"கத்தி.. வெவசாய படம், நீ கண்டுசுனா பார்க்கணும்."
"பாக்க மாண்டன்"
"நீ அனுப்பற லிங்க்லாம் நானும் படிக்க மாண்டன்"
"ஏ பாக்க மாட்டங்கரவன புடுச்சு ஒவுத்தினியம் பண்ற..?"
"இல்ல,நீ ஒருக்கா பாரு"
"பாக்கறன், பாத்து தொலைக்கரன்"
"நம்மூரு காவேரி ஆத்துல தோல்சாப் வெசத்தண்ணி, சாயத்தண்ணி உடரான்ள மில்லுக்காரன், அவனுங்க அத்தனபேரும் லயன்ஸ் கிளப், ரோட்டரி கிளப், ஜேசீஸ் கிளப் னு ஏதாவது கிளப்ல மெம்பரா இருக்கறவனுங்க தான்.. இந்த கிளபெல்லாம் பல நாட்ல இருக்கற இதே மாதர பணக்காரங்கள ஒன்னா சேக்கற சங்கிலி.. இவங்க ஒரு கம்பெனிக்காரன எதுத்து சண்ட போடறத ஆதரிக்கவா போறாங்க..? இல்லை அவங்களை ஏன் ஆதரிக்கற மாதிரி காட்டோனும்??
கெராமங்கள் அழியோணும்னு சொன்ன ஈவெரா பெரிய கெராமிய போராளியாட்ட யென வச்சு பேசறது நல்ல கூத்து... தெரேசாவோட வண்டவாளத்ததான், வெள்ளைக்காரன்ல இருந்து ராஜீவ் தீட்சித் அஜீத் வடக்கில் வரைக்கும் கிழிச்சு தொங்க உட்டுட்டாங்களே.. அப்பறம் என்ன முட்டு குடுக்கற வேல??
அப்பறம் கம்யூனிசம்.. அதப்பத்தி நா உனக்கு புதுசா சொல்லோனுமா.. வெள்ளைக்கார போனாப்புடுச்சு, நாட்டுப்புற-காட்டுப்புற சனத்த தாயமுருட்டர பசவ.. சொதந்தர போராட்டத்துல சண்டை போட்டவீல வெள்ளைக்காரங்கிட்ட காட்டிக் குடுத்தவணுவ.. உண்டுனா திண்ணா அடுத்தவன் சோறாமா, மெட்ராசுல ரோட்டுமேலயே செவப்பேனு ஒரு அடுக்குமாடி கட்டடம்.. இதென்ன கொக்ககோலா கம்புனி ஆபீசா னு கேட்டன்.. இல்லீங்க இது கம்முனிஸ்ட் ஆபீஸ்ங்கறா.. இதுதா இவனுங்க மொவரகட்ட.. இவனுங்கதான் வந்து வெவசாயத்த காப்பாத்தரானுங்கலாமா.. அத நாம நம்போனுமாமா..
2-G பத்தி பேசுனது, நீயா நானா வ கொஞ்சம் சொரண்டியுட்டது லாம் சரிதான்.. மீடியாவுல வேல செய்யறவங்க மனநில பத்தி காட்னுது சரி.. இதே மீடியா ல வேல செய்யறவங்க லாபி இருக்குதே, அதெல்லாம் இதுல வராதா..?
இன்னொரு விசியம்.. இந்த படத்துக்குன்னு இல்ல.. இப்ப வர்ர டிவி, செய்தி, சினிமா எல்லாத்திலயும் வெவசாயினாலே நட்ட பொலப்பு, கஷ்ட ஜீவனம், வேர்வ, தாடி, கோமணம், தற்கொல, அழுவாச்சி, ஓரியாட்டம்.. இதேதானா? பாக்கற எவனாவது வெவசாயம் பண்ண நெனப்பானா..? வறண்ட பூமி வெவசாயிங்க பத்தி காட்டனும்-காட்டறது சரி.. அதேமாதர பண்ணயம் பண்டி நல்லா பொலைக்கரவனையும் காட்டோனுமில்ல..இப்பிடி வெவசாயம்னாலே பஞ்சப்பாட்டு னு பேர் பண்ணி வச்சதுனாலதான் வெவசாயம் பண்றவனுக்கு பொண்ணு கெடைக்கரதில்ல.. காடுதோட்டம் இருக்கறவன் கூட வேற வேலைக்கு ஒடீர்றான் இல்ல முடுக்கியுட்றாங்க...
எப்புடியோ, கொஞ்சொமாவுது தண்ணி பத்தி நெனப்பு வந்து கொளங்குட்ட பத்தி நெனச்சா செரி.. படத்துக்காவ சண்டை போடற மவராசணுவ அந்த படம் ஓடற தேட்டர்ல கொக்ககோலா குடிக்காம, விக்க உடாம சண்ட போட்டுருந்தா.. ஏரி கொளங் குட்டைய காப்பாத்த வந்திருந்தா.. அந்த படத்துல காட்டுன மாதர கலர்சோடா, தோல், சாய கம்புனிகாரங்கோட எசிளிக்கு நின்னுருந்தா தேவுல"
சினிமாலாம் சனத்த முட்டாளாக்கற வேல.. இந்த சினிமா மூனுமணிநேரம் நம்ம மூளைய மழுங்க - மயங்க வைக்கற ஒரு உளவியல் ஆயுதம்.. நமக்கு தெரியாமையே நம்ம ஆழ்மனசுல வெஸ கருத்துக்கள வெதச்சிருவாங்க.. இந்த கத்தி சினிமா கூட ஒரு நல்ல உதாரனந்தான். எப்புடி கண்டதையெல்லாம் நமக்கு நல்லது னு காட்டறான் பாத்தீங்களா..?? சினிமாவ காட்டி காட்டித்தான் நம்மள கெடுக்கறது. எவன் நல்லவனாகோனும், எவன் கேட்டவனாகோனும், எதெது நல்ல/கெட்ட பழக்கம்னு சூதுகாரனுங்க சினிமா மூலமா நம்முளுக்கு சொல்லிக்குடுபானுங்க.. புள்ளைக ஓட சொல்லிதறதும் இதேதான.. நம்ம பாட்டன் பூட்டன எல்லாம் கிராமத்தான் ஒண்ணுந்தெரியாதவன்னு நம்ப வச்சதும் இவனுங்க தான்.. திராவிட வெஸம் ஆட்சிய புடுச்சது இந்த சினிமாவாலதான. டிவி சினிமா பாக்காத வளந்த கொழந்தைக நிகழ்காலத்துல வாழும். புத்தி கூர்மையா இருக்கும். அவ்வளவு சீக்கரம் மூளைசலவை செய்ய முடியாது.
No comments:
Post a Comment