுக்கு மேற்பட்ட புத்திரர்கள். சந்தான பாக்கியம். வம்ச விருத்தி.
இந்த மாற்றங்களை உடனே செய்ய சிறிது சிரமம் என்றாலும் சிறிது சிறிதாக செயல்படுத்த வேண்டும். குறிப்பாக சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் இருப்போ செய்ய வேண்டும்.
- பணத்தை அர்த்தத்தோடு செலவு செய்யுங்கள்; ஆசைக்கு கவுரவதிற்கு என்று செலவு செய்தல் வேண்டாம்
- ஆடம்பரத்தில் கவுரவம் இல்லை; அது அசிங்கம்
- நீங்கள் செய்யும் செலவுகளால் இயற்கைக்கு என்ன பாதிப்பு; சுற்றியுள்ள உறவுகள்-சமூகத்தில் என்ன தாக்கம்; உங்கள் வருங்கால சந்ததிக்கு என்ன செய்தி போகிறது என்பதை உணர்க
இன்றைய சூழலில் கவுண்டர்கள் புதிதாக சம்பாதிக்க வேண்டிய அவசியமே இல்லை; தேவையற்ற செலவுகளை குறைத்துவிட்டாலே போதும் இருபது ஆண்டுகளில் கவுண்டர்கள் ஒவ்வொருவரும் கோடீஸ்வரன் தான்.