பூந்துறை காடை குலத்தைச் சேர்ந்த அழப்பிச்சாக் கவுண்டர் என்பவர் விசயநகர மன்னர் அரண்மனையில் உள்ள ஒரு அடங்கா குதிரை ,ஏறினால் தண்ணீரில் தள்ளும் அக்குதிரையை அடக்க அடிவயிற்றில் சுண்ணாம்புக் கல்லைக் கட்ட யோசனை கூறிய தன் மெய்க்காப்பாளன் உப்பிலிய சமுதாயம் நியாயம் பேச பூந்துறையில் கட்டி கொடுத்த மேடை இது..
கொங்கு உப்பிலிய சமூகம் கொங்கு பதினெட்டு சாதிகளுள் ஒன்று. கொங்கு நாட்டின் பூர்வ குடிகளில் ஒன்று. சாரை மண் கொண்டு உப்பு காய்ச்சுவது, வெடியுப்பு தயார் செய்வது உட்பட கெமிஸ்ட்ரி பணிகளில் சிறந்தவர்கள். பின்னாளில் வெள்ளையர் சதியால் உப்பு காய்ச்சும் தொழிலை விட்டு கட்டட பணிகளுக்கு சென்றுவிட்டனர் (இரு நூற்றாண்டுகள் முன்).
கொங்குநாட்டின் பதினெட்டு சாதிகளுக்கும் இருப்பது போல, இவர்களுக்கும் குலகுரு உண்டு. அவர் ஈரோடு நஞ்சை ஊத்துக்குளியில் உள்ளார். தற்கால சூழலில் பொருளாதார நிலையில் பின்தங்கி இருபினும் இன்னும் தங்கள் குலகுருவை மறவாமல் இருப்பது மிகவும் பாராட்ட தக்க விஷயம். கொங்கு மக்கள் அனைவரும் தங்கள் குலகுருவை அடையாளம் கண்டு தவறாது குலகுரு கடமைகளை பின்பற்றவேண்டும்.
நன்றி: சரவணன் துரைசாமி
No comments:
Post a Comment