Trending

Sunday 18 October 2015

கரூர் சிவக்கொழுந்து கவுண்டர் பதிவுகள்

சட்டம், சமூகம், மீடியா மற்றும் அரசு, நம் சமூகத்தின் மீதான  திட்டமிட்ட அடக்குமுறையால் களப்போராளிகள் மட்டும் உருவாகவில்லை. பல எழுத்தாளர்களும் உதித்துள்ளார்கள். அதற்கு சிறந்த உதாரணம், கரூர் திரு.சிவக்கொழுந்து கவுண்டர் அவர்கள். நாடக காதல், பேரம், தலித் அமைப்புகள், நம் சமூக பெண்கள், தீர்வுகள் என்று சமீபமாக நல்ல வரவேற்பை பெற்ற அவரது தொடர் பதிவுகள் கீழே தொகுக்கப்பட்டுள்ளது.



நான் கரூர்ல இருந்து சிவக்கொழுந்து பேசறேன்,,

தமிழகம் முக்கியமா கொங்கு பெல்ட் ல அரசியலும் சரி சமூக சூழ்நிலையும் சரி சாதி ரீதியாக தலித் மற்றும் தலித் அல்லாதோர் என்று பிரிக்கப்பட்டு இருக்கிறது,, முற்றிலும் இது நேரிடையாகவோ மறைமுகமாகவோ அரசின் பங்கு உண்டு,, ஏனெனில் நடந்து கொண்டிருக்கும் அனைத்தையும் பார்த்து கொண்டு பாராமுகமாய் இருப்பதும் மறைமுகமான ஆதரவுதானே,,

நிற்க..

தலித் நம்மீது வைக்கும் குற்றசாட்டு ஆதிக்க சாதி னு,, ஏம்பா நான் கேட்கறேன் 1947 க்கு முன் நாங்களும் அடிமை சாதி, நாங்களும் கோவணம் கட்டிக்கொண்டு சேற்றிலும், மாட்டுத் தொழுவத்திலும் வாழ்வின் பெரும்பான்மையான நேரத்தை கழித்தவர்கள்,, தலித்களுக்கு அரசு தந்த இட ஒதுக்கீடு மற்றும் பல சலுகைகளை 68 வருடங்களாக பயன்படுத்தி வருகிறார்கள். அரசு கொடுத்த அத்துனை சலுகைகளையும் பயன்படுத்தி இன்று வரை முன்னேறாதது யார் தவறு? தலித் களை விட அதிகம் பாதிக்கப்பட்டது கொங்கு வெள்ளாளர்களே விவசாயத்தில் நீர் இல்லையென்றாலும், விளைச்சல் இல்லையென்றாலும், நோய் நொடி தாக்கினால் இழப்பு விவசாயிக்குத்தான். தற்போது உள்ள தொழில் நிறுவனங்கள் நட்டம் ஏற்பட்டால் தொழிலாளிகளுக்கும் சம்பளம் தருவதில்லை, ஆனால் விவசாயி என்றாவது கூலியை தராமல் இருந்திருப்பானா?

தலித்களுக்கு அரசு கொடுத்த சலுகைகளை பயன்படுத்தியும் இன்று வரை இன்னும் போதவில்லை என்றுதானே சொல்கிறார்கள். இன்று தலித்கள் அனுபவிக்கும் அனைத்தும் அரசியல்வாதிகள் தங்களுடைய பாக்கெட்டில் இருந்து எடுத்து தருவதில்லை, எங்களுடைய வரிப்பணம். நாங்க கேட்கத்தானே செய்வோம். எங்கள் மீதும் பொருளாதார ரீதியாக அடக்குமுறை நிகழ்த்தப்பட்டது. யாருக்காவது தெரியுமா? அந்த அடக்குமுறையே எங்களை முன்னேற தூண்டியது. தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயம் பொய்த்து போனது,நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஏற்பட்ட திடீர் பஞ்சத்தில் விவசாயத்தை கைவிட வேண்டிய சூழல், அந்த சூழ்நிலையிலும் தன்னை நம்பிய 18 குடிகளுக்கும் தன்னால் ஆன உதவிகளை செய்ய மறக்கவில்லை. ஆதாரங்களை 70 வயதை கடந்த யாரிடமும் கேளுங்கள். அரசிடம் எந்த வித யாசகமும் கேட்கவில்லை, பஞ்சம் பிழைக்க புலம்பெயர்ந்து சென்று விட்டனர்.

தற்போதும் 18 வயது ஆவும் முன் கந்துகடை எனப்படும் பைனான்ஸ் தொழிலுக்கு மொழியும் எதுவும் தெரியாமல் தனது குல தெய்வத்தையும் , தன்னம்பிக்கை மட்டுமே துணையாக கொண்டு முழுக்க முழுக்க ரிஸ்க் எடுத்து தனது தலைமுறையின் வாழ்வாதரத்தையே பிணையாக வைத்து , இரவு பகல் பாராது குறைந்த பட்சம் 200&300 கிமீ தினமும் அலைந்து திரிந்து தனது பொருளாதாரத்தையும் தன்னை நம்பிய தாய் தந்தை உடன்பிறந்த சகோதர சகோதரிகளின் நல்வாழ்க்கைக்கு தன் வாழ்க்கையை முன்னேற்றுகின்றனர். அரசிடம் கையேந்தவில்லை,,

கரூரின் முக்கிய தொழில் டெக்ஸ்டைல்ஸ் மற்றும் பைனான்ஸ். இவைகள் முன்பு முதலியார்கள் மற்றும் செட்டியார்கள் கையில் இருந்தது, (KVB,LVB). ஆனால் தற்போது கொங்கு வெள்ளாளர்களின் சீரிய உழைப்பு, இன்னோவேஷன் மற்றும் தன்னம்பிக்கையால் பல்லாயிரக்கணக்கான அந்நிய செலாவணியை அரசுக்கு ஈட்டித்தருகின்றனர். கோவை மாவட்டம் இரும்பு, பஞ்சாலைகளுக்கு பெயர் போனது அதில் கோலோச்சியவர்கள் நாயுடுகள். ஆனால் தற்போது அவர்களுக்கும் போட்டியாய் இருப்பதும் கவுண்டர்களே. இப்படி அந்தந்த மாவட்டத்தில் உள்ள கவுண்டர்கள் விவசாயத்தில் நேரம் கழித்தது போக ( உண்மையை சொன்னால் தண்ணீர் இல்லாமை) வேறு ஏதாவது செய்து பொருளீட்ட வேண்டும் என்று உழைக்க தொடங்கினர். கவுண்டர்கள் உழைப்பதற்கு அஞ்சமாட்டார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.

தற்போது கொங்கு மண்டலத்தில் உழைப்பால் முன்னேறிய 100 நிறுவனங்களை பட்டியலிட்டால் 75 கவுண்டர்களுடையது தான் இருக்கும். கவுண்டர்கள் பரம்பரை பணக்காரர்களா இல்லவே இல்லை, ஒரு சில குடும்பங்கள் மட்டுமே, அப்படி சொல்ல இயலும்!!!

இன்றும் 30% மட்டுமே 1 ஏக்கருக்கு மேல் விவசாயம் நிலம் உள்ள கவுண்டர்கள்.KPN, சக்தி மசாலா,ராம்ராஜ் .ராணா டார் கம்பி , ஜெம் க்ரானைட்ஸ், லீ மெரிடியன் ஓட்டல்கள், KMCH, இன்னும் பட்டியலிட்டு கொண்டே செல்லலாம். மேற்குறிப்பிட்ட அனைத்துமே கோடிக்கணக்கில் முதலீடு போட்டு ஆரம்பித்தவைகள் அல்ல!! சில ஆயிரங்களும், உழைப்பையும் கொண்டு புகழ் பெற்றவை! பேருந்துகள்,மில்கள், ஏற்றுமதி நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் இவைகள் அனைத்துமே 50வருடங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் இவற்றுக்கு காரணம் இப்போது தெரியும் உங்களுக்கு!!

இந்தியாவிற்கே படியளப்பது நாமக்கல் மாவட்டம் என்பது எத்தனை பேருக்கு தெரியும் நாட்டில் ஓடும் லாரிகளில் 75% நாமக்கல் மாவட்டத்தை சார்ந்தது. நாமக்கல் பெரும்பான்மையான இடங்கள் வானம் பார்த்த பூமி. கோழிப் பண்ணையும் லாரியும் விவசாயத்திற்கு மாற்றாக வந்தவை. நாமக்கல் மாவட்டமே தமிழகத்தின் கல்வி மாவட்டம் என்றழைக்கப்படுகிறது.

அவைகளை பெரும்பாலும் நடத்துவது கவுண்டர்கள், எப்படி அவர்களது உழைப்பு. அனைத்துமே பூஜ்யத்தில் ஆரம்பித்தவை!! இப்படி அரசுக்கு பொருளாதார ரீதியாய் பின்புலமாக இருப்பது கவுண்டர்களே!!

தலித் மக்களுக்கு ஒரே கேள்வி ?? நீங்கள் ஏன் உழைப்பை தன்னம்பிக்கையை பயன்படுத்தி தொழில் நிறுவனங்களை ஆரம்பிக்க வில்லை?? காரணம் உழைக்காமல் அரசு தரும் இலவச மின்சாரம், அரிசி, மற்றும் பல. இவற்றோடு உங்களை மழுங்கச்செய்கிறது. மானியங்களை புறந்தள்ளி உழைக்க பழகுங்கள். மறைமுகமாக உங்களை சோம்பலாக்கி, அடிமைபடுத்தியது அரசுகளே தவிர கவுண்டர்கள் அல்ல, இப்போதும் மறைமுகமாக உங்களை இயக்குவது உங்க சாதி தலைவர்கள், அவர்கள் பொருளாரீதியாய் எங்கேயோ சென்று விட்டார்கள். ஆனால் அவர்களின் தூண்டுதலுக்கு ஆளான நீங்கள் தான் அங்கேயே நிற்கிறீர்கள், நின்றுகொண்டே இருப்பீர்கள்!!

அடுத்து காதல் திருமணம்,

கலப்புத்திருமணத்தை ஆதரிக்கிறோம் என்கிற முகமூடியை அணிந்து கொண்டு பொருளாதார ரீதியாய் முன்னேறிய குடும்பங்களில் உள்ள பதின்ம வயது பெண்களை (மைனர் பெண்கள் உட்பட ) குறி வைத்து காதல் நாடகம் ஆடும் தலித் இளைஞர்களே, கட்சி நிர்வாகிகளே..

இது கவுண்டர்களுக்கோ தலித் களுக்கவோ பதிவிடவில்லை, பொதுவான மக்களிடம் கவுண்டர்களை சாதி வெறியர்களாய் சித்தரிப்பதை எதிர்த்து, கவுண்டர்கள் தரப்பு உண்மையை எடுத்து சொல்கிறேன். முதலில் எங்களுடைய பெண்களையும்,அவர்களது திருமண வாழ்க்கையும் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

திருமணம் என்பது இரு வீடுகள் மட்டுமல்ல இரு ஊர்கள் , இரு குலங்கள் இணையும் பந்தம். நேற்று வரை சாலையில் யாரோ என்று செல்லும் ஒருவர் பிறகு என் பங்காளியை திருமணம் செய்த பெண்ணின் பங்காளி என்று உரிமை பாராட்டி நெருக்கமாகும் பந்தம். அவ்வளவு உணர்ச்சிகரமான, சொந்தங்களையும் நட்புகளையும் மேலும் விரிவாக்கும் பந்தம்!அப்படிபட்டதை எவ்வளவு கவனமாக கையாள்வோம்!!

இன்று வரை எங்களுடைய பெண்குழந்தைகளை பெயர் சொல்லி அழைத்ததை விட சாமி , கண்ணு, தங்கம், மயிலு என்றுதான் ப்ரியமுடன் அழைப்போம். எங்களுடைய குல தெய்வங்கள் ஏறக்குறைய அனைத்துமே பெண் தெய்வங்களே! முருகன் சிவன் பெருமாள் எல்லாம் விருப்ப தெய்வங்களே! அப்படி பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தவர்கள் நாங்கள்!!

தெய்வத்திற்கு மேலாக மதிக்கும் நிலத்தை விற்றோ, அடகு வைத்தோ, கடன் பெண்ணை கல்லூரியில் சேர்த்தால் அங்கு குடும்ப கஷ்ட சூழ்நிலை தெரியவேண்டாமென விடுதியில் சேர்த்து படிக்க வைத்தால்?? கடைசியில் 18 நிரம்பிய அடுத்த நாளில் போன் மட்டும் வருகிறது. மானம் போய்விட்டதென பெற்றோர்கள் தற்கொலை கொள்கின்றனர். காசு கிடைத்தவுடன் நீங்களும் அடுத்த இரையை நோக்கி சென்று விடுகிறீர்கள்!!

ஆனால் இந்த குடும்பமும், பெண்ணும்??

பெண்களை போகப்பொருளாக, காசு சம்பாதித்து தரும் ஒரு இயந்திரமாக நினைப்பவர்கள் நீங்கள்!!

ஓடிப்போயிட்ட பொண்ணை திரும்ப வந்தாலும் கூட்டிட்டு போய் துடைத்து விட்டு குடும்பம் நடத்துபவர்கள் என்று இழிவாக பேசியவர் உங்கள் தலைவர். ஆமாம் ஒத்துகொள்கிறோம் உங்களால் திட்டமிட்டு ஏமாற்றபட்ட பெண்னின் வாழ்க்கை அன்றோடு முடியக்கூடாது என்பதற்காக!!

உங்கள் தலைவர் சொன்னார் நாங்கள் எங்கள் பெண்களை அப்படியே விட்டு விடுவோம் என்று!! பெண்களை மதிக்கும் உங்கள் பண்பு இப்போதாவது உணர்கிறீர்களா??அப்படி எங்கள் பெண்ணை கல்யாணம் பண்ணும் நீங்கள் ஏன் அப்படியே போகக்கூடாது?? அத்தனை லட்சம் வாங்கி வா, கோடிகளில் ஏன் பேரம் பேசவேண்டும்?? அப்படியே போகலாமே??

வேற வீட்டிற்கு வாழப்போகும் பெண் என்பதால் செல்லும் வரை கஷடப்பட வேண்டாம் என்று செல்லமாக வளர்த்துவார்கள், மாட்டுத்தொழுவ மாகட்டும், காடு தோட்டமாகட்டும் ஒரு வேலையும் செய்ய விடமாட்டார்கள். ஆனால் பையன்களை பெண்டு நிமிர்த்தி விடுவார்கள். அதனால் தான் ஆண்கள் மற்ற சாதி மட்டுமல்ல சொந்த சாதி பெண்கள் பின்னால் அலைவதற்கும் நேரமில்லை.

வேற்று சாதியில் காதலித்து திருமணம் செய்ய சொல்லும் போலி புரட்சியாளர்களே, உங்களை விட தாழ்ந்த சமூகத்தில் எத்துனை பேர் சம்பந்தம் வைத்துள்ளீர்கள்?? இருக்காது , எல்லாம் ஊருக்குத்தான் உபதேசம்!!

நிற்க!!

வேற்று சாதியில் காதலித்து திருமணம் செய்வதை நாங்கள் எதிர்ப்பதாக சொல்லும் போலி புரட்சியாளர்களே, நாங்கள் சொந்த சாதியிலே காதலிப்பதை எதிர்க்கிறோம் என்று எத்தனை பேருக்கு தெரியும்!! முதலில் எங்க பொண்ணை திருமணம் செய்யும் கொடுக்கும் முன் நிறைய விசயங்களை யோசிப்போம்!!

நஞ்சை விவசாய நிலத்தில் பிறந்த பெண்ணை புஞ்சை விவசாயிக்கு கொடுக்க மாட்டோம். எத்தனை பேருக்கு இது தெரியும்? காரணம் நஞ்சை விவசாயியை விட புஞ்சை விவசாயி கடின உழைப்பாளிகள். அதாலென்னவோ முரட்டு சுபாவம் உள்ளவர்கள். மேலும் விவரம் வேண்டுமெனில் தாய் தந்தையரை கேளுங்கள் முக்கியமாய் நஞ்சை புஞ்சை மாற்றி திருமணம் செய்தவர்களை !! ஏன் எனது தந்தை புஞ்சை விவசாயி மிக கடினமான உழைப்பாளி விடியும் முன் சாலைக்கு சென்று கட்டுத்தாரை வேலையை முடித்து விட்டு (நஞ்சை விவசாயியை விட புஞ்சை விவசாயி யிடம் கால்நடைகள் அதிகம் இருக்கும்,,)
காட்டிற்கு செல்ல வேண்டும்.

ஆனால் என் தாய் நஞ்சை நிலத்தில் பிறந்தவர்!! குடிக்கின்ற நீரிலேயே வித்யாசம் உண்டு, சுவையான நீரை பருகி வளர்ந்த என் தாய் உவர்ப்பான நீரை பருக பழக கஷ்டப்பட்டார்! தண்ணீர் கீழே இருப்பதால் ஏற்றம் இறைப்பது கடினமாக இருக்கும்.நஞ்சை நிலத்தில் பிறந்த பெண் புஞ்சை நிலத்தில் மேலும் கஷ்டப்பட வேண்டும் என்பதால் பெண்ணை பெற்றோர் தவிர்த்து விடுவர், இதே புஞ்சை நிலத்தில் பிறந்த பெண் என்றால் நஞ்சை விவசாயிகள் விரும்பி திருமணம் செய்துகொள்வர்!!

மேலும் நஞ்சை நிலத்தில் பிறந்த பெண் அரிசி போன்றவைகளை உண்டுபழகியிருப்பார்கள். ஆனால் புஞ்சை நிலத்தில் வாக்கப்படும்போது அங்கு கம்பு , சோளம் போன்றவைகள் தான் உணவு, அது பிடிக்காமல் போகலாம்,

இப்படி வளரும் கால்நடைகளை தெய்வமாய் போற்றும் பெண்கள் மாட்டுக்கறி உண்பார்களா?? ஆனால் மாட்டுக்கறி தின்பதை போராட்டமாய் செய்பவர்கள்
நீங்கள்!!

மேலும் புஞ்சை நிலத்தின் உடையும் கூட வேறுபடும். ஆண்கள் கோவணம் தான் அன்று கோபி, தி கோடு வட்டாரங்களில் திருமணம், இறப்பு போன்ற காரியங்களில் மட்டும் வேட்டி அணியும் பெரியவர்களை காணலாம்.

மேலும் கரூர் மாவட்டத்திற்கும் நாமக்கல் மாவட்டத்திற்குமே பெண் கொடுத்து எடுக்க யோசிப்பார்கள். மேலும் இன்று தொலைவை காரணம் காட்டி நல்ல சம்பந்தங்களை கூட விலக்கியிருக்கிறார்கள். முன்பு போக்குவரத்து என்பது மாட்டு, குதிரை வண்டி கால கட்டங்களில் தொலைவில் பெண்ணை கொடுத்தால் நல்லது கெட்டது போய்விட்டு வர நேரமாகும்,அதனால் இங்கு விவசாயமும், கால்நடைகளின் பராமரிப்பும் பாதிக்கப்படும் என்பதால் தொலைவில் கூட பெண்ணைத்தர மறுப்பார்கள்!!

மாவட்டத்திற்கு மாவட்டம் கலாச்சார வேறுபாடுகள் உண்டு!!

இப்படி புவியியல், உணவு உடைமற்றும் கலாசாரம் (எங்களுக்குள்ளேய திருமண சடங்குகள் போன்றவற்றில் வித்யாசம் உண்டு). எங்கள் பெண்கள் டீவி மற்றும் தலித் இளைஞர்களால் மறைமுகமாக மூளைச்சலவை செய்யப்பட்டு வீழ்கிறார்கள்!!

ஆண்கள் தாங்கள் சமூகத்தில் நல்ல நிலைமைக்கு வரவேண்டும், சுற்றும் நட்பும் தன்னையும் தன்குடும்பத்தையும் மதிக்க வேண்டும் என்பதற்காக நல்ல மேம்பட்ட நிலைக்கு வர வேண்டும் சென்றவருடத்தை விட இந்த வருடம் இன்னும் மேம்பட வேண்டும் என்பதற்காகவே உழைக்கின்றனர்!!

நீங்கள் மேடையிலேயே முழக்கடமிடும் வசனமான ரண்டாயிரம் ரூவா பேண்ட், சட்டை , சூ போட்டும் உங்க பின்னால உங்க பின்னால உங்க பொண்ணு வரல, எங்க பையன் பின்னாடி தான் வருது னு சொல்றீங்க.. உண்மை எங்க பசங்க எங்க பொண்ணு பின்னால மட்டுமல்ல எந்த சாதி பொண்ணு பின்னாலயும் அலைஞ்சதில்லை.

எங்க சாதி பையன் வேற சாதி பொண்ணு காதலித்து(?) காசை வாங்கீட்டு பொண்ணை திருப்பி அனுப்பிட்டான் னு யாரையாவது ஒருத்தரை கை நீட்டி சொல்ல முடியுமா??

எந்த பையனாவது வேற சாதி பொண்ணை லவ் பண்ணு ங்க னு டார்ச்சர் பண்ணியதுண்டா?? இத்தனைக்கும் எங்கள் இனத்தில் ஆண் பெண் விகிதாச்சாரம் கவலைக்குரியதாக இருந்த போதும், வயது 40 ஐ கடந்த போதும் பொருளாதார ரீதியாய் குடும்பம் நடத்த இயலும் என்ன பொழுதிலும் முறைகேடாக ஒரு பெண்ணை திருமணம் செய்யாமல் பிரம்மச்சாரியாய் ஒழுக்கமான வாழ்க்கையே வாழ்கின்றனர்.

ஆனால் 20 வயது கூட ஆகாமல் (தரும்புரி இளவரசன் சட்ட ரீதியாய் திருமண வயதை எட்டவில்லை)படிப்பை கூட முடிக்காமல் 15 வயது பெண்ணை தொந்தரவு செய்து மாய வலையில் வீழ்த்தி எப்போது வயது18 ஆவும் என காத்திருந்து,, காசு சம்பாதிப்பது யார்??

ஏன் தன்னை வாழ்வில் நிலை நிறுத்தி கொண்டு அந்த பெண்ணின் பெற்றோர் சம்மதிக்கும் வரை காத்திருந்து போராடி திருமணம் செய்து கொள்ள முடியவில்லை,ஏன்??

உங்களுக்கு தேவை காதலோ, திருமணமோ இல்லை காசு மட்டுமே!!உண்மையாக காதலிப்பவன் காசை வாங்கி கொண்டு திருப்பி அனுப்ப மாட்டான். முன்பு 5&10 லட்சம் வாங்கி திருப்பி அனுப்பிய காலம் போய் இப்போது சொத்தில் பாதி , ஈரோட்டில் தற்போது நடந்த பஞ்சாயத்து பெண்வீட்டார் சொத்து மதிப்பு 6 கோடி,3 கோடி கொடுத்தால் பெண்ணை திருப்பி அனுப்புவோம் என்று பேரம் !!

அப்படி உண்மையாய் காதலிப்பவர்கள் ஏன் பேரம் பேச வேண்டும்? இப்படி பொத்தி பொத்தி வளர்த்தும் பெண்கள் பன்னி மேய்ப்பதை பாரத்தால் மனது எவ்வளவு வலிக்கும்? பன்றி மேய்ப்பதை தவறாக சொல்லவில்லை. அது உங்கள் கலாசாரம்.

கலப்புத்திருமணம் செய்தால் எப்படி சாதி ஒழியும் ??
கலப்புத்திருமணம் சாதி கலவரத்திற்கே வழிவகுக்கும் !!
கலப்புத்திருமணம் செய்து கொண்டவர்களின் வாழ்க்கையை பற்றி புள்ளி விவரத்தையும் இணைத்துள்ளேன்!!



மேலும் நீங்கள் கலப்புத்திருமணம் செய்து கொண்டுள்ள பெண்களை பகிரங்கமாக மேடையேற்றி தன்னுடைய திருமண வாழ்வு பெற்றோரிடமும் இருந்ததை விட சிறப்பாக இருக்கிறது என்று சொல்வார்களா?? சொல்ல வைக்க முடியுமா உங்களால்?? ஆதரவற்ற ஒரு வித பயத்துடனே எஞ்சிய வாழ்க்கையை கழிக்கின்றனர் அவர்கள்!!

சாதி ஒழிக்க இப்படி திருமணம் செய்யவேண்டும் என்று சொல்வோர்களே, தலித் குள்ளவே ஏன் கலப்பு திருமணம் செய்துகொள்வதில்லை? உண்மையை சொன்னால் கவுரவ கொலைகள் அங்கு தான் அதிகம்!! சாதியை ஒழிக்க வேண்டும் என்று சொன்ன பாரதியார், பிரகாஷ் காரத், பிருந்தா காரத், வீரமணி, வைகோ போன்றவர்கள் தாழ்ந்த சாதியில் திருமணம் செய்து கொள்ளவில்லை,,காரணமும் சொல்ல தேவையில்லை.

சாதி ஒழிப்பு என்பது தொழில், அதில் பகடை காய்கள் நீங்கள். தனக்கு ஏதும் பிரச்சினை நேர்ந்தால் உங்களை சிக்க வைத்து விட்டு தெளிவாய் பேட்டி கொடுப்பார்கள்!!

கடைசியாய் ஒன்று. இதுவரை,

கவுண்டர்-தலித்
வன்னியர்-தலித்
தேவர்-தலித்

என்று போய் தலித் -தலித் அல்லாதோர் என்று வர காரணம் என்பதை சிந்தித்து பாருங்கள்! மற்ற சாதிக்காரங்க எல்லோரும் தங்கள் சாதியை மறந்து தான் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள், காரணம் உங்களுடைய அராஜகம். மறைமுகமாக உங்களுக்கு நீங்களே குழி பறித்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளுங்கள். கூடிய விரைவில் நீங்கள் தனிமை படுத்த நேரிடலாம். இவன் கூட பழகுவது வம்பாய் முடியலாம் என்று நட்பும் ஒதுக்க ஆரம்பிக்கும்.

ஒரு சம்பவம்:
கரூரில் நடந்தது வயதான ஆதரவற்ற விதவை மூதாட்டி ஆடு மேய்த்து (75 வயது ஆனாலும் உழைக்கிறார்). சுயகவுரத்துடன் தன்னை சமுதாயத்தில் தலை நிமிர்ந்து வாழ்கிறார் (அவருக்கு கூன் விழுந்தும்). அவரிடம் இரண்டு ஆடுகளை வாங்கிய வியாபாரிகள் தலித் ஆட்டிற்குண்டான பணத்தை தராமல் காலந்தாழ்த்தி வந்தனர்.

யதேச்சையாய் பார்த்த போது அப்பணத்தை கேட்கும் போது இடையில் இருந்தவர்கள் பணத்தை ஏன் தராமல் ஏமாற்றுகிறாய் என்று கேட்டதற்கு PCR கேஸ் கொடுத்தனர் (உள்ளூர் வி சி தூண்டுதல்). தற்போது அவர்கள் உள்ளூரில் எவ்வித ஆதரவும் இல்லை. தொழிலும் பண்ண முடியவில்லை.

தூண்டிவிட்ட வி சி கட்சிக்காரங்களும் கழண்டு கொண்டனர் , பாதிப்பு யாருக்கு?? இன்றும் கவுண்டர்கள் ஆசாரி,கொல்லர், நாசுவர் இவர்களோடு சுமூகமான நட்பில் தானே உள்ளனர்!!அவர்களிடம் சாதி வேறுபாடு பார்ப்பதில்லையே!!எப்படி உங்களிடம் சாதி வேறுபாடு பார்க்கிறார்கள் என்று குற்றம் சுமத்துகிறீர்கள்??

கரூருக்கு மிக அருகில் உள்ள மருத்துவர்(நாசுவர்). விபத்தில் சிக்கி முதுகெலும்பு சேதமாகி படுத்த படுக்கையானார். அவருடைய மனைவியை விட அவரை அதிகம் கவனித்து கொண்டது உள்ளூர் வாசிகள். மருத்துவ செலவு, உணவு அனைத்துமே உள்ளூர் வாசிகள் பகிர்ந்து கொண்டனர். ஏறக்குறைய ஒரு வருடம் ஆனது சரியாக!! யார் வீட்டில் கோழிச்சறானாலும் அவருக்கு போய்விடும் இல்லை கோழியே போய்விடும்!!

அவரை தற்போது வேறு பக்கம் காசு அதிகம் சம்பாதிக்கலாம் என்று அழைத்தாலும் ஊரை விட்டு வர மாட்டேன் என்கிறார். காரணம் சொல்ல தேவை இல்லை!!

நானே 20 கிமீ சென்று அவரிடம் தான் முடிதிருத்தி கொள்கிறேன்!! இப்படி எங்களை பொறுத்தவரை அனைத்து சாதியையும் அரவணைத்து செல்ல வேண்டும் என்பது எங்கள் எண்ணம்.

எங்களது எண்ணத்தை மாற்றுவது உங்கள் நடத்தை!!

கொங்கு மண்டலத்தில் இருக்கும் மற்ற இனத்தாரை கேட்டுபாருங்கள்.

மாமன் மச்சான் போல பழகிகொண்டுதான் இருக்கிறோம்!!

எங்கள் குடும்ப நல்லது கெட்டது அனைத்திலும் அவர்களின் பங்கு உண்டு!! பணம் கொடுக்கல் வாங்கலும் உண்டு !! மற்றவர்களிடம் சுமூகமாய் இருக்கும் நட்பு ஏன் உங்களிடம் இல்லை??

யோசியுங்கள்!!!!

எங்களது திருமண சடங்கில் அனைத்து சாதியினருக்கு பங்கு உண்டு என்பதை அறிவீர்களா??

கவுண்டர்களே..

தற்போது நமது சமுதாயம் எதிர்நோக்கியுள்ள முக்கிய பிரச்சினைகளில் ஒன்று கலப்புத்திருமணம். இது குறித்த விழிப்புணர்வு பெறவேண்டியது இளம்பெண்கள் அல்ல அவர்களின் பெற்றோர்களே.

பெண்குழந்தைகள் தமது பதின்ம வயதில் தனக்கு நம்பிக்கைக்கு உகந்தவராய் , அன்புக்குரியவர்களாய் கருதவேண்டியது பெற்றோரையும் குடும்ப உறுப்பினர்களையும் மட்டுமே.

மாறாக சம்பந்தமே இல்லாத ஒருவரை தனது நம்பிக்குரியவனாய் தேர்ந்தெடுக்கிறாள் என்றாலே தவறு எங்கே நடக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்!!

முதலில் நமது பெண்களுக்கு நமது இன பெரியோர்கள் மற்றும் குடும்ப மூத்த உறுப்பினர்களை பற்றி (தற்போது ஓரளவு நல்ல நிலையில் நமது சமூகம், குடும்பம் இருக்க காரணம் முன்னோர்களின் கடுமையான உழைப்பும் சேமிப்பு மற்றும் தியாகமுமே என்று எடுத்து சொல்ல வேண்டும்.)

குழந்தைகள் முன்னிலையில் முந்தைய தலைமுறையினரையோ உறவினர்களையோ விமர்சித்து பேச வேண்டாம், அது மறைமுகமாக சொந்தங்கள் அனைவரும் அப்படித்தான் என்கிற மனோபாவத்தை பிஞ்சு மனதில் விதைத்து விடும். அதன் அறுவடையே வேறு சாதி நட்பு.

அப்படி வேறு சாதி நட்பு வட்டாரத்தில் பழகும் இளைய தலைமுறையினரை கேட்டுப்பாருங்கள். இந்த பதில் தான் கிடைக்கும்!

தங்களது பெண்குழந்தை தங்களுக்கு நெருக்கமான பாதுகாப்பானவர்களாக குடும்ப உறுப்பினர்களை நினைக்க வைப்பது எப்படி?? முதலில் தங்களிடமிருந்து அந்நியபடுத்தக் கூடாது. தங்களை சிநேகபூர்வமனவராய் உணர வைக்க வேண்டும்!!

விடுதியில் தங்கி படிக்க வைப்பதை கூடுமானவரை தவிர்க்க வேண்டும். முன்பு இப்போதிருப்பதை போல பள்ளிகளோ, கல்லூரிகளோ இல்லை. அதனால் விடுதியில் தங்கி படித்தனர்!!

மேலும் வி சி கட்சிகாரங்க தொல்லை இல்லவே இல்லை அப்போது. அதனால் விடுதியில் தங்கி படித்ததில் எந்த ஆபத்தும் இல்லை!! இன்று தடுக்கி விழுந்தால் பள்ளி கல்லூரிகள்! அரசின் சலுகைகள், தலித்கள் திட்டம் தீட்டியே நம் பெண்களை காதல் நாடக வலையில் விழ வைக்கின்றனர்.

இதற்கென பயிற்சி வகுப்புகள் நடக்கின்றன.

இது பெரும்பாலான பெற்றோர்கள் மற்றும் மாணவிகளுக்கு தெரிவதில்லை. இதற்கு அரசு அதிகாரிகள் முக்கியமாக போலிஸ் உம் உடந்தை!! காரணம் சொல்லி தெரியவேண்டியதில்லை.

ஆத்தூர் தலைவாசலில் கடைசியில் பிசிஆர் வழக்கு சம்பவத்தால் பாதிக்கப்பட்ட நம்மீதே போடப்பட்டது.

சமீபத்திய செய்தி நமது பெண் ஒருவருக்கு திருமணம் நடந்து விட்டதாக போலியாக சான்றிதழ் அளித்த அதிகாரி விசாரணைக்கு உட்படுத்த பட்டது (கைது செய்ய வில்லை) அலுவலகங்களில் முழுவதும் அவர்களே !!

பெண்கள் தங்களது அடையாள, முகவரி சான்றிதழ்களை கூட நகல் எடுக்க மற்றவர்களிடம் தரவேண்டாம். நாமக்கல் தனியார் கல்லூரியில் நடந்த சம்பவம் இது . அங்கு படித்த தலித் மாணவி சஸ்பெண்ட் செய்ய காரணத்தை அறிந்தால் அதிர்ச்சி அடைய நேரிடலாம்.

தோழியாக பழகி நமது பெண்களின் மொபைல் நம்பரை தங்களது சமூக பையன்களிடம் கொடுத்து அவர்களின் மூலமாக காதலிக்க வற்புறுத்தியது. முகவரி சான்றிதழ்களை நகல் எடுத்து திருமணமானது போல் சான்றிதழ்களை தயாரித்து ப்ளாக் மெயில் செய்த சம்பவம்! இது விரைவில் சம்பவங்களாகலாம்!!

கரூர் தனியார் கல்லூரியில் (நமது கல்லூரிதான்) பெண்களின் சான்றிதழ்களை பெற்றோரிடம்தான் ஒப்படைப்பார்கள் , இதை அக்கல்லூரி தாளாளரின் நேரடி கட்டுப்பாட்டில் தான் இருக்கும்!!

எனவே பெண்குழந்தைகளை விடுதியில் தங்கி படிப்பதை தவிருங்கள்!!அப்படி டேஸ்காலராக செல்லும்போதுமிக முக்கியமாய் பயணதூரம் அதிகமாக இருப்பதை தவிர்ப்பதே சால சிறந்தது.

அப்படி தவிர்க்க முடியாமல் விடுதியில் தங்கி படிக்க வைக்க நேர்ந்தால் நமது ஆட்கள் நடத்தும் சிறிய நடுத்தர பள்ளியாக இருக்கட்டும். முக்கியமாய் திராவிட கட்சி பிரமுகர்கள் நடத்தும் பள்ளிகள், கிறிஸ்துவ பள்ளிகள் (பார்ப்பதற்கு வேண்டுமானால் சேவை செய்வது போல் தோன்றும் ஆனால் நடப்பது மத போதனைகளே. என் நெருங்கிய உறவு இன்ஜினிரியங் கிறிஸ்துவ கல்லூரியில் படித்து வந்த பின் சொன்ன வார்த்தை தான் கன்னியாஸ்திரியாக போக விரும்புகிறேன் என்பதாகும்).

பெரும் கல்வி நிறுவனங்களில் சேர்த்தாதீர்கள். அவர்கள் தனிநபர் ஒழுக்கத்தை விட பணத்தில் மட்டுமே குறியாக இருப்பார்கள். பெண்குழந்தைகள் மீதான கண்காணிப்பும் அரவணைப்பும் இருக்கவே இருக்காது (காரணம் எண்ணிக்கை தான்).

எனவே உள்ளூரிலேயே தினமும் சென்று வருவதை போல உள்ள சிறிய பள்ளிகளில் சேருங்கள், பெண்ணின் சிறு நடவடிக்கை மாற்றம் கூட உங்கள் கவனத்திற்கு எளிதாக தெரிய வரும்.

மிக முக்கியமானதொன்று தாத்தா பாட்டிகளின் அரவணைப்பும் இருக்கும் பெண்குழந்தைகளின் மீதான பாசமும் அரவணைப்பும் பெற்றோர்கள் சூழ வாழும் குழந்தைகளுக்கு அமைவதில்லை என்பதை மறுக்க இயலாது!!

பெரிய ப்ராண்ட் பள்ளிகளில் சேர்த்தால் மட்டுமே அறிவு வரும் என்று நினைக்க வேண்டாம் , அறிவு வேறு மதிப்பெண்கள் வேறு, மேலும் ப்ராண்டட்பள்ளி ஆசிரியர்கள் சம்பளத்தின் காரணமாக பள்ளிகள் மாறுவார்கள்!!

எனவே தனியார் பள்ளிகளின் கற்பித்தல் திறன் வருடா வருடம் கண்டிப்பாக மாறுபடும், இதை பெரும்பாலான பெற்றோர்கள் அறிவீர்கள்!

மிக முக்கியமான ஒன்று பீஸ் , தரமான(?) பள்ளி ஒன்றின் படிக்க வைத்தால் 12 வது முடித்து வெளியில் வரும்போது ஏறக்குறைய 50 லட்சம் செலவாகி இருக்கும்! இந்த தொகையே எதிர்கால வாழ்க்கைக்கு போதுமானதாகும்!!

எனவே சிறிய பள்ளியில் வீட்டிலிருந்து தினமும் சென்று வருமாறு உள்ள பள்ளியில் சேப்ப்பதே நன்று!!

ஏனெனில் தினமும் வீட்டிலிருந்து செல்லும் பெண்ணிற்கு வீட்டு மற்றும் சுற்றுபுறசூழல் நன்றாக தெரியும். பெற்றோர்கள் தனக்காகத்தான் கஷ்டப்படுகிறார்கள் என்பதை அப்பெண்கள் நெருக்கமாக உணர செய்வது இந்த சூழல் மட்டுமே!! தனக்கான கல்லூரி கட்டணம் இதர செலவுகளுக்குண்டான பணத்தை எப்படி தருகிறார் (கடன் வாங்குகிறாரா? கால்நடையை விற்கிறாரா? இல்லை நிலத்தையே அடமானமோ விற்பது) என்பதை உடனிருந்து கவனிக்க வைக்க வேண்டும்!!

தினமும் வீட்டிலிருந்து பள்ளி கல்லூரிக்கு செல்லும் பெண்கள் வீட்டில் தனக்காக தன் குடும்பத்தினர் படும் கஷ்டத்தையும், பண்ணும் தியாகத்தையும் பார்த்தே வளருவார்கள்!! விடுதியில் ஆரம்பத்தில் இருந்து தங்கி படிக்கும் மாணவிகளுக்கு சமுதாயம் என்றால் என்ன என்பதை மறந்து விடுகிறது!! சாதி, கலாசாரம் சொந்தம் என்றால் என்ன என்ற கேள்வியே பதிலாக வருகிறது!!

கூட்டம் கோவில் சாதி என்பதை அறியமாட்டார்கள். இச்சூழலில் வளரும் குழந்தைகளுக்கு பெற்றோர்களை விட ஆயாக்களே. ரூம் மேட்களே நெருக்கமானவர்களாக போய்விடுகின்றனர்!! எப்போது பெற்றோர்களை விட வேறொருவரை தனக்கு நெருக்கமானவராக உணர்கிறாளோ அன்றே இடைவெளி ஆரம்பித்துவிடுகிறது!

உதாரணமாக சமீபத்திய செய்தி துபாய் நாடு ஒன்றில் குழந்தையை பராமரித்து கொண்டிருந்த இலங்கை பெண் சொந்த வேலை காரணமாக நாடு திரும்ப அந்த குழந்தை உடல்நிலை மோசமாகத்தான் அபாய கட்டத்தை எட்டியிருக்கிறது(குழந்தைக்கு 6 வயது இருக்கலாம்) மருந்துவரின் ஆலோசனையின் பெயரில் மீண்டும் அந்த பெண்மணியை அழைத்து வந்தனர்!!அது வரை பேச்சு மூச்சு இல்லாத குழந்தை அந்த ஆயா தூக்கியவுடன் உடல் நிலை சீராக ஆரம்பித்தது( அந்த ஆயாவை வரவழைக்க நம் சொந்தம் சரவணன் மணியன் பட்ட கஷ்டத்தை பதிவு செய்திருந்தார்). எனவே ஆறு வயது குழந்தைக்கே மனோரீதியாக இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்றால் பதின்ம வரை பெற்றோரை விட்டு தள்ளி இருந்தால் என்ன விளைவு ஏற்படும் என்பதை சிந்தித்து பாருங்கள்!!!!

தவிர்க்க முடியாமல் விடுதியில் தங்கியிருந்தாலும் நல்லது கெட்டது அனைத்திற்கும் வரவழைக்க வேண்டும். வாரந்ததவறாமல் குழந்தைகளை அழைத்து வந்து விடுங்கள். அனுப்ப மறுக்கும் பள்ளிகளில் சேர்க்காதீர்கள். உங்கள் குழந்தைகளின் மதிப்பெண்கள் உங்களுக்கு முக்கியமா?? இல்லை உங்கள் குழந்தை முக்கியமா? அப்படி அழைத்து வரும்போது சொந்தங்களில் நடக்கும் கல்யாணம் காதுகுத்து, போன்ற நிகழ்சிகளுக்கு வரும் பெரியவர்களிடம் இளம்தலைமுறைகளை அறிமுகப்படுத்தி வைக்க வேண்டும்.

அந்த பெரியவர்கள் சொல்வார்கள் அந்த இளம் தலைமுறைகளின் தாத்தா பாட்டிகளின் உழைப்பு சேமிப்பு தியாகத்தின் காரணமாகவே நாம் இந்த நிலையில் இருக்கின்றோம் என்கிற மகத்துவத்தை. ஊர்திருவிழாக்கள் அனைத்திலும் பங்கு பெற வைக்க வேண்டும்.அப்போதுதான் சுற்றும் நட்பும் பெற்றவர்களுக்கு கொடுக்கும் மரியாதையை பார்த்து இவர்களுக்கும் ஒரு பற்று வரும். மேலும் கல்லூரி விடுதிகளில் சேர்க்கும் முன் நிறைய விசயங்களில் கவனம் செலுத்த வேண்டும். நம்மினத்தவரே அதிகம் பயிலும் கல்லூரிகளிலேயே சேர்த்த வேண்டும், அப்போது அவர்களது நட்பு வட்டாரம் நம்மை தாண்டி போகாது.

கொங்கு மண்டலத்தை விட்டு வேறுபக்கம் தொலைவில் சேர்த்தும்போது அந்த ஊர் கலாசாரத்தையே பின்பற்றுவார்கள்!! விடுதியில் ரூம் மேட்களை யும் கவனித்து சேர்த்துவது முக்கியம்!! மேலும் படிப்பு முடித்தவுடன் வேலைக்கு செல்வதை கூடிய வரையில் பரிசீலியுங்கள்.

அந்த பெண் வேலைக்கு சென்றால்தான் குடும்ப பொருளாதார நிலை மேம்படும் என்கிற சூழலில் வேண்டுமானால் அனுமதிக்கலாமே தவிர வீம்புக்காக வெட்டி கவுரவத்திற்காக சொந்த பந்தங்களில் வீண் டாம்பீகம் பேசுவதற்காக வேலைக்கு அனுப்புவது என்பது சற்றே கவலைக்குரிய விசயம்தான்!!

இன்று ஐடி மற்றும் MNC கம்பனிகளில் கிடைக்கும் கூடுதல் சம்பளம் தன்னம்பிக்கைக்கு மாறாக அசட்டு தைரியத்தையே வரவழைக்கிறது. சொந்த காலில் நிற்கிறேன் என்கிற தன்னம்பிக்கை சற்றே அதிகமாவும்போது பெறறோர்களுக்கிடையே பயத்தையே வரவழைத்து விடுகிறது!!

இது சற்று பிற்போக்குத்தனமாய் தோன்றும். ஆனால் கலப்புத்திருமணம் காதல் நாடகத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் படும் பாட்டை பார்த்தால் இது பிற்போக்குத்தனமாய் தோன்றாது!! கூடிய விரைவில் அரசு தலித் களுக்கு கொடுக்கும் பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்படும்.

பெரும்பான்மை மக்களின் ஒற்றுமையின்மையின் காரணமாக இச்சூழல் நிகழ்கிறது , என்று பெரும்பான்மை மக்கள் ஒற்றுமையானால் ஓட்டுக்காக தாங்கி பிடித்துக்கொண்டிருந்த சிறுபான்மையினரை அரசு கை கழுவி விடும்!!
அது வரை நம்மை நாமளே பாதுகாத்து கொள்ள வேண்டியதுதான்!!

கூடிய வரையில் காலந்தாழ்த்தாமல் காலாகாலத்தில்பெண்ணிற்கு திருமணத்தை முடித்து வைப்பது நல்லது!! உதாரணமாக வட இந்திய லகோடி, வடோதரா, ஜெயின் சமூகத்தினர் உரிய வயதில் திருமணம் செய்து விடுகின்றனர். எனவே இளம்தலைமுறையினர் மனம் தடுமாறி செல்வதில்லை. ஆண்களும் தொழில் மற்றும் குடும்பத்தை தவிர மற்ற மது போன்ற கேளிக்கைகளில் நேரம் செலவழிக்க முடியாது. தொழிலும் பொருளாதாரமும் வளம்பெறும், சரியான வயதிலேயே திருமணம் செய்து வைப்பதால் வீரியமான ஆரோக்கியமான தலைமுறைகளை உருவாக்கலாம்.
தங்களது வாரிசுகளின் திருமணத்தின்போது அவர்களின் வயதும் 50 குள்ளாகவே இருக்கும்.

அதனால் அடுத்த தலைமுறையை சிறப்பாகவே வழி நடத்தலாம்!!

முக்கியமாய் பேரனின் திருமணத்தை தாத்தா காணும் பாக்கியம் கிடைக்கும். இன்றைய உணவுப்பழக்கம் காரணமாக இறப்பின் சராசரி வயது குறைந்து கொண்டேதான் வருகிறது.

35 வயதை கடந்த பின் திருமணம் செய்துகொள்ளும் ஆண் தனது ஆண்மகனின் திருமணத்தின் போது 65 ஐ கடந்து விடுகிறார். இது சமூகத்திற்கு ஆரோக்கியமான சூழல் அல்ல!! வாரம் ஒரு நாளாவது டிவி செல்போன்களுக்கு விடுமுறையளித்து சொந்தம், சுற்றத்திடம் செலவழிக்க வேண்டும்.

அமாவாசை தவறாது குலதெய்வ கோவிலுக்கு செல்லவேண்டும். எவ்வளவோ பிரச்சினைகளை வெளியில் சொல்ல முடியாமல் நமது பெண்கள் இருக்கின்றனர். அவர்களிடம் பெற்றோர்களும் குடும்ப உறுப்பினர்களும் சிநேகபூர்வமாய் இருந்து அவர்களுக்கு பாதுகாப்புணர்வை ஏற்படுத்தினாலே நமக்கு வெற்றிதான்.

முந்தைய தலைமுறை அறிவுரைகளை கேட்டனர். தற்போது அதற்கு வாய்ப்பில்லை ஆலோசனை அல்லது கருத்து பரிமாற்றங்கள் என்கிற ரீதியில் மட்டுமே அவர்களை அணுக முடியும்!!

பெற்றோர்கள் மூலம் வரும் நட்பும், சொந்தமுமே போதும்., வெளியே தேவையில்லாத நட்பு விபரீதத்தையே ஏற்படுத்தும்.

கடைசியாய் ஒன்னு,

பெண்களின் மதிப்பெண்களும், கேரியரும் முக்கியம் தான் அதை விட பெண்கள் முக்கியம் என்பதை உணர்ந்தால் போதும்!!

- ஆத்தூர் காடை கூட்டம், திரு.சிவக்கொழுந்து கவுண்டர், கரூர்.

தொடர்புடைய பதிவுகள்,

கலப்பு கல்யாண பிரசார நோட்டிஸ்
கொங்கு மக்களின் பெண்ணியம்
நாடக காதல்-பிசிஆர்-நிரந்தர தீர்வென்ன?
எளிமையின் இன்றைய அவசியம்
பருவத்தில் கல்யாணம்
சொந்தத்தில் கல்யாணம் செய்தால் தவறா..?
ஒற்றைக் குழந்தை வரமா? சாபமா?
சீதனம்

9 comments:

  1. லவ் ஜிஹாத் - எச்சரிக்கை

    உங்கள் வீட்டு கதவை தட்டும் பேராபத்து. விழித்து கொள்ளுங்கள்.

    இரண்டு நாட்களுக்கு முன்பு ஈரோடு பவானி காளிங்கராயன்பாளையத்தை சேர்ந்த மிகப்பிரபலமான, பண வசதி மிகுந்த ஒரு டாக்டரின் மகள், அவளும் டாக்டர் தான், ஒரு முஸ்லிம் பையனுடன் வீட்டை விட்டு ஓடி விட்டால். டாக்டருக்கு படித்த அந்த டாக்டரின் பெண் ஓடிப்போனது யாருடன் தெரியுமா???
    8ம் வகுப்பு வரை மட்டுமே படித்த ஒரு கௌரியர் கம்பெனி பையன்.எப்படி இது நடந்ததது???

    அந்த டாக்டர் பெண்ணின் பிரெண்ட் ஆனா ஒரு முஸ்லிம் பெண், ரெகுலர் ஆகா அந்த பெண்ணை தன்வீட்டுக்கும் மற்ற பிற இடங்களுக்கும் அழைத்து சென்று தெளிவாக பிளான் செய்து அந்த முஸ்லிம் பொறுக்கியுடன் பழக செய்து, அந்த பெண்ணை அதில் இருந்து மீள முடியாத நிலைக்கு அழைத்து சென்றுள்ளர்கள்.

    அந்த பெண்ணை தற்போது முஸ்லிம்கள் மதுரையில் கூட்டி சென்று விட்டார்கள்.அந்த பெண்ணை மீட்க முயற்சி செய்து அவளது பவானி டாக்டர் பெற்றோர்கள் சில நண்பர்கள் மூலம் கோயம்புத்தூர் போலீஸ் கமிஷனர் மூலம் உதவி பெற்று, மதுரை போலிசை அணுகினார்கள். அவர்கள் மதுரை போலீசுடன் சென்ற பொது ஒரு சாதாரண கொரியர் போடும் பையனுக்கு கூட, கிட்டத்தட்ட 200 காரில் முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் வந்துள்ளார்கள்.அதனை கண்டு அரண்டு போன போலீஸ் துறை அலறி அடித்து கொண்டு ஓடினார்கள்.போலீசார் முன்பு அந்த கும்பல் தெனாவட்டாக சொன்னது “ஒழுங்கு மரியாதையாக 5 கோடி கொடுத்து விட்டு பெண்ணையும் எங்களிடம் விட்டு விட்டு ஓடிபோய்விடுங்கள். இல்லாவிட்டால்,உங்கள் பெண் சிரியாவில் தீவிரவாதிகளுக்கு பென்னடிமையாக சிறிது காலம் இருந்துவிட்டு, மனித குண்டாக சிதறுவாள்” என்று மிரட்டியுள்ளார்கள்.
    ஒன்றும் செய்ய முடியாமல் போய் வீடு திரும்பிய பெற்றோர்கள், பயத்துடனும் சோகத்துடனும் வீட்டில் அடைந்து கிடக்கிறார்கள்.அவர்களுக்கு ஆதரவாக வரவேண்டிய சமுதாயம் தள்ளி நின்று வேடிக்கை பார்கிறது.ஏனென்றால் இதற்கு முன் பல ஹிந்து பெண்கள் முஸ்லிம் பொறுக்கிகளால் தூக்கி செல்லப்பட்ட பொது இவர்களைப் போன்றவர்கள் “நமக்கென்ன என்று வேடிக்கை பார்த்தார்கள்”, இந்த ஆபத்து இப்போது இவர்கள் வீட்டுக்கு வந்துள்ளது.
    இது தான் “லவ் ஜிகாத்”. இது முதல் முறை அல்ல, இதற்க்கு முன் பல முறை பல பெண்கள், இதை போல் தெளிவாக திட்டம் போடப்பட்டு எமாற்றப்பட்டுள்ளர்கள். இது அடுத்து உங்கள் வீட்டுக்கு வரும் முன், டாக்டர்கள் ஆகிய நீங்கள் எல்லோரும் முழித்துக்கொல்லுங்கள். உங்கள் குடும்பங்கள் எல்லாம் அவர்கள் லிஸ்டில் உள்ளது. IMA வில் இருக்கும் முஸ்லிம் டாக்டர்கள் பலரும், இவ்விஷயத்தை ஒரு சாதரணமான விஷயம் என்று கூறி, விஷயத்தை நீர்த்து போக செய்து கொண்டிருக்கிறார்கள்.மற்றும் ஒரு பண திமிர் பிடித்த ஒருபெண் டாக்டர், எனக்கு பெண் கிடையாது, எனக்கு மகன் தான், அதனால் எனக்கு கவலையில்லை என்று பேசி உள்ளார்கள். அவர்களது மேலான கவனத்திற்கு, “நீங்கள் நாளை உங்கள் மகனுக்கு கல்யாணம் முடிக்க பெண் இருக்க மாட்டார்கள், அல்லது அந்த பெண்கள் எல்லாம் லவ் ஜிக்ஹாட்தினால் முஸ்லிம்களால் பயன்படுத்தப்பட்டிருப்பர்கள்” என்பதை மனதில் வைத்துக்கொள்ளவும்.

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ள நம்பி உங்க நீங்கள் சிவக்கொழுந்து அவர்களின் கட்டுரைக்கு கொடுத்திருக்கும் பதிவு சம்பந்தம் இல்லாதது என்று நினைக்கின்றேன்
      அவர் சாதியவாதி நீங்கள் மதவாதி போல
      நீங்கள். பதிவிட்ட நிகழ்வு உண்மைwல்ல அப்படியிருந்தால் ஆதாரம் தருக
      ஆராய்வோம் தண்டிப்போம் ஏதோ கதை சொல்வது போல் இருக்கிறது பெரும்பான்மை நீங்கள் தான் கவனத்தில் கொள்க

      அதிகாரம் படைத்தவர்கள் யாரும் இரண்டு விஷயத்தில் சாதி மதம் பார்ப்பதில்லை 1 காமம் 2 பணம்

      அவர் அவர் மனசாட்சிகளுக்கு பொருந்தும்

      மனிதன் என்றும் பலகீனம் உடையவன் கவனத்தில் கொள்க

      வேண்டாம் மதவாதம் சாதியவாதம்

      Delete
    2. @அன்சாரி... முஸ்லிம்களை காதலித்து கல்யாணம் செய்ய நினைத்தால் ஆணோ பெண்ணோ அவங்க முஸ்லிம் மதத்துக்கு மாறினா தான் ஒத்துக்குவீங்கலாமா?? இது பொய்யுன்னு சொல்லுறீங்களா..? போய் ஒவ்வொரு கிராமத்துலையும் விசாரிங்க.. ஏன் உங்க வீட்டு பசங்க பொண்ணுங்க கல்யாணத்துக்காக மற்ற மதத்துக்கு மாறினா ஒத்துக்க மாட்டீங்களா?? முஸ்லிம்கள் மதம் காரணமா எவ்வளவு கொலைகள் செய்யறாங்க னு தெரியாதா? அதை எல்லாம் சீர்திருத்த முதலில் முஸ்லிம்களுக்கு உபதேசிக்க போங்க.. சாதியவாதம் னா என்ன, அதன் சாதக பாதகம் எல்லாம் நாங்க நல்லாவே உணர்ந்து இருக்கோம்.. நாங்க எல்லாரையும் அரவணச்சு போகனும்னு நினைக்கறவங்க..

      Delete
  2. வணக்கம் !!!

    Facebook இல் நம் கலிங்கராயர் அவர்களை வேட்டுவ கவுண்டர் என்று சிலர் பதிவிடிகிறார்கள் "கவுண்டனாய் இருப்போம் கவுண்டனாய் இறப்போம் " ஆரம்பத்தில் அது கொங்கு வெள்ளாளர் மட்டும் இருந்தனர் ..இப்போது வேட்டுவ கவுண்டர்கள் அதில் சில தவறான பதிவிடிகிறார்கள் ..கலிங்கராயர் வெள்ளாளர் என்பதற்கு தாங்கள் கூறிய அணைத்து சான்றுகளை தந்து அதை ஏற்கவில்லை ..தங்களுக்கு அதை பற்றிய தகவல் அதிகம் தெரியும் என்று நம்புகிறேன் ...தயவு செய்து தாங்கள் facebook விளக்கத்தை கூறவும் ...நம் இன பெருமை மிகு வீரர்களை பிறருக்கு விட்டு கொடுக்காமல் காப்போம் ...எனது மெயில் selvaprakash .ssm @gmail .com

    ReplyDelete
  3. கொஞ்சம் உண்மை, நிறைய பொய்! நம் நாடு இன்னும் எவ்வளவு கஷ்டப்படப் போகிறதோ?

    ReplyDelete
    Replies
    1. இதில் எது உண்மை, எது பொய் என்று கொஞ்சம் எனக்கு தெளிவாக கூறினீர்கல் என்றால் உதவியாக இருக்கும் நண்பரே.

      Delete
  4. வேற வீட்டிற்கு வாழப்போகும் பெண் என்பதால் செல்லும் வரை கஷடப்பட வேண்டாம் என்று செல்லமாக வளர்த்துவார்கள், மாட்டுத்தொழுவ மாகட்டும், காடு தோட்டமாகட்டும் ஒரு வேலையும் செய்ய விடமாட்டார்கள். ஆனால் பையன்களை பெண்டு நிமிர்த்தி விடுவார்கள். அதனால் தான் ஆண்கள் மற்ற சாதி மட்டுமல்ல சொந்த சாதி பெண்கள் பின்னால் அலைவதற்கும் நேரமில்லை.


    Its absolutely true and real fact every where in our community.

    ReplyDelete
  5. ராசிபுரம் பேளுகுறிச்சி அருகே பதினான்கு வயது பள்ளி மாணவியை இழுத்துக் கொண்டு ஓடிய டிரைவர் அமல்ராஜ் எட்டு மாத கைக்குழந்தையோடு பெண்ணை அவள் அம்மா வீட்டில் விட்டுவிட்டான். எவன் எவனை டிரைவராக வைக்க வேண்டும், குழந்தைகள் எங்கே யாருடன் பழக்கிரார்கள் என்பதில் கவனம் வேண்டும். டிவி சினிமாக்களில் பள்ளிக்காதலை ஹீரோயிசமாக காட்டுவதையும், காதல்-ஜாதி எதிர்ப்பு கருத்துக்களை பரப்பும் மீடியாவுக்கு குழந்தைகளை பலி கொடுத்து வீட்டில் குடும்பத்தொடு பார்ப்பவர்களுக்கு எச்சரிக்கை மணி. பருவத்தில் கல்யாணம் செய்யணும் என்று எண்ணி கல்யாணம் ஏற்பாடு செய்தால் தப்பு. குழந்தைக் கல்யாணத்தை தடுக்க ஓடி ஓடி வேலை செய்யும் அரசு இயந்திரம் இதுபோன்ற விஷயங்களில் மேம்போக்காக இருக்கும். காரணம் குழந்தைக் கல்யாண தடுப்பு என்பது பெண்விடுதலைக்கு என்பது எல்லாம் சும்மா. இவனை தட்டி கேட்டால் பிசிஆர் கேஸ் விழும் (பிசிஆர் சட்டத்தை மேலும் மேலும் வலுவாக்கிய மோடிஜிக்கு மானமுள்ளவர்கள் நன்றியுணர்வோடு இருங்கள்); எவனாவது குடிகாரன் தண்டவாளத்தில் செத்துக் கிடந்தால் அதை கொலை கேசாக்கி நம்மை சிக்க வைத்து அலைய விடுவார்கள். அமல்ராஜ் போன்ற ஜந்துக்கள் எட்டு மாசம் குடும்பம் நடத்த சர்க்கார் விளக்கு பிடிக்கும்.
    குறிப்பு: குற்றம் கூட இன்னும் நிரூபிக்கப்படாத நிலையில் திரு.யுவராஜ் அவர்கள் காவல் நீடிப்பு தொடர்ந்து வருகிறது. (அ)நீதித்துறைக்கு நன்றி!

    ReplyDelete
  6. நண்பர் சிவக்கொழுந்து அவர்களின் பதிவு காவிகளின் கருத்துக்களை உள்ளே புகுத்தி உள்ளார், சாதி வேணுமா? வேணாமா? என்பதை வெளிப்படுத்த வேண்டும். ஆயிரம் ஆண்களுக்கு மேலாக உன் குடும்பத்தினருக்கு உழைத்த ஒரு சமூகத்தையும் அவர்களையும் எவ்வளவு கேவலமாக பதிவு செய்ய முடியுமோ செய்து உள்ளீர்கள், நீங்கள் மட்டுமே இந்த நாட்டில் வாழுங்கள் "தலித்" மக்களுக்கு தனி நாடு கொடுத்து விடுங்கள்...

    அந்த நாட்டியலவது..

    குடிசை கொளுத்திகள் இருக்க மாட்டார்கள்
    ஆணாவ கொலைகாரர்கள் வர மாட்டார்கள்
    சுரண்டல் முதலாளிகள் இல்லாமல்
    ஆகியோர் இல்லாத நாடு வேண்டும்...

    கொலையை விட கொடுரமானதா? காதல்.

    ReplyDelete

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates