Trending

Saturday 19 December 2015

புண்யகோடி கதை

கன்னட நாட்டுப்புற கதைப்பாடல் - புண்யகோடி கதைப்பாடல்.. அவசியம் குழந்தைகளுக்கு போட்டுக் காட்டுங்கள். பல நூற்றாண்டுகளாக கர்நாடகத்தின் அற்புத லெஜென்டாக கூத்து முதல் கார்டூன், பள்ளி பாடம், பள்ளி நிகழ்ச்சிகள் என்று மக்களின் வாழ்வில் கலந்த பழம்பெரும் புகழ்பெற்ற கதையாகும். கதை சுருக்கம் படித்துவிட்டு கீழே கொடுத்திருக்கும் கூத்துப் பாடலைக் காணுங்கள். 

Friday 11 December 2015

வரன் தேடலில் சிந்தனை மாற்றம்

பெண்ணைப் பெற்ற மகராசர்களே.. உங்களால் இந்த சமூகம் சந்தித்த - சந்தித்துக் கொண்டிருக்கும் இழப்புகளை கொஞ்சம் பட்டியலிடுகிறோம் பாருங்கள்.. சமுதாயத்தில் உங்கள் எண்ணப்போக்கால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளைக் கொஞ்சம் கவனியுங்கள். கல்யாணம் செய்யும்போது எவை எவை பார்க்கப்படனும் என்று நாம் அறிவது அவசியம்.

Wednesday 9 December 2015

பனை நமக்கு துணை

"பனை நம்மிடம் அதன் அடிப்படை தேவையான நீரை கூட கேட்பதில்லை. ஆனாலும் ஒரு மனிதனுக்கு தேவையான உணவு, உடை, வீடு, செல்வம் பாதுகாப்பு என அனைத்தையும் நேரடியாகவே தரவல்லது பனை. பனையை நாம் பயன்படுத்துவதில்லை என்பதால் பனை பயனற்றது என்றாகாது. குடியானவர்களின் இன்றைய பல்வேறு பிரச்சனைகளுக்கு பனையிடம் தான் தீர்வுள்ளது. சீமைமாடும், சாராயமும் செய்யும் அத்தனை தீங்குகளையும் செய்யும் வெள்ளை சர்க்கரையிடம் இருந்து நம்மை காக்க பனையால் தான் முடியும். ஆரோக்கியம், மருத்துவம், விவசாயம், நீர்வளம், பாரம்பரியம், குடும்பம் முதல் தேசியம் வரையிலான பொருளாதாரம் என குறிப்பிட்டு சொல்ல முடியாதவாறு நீண்டுகொண்டே போகும். நாட்டுபசுவின் அவசியத்தை போல, பனையின் மகத்துவத்தை நேரடியாகவோ எளிமையாகவோ புரிய வைத்துவிட முடியாது. ஆனாலும் நாட்டு பசுவும், பனையும் இன்றி சனாதன, சாஸ்வத, சுதேசி பொருளாதாரத்துக்கு வாய்ப்பே இல்லை ஆள் இல்லாத ஒரு காரணத்திற்காக பனை இன்று வெட்டி வீழ்த்தப்பட்டு வருகிறது. பனையின் அவசியம், இழப்பதினால் ஏற்படும் கேடு என பனையை பற்றி கொஞ்சம் பேசுவோம்.

Thursday 3 December 2015

வாழைத் தோட்டத்து அய்யன்

கருத்தம்பட்டி வாழைத் தோட்டத்து அய்யன் கோவை மவாட்டத்தில் புகழ் பெற்று விளங்குகிறார். இப்பகுதியில் குடியானவராக அவதரித்த அய்யனின் இயற்பெயர் சின்னையன், அவரது தோட்டம் வாழைத் தோட்டம். இவர் செங்காளியப்ப கவுண்டரின் மகனாக 1777ல் அவதரித்தார். 12 வயது வரை கல்வி பயின்றார். பின் இவரது தந்தை விருப்பப்படி மாடு மேய்க்கும் தொழிலை மேற்கொண்டார். 

Tuesday 1 December 2015

வள்ளல் சடையப்ப கவுண்டர்

வெள்ளாள குணத்தின் சிகரமாகவும் சிறந்த உதாரணமாகவும் வெள்ளாளர் குலத்தின் மகாமேருவாகவும் இன்றளவும் ஒளிவீசி நம் புகழ் பரப்பிக் கொண்டிருக்கும் தர்மாத்மாவான வள்ளல் சடையப்ப கவுண்டரைப் பற்றிய விரிவான பதிவு. 

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates