Trending

Wednesday 30 July 2014

கொங்கு கவுண்டர்கள் கல்யாணத்தில் குலகுரு

கொங்கு கவுண்டர்கள் கல்யாணத்தில் குலகுரு வந்து ஆசி வழங்கும் மரபு. பல காலமாக திராவிட கம்யூனிச கயவர்களால் உடைக்கப்பட்ட மரபு தற்போது மீண்டு வருகிறது.

ஏழூர் பண்ணை கூட்டத்தில் கலியாணி பிரிவின் குலகுருவாகிய அய்யம்பாளையம் மடம் ஸ்ரீ சிதம்பர குருக்கள் அவர்கள் மணமக்களை ஆசீர்வதிக்கும் வீடியோ.



மற்றுமொரு கல்யாணத்தில் காலமங்கலம் கன்ன கூட்ட குலகுருவும், குருமாதாவும்..


கொங்கு கல்யாணத்தில் பிராமணர்கள்

கொங்கு திருமணங்களில் பிராமணர்கள் இல்லை என்று ஒரு கூட்டம் (திராவிட-முற்போக்கு கும்பல்) சொல்லிக்கொண்டு திரிகிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. கொங்கு மக்கள் என்று கொங்கு நாட்டுக்குள் ஆட்சியமைத்தார்களோ அன்றில் இருந்தே நம்மோடு வாழ்ந்து வருபவர்கள் நம் கொங்கு பிராமணர்கள். நமக்கு குலகுருக்கலாகவும், காணி கோவில் குருக்களாகவும் இருந்து கொங்கு சமூகம் ஒழுக்கமாக வாழ நல்வழி காட்டி வந்தனர். நம் கொங்க தேச பிராமணர்கள் பலர் நமக்கு குலகுருவாக இருந்து வருகின்றனர். அவர்களுக்கு நம் முன்னோர் செப்பேடு பட்டயங்கள் எழுதி கொடுத்து போற்றி வழிபட்டு வந்துள்ளனர்.

கொங்க குலகுருக்கள் பற்றி மேலும் அறிய இங்கு கிளிக் செய்யவும்.

கொங்கு வெள்ளாளர் திருமணத்தில் பிராமணர்கள் பங்கு குறித்து மங்கல வாழ்த்தில் குறிக்க பட்டுள்ளது.

குருக்களே அக்காலத்தில் திருமணங்களை நிச்சயித்து வந்துள்ளனர். இதனை மங்கலவாழ்த்தில் "வேதியன் பக்கம் விரைவுடனே சென்று"என்ற வரி மூலம் உணரலாம். கொங்கர் திருமணத்தின் ஆரம்பமே இதுதான். ஏனெனில் பிரும்மச்சாரிகள் அனைவருக்கும் குருவே பொருப்பு. இதனால்தான் "பிரும்மச்சரியங்கழித்தல்" என்ற சீரும் உள்ளது.

இதேபோல் கைகோர்வை சீரின் பொழுது குருக்கள் மறைகூறி ஆசி தந்துள்ளனர். இதனை மங்கலவாழ்த்தில் "மறையோர்கள் ஆசிகூற" என்ற வரிமூலம் உணரலாம். இவ்வாறு திருமணம் நிச்சயிக்கவும், ஆசி கூறவும் செய்த குருக்களுக்கு "மங்கிலியவரி" எனும் மாங்கல்யவரியையும் செலுத்தி வந்துள்ளனர்.

மேலும் 'வேதம் ஓதிடும் வேதியர் வாழி' என்பதும் மங்கல வாழ்த்தில் வரும் வரியாகும்.

மேலும் பிராமணர்கள் கொங்கு திருமணத்தில் பங்கெடுத்ததற்கு அத்தாட்சியாக அக்காலத்தில் எழுதப்பட்ட ஒரு சமூக ஆய்வு நூலின் ஒரு பகுதியையும் இங்கு காணலாம்.


1 comment:

  1. மணிவேல் கவுண்டர்18 October 2015 at 07:21

    வருஷம் முழுசும் கறி-சாராயம் போட்டுகிட்டு, பொம்பள பொறுக்கிட்டு எல்லா அக்கிரமும் பண்ணிக்கிட்டு திரிஞ்சாலும் அவன் கார்த்திக மாசம் மாலை போட்டுட்டா அவனை சாமி னு கூப்பிடுறோம்.. அவன் அந்த மாசம் பக்தியா ஒழுக்கமா இருக்கறதால.. இதே பிறந்தது முதல் இறப்பது வரை, ஒவ்வொரு னாலும் 24 மணிநேரமும் ஆச்சாரங்கள், பக்தி, ஆன்மிகம், என்று எவ்வளவோ நெறிமுறைகளோடு ஆயுள் முழுசும் வாழ்ந்து, அதையே தலைமுறை தலைமுறையா பல நூற்றாண்டு பின்பற்றி வரும் பிராமணர்களை ஏன் சாமி னு சொல்லக்கூடாது...?? பிராமணர்கள், சந்நியாசிகள், மகான்கள் போன்றோரை சாமி என்றுதான் அழைக்க வேணும்...

    ReplyDelete

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates