Trending

Thursday, 20 July 2017

சேரனின் சிற்றரசர்கள் சிலர்

சேரர் காலத்தில் கொங்கின் ஆட்சியாளர்களாக இருந்தனர் சிலர்.. பின்னால் வந்த சோழர், பாண்டியர், நாயக்கர், சுல்தான், ஆங்கிலேயர் ஆட்சிக்காலங்களில்.. ஒவ்வொரு ஆட்சியின்போதும் சிலர் பதவி பெற்றனர் சிலர் பதவி இழந்தனர்.. கல்வெட்டு மற்றும் செப்பேடு ஆவணங்கள் மூலம் அறியப்படும் சில சேரர் கால கொங்கு வெள்ளாள கவுண்டர் ஆட்சியாளர்கள்..

Tuesday, 11 July 2017

பழ நாகம்பள்ளி

ஆதி அந்துவன் சாத்தந்தை பூச்சந்தை கூட்டத்தவர்களின் ஆதி காணியாச்சி அம்மன் கரூர் நாகம்பள்ளி ஸ்ரீ செல்லாண்டியம்மன். இவ்வூர் பழநாகம்பள்ளி என்று வழங்கப்படுவது அதன் தொன்மையை உணர்த்தும். கொங்கு இருபத்தி நான்கு நாடுகளில் வெங்கால நாட்டைச் சேர்ந்தது நாகம்பள்ளி காணி. நாகம்பள்ளி கவுண்டர்கள் மைசூர் ஆட்சி காலத்தில் கூட மூன்று நாட்டு பிரச்சனையை விசாரித்து பஞ்சாயத்து செய்யுமளவு செல்வாக்குப் பெற்றிருந்துள்ளனர். இங்கிருந்து கொங்கின் பல பகுதிகளுக்கு குடியேறி சென்ற குடியானவர்கள், சென்ற இடங்களில் ஆட்சி அதிகாரத்தோடு வாழ்ந்துள்ளனர்.

Wednesday, 5 July 2017

அமரர் பெரியசாமி தூரன்

போன நூற்றாண்டைச் சேர்ந்த நம் கொங்கு குடியானவர் தமிழறிஞர் ஸ்ரீமான் பெரியசாமி தூரன். மொடக்குறிச்சி கிராம. கொங்கில் சேரனின் ஆட்சி நிலைபெறச் செய்து கொங்கு குடியானவர்களின் ஆட்சிக்கு அடிகோளிய தூரன் கூட்டத்தைச் சேர்ந்தவர். மொழி, குழந்தை இலக்கியம், இசை என்று மூன்று பெரும் தளங்களில் தனக்கென தனிமுத்திரை பதித்து, இன்றுவரை அவர் இடத்தை நிரப்ப இயலாத அளவு பெரும்பணி செய்தவர். அவர் வாழ்ந்தபோதும், மறைந்தபோதும் சர்க்கார் மற்றும் தமிழறிஞர்கள் அவரை அங்கீகரிக்கவில்லை. அவரைப் பற்றி கவுண்டர்கள் அறிந்துகொள்வது அவசியம். அமரர்.பெரியசாமி தூரன் பற்றி மாற்று சமூகத்தவரும், தற்கால இலக்கிய ஜாம்பவானுமான திரு.ஜெயமோகன் எழுதிய புகழுரை, கீழே.

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates