Trending

Monday 22 July 2013

காதல் தமிழனின் பூர்வீக கலாச்சாரமா..??

காதல் தமிழனின் பூர்வீக கலாச்சாரமா..??



காதலை தமிழர்களின் பூர்வீக வழக்கம் என்று முற்போக்கு (புறம்போக்கு) ~ தீரா விட~ தலித்திய ~பெண்ணிய~கம்யுனிஸ முகமூடியணிந்த வெளிநாட்டு கிறிஸ்தவ கைக்கூலிகள், கள்ள திருமணங்களுக்கு தூண்டி வருகிறார்கள். காதலை சகஜப்படுத்துகிரார்கள்.


சங்க காலத்தில் பாலிய வயதிலேயே திருமணம் நடந்து வந்தது. சிறு வயதிலோ அல்லது பருவம் அடைந்த உடனேயோ திருமணம் முடிக்கப்படும். அப்படியிருக்க, எப்படி இந்த அறிவு அழிக்கும் காதல் வந்திருக்கும்??

அந்நாளில் ஆண்-பெண் உறவில் திருமணத்தின் முன் காதல் என்பதே கிடையாது. காதல் என்றால் அது தலைவன்-தலைவி இடையே திருமணத்தின் பின் வருவது தான். திருமனத்தின்முன் வருவது களவு என்று குறிக்கப்பட்டது. குடும்ப-சமூக-இன-கலாச்சார மரபுகளை மீறி வீட்டாருக்கு தெரியாமல் நடப்பதால் அது களவு எனப்பட்டது. அதாவது திருட்டுத்தனம். இன்றைய வழக்கில் “கள்ளக்காதல்”...

உதாரணம்: கண்ணகி கோவலன் திருமணம் பற்றி சிலப்பதிகாரம் புகார் காண்டத்தில் கூறப்பட்ட செய்தி. 

கண்ணகியின் வயது: “ஈர்-ஆறு ஆண்டு அகவையாள்...” அதாவது 2X6 =12 வயது 
கோவலனின் வயது: “ஈர்-எட்டு ஆண்டு அகவையான்..” அதாவது 2X8=16 வயது 

குறிப்பு: இவர்கள் சொல்லும் தமிழினம் என்ற ஒன்று கிடையாது. அந்நாளில் சேரர் சோழர், பாண்டியர், தொண்டை தேசங்கள் இருந்தன. முழு தமிழ்நாடு என்றோ பொதுப்படையான தமிழர் என்ற கலாச்சாரமோ ஒன்றும் கிடையாது. தமிழர் கலாசாரம் என்று, இன்று பொதுமைப்படுத்தப்படும் ஒன்று பல்வேறு பண்பட்ட சாதிகளின் வழக்கங்களே. தமிழர் தமிழினம் என்ற ஒன்று, மொழிவாரி மாநில பிரிப்பின் பின் ஏற்படுத்தபட்டதே. சங்க இலக்கொயங்களிலும் தமிழினம் என்றோ-தமிழர் கலாசாரம் என்றோ எதுவும் குறிப்பிடப்படவில்லை.

No comments:

Post a Comment

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates