சாதி அல்ல சமூகம்.. வாழ்க்கைமுறை
தற்கால சமுதாய மாற்றங்களால் சாதி என்பது கெட்ட
வார்த்தையாக சித்தரிக்கபட்டுவிட்டது. சாதி என்பது உண்மையில் என்ன..?
நாம் வாழும் வாழ்க்கை முறை, கலாச்சார நியதி,
செய்ய வேண்டியவை செய்ய கூடாதவை என பிரித்து தெளிவுபடுத்துவது. சாதியின் பெயரால் மக்களுக்குள் வேற்றுமையும் ஏற்றதாழ்வையும்
எதிர்க்கிறோம் என்னும் சில கட்சிகள் மொழியின் பெயரால் தமிழன்-கன்னடன்-மலையாளி
என்றும்.. பூகோள ரீதியாக திராவிடன் ஆரியன் என்றும் பிரித்து ஏற்ற தாழ்வு
கற்பிக்கிறார்கள்.. அவர்கள் ஆட்சியை பிடிக்க சில வேற்றுமைகளை ஊக்குவிப்பார்களாம்,
நாம் நமது கலாச்சாரம்
பாரம்பரியம் பின்பற்றினால் தவறாம்..அவர்களின் பேச்சை கேட்டு நமது
பாரம்பரியத்தையும், மிக சிறந்த
பண்பாட்டு வழக்கத்தையும் கைவிடுவது முட்டாள்தனம்.
சிறந்த குணங்களை கொண்ட சமூகங்கள் தழைத்தன. அந்த ஆளுமையால் காலபோக்கில் தன்னை சார்ந்து இருந்தோரை மட்டம் தட்டுவது அடிமைபடுத்தி கொடுமை படுத்துவது என்று ஒருசிலர் ஆரம்பித்த தவறுகள் இந்த அற்புதமான சுயசார்பு சமூக கட்டமைப்பையும் கலாச்சார நியதிகளையும் அழிக்கும் படியான சூழலை உருவாக்கி விட்டது.
சிறந்த குணங்களை கொண்ட சமூகங்கள் தழைத்தன. அந்த ஆளுமையால் காலபோக்கில் தன்னை சார்ந்து இருந்தோரை மட்டம் தட்டுவது அடிமைபடுத்தி கொடுமை படுத்துவது என்று ஒருசிலர் ஆரம்பித்த தவறுகள் இந்த அற்புதமான சுயசார்பு சமூக கட்டமைப்பையும் கலாச்சார நியதிகளையும் அழிக்கும் படியான சூழலை உருவாக்கி விட்டது.
No comments:
Post a Comment