விஜயதசமியன்று தங்கள் காணி கொங்கப்புலவனாரிடம் குழந்தைகளை அழைத்துச் சென்று வித்யாரம்பம் செய்வது கொங்க வெள்ளாள கவுண்டர்களின் பாரம்பரிய மரபு. கல்விகற்றலின் துவக்கம் வித்யாரம்பம்.
சரஸ்வதி தேவியின் பூரண அருள்பெற்ற, வாக்குப்பலிதம் உள்ள கொங்கப்புலவனார்கள் மூலம் வித்யாரம்பம் செய்வதால் அறிவுக்கண் துலங்கும். கொங்கப் பசுவின் பாலில் (தம்ளரில்) எழுத்தாணி கொண்டு ஓம் அல்லது 'அ' எழுதி அதை குழந்தைக்கு குடிக்கக் கொடுப்பார்கள். இதை எழுத்தாணி பால் கொடுப்பது என்பார்கள். உயிரின் இயக்கத்துக்கு தாய்ப்பால் எப்படியோ அதுபோல ஞானசக்தி எழுத்தாநிப்பால் மூலம் வளம்பெறும். பின்னர் மஞ்சள் கிழங்கினால் நாவில் எழுதி, அரிசியில் கைப்பிடித்து எழுதப்பழக்குவார்.வெள்ளோடு ராசா கோயிலில் நடந்த வித்யாரம்பம் சடங்கின் படங்கள் கீழே.
சரஸ்வதி தேவியின் பூரண அருள்பெற்ற, வாக்குப்பலிதம் உள்ள கொங்கப்புலவனார்கள் மூலம் வித்யாரம்பம் செய்வதால் அறிவுக்கண் துலங்கும். கொங்கப் பசுவின் பாலில் (தம்ளரில்) எழுத்தாணி கொண்டு ஓம் அல்லது 'அ' எழுதி அதை குழந்தைக்கு குடிக்கக் கொடுப்பார்கள். இதை எழுத்தாணி பால் கொடுப்பது என்பார்கள். உயிரின் இயக்கத்துக்கு தாய்ப்பால் எப்படியோ அதுபோல ஞானசக்தி எழுத்தாநிப்பால் மூலம் வளம்பெறும். பின்னர் மஞ்சள் கிழங்கினால் நாவில் எழுதி, அரிசியில் கைப்பிடித்து எழுதப்பழக்குவார்.வெள்ளோடு ராசா கோயிலில் நடந்த வித்யாரம்பம் சடங்கின் படங்கள் கீழே.
No comments:
Post a Comment