Trending

Monday 31 December 2012

கொங்கு வரலாற்றில் கன்ன குலம்

கன்னிவாடி (தலையநாடு), நசியனூர், காஞ்சிக்கோயில், மோரூர்,மொளசி போன்ற நாடுகளின் பட்டங்கள், ஏராளமான காணியாச்சி கோவில்கள், நான்கு பிரிவுகள், கோட்டை கொத்தளம், 34 தலைமுறை தொடர்ந்து ராஜ்ய பரிபாலனம் என கொங்கதேசத்தின் மிக நீண்ட ஆட்சியை நடத்திய கன்ன குலத்தின் பெரியோர் சிலரை பற்றிய பதிவு.

கன்னிவாடி மும்முடி மன்றாடியார்:
-------------------------------------------------------
மதுக்கரை செல்லாண்டியம்மன் கோவிலானது அக்காலத்தில் மிக பிரசித்தம். கொங்கு மக்கள் அனைவரும் பொதுவாக வணங்கும் தெய்வமாகும் (அனைத்து கொங்கு மக்களுக்கும் ஆதி காணி என்பாரும் உண்டு. இதர (சோழிய/பாண்டிய/வீரக்கொடி) வேளாளரும் இங்கு வந்து வணங்குவர். அண்ணன்மார் கதை மூலமும் அறியலாம். கோவில் விழா மூவேந்தர்களும் வந்திருந்து சிறப்பு செய்யும் வண்ணம் விமரிசையாக கொண்டாடப்படும். அப்படி ஒரு சிறப்புமிக்க விழா காலத்தில் ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருந்து கன்னிவாடி வந்த குடியானவர் கன்னிவாடி காணிக்குரிய கன்னகுல கந்தசாமி கவுண்டர் மகன் நல்லதம்பி கவுண்டரும் சென்றிருந்தார். 

விழாவின் போக்கில் இணக்கத்தோடு இருந்த மூவேந்தருக்கும் கோவிலின் மேல் உள்ள அதிகாரம் குறித்து எல்லை தகராறு ஏற்பட்டது. ஆனால் அதை தீர்த்து வைக்க துணிவோ, திறமையோ எவருக்கும் ஏற்படவில்லை. மூன்றில் ஒரு அரசனுக்கு பாதகமாக பேசிவிட்டாலும் தலை தப்பாது என்ற பயம். பஞ்சாயத்து செய்வதில் வல்லவரான நல்லதம்பி கவுண்டர் முன் வந்தார். மூவேந்தரையும் தீர்ப்புக்கு கட்டுப்படும் உறுதியை வாங்கிக்கொண்டு, வாதங்களையும் பிரதிவாதங்களையும் கேட்டறிந்தார். பின்னர் புதிய யோசனையாக மதுக்கரை செல்லாண்டியம்மன் கோவிலையே மையமாக வைத்து மூன்று கூறாக வேந்தர்களின் எல்லைகளை வகுத்து அனைவரும் ஏற்றுக்கொள்ளும் படியான தீர்ப்பை கூறினார். அக மகிழ்ந்து போன மூவேந்தர்களும் நல்லதம்பி கவுண்டரின் திறமையை கொண்டாடி அவருக்கு “மும்முடி மன்றாடியார்” என்னும் பட்டத்தோடு கன்னிவாடி ராஜ்ஜிய அதிகாரத்தையும் வழங்கினர். கொங்கு நாட்டின் பட்டகாரர்களில் மூவேந்தர்களும் முதன்முதலில் சூட்டிய மும்முடி பட்டம் கன்ன குலத்திற்கே ஆகும். பின்னர் அவர் வழி வந்த ஆட்சியாளர்களுக்கும் மூவேந்தர்ரின் குலகுருக்கள் வந்து முடிசூட்டி வைப்பார்கள். மூவேந்தருக்கும் நாட்டமையாக இருந்த நல்லதம்பி கவுண்டர் கன்ன குலத்தின் முதல் பட்டக்காரர்.




இவ்வளவு பெருமை மிகு ராஜ்ஜியத்தை, கன்ன குல பெண்ணின் சவாலுக்காக கலப்பு மணத்தை எதிர்த்து ராஜ்ஜியம் துறந்து வெளியேறிய மாண்பும் இதே கன்ன குலத்திற்கு சேர்ந்தது. 

ஒரு நாள் ஒரு அழிசாதி பெண்ணுக்கும் கன்ன குல பெண்ணிற்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில், அழிசாதிபெண் “உன்னை என் அண்ணனுக்கு கட்டி வைக்கிறேன” என்று சபதமிட, “எங்க வீட்டு கருநாயை உன் அண்ணனுக்கு கட்டி வைப்பேன்” என்று எதிர்சபதமிட்டார் கன்ன குல பெண். அரசனின் படையே அழிசாதிகளுக்கு சாதகமாக இருந்தும் தன் உறவினர்கள், வேட்டுவர், குடிவண்ணான், நாவிதர், தோட்டி துணையோடு பள்ளி மணமகனுக்கு கருநாயை கட்டிவைத்துவிட்டு, சபதத்தை நிறைவேற்றி, கன்னிவாடியை துறந்து வெளியேறினர் கன்ன குலத்தார். அப்போது பின்தொடர்ந்த படையை திசை திருப்ப பொற்காசுகளை சிதறி விட்டனர். அதை பொறுக்கி கொண்டு படை திசை மாறியது. அந்த இடமே இன்றைய (தாராபுரம் அருகே) பொன்பரப்பி. தங்கள் இன பெண்ணின் சபததிற்காகவும், குல மானதிற்காகவும்-பெரும் படையையும் எதிர்த்து, செயல் முடித்து, முடி துறந்த மாண்பை கொண்டாடியே தீர வேண்டும். இன்றுள்ள கன்னன்-கன்னந்தை, மோரூர்-மொளசி சர்டிபிகேட் நாட்டுகவுண்டர்கள் அனைவரும் இந்த நல்லதம்பி மன்றாடியாரின் வழித்தோன்றல்களே.

சூர்ய காங்கேயன்:
----------------------------
கன்னிவாடியை விட்டு வெளியேறிய நல்லதம்பி மன்றாடியார் தலைமையிலான கன்ன குலத்தார் பல்வேறு காணிகளில் குடியமர்ந்தனர். ஆதி கன்னன், ஆதி கன்னந்தை, ஆதி நாட்டார் என்று மூன்று பிரிவாக பிரிந்திருந்த கன்ன கூட்டத்தில் ஆதி நாட்டார் பிரிவு கண்ணபுரம் என்ற ஊர் உருவாக்கி குடியேறிவிட்டார்கள். நாட்டார் பிரிவல்லாதவர்கள் பட்டக்காரர் தலைமையில் வேறு இடங்களுக்கு சென்றனர். அங்கே ஆதி கன்ன கூட்ட குடியானவர் குடும்பத்தில், புங்கங்குடிசையில் ஒரு விடியற்காலை பொழுதில் இளம்சூரியனை போல் ஆண்மகவு பிறந்தது. சூர்யகவுண்டன் என்று பெயரிட்டனர். (காடை குல பட்டயத்தில் சூரிய காங்கேயன் ஆதி கன்னன் கூட்டம் என்றே குறிக்கப்படுகிறார்). சூர்யகவுண்டன் பெண் கட்டியது மோரூர் காணியாளர்களான ஆந்தை கூட்டத்தில் (மோரூர்-தற்போதைய திருச்செங்கோடு) கீழ்கரை பூந்துறை நாட்டு ஆந்தை குலத்தோர். நல்லதம்பி மன்றாடியாரும் திருச்செங்கோடு பகுதியில் குடியமர்ந்தார். (இன்றும் கன்ன குலத்தாரின் குல கோவில்களை கவனித்தால் கன்னிவாடியில் இருந்து திருச்செங்கோடு வரை வரிசையாக பல கோவில்கள் இருக்கும்). இப்படியாக கன்ன கூட்ட குடியானவர்கள் நாடோடிகளாக வந்து தங்களுக்கு உரிமையற்ற பூமியில் பிழைக்க நேர்ந்தது.

வளர்ந்த சூர்யகாங்கேயன் மக்கள் தனது அப்பிச்சிமாரின் அவைக்கு சென்று தனக்கென ஒரு நிலம் வேண்டுமென கேட்டார்கள். அவரின் உறவுகள் அனைவரும் பார்க்க சபைநடுவே “மூவேந்தர் சூட்டி கொடுத்த ராஜ்ஜியத்தையே தொலைத்த உங்களுக்கு காணி ஒரு கேடா..! பறைச்சேரி தான் உங்களுக்கு காணி..” என்று வார்த்தைகளால் சுட்டார். கூனி குறுகிப்போன சூர்யகவுண்டர் ஆங்காரமும் ஆற்றாமையும் தூக்கத்தை தொலைக்க, அங்கிருக்க முடியாது, வீரபாண்டிய மன்னனின் படையில் சேர்ந்தார். என்ன செய்வது கெட்டாலும் மேன்மக்கள் அல்லவா..! இளம் வயதிலேயே தனது வீரம்-அறிவுதிறத்தால் வெகு விரைவில் தலைமை பொறுப்புக்கு வந்தார். அந்த சமயத்தில் பாண்டியனாலும் வீழ்த்த முடியாதவாரு வானாதிராயன் என்னும் மன்னன் (இன்றைய ஆத்தூர்) பகுதியில் கோட்டை கொத்தளத்தொடு விளங்கினான். மன்னன் தொடர் தோல்வியால் மனம் உடைந்து வெதும்பி போய் இருந்தார்.

இதை சவாலாக ஏற்று சிறிய படையோடு கொங்குச்சிங்கம் கிளம்பியது. கோட்டையை நன்கு நோட்டம் விட்டார். பின்னர் பண்டிகை நாளில் கோட்டையின் தளபதிகள் வெளியே வந்தபோது ஒரு குழு உட்புகுந்து கோட்டையையும் ஒரு குழு வெளியில் இருந்த வீரர்களையும் கொரில்லா போர் முறையால் அழித்தது. வானாதிராயனை உயிரோடு பிடித்து வந்து வீரபாண்டியன் முன் நிறுத்தினார். சேகுவேரா, சத்ரபதி சிவாஜி, தீரனார், மாசேதுங், ஹோசிமின் போன்றோருக்கு முன்னரே சூர்யகவுண்டர் கொரில்லா யுத்த முறையை கச்சிதமாக பயன்படுத்தியது நினைவில் வைக்க வேண்டியது. 



இவ்வெற்றியால் சூரியகவுண்டருக்கு காங்கேயன் என்ற பட்டப்பேர் கிடைத்தது. வெற்றி மகிழ்ச்சி மனதை நிறைத்து விழியை நிரப்ப, பாண்டிய மன்னன் சூர்யகாங்கேயனின் வீரத்துக்கும் அறிவுக்கும் ரசிகனானான். “என்ன வேண்டுமோ, கேள் சூர்யகாங்கேயா” என கேட்க, தன் உள்ளத்தில் எரிந்து கொண்டிருந்த நெருப்பை கொட்டினார். பாண்டிய மன்னனும் ‘இம்முடி காங்கேய மன்றாடி’ என்று பெயரிட்டு மோரூர் நாட்டின் பட்டத்தை சூர்யகாங்கேயனுக்கு அளித்தான்.

மோரூர் காணியில் கூனி குறுகி வெளியேறியவர் அதே காணி உட்பட நாட்டிற்கே பட்டக்காரராக திரும்பினார். மனதின் தீ பிரளயமாக மாற மோரூர் ரத்தகாடானாது. பைரவ உக்கிரத்தோடு ருத்திர தாண்டவம் ஆடினார் சூர்யகாங்கேயன். மாமன்மார்களின் பண்ணை, வீடு,மடம்,கோவில் என அனைத்தயும் உடைத்து அழித்து சர்வ நிர்மூலமாக்கி கோர தாண்டவம் ஆடினார். பதறியும் சிதறியும் தங்களின் தவறை உணர்ந்து நாட்டை விட்டு வெளியேறினர். மோரூர் நாட்டை ஆண்ட சூர்யகாங்கேயன் தம்பி முத்துசாமி கவுண்டர் பின்னாளில் தனது முன்னோரின் கன்னிவாடி ராஜ்ஜியத்தையும் மீட்டு அங்கு திரும்பினார். அவரின் வழிவந்தவர்கள் மோரூர் நாட்டின் ஆட்சி பொறுப்பை கவனித்து வந்தார்கள். மோரூரில் இருந்து முளசி நாடும் முளசி கன்னர்களும் பின்னாளில் கிளைத்தார்கள். மோரூர் காங்கேயர்கள் 34 தலைமுறைகளாக ஆட்சி செய்தனர். கொங்கு நாட்டின் மிக நீண்ட பட்டம் மோரூர் பட்டம்தான். திருசெங்கோட்டு மலை கோவிலுக்கு பெரும்பணிகள் செய்தார்கள்.

(சூர்யகாங்கேயனின் வாழ்க்கையை வரலாற்று நாவலாக எழுகரை சூர்யகாங்கேயன் என்னும் பெயரில் எடப்பாடி அமுதன் விரிவாக எழுதியுள்ளார். எண்: +91 94873 23457)



நாட்டு கவுண்டர் என்பது நிர்வாக பொறுப்பின் பேர்;அது ஜாதியில்ல. சூரிய காங்கேயன் இதை அன்றே உணர்த்தியவர். பண்டாரதுக்கு எழுதிக் கொடுத்த பட்டயத்தில், பிற காணிகளில் வாழ்ந்த தனது பங்காளிகளான காளமங்கலம் கன்னன், கண்ணபுரம் கன்னன், சித்தளந்தூர் கன்னன் போன்ற அனைவரையும் சேர்த்து "நாங்கள் 60 காங்கயர்களும்" என்று குறிப்பிடுகிறார். பட்டக்காரன் என்ற அகங்காரத்தால் தன் பங்காளிகள்-சொந்தபந்தங்களை அவமதிக்கும் துர்க்குணம் சூரிய காங்கேயருக்கு இல்லை. இது இன்றுள்ள கன்ன கூட்டத்தினர் மட்டுமல்ல, அனைத்து கவுண்டர்களும், பட்டக்காரர்களும் உணர வேண்டிய விஷயம். இதுபோன்ற நல்ல குணங்களால் தான் கன்னகூட்டம் இன்றளவும் சிறப்பாக பெருகி வருகிறார்கள்.

மோரூர் கன்னகுல காங்கேயர்கள் ஏராளமான சமயப் பணிகளையும், இலக்கியங்களையும் செயவித்துள்ளார்கள். தக்கை ராமாயணம், சிலப்பதிகார உரை போன்றவை குறிப்பிடத்தக்கன.



மொளசி அன்னத்தியாகி வேலப்ப கவுண்டர் 
-------------------------------------------------------------------
மோரூர் நாட்டின் கிளை நாடு முளசி நாடு. காலமங்கள கன்ன கூட்டத்து குடியானவர்கள் மொலசியில் குடியேறி வாழ்ந்து வந்தனர். அவர்களே பிற்காலத்தில் மொளசி நாடு பெற்று மொளசி கன்னன் கூட்டமாகினர்; கொளாநல்லி கன்னன் அண்ணார் வகையறா என்றும் காலமங்கள கன்னன் தம்பி என்றும் குறிப்பிடுவர். இன்றும் மொளசி இளையபெருமாள் கோயில் முதல் மண்டப கட்டளை அண்ணார் கட்டளை என்று கொளாநல்லி கன்னன் கூட்டத்துக்கு மரியாதை செய்யபப்டுகிறது. மொளசி கன்னன் கூட்டத்தார் மதுரை அரசர்களோடு நெருங்கிய உறவை பேணி வந்தார்கள். மதுரையில் பஞ்சம் வந்த காலத்தில் பாண்டியன் தனது படையின் ஒரு பகுதியை முளசிக்கு அனுப்பினான். அந்த படைக்கு குறைவின்றி சோறு போட்ட வேலைப்ப கவுண்டரின் பெருமையை உணர்ந்து, பின்னாளில் அதனை நினைவு கூர்ந்து பாண்டியன் அன்னத்தியாகி என்ற விருது கொடுத்து மரியாதை செய்வித்தான்.

முத்துசாமி கவுண்டர்: 
----------------------------------
மோரூரில் வாழ்ந்த ஆதிகன்ன குல குடும்பத்தில் தொன்றியவர் முத்துசாமி கவுண்டர். அவரை தூக்கிச் சென்று கண்ணிவாடியில் வளர்த்து பட்டக்காரராக்கியவர் நல்லதம்பி பண்டாரம். கவுண்டருக்கு மூன்று மனைவிகள். அவர் உயிர் நீத்த போது பதிவிரதைகள் மூவரும் உடன்கட்டை ஏறினர். அவர்கள் மூவரையும் ஓர் உருவாக வீரமாத்தி அம்மனாக கொங்கு மக்கள் வழிபடுகிறார்கள்.முத்துசாமி கவுண்டருக்கு விசுவாசமாக இருந்த பண்டாரம், நாவிதர், தோட்டி முதலியோரும் பட்டக்காரரோடு சேர்ந்து தீக்குளி இறங்கினர். பிற ஜாதியினரை அரவணைத்து காப்பதில் கன்ன கூட்டத்தினர் சிறப்புடையவர்கள்.

மணலூர் செல்லாண்டியம்மன் கோட்டைகரையம்மன் 


15 comments:

  1. Kanandhai kulam na Perumaya Iruku..

    ReplyDelete
  2. கன்னகுல குலகுரு தெரிந்தால் சொல்லுங்கள்,


    ReplyDelete
  3. கன்னகுல குலகுரு தெரிந்தால் சொல்லுங்கள்,


    ReplyDelete
  4. Can kannan kootam and kannandhai kootam marry?

    ReplyDelete
  5. கன்னன் கன்னந்தை - பங்காளிகள்.. கல்யாணம் செய்ய கூடாது

    ReplyDelete

  6. கன்னிவாடி எங்குள்ளது என கூறவும்

    ReplyDelete
    Replies
    1. கன்னிவாடி திரூப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம், தாராபுரம் டூ கரூர் சாலையில் மூலனூர் கிழக்கில் கன்னிவாடி உள்ளது

      Delete

  7. கன்னிவாடி எங்குள்ளது என கூறவும்

    ReplyDelete
  8. Young kongers must know our history.

    ReplyDelete

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates