Trending

Tuesday 6 December 2016

தோக்கவாடி வேலாத்தாள் கோயில்

திருச்செங்கோட்டில் தோக்கவாடிக்கு அருகே வேலாத்தா கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. தோக்கவாடி காணி கன்னன், வெண்டுவன், காடை கூட்டத்தாரின் காணியாச்சி. இங்குள்ள காணியாச்சி தெய்வம் காகத்தில், (காகம் கன்னகுலத்தார் காணி) இருந்து தலைச் சுமையாக வந்த ஸ்ரீகாகத்தலையம்மன். இங்குள்ள வெண்டுவன் கூட்டத்தார் கன்ன கூட்டத்தாருக்கு பெண் கொடுத்து பெண் எடுத்த விதமாக தோக்கவாடியில் காணியுரிமை பெற்றவர்கள். இந்த வெண்டுவன் கூட்டத்தின் ஆதி கொங்கூர், அப்புறம் கூடலூர் சென்று காணிவாங்கி பின்னர் கன்னிவாடி கன்ன கூட்டத்தோடு கல்யாண உறவு கொண்டனர். கன்ன கூட்டம் கன்னிவாடி-தலையநாட்டை விட்டு வெளியேறி திருச்செங்கோடு வந்தபோது அவர்களோடு வந்த உறவினர் வகையராவாக வந்தவர்கள். ஆதி கன்னிவாடி கன்ன கூட்டத்துக்கும் கீழ்க்கரை பூந்துறை நாடு (திருச்செங்கோடு) வந்துவிட்ட கன்ன கூட்டத்தினருக்கும் நீண்டகால உறவு இருந்துவந்ததை கன்னிவாடி பட்டயத்தின் மூலம் அறியலாம்.

இந்த தோக்கவாடி வெண்டுவன் கூட்டத்தில் நாளும் கிழமையுமா வேலாத்தாள் என்னும் பெண் அவதரித்தார். வெண்டுவன் கூட்டத்தினர் ராசம்மா என்றும் வேலாத்தா என்றும் பேர்களை தங்கள் பெண் குழந்தைகளுக்கு அதிகமாக சூட்டுவது அவர்கள் பாரம்பரியம். ஆத்மசக்தியோடு பிறந்த பெண். பிறப்பிலேயே தெய்வீக தன்மையோடு ஒளி பொருந்திய அந்த குழந்தையை நன்முறையில் வளர்த்தனர். சிறுவயது முதலே சிறந்த சிவபக்தையாக வளர்ந்தார் வேலாத்தா கவுண்ச்சி. சமய இலக்கியங்கள், பக்தி இதிகாசங்கள் அனைத்தையும் கற்றார்.

வீர விளையாட்டுகள், போற்பயிற்சிகள், குதிரையேற்றம், சிலம்பம் என போர்க்கலைகளை கற்று குடியானப் பெண்களுக்கே உரிய வீரத்தின் சாட்சியாக வளர்ந்தார். சிறந்த மதிநுட்பம், கல்வி கேள்விகளில் வல்லமை, பிரச்சனைகளை எதிர்கொள்ளும் துணிச்சல், அதேநேரம் பாரம்பரிய பண்புகள், பெரியவர்களுக்கு மரியாதை, சுய ஒழுக்கம், அயராத விவசாயப் பணிகள் என்று அனைத்திலும் சிறப்பான முத்திரை பதித்தார்.



அந்த சமயத்தில் கொங்கதேசத்துக்கு மிலேச்சர்கள் அதிகமாக படையெடுத்து தொந்தரவு செய்து கொண்டிருந்தனர். பூந்துறை நாடும் விதிவிலக்கின்றி பாதிக்கப்பட்டது. திருச்செங்கோடு வட்டத்திலும் அடிக்கடி திடீர் படையெடுப்பு, ஆடுமாடு கொள்ளை, திருட்டு, வழிப்பறி, கொலை, வீடுகள் எரிப்பு என்று அந்த அந்நியர்கள் பெரும் தொந்தரவு செய்தனர். நாட்டுத் தலைவர்கள் பட்டக்காரர்கள் எல்லாம் பல முறை படையெடுத்து சென்றும் அவர்களைக் கட்டுப்படுத்த இயலவில்லை.

பல பெண்கள் தாலி இழக்கவும், குடி சாதிகள் உயிர் காக்க அபயம் கேட்டும் நின்றனர். காக்க வேண்டியவர்களோ கைவிரித்து விட, தனது குடிகளின் அன்றாட ஓலங்களை காணச் சகியாது இனி குடிகளைக் காக்க நாமே களத்தில் இறங்குவது என வெகுண்டெழுந்தார் வேலாத்தா கவுண்ட்சி. ஏற்கனவே போர்க்கலை மற்றும் நியாய விவகாரங்களால் புகழடைந்திருந்த வேலாத்தா போருக்கு அழைக்க பெரும்படை குறுகிய காலத்தில் திரண்டது. புழுதிக் காடுகள் போர்ப் பயிற்சிப் பட்டறைகளாயின. இந்த தகவல் ஏற்கனவே படைகொண்டு சென்று தோற்று திரும்பியவர்களை எட்டியது.

"நாங்களே நேர்ல போயும் ஜெயிக்க முடீல; நீ கூட்டஜ் சேத்திகிட்டு தோக்கவாடி போற" (தோக்கவாடி-தோற்று வருவதற்கா டி என்ற அர்த்தத்தில்) என்று இளக்காரம் பேசினார்கள் பட்டக்காரர்கள். சொற்கள் சுரீர் என்று குத்தியது. இதையே சவாலாக எடுத்துக் கொண்டு தங்கள் பங்காளிகள், மாமன் மச்சினன் வீட்டார் என அனைவரையும் சேர்த்துக் கொண்டு படைகட்டினார். மேட்டுக காட்டு வெள்ளாமை செய்து உடல் இறுகி போயிருந்த குடியானவர்களை போருக்கு தயாராக்கினார். வேகமும், வீரமும் கொண்டு ஆவேச உரை நிகழ்த்தி படைகளுக்கு தெம்பூட்டினார். எதிரிகளின் பலம், பலவீனம், இருப்பிடம் எல்லாம் உளவறிந்து போர் வியூகம் வகுத்து படை நடத்தி சென்றார்.


படைகள் வளைத்து வளைத்து தாக்கியது. வேலாத்தா கவுண்ட்சியின் வியூகம் நன்றாக வேலை செய்தது. போர்க்களத்தில் துர்க்கையைப் போல சுற்றிச் சுழன்று போரிட்டார். அவரது ஆக்ரோஷமும் வேகமும் கண்ட வேலாத்தாவின் படையினர் உற்சாகமடைந்தனர். அக்னிஜ்வாலையாக களத்தில் வேலாத்தா கவுண்ட்சி பேரொளி வீசி ஜொலித்தார். வேலாத்தாளின் வீச்சுக்கு எதிரிப்படைத் தலைவன் தலை உருண்டது. எதிரிப்படைகள் சிதறின. தப்பி ஓடும் வழிகள் அடைபட்ட நிலையில் பலர் கைதாயினர். சாதிக்க முடியாத செயலை இந்த தெய்வப்பெண் குடியானவர் படை கொண்டு சாதித்துக் காட்டினார். "தோக்கவாடி போற!" என்று பரிகாசம் செய்தும் ஜெயித்துக் காட்டிய வேலாத்தாளின் ஊருக்கு அன்றுமுதல் "தோக்கவாடி" என்றே பேர் வந்துவிட்டது.

"தோக்கவாடி போற னு பட்டக்காரன் கேட்டும் இந்த பிள்ள போய் ஜெயிச்சுகிட்டு வந்துருச்சே, என்ன ஒரு தாட்ரிக்கம்,சாமர்த்தியம்..", என்று கீழ்க்கரை பூந்துறை நாட்டில் காடு மேடு, பட்டி தொட்டி, கிணத்தடி, கோயில் என்று எங்கெங்கும் வேலாத்தா கவுண்ட்சியின் வீரம் எதிரொலித்தது.

தன் பெண்ணுக்கு இப்படி ஒரு புகழ் பரவுவது அவர் தந்தைக்கு மகிழ்ச்சி. வேலாத்தா கவுண்ட்சி மீண்டும் தனது விவசாயம், சிவ பக்தி பூஜை என்று அன்றாட வாழ்க்கைக்கு திரும்பினார். அவரது ஆன்மீக ஈடுபாடு குடும்ப வாழ்க்கைக்கு இடையூராகிவிடுமோ என்று பயந்தார் தந்தையார். அதேமாதிரிதான் இருந்தது. தனக்கு கல்யாணம் வேண்டாம் என்று அடம் பிடித்தார் வேலாத்தா. இல்லற வாழ்க்கை ஆன்மீக வாழ்க்கைக்கு இடையூறாக அமையும் என்று கருதினார்.

பெரியோர்கள் கூடி உரிய உபதேசங்கள் செய்தனர். இல்லற வாழ்வே ஆன்மீக வாழ்வையும் பூரணமாக்கும் என்றனர். பல உத்தம பெண்மணிகளின் வாழ்க்கையை உதாரணமாக காட்டியும், பதிபக்தி பரமனின் பக்தியை விடவும் மேலானது என்றும் எடுத்துரைத்து நல்வழி கூறினர். வேலாத்தாவும் நல்ல மனமாற்றம் அடைந்தார். அவர் கற்ற நூல்களும் அதே கருத்தையும் வலியுறுத்தியதை உணர்ந்தவராக மனத் தெளிவு பெற்றார். பெரியோர்கள் கூறுகிறார்களே என்றில்லாமல், முழு ஈடுபாட்டுடன் பதி-பத்தினி யாக, சம்சார வாழ்வின் மூலம் அற வாழ்வில் ஈடுபட்டு செய்யவேண்டிய கடமைகளைச் செய்து, சிவனருளைப் பெற எண்ணினார்.

வேலாத்தாவுக்கு தகுந்த மணமகனோடு நல்ல பொழுதில் கல்யாணமும் நிச்சயமாகியது. முகூர்த்த நாளில் எல்லா சீர்களும் செய்து தோக்கவாடியில் கொங்கு முறைப்படி பெண்வீட்டில் கல்யாணம் நடந்தது. கட்டியங்கள், பறை, கொம்பு, சங்கு, மேளதாளங்கள் முழங்க, அருமைக்காரர் முன்னின்று கல்யாணத்தை நடத்தி வைத்தார். மங்கள வாழ்த்து நாவிதன் ஓத, கம்பர் வாழ்த்தை புலவனார் ஓத கல்யாணம் இனிதே நிறைவுற்றது. எங்கும் மகிழ்ச்சி, சிரிப்பு. படை கட்டி போர் நடத்திய பெண் மணமாலை சூடி வெட்கம் கலந்து பூரித்து நின்றார்.

கல்யாணக் கோலம் களையாது மாப்பிள்ளையும், பெண்ணுமாக ஊர்கோயில் சென்றுவர போய்வரும் வழியிலேயே பூநாகம் தீண்டி மாப்பிள்ளை உயிர்நீத்தார். சொல்லவொணா துயரில் ஊரே மூழ்கியது. ஒளி பொருந்திய தெய்வப்பெண் வேலாத்தா உடனே எழுந்து, தான் தனது கணவனோடு வீரமாத்தி இறங்கப்போவதாக சொன்னார். வேலாத்தாவின் மீது உயிரையே வைத்திருந்த ஊராரும் உறவினர்களும் இதை அனுமதிக்கவே மாட்டோம் என்று கறாராக மறுத்தனர். ஆனால், தனது கருத்தில் உறுதியாக இருந்த வேலாத்தா, இது தனது உரிமை என்று கூறி, அரசனிடம் சென்று அனுமதி வாங்கி வந்து, தனது ஊரிலேயே தனது கணவனோடு சேர்ந்து வீரமாத்தி இறங்கி தெய்வநிலை அடைந்தார். தெய்வப் பெண்ணின் ஒளி அந்த வட்டாரத்தையே நிறைத்தது. அவ்விடத்தில் வேலாத்தாவின் பரம்பரையினர் கோயில் கட்டி விழா நடத்தி வழிபட்டு வருகின்றனர்.



இன்றளவும், வேலாத்தா சக்திவாய்ந்த பெண் தெய்வமாக தோக்கவாடி வெண்டுவன், கன்னன், காடை கூட்டங்களுக்கு அருள்பாலித்து வருகிறார். சாமானிய பெண்ணான வேலாத்தா கவுண்ட்சியின் வீர வரலாறு எங்கேயும் பதிவாகவில்லை. வாய்மொழி வழக்காகவே இன்றளவும் உள்ளது. இன்றைய கொங்கு பெண்களுக்கு வழிகாட்டியாகவும், போலி பெண்ணியம் பேசி மரபுகளையும் வரலாற்றையும் இகழ்ந்து வரும் முற்போக்குவாதிகளுக்கு சாட்டையடி கொடுப்பதாகவும் வேலாத்தா கவுண்ட்சி வரலாறு அமைகிறது.








Thursday 17 November 2016

கொங்கு விஷநீர் பிரச்னை - தீவிரமும் தீர்வும்

முன்பெல்லாம் கான்சர் என்பது சினிமாவில் மட்டுமே கேள்விப்பட்ட வியாதி. குழந்தையின்மை என்பது மிக அரிதாக இருந்த விஷயம். இப்போது கொஞ்சம் யோசித்து பாருங்கள், உங்கள் உறவினர் ஊர்-வட்டத்திலேயே நிச்சயம் நான்கு பேராவது கேன்சர் நோயாளிகளோ, குழந்தயின்மையாள் பாதிக்கப்பட்டவர்களோ இருப்பார்கள். செய்தி என்று பெருமூச்சு விடவேண்டாம். நீங்கள் ஈரோடு, நாமக்கல், கரூர், திருப்பூர் போன்ற மாவட்டங்களில் வசிக்கிறீர்கள் என்றால் உங்கள் வாழ்நாளுக்குள் உங்கள் குடும்பத்தில் மகன்-மகளோ அல்லது பேரன் பேத்தியோ நிச்சயம் ஒருவரையாவது நோயாளியாகப் பார்க்கத்தான் போகிறீர்கள். காரணங்கள் மற்றும் தீர்வுகள் பற்றி கொஞ்சம் பார்ப்போம்.

Friday 21 October 2016

கங்கா குலம்




காடாய்க்கிடந்த கொங்க தேசத்தை நாடமைத்த ஆட்சியாளர்களான கொங்க வெள்ளாளர்கள் கங்கா குலத்தை சார்ந்தவர்கள். கங்கா நதிகங்கா குலம் மற்றும் கங்கையுடன்  கொங்க வெள்ளாளர்கள் தொடர்புகளை பற்றி காண்போம்.

Monday 17 October 2016

குலத்தொழில்

குலத்தொழில் என்பது பிறக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் தெய்வம் போன்றது என்றால் மிகையல்ல. பல நூறு தலைமுறைகளாக அவன் வம்சத்துக்கு சோறு போட்டது. அவன் வம்சத்தொடு சேர்ந்து வாழ்ந்த பிற ஜாதியினருக்கும் சேவை செய்தது, பணத்தைத் தாண்டி. குலத்தொழில் என்பதை இன்று தவறாக சித்தரித்து, அவை நசியும்படியான சட்டங்களும் சமூக சூழல்களும் உருவாக்கிவிட்டார்கள். குலத்தொழில்களின் நியாமனான சமூக பங்களிப்பென்ன, இன்றைய முக்கியத்துவம் என்ன, மீட்பதின் தேவையென்ன என்பதைப் பற்றி கொஞ்சம் அலசுவோம்.

Wednesday 12 October 2016

கொங்கு மக்களின் குடிமகன் - சக்கரக்கத்தி

குடிமகன்-மங்களன்-நாவிதன்-சக்கரக்கத்தி-மருத்துவன்-பண்டிதன் என்று அழைக்கப்படும் கவுண்டர்களின் நலம்விரும்பிகளாகவும், நலம் பேணுபவர்களாகவும் காலகாலமாக வாழ்ந்துவரும் கொங்க நாவிதர் பற்றி விரிவாக காண்போம். நாவிதர் என்போர் சவரத் தொழில் செய்வோர் என்ற பிம்பம்தான் மனதில் உள்ளது. ஆனால் கொங்கு சமுதாயத்தைப் பொறுத்தவரை கவுண்டர்கள் வாழ்வில் நாவிதர்களுக்கு தனிப்பெரும் சிறப்பும், பொறுப்பும் உள்ளது.

Tuesday 11 October 2016

மழை வேண்டி கன்னியாத்தா வழிபாடு

‘மானத்த நம்பியல்லோ… மக்களத்தான் பெத்தோமய்யா… மக்களைத்தான் காப்பதுக்கு... மாரி மழை பெய்ய வேணும்’ எனப் பாடல்களைப் பாடியும், மழை வேண்டி வீடு, வீடாகச் சென்று ‘மழைச் சோறு’ பெற்றும் விநோத ‘மழைக் கன்னி’ வழிபாட்டை, கிராம மக்கள் நடத்தினர்.

Thursday 1 September 2016

நாட்டுப்பசுக்கள்

நாட்டுப்பசுக்கள் நமது கொங்கதேசத்தின் காராள வம்ச குடியானவர்களுக்கு தனிப்பெரும் தெய்வம், குடும்ப உறவு, அடிப்படை சொத்து. நாட்டுப்பசுக்களை பற்றி அடிப்படையான சில விஷயங்களை அறிவோம்.

Monday 8 August 2016

பெருமைமிகு சங்கு

பல தேசங்களாக பாரதம் பிரிந்திருந்தாலும் சில விஷயங்கள் பாரதத்தின் அனைத்து தேசங்களிலும் பொதுவாக பின்பற்றப்பட்டு அவை அணைத்து தேசங்களையும் இணைக்கும் ஒரு கலாசார சரடாக செயல்படும். அப்படிப் பட்ட விஷயங்களில் ஒன்று சங்கு. கொங்கதேசம் கடல் எல்லைகள் இல்லாத பூமி, ஆயினும் கொங்கில் சங்கு பல்வேறு விஷயங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. அதன் ஆன்மீக, மருத்துவ கலாசார காரணங்களே அதற்கு காரணமாகும். அவ்வாறான சில விஷயங்களை தொகுக்கிறோம்.

Thursday 28 July 2016

குலகுரு மரபு-ஓர் அறிமுகம்

குரு
குரு என்றால் இருளை விலக்குபவர் என்று பொருள். குரு, ஆச்சாரியர், உபாத்தியாயர் என்ற சொற்கள் வெவ்வேறு பொருள் கொண்டவை; ஆனால் தற்காலத்தில் ஒரே பொருளில் பார்க்கப்படுகின்றன. உபாத்தியாயர் கடமை கற்பிப்பதோடு முடிகிறது. ஆச்சாரியர் தான் கடைபிடிப்பதை, சோதித்து கற்பிக்கிறார். ஆனால், குருவானவர் சொல், செயல், ஸ்பரிசம், திருஷ்டி, சித்தம் போன்றவற்றால் அஞ்ஞானத்தை விலக்கி ஞானத்தை அருளவல்லவர். சிஷ்யனின் வாழ்வு முழுவதற்குமான ஞானத்தையும், நல்லருளை வழங்கி வழிநடத்தக் கூடியவர். ரத்த பந்தம் இல்லாமலேயே வாழ்வின் அனைத்து அம்சங்களும் பூரணமடைய வழிகோளுபவர். குருவே பிரம்மாவாக, விஷ்ணுவாக, சிவமாக அருள வல்லவர். குருவின் ரூபத்தில் மும்மூர்த்திகளையும் நாம் தரிசிக்கலாம். இந்த கருத்தை வேதங்களும், திருமூலர் திருமந்திரமும் பல இடங்களில் மாறாமல் செப்புகின்றன.

Tuesday 22 March 2016

சுதேசி பானங்கள்

சுதேசி பானம் என்பது நம் நாட்டில் நம் நாட்டவர்களால் தயாரிக்கப்படும் வெளிநாட்டு பானங்கள் அல்ல. தொன்றுதொட்டு நம் மண்ணில் கிடைக்கும் பொருட்கள் கொண்டு நம் மக்களால் தயாரித்து பயன்படுத்தப்பட்டு ஆரோக்கியத்தை மேம்படுத்திய பானங்களே சுதேசி பானங்களாகும். இவை நம் உடல் உறுப்புகளில் தேங்கிய நுண்கழிவுகளைக் கூட வெளியேற்றி, உடலுக்கு குளிர்சியூட்டி, ஜீரணத்தை பெருக்கி, சக்தியளிக்கும் பானங்களாகும். வரும் கோடை காலத்துக்கு குழந்தைகளுக்கும் உறவினர்களுக்கும் பெப்சி, கோலா மற்றும் பாட்டிலில் அடைத்த குளிர்பானங்கள் போன்ற வஸ்துக்களை விடுத்தது நம் வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்த சில சுதேசி பானங்களை கொடுத்துள்ளோம். குடியானவர்கள் பானங்களை தெரியாதவர்கள் தெரிந்து கொள்க.

Wednesday 16 March 2016

போராளீஸ் சாய்ஸ்ல விட்டவை

தமிழ்நாட்டு சாதி ஒழிப்பு புற்ச்சி போராளீஸ் சாய்ஸ்ல விட்ட சில சம்பவங்களை இங்கே நினைவூட்டுகிறோம். 

Monday 14 March 2016

உடுமலை சம்பவம்

இன்று உடுமலையில் ஒருவன் வெட்டிக் கொல்லப்பட்டால் ஊரே ஒப்பாரி வைப்பதுபோல பிம்பம் ஏற்படுத்தப்படுகிறது. மீடியாக்கள் மாறி மாறி கதறுகின்றன.

Sunday 13 March 2016

கோவை செழியன்

அதிமுக வில் எம்ஜிஆர் முதலாளி என்று அழைக்கும் அளவு மரியாதையும் தனிப்பட்ட அன்பையும் பெற்றவர் கோவை செழியன். நீங்கள் யாரை கைகாட்டுகிறீர்களோ அவரே சட்டமன்ற உறுப்பினர், அவரே எம்.பி, என்ற நிலையில் தேர்தல் நிர்வாக பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டிருந்தார்.

Tuesday 8 March 2016

பொன்னேர் பூட்டும் வைபவம்

பொன்னேர் பூட்டும் விழா, பொன்னேர் கட்டுதல் என்று குறிப்பிடப்படும் விழா நம் தொன்மையான விழாக்களில் ஒன்று. தற்காலத்தில் ஏறக்குறைய நாம் மறந்துவிட்ட பண்டிகை. அதென்ன, பொன்னேர் கட்டுதல்..?? தைப்பொங்கல் என்பது அறுவடை முடிந்தபின் நடக்கும் பண்டிகை போல, பொன்னேர் கட்டுவது என்பது சித்திரை மாதம் விதைக்கும் பருவத்தில் விவசாயத்துக்காக நிலத்தை உழுவதற்கு முன் கொண்டாடப்படும் குடியானவர் பண்டிகை. பாரத தேசம் முழுதுமே இப்பண்டிகை கொண்டாடப்பட்டது. தேசத்தின் அரசர் முதல் கிராமத்தின் ஊர் கவுண்டர்கள் வரை தங்கத்தால் செய்த கலப்பை கொண்டு (அல்லது சிறிது தங்க ஆபரணம் கொண்டு அலங்கரித்த கலப்பை கொண்டு) நிலத்தை உழுது உழவை துவக்கி வைப்பார்கள். தற்காலத்தில் கொங்குப் பகுதியில் அருகிப் போயிருந்தாலும் பாரதத்தின் பிற பகுதிகளிலும், பாரத ராஜ்யம் ஏற்பட்ட வெளிநாடுகளிலும் இன்றளவும் இப்பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுகிறது. கொங்குப் பகுதியில் எண்பது வயது தாண்டிய பெரியவர்கள் அவர்கள் சிறு வயதில் இப்பண்டிகை கொண்டாடட்டத்தை நினைவுகூறுகிறார்கள்.

Saturday 5 March 2016

நவீன மயானங்கள்

சமீப காலமாக தேசம் முழுக்கவே மெதுவாக பரவி வரும் நவீன முறை மின்மயான எரியூட்டு முறைகள் நம் பாரம்பரியப்படி சரியானவையா? இதனால் என்னென்ன பாதிப்புகள் என்று சற்று விரிவாக பார்ப்போம்.

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates